புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
306 Posts - 42%
heezulia
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 1%
prajai
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
manikavi
குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதி ஆட்டம்(21-24) - வேல ராமமூர்த்தி


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Wed May 17, 2017 12:01 pm

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 21 - 24 )தொடர்

21
ரெட்டை சந்தோஷம்!

பொழுது இருளும் நேரம்.
கூட்டு வண்டி காட்டுக்குள் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. காளைகளுக்கு கண் பழகிய தடம். வண்டிக்காரனின் கை படாமலே சிட்டாய் பறந்தன. ஓட்டிச் செல்லும் தவசியாண்டிக்கு மட்டுமான காட்டுப் பாதை என்பதால், குறுக்கே நரி, புலி என வன ஜந்துக்களின் அரவாட்டத்தையே காணோம். வண்டி வேகத்துக்கு, தவசியாண்டியின் பின் தலைமுடி காற்றில் பறந்தது.
தவசியாண்டி போகிற போக்கில் ஓரக்கண் கொண்டு பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். வண்டிக்குள் அமர்ந்து வரும் அரியநாச்சியும் துரைசிங்கமும் காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்கள். இருள் சூழச் சூழ, வனம் பேயாய் விரிந்தது.
இருபது வருடங்களாக மலேசியக் காடுகளுக்குள் வாழ்ந்த வாழ்க்கையில், எல்லா வனப் பேச்சிகளுடனும் கைகுலுக்கப் பழகி இருந்தாள் அரியநாச்சி. மடியில் ஊர்ந்து செல்லும் மலைப் பாம்பின் வால் நுனியை செல்லமாய் சீண்டிவிடுவாள்.
உண்ட மயக்கம் தீர, தலை சாய்க்க நினைக்கும் புலிகளும் சிங்கங்களும் அரியநாச்சியின் குடிசைப் பக்கம் வந்து போகும். பிறப்பிலேயே பயமறியாத ஆப்பநாட்டு அரியநாச்சியை, வைரமாக்கி அனுப்பி இருந்தது மலேசியக் காடு.
வண்டியின் முன்புறம் அமர்ந்து வரும் துரைசிங்கம், இருள் என்றும் பகல் என்றும் பேதம் அறியாதவன். இருட்டிலும் கண் பார்ப்பவன். உஸ்தாத் அப்துற் றஹீமிடம் அவன் கற்றுத் தேர்ந்த வித்தைகளில் பெரும்பாலானவை இரு ளில் கற்றவை. இருளிலும் குறி பிசகாத எறியில் கை தேர்ந்தவன். அத்தை அரிய நாச்சி விதைத்த அக்னியை, எல்லை அறியாத பெருநெருப்பாய் வளர்த் தெடுத்து வந்து இறங்கி இருக்கிறான்.
தனுஷ்கோடியில் கப்பலை விட்டிறங் கிய அரியநாச்சியையும் துரைசிங்கத்தை யும் கண்டதில் இருந்து, தவசியாண்டியின் முகம் ‘திகுதிகு’என கொதித்துக் கொண்டே இருந்தது. உற்சாகமும் பெருமிதமும் நிறைந்த திகுதிகுப்பு அது!
பதினேழு வருட வனவாசத் தவம் கலைத்து, பழி தீர்க்கப் போகிற உற்சாகம். நெஞ்சுக்குள் தெய்வமாய் பூஜிக்கும் மாவீரன் ரணசிங்கத்தின் வாரிசுகள், இருபது வருடம் கழித்து கடல் கடந்து, தன்னை நாடி வந்திருப்பதில் மேலிடும் பெருமிதம்!
ஆனாலும் அரியநாச்சியின் மவுனம் தவசியாண்டியின் வாயை இறுக்கியது. தலைக்குள் ஏதோ ஒன்று குடைந்துகொண்டே இருந்தது. வந்து இறங்கியதில் இருந்து, ஊர் நிலவரம் குறித்து அரியநாச்சி ஒரு வார்த்தை பேசவில்லை.
நாளை பத்தாம் நாள் திருவிழா. எங்கோ ஒரு தேசத்தில் இருந்து மிகச் சரியாக இன்று எப்படி வந்து இறங்கினாள்? தெரிந்தே வந்தாளா? யதேச்சையாக வந்தாளா? நாளை நடக்கப் போவதோ பெரிய காரியம். காவல் தெய்வம் ரணசிங்கத்தின் துரோகச் சாவுக்குக் கணக்கு தீர்க்கும் நாள். ஆப்பநாடே அதிரப் போகிறது. அந்தக் கனத்த காரியம் குறித்து, வந்ததில் இருந்து வாய் திறக்காமல் ஆழம் காண முடியாத கடலாக அமர்ந்து வருகிறாள்.
பெண்ணுருவில் வந்திருக்கும் ரணசிங்கம் எப்படி பேசுவான்? நாலா திசைகளில் இருந்தும் அணி அணியாய் திரண்டு வந்த ஆங்கிலேயக் காக்கிகளைக் கொளுத்திச் சாம்பலாக்கிய ரணசிங்கத்தின் தங்கை, அப்படித்தான் இருப்பாள். அந்த மவுனத்தில்தான் புதைந்திருக்கிறது காரியம்!
‘நாளை விடிந்ததும் இருளப்பசாமி கோயில் பூஜைக்குக் கிளம்ப வேண்டும். அதற்குள் அரியநாச்சியின் உத்தரவு கிடைத்துவிடும். கிடைக்காவிட்டாலும் கணக்கை தீர்த்து விட வேண்டியதுதான்’ என்கிற முடிவோடு வண்டியை செலுத்தினான்.
குடிசையை நெருங்கியதும் கூட்டு வண்டியின் வேகம் குறைந்தது.
காட்டுக் குடிசையின் ஒற்றை விளக்காய் வாசலில் நின்றாள் செவ்வந்தி.
விளக்கு ஏற்றிய பின் ஊருக்குள் நுழைந்த மோட்டார் வாகனத்தை சிறுவர்கள் விரட்டிக்கொண்டே ஓடி வந்தார்கள். நல்லாண்டி வீட்டின் முன் நின்ற வாகனத்தை பெரியவர்களும் வேடிக்கை பார்த்தார்கள்.
“கார்லே வர்றது யாரு?”
நல்லாண்டியும் குடும்பத்தாரும் ஓடி வந்து எதிர்கொண்டு நின்றார்கள். முன்பக்கம் அமர்ந்து வந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் இறங்கி, பின் கதவை திறந்துவிட்டார். வெள்ளையம்மா கிழவி, முகத்தை சுளித்துக்கொண்டே இறங்கினாள். கோயில் திருவிழாவுக்கு வெள்ளையம்மா வருவது பற்றி கணக்குப்பிள்ளை, நல்லாண்டியைத் தவிர யாருக்கும் சொல்லி வைக்கவில்லை. நல்லாண்டி மட்டும் வெள்ளையம்மாவை அடை யாளம் கண்டுகொண்டார்.
“கும்பிடுறேன் தாயீ…” கும்பிட்டார்.
வெள்ளையம்மா, நல்லாண்டிக்கு அக்கா முறை. ஆனாலும் உறவுமுறை சொல்லி அழைக்காமல், ‘தாயீ...’ என்றார்.
சுற்றி நின்ற யாருக்கும் வெள்ளையம்மாவைக் கண்டதும் அடையாளம் தெரியவில்லை. ஆறு மாதக் கைக்குழந்தையாக இருந்த பேரன் கஜேந்திரனைத் தூக்கிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருபது வருடம் கழித்து வந்து இறங்கியிருந்தாள். கால இடைவெளி, ஞாபகத் தடயங்களை அழித்துப் போட்டிருந்தது.
உற்றுப் பார்த்த மூத்தவர்கள் சிலர் கண்டுகொண்டார்கள். எல்லோரும் நெருங்கி வந்து, முகம் காட்டி கும்பிட்டார்கள். எவர் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதை வெள்ளையம்மா தவிர்த்தாள். கணக்குப்பிள்ளையும் நல்லாண்டியும் கூட்டத்தை விலக்கி, வழி ஒதுக்கினார்கள். பயணக் களைப்பில் இருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு நல்லாண்டியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
தாழ்வாரம் தாண்டி, நடுப் பத்தியில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு புகைப்படம். விதிர்த்துப் போனாள். மேற்கொண்டு நகர இயலாமல் நின்றவள், கணக்குப்பிள்ளையைத் திரும்பிப் பார்த்தாள். இரண்டு எட்டு பின்னால் வந்த ரத்னாபிஷேகம் பிள்ளைக்கு கண்கள் இருண்டன. திரும்பி, நல்லாண்டியைப் பார்த்தார். நல்லாண்டி சிரித்துக்கொண்டே புகைப்படத்தைக் கை காட்டி, “நம்ம ரணசிங்கம்!” என்றார்.
கிழக்கே நிலா கிளம்பிவிட்டது.
அரண்மனை உடையப்பன், யாருக் காகவும் இத்தனை நேரம் காத்திருந்தது இல்லை. தலை வாசலைப் பார்த்தவாறு மைய மண்டபத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தான். கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், தோட்டத்து வாசலைப் பார்த்தவாறு தலை வாசலில் நின்றிருந்தார். தெருவைப் பார்த்தவாறு, ‘லோட்டா’, தோட்டத்து வாசலில் வெகு நேரம் நின்றிருந்தான்.
தெருவில் வண்டிச் சலங்கை மணி ஓசை கேட்டது. ‘லோட்டா’ கதவுகளை அகலத் திறந்தான். கூட்டு வண்டி தலை வாசல் அருகே நின்றது. உடையப்பன் எழுந்து வந்து, “வாங்க முதலாளி!” என்று கைகூப்பி வணங்கினான். “என்ன உடையப்பா… சவுக்கியமா?” பெருநாழி முதலாளி இறங்கினான்.
கையில் அரிவாளோடு கிழக்கே பார்த்து நிற்கும் இருளப்பசாமி, ரெட்டை சந்தோசம் கொண்டார்.





22
கண்ணுல நெறிக் கட்டுது!

வாசலில் வந்திறங்கிய பெருநாழி முதலாளியைக் கண்டதும் மைய மண்டபத்தில் அமர்ந்திருந்த உடையப்பன், எழுந்து ஓடிப் போய் “வாங்க முதலாளி” எனக் கைகூப்பி வணங்கினான்.
தலை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத்துக்கு, தன் கண்களையே நம்ப முடியவில்லை.
உடையப்பனைக் கண்டு ஆப்ப நாடே கை கட்டி நிக்குது. தான் அரண்மனைக் கணக்குப்பிள்ளையாகக் கடத்திய இத்தனை ஆண்டுகளில், யாரையும் உடையப்பன் வணங்கியே பார்த்தது இல்லை. கூனிக் குறுகி, கும்பிடு போடும் குடியான சனங்களுக்கு பதில் மரியாதையாக, உடையப்பன் தலையைக் கூட ஆட்டுவது இல்லை. பெருநாழி முதலாளியைக் கண்டதும் குழைகிறானே! இந்தப் பெருநாழி முதலாளி யாரு? எப்படிப்பட்ட ஆளு?
பெருநாழி முதலாளி, ஐந்தடி உயரக் குள்ளன். வழுக்கைத் தலை. முகத்திலும் உடம்பிலும் முடி முளைத்ததற்கு அடையாளமே இல்லாதவன். மழு மழுத்த திரேகம். ஆப்ப நாட்டுக்கு ஒவ்வாத நிறம். ஆளும் வர்க்கக் கைக் கூலி. ஊருத் தாலியை அறுத்து, உலையில் ஏத்துற வியாபாரி. உடையப்பனையும் மிஞ்சின பணக்காரன்.
உடையப்பன் அடிக்கடி பெருநாழி போவான். ஆனால், பெருநாழி முதலாளி இங்கே வர்றது, இதுதான் முதல் முறை. அதுவும் நாளை, பத்தாம் நாள் திருவிழாவை முன் வைத்து வந்திருக்கிறான். 17 வருஷமா ரத்தப் பலி காணாமல் இருந்த இருளப்பசாமி, எல்லாரையும் ஒண்ணுச் சேர்த்து இழுக்கிறாரே!
என்ன காரணம்? நினைச்சாலே கண் ணுலே நெறிக் கட்டுது. தலையை உலுப்பிக் கொண்டார் ரத்னாபிஷேகம் பிள்ளை.
மைய மண்டபத்தின் நாயகமாக பெருநாழி முதலாளியை அமர வைத்து, எதிர் இருக்கையில் அமர்ந்தான் உடையப்பன்.
அரண்மனை உள் விதானங்களின் ஆடம்பரமான அலங்காரங்களை, உட்கார்ந்தவாக்கில் ஒரு சுற்றுப் பார்த்த பெருநாழி முதலாளி, “உடையப்பா… உன் ஜாதகத்தை இருபது வருஷத்துக்கு முன்னாடியே, சரியா கணிச்சவன் நான்தான்!” பலக்க சிரித்தபடி பேச ஆரம்பித்ததும் உடையப்பன் நெளிந்தான்.
திரும்பி, கணக்குப்பிள்ளையைப் பார்த்தான். “கணக்கு… நீங்க போயி, கோயில் காரியங்களைப் பாருங்க” என்றான்.
“உத்தரவு அரண்மனை.” கணக்குப் பிள்ளை ரத்னாபிஷேகம் குனிந்தவாறே பின் நகர்ந்தார்.
மைய மண்டபத்தில் இருந்து பிரியும் எல்லா அறை வாசல்களையும் ஒரு சுற்றுப் பார்த்தான் உடையப்பன். சாப்பாட்டு அறை யின் நுழைவிடத்தில் ‘கூழு’ நின்றிருந்தான்.
“டேய்… கூழு!” என அழைத்தான்.
“ஹ்ம்… இந்தா வர்றேன்” இடை நெளித்து நடந்து வந்தான் ‘கூழு’.
“எல்லாம் ஆயிருச்சா?”
“மானு, மயிலு, காடை, கவுதாரி, ஆடு, கோழி அத்தனையும் பல்லுக்கும் நாக்குக்கும் பதமா… ஆக்கி வெச்சிருக்கேன். அரண்மனை வந்து கை வைக்க வேண்டியதுதான் பாக்கி.” வெற்றிலை வாயோடு, பெருநாழி முதலாளியைக் கண் சுழற்றிப் பார்த்தான் ‘கூழு’. பெருநாழி முதலாளிக்கு, தன் வீட்டு சமையல்காரன் பச்சையப்பனின் நினைவு வந்தது.
“போ… போ. உள்ளே போ” ‘கூழு’வைத் துரத்தினான் உடையப்பன். ‘கூழு’ நகர்ந்தான்.
“உடையப்பா… நீ செய்த ஒத்தச் செய்கை. உன்னை எம்புட்டு உயரத்தில உட்கார வெச்சிருச்சு பார்த்தியா?” வலது கையை நீட்டி, அரண்மனையை ஒரு சுற்று சுற்றிக் காட்டினான்.
“எல்லாம் உங்க யோசனையும் ஒத்துழைப்பும்தான் முதலாளி!”
“சொன்ன சொல்லைக் காப்பாத்துறதுல வெள்ளக்காரன், வெள்ளக்காரன்தான்! ‘இந்தக் காரியத்தை முடி. ஆப்ப நாட்டுல பாதி உனக்குத்தான்’ன்னு, சொன்ன மாதிரியே வெள்ளக்காரன் உனக்குக் கொடுத்துட்டுப் போயிட்டானே!”
பெருநாழி முதலாளி பேசப் பேச… கவிழ்ந்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான் உடையப்பன்.
“ஆமா…‘அதுக’ என்னாச்சு?”
“ ‘எதுக’ முதலாளி?”
“கப்பலேத்தி நாடு கடத்திவிட்டோமே… மேற்படியான் வாரிசுகள். அந்த ரெண்டும்?”
கவிழ்ந்த தலை நிமிர்ந்து, “ ‘அதுக’ ரெண்டும் மலேசியக் காட்டிலேயே மண்ணோடு மண்ணா மக்கிப் போயிருக்குங்க முதலாளி. போனதோடு சரி. ஒரு தகவலும் இல்லை” சிரித்தான் உடையப்பன்.
ஆழ்ந்த யோசனைக்குப் பின், “இருபது வருஷமாச்சு உடையப்பா. இன்னைக்கு அவன் உயிரோடு இல்லை. அவனை நெனைச்சா… இப்பவும் நெஞ்சு, பதபதங்குது! நமக்கெல்லாம் எதிரிதான் அவன். ஆனாலும் பெரிய சூரப் புலி. எதிர்த்து வந்த துப்பாக்கி, பீரங்கியை எல்லாம், சோளத் தட்டையை முறிக்கிற மாதிரி முறிச்சு எறிஞ்சானே!” வாய் நிறையப் பேசினான் பெருநாழி முதலாளி.
மறுபடியும் தலையைச் சுழற்றி ஒரு பார்வை பார்த்தவன், “என் வீடும் இந்த மாதிரி அரண்மனைதான். அந்தப் பாவிப் பயல், குண்டு வெச்சுத் தகர்த்து தரைமட்டமாக்கிட்டான். வீடு போனால் போகுது. நான் உயிரோடு தப்பிச்சேனே… அதுதான் பெரிய காரியம்!” சந்தோஷப்பட்டுக் கொண்டான்.
“பழசை விடுங்க முதலாளி” என்றவன், சிறு யோசனையில் ஆழ்ந்தான்.
“உடையப்பா… என்ன யோசனை?”
“ஒண்ணுமில்லை. அன்னைக்கு நடந்த சம்பவத் துக்கு, ஒரே ஒரு சாட்சி, உயி ரோடு இருக்கு” என உடை யப்பன் சொல்லி முடிக்க வில்லை.
“என்னது… உயிரோடு ஒரு சாட்சி இருக்கா?” பதறி, இருக்கையின் நுனிக்கு வந்தான் பெருநாழி முதலாளி.
“ஆமாம். இந்தக் கோயில் கொடையை நான் ஏற்பாடு பண்ணியதே, அந்தச் சாட்சியை அழிக்கத்தான்!”
“ஏய்… உடையப்பா! என்ன சொல்ற நீ? யார் அந்தச் சாட்சி?”
“அட, விடுங்க முதலாளி! யானையையே கொன்னு, நடு வீட்டில பொதைச்சிருக்கோம். இது, பூனை! ஆடு, கோழியை அறுக்கிற மாதிரி, அறுத்து எறிஞ்சிருவோம். எந்திரிங்க. விருந்து காத்திருக்கு” என்றவன் எழுந்தான்.
குடிசை
வாசலில் நின்ற செவ்வந்தியைக் கண்டதும் அரியநாச்சி கேட்டாள். “தவசி… யாரு இது. உன் மகளா?”
“ஆமாம் தாயி.”
செவ்வந்தியை அணைத்துக் கொண்ட அரியநாச்சி, “பேரு என்னம்மா?” தலை கோதினாள்.
“செவ்வந்தி” அரியநாச்சிக்கு பதில் சொல்லிக்கொண்டே, துரைசிங்கத்தைப் பார்த்தாள் செவ்வந்தி.
23
பசிச்ச மிருகம்!

“ஊர் நிலவரம் என்ன?” என ஒற்றைக் கேள்வியை அரியநாச்சி கேட்டதுதான் தாமதம். இருபது வருட இடைவெளியில் நடந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தான் தவசியாண்டி. குறுக்கே புகுந்து எதிர்கேள்வி போடாமல் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
வாய் வரள அடுக்கிக் கொண்டு போன தவசியாண்டி, வெள்ளையம்மா வின் பேச்சுக்குள் நுழைந்ததும் அரிய நாச்சியின் கண்கள் குத்திட்டு நின்றன.
“என்ன சொல்றே தவசி?” குறுக் கிட்டாள்.
“ஆமாம் தாயி! வெள்ளையம்மா ஆத்தா, இப்போ இங்கே இல்லை!”
“அப்போ… உடையப்பனோட வாரிசு?” கண்களைச் சுருக்கி கேட்டாள்.
“ஆறு மாதக் குழந்தையா இருந்த அந்த வாரிசைத் தூக்கிக்கிட்டு, கண் காணாத தேசத்துக்கு கிழவி போயிட்டாக.”
“ஆண் குழந்தைதானே?”
“ஆமாம் தாயி!”
“வெள்ளையம்மா அத்தை ஏன் ஊரை விட்டு வெளியேறணும்?”
தவசியாண்டி, தன் வலது கைவாக் கில் அமர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் துரைசிங்கத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
மகள் செவ்வந்தி எதிலும் ஒட்டாமல் வாசலில் தனியே அமர்ந்து, காட்டு வெளிச்சத்தைக் கண் அளந்து கொண்டிருந்தாள்.
“ம்… சொல்லு தவசி!”
“தாயி… உங்க அத்தை வெள்ளை யம்மா கிழவிக்கு, தன் மகள் பொம்மியைப் பறிகொடுத்த கவலை. புதுப் பணக்காரன் உடையப்பனுக்கு, பொண்டாட்டி செத்த கவலை துளியும் இல்லை. ஓட்டுக் கொட்டகையிலே குடி இருந்தவனுக்கு, திடீர்னு அரண் மனை வாசம் கிடைச்சதும் அர்த்த ராத்திரியிலே குடைப் பிடிக்க ஆரம் பிச்சுட்டான். புத்தி, நிலை கொள்ளல. குடியும் கூத்தியாளுமா… ஆண்ட வனுக்கே பொறுக்காத ஆட்டம்! பெத்தவன் மூச்சுக் காத்து, பிள்ளை மேலப் படக்கூடாதுன்னு, பேரனைத் தூக்கிக்கிட்டுப் போன கிழவி, இந்தத் திசைப் பக்கமே திரும்பல!”
பேச்சை நிறுத்தியவன், தலை கவிழ்ந்தவாறு ஏதோ சிந்தனையில் இருந்தான்.
“என்ன யோசனை தவசி?” என்றாள் அரியநாச்சி.
“அது வேற ஒண்ணுமில்ல தாயி! நம்ம ரணசிங்கம் அய்யா… செத்தது, தகப்பன் செத்ததைக் கண்டதும் துரை சிங்கம் ஊமையானது, உடையப்பன் பெஞ்சாதி பொம்மி ஆத்தா, ஒரு ஆம்பளை பிள்ளையைப் பெத்தது, பெத்துப் போட்டதும் பொம்மி செத்தது… இந்த நாலு காரியமும் நொடி பிசகாமல், ஒரே நேரத்திலே நடந்ததை நெனச்சா… ஆச்சர்யமா இருக்கு தாயி!” என்றான்.
அரியநாச்சி, கண்களை மூடினாள்.
“அந்தக் காலத்திலதான் சொல்லுவாக தாயி. புருசன் செத்தா பொண்டாட்டி உடன்கட்டை ஏறுவாள்னு! நம்ம ரணசிங்கம் அய்யா சாவுக்கும் அந்த துரோகிப் பயல் உடையப்பன் பொஞ்சாதி பொம்மி ஆத்தா சாவுக்கும் ஏதோ ஒரு அந்தரங்க முடிச்சு இருக்கிற மாதிரி தெரியுதே!” என்றவன் அடிக்கண்ணால் அரியநாச்சியைக் கோதினான்.
வெடுக்கென விழித்தவள், தவசி யாண்டியைக் கடிந்து பார்த்தாள். திரேகம் ஆடிப் போனான்.
“பெருநாழி முதலாளி உயிரோடு இருக்கிறானா?”
“அவன் எப்படி சாவான்? எமனே சொல்லிட்டான்… ‘பெருநாழி முதலாளியை நான் கொல்ல மாட்டேன். அது உங்க பொறுப்பு’ன்னு.”
அரியநாச்சி வாய் விட்டு எண்ணினாள். “ஒண்ணு, ரெண்டு…” நிறுத்தியவள், “மூணாவதும் எனக்கு வேணும் தவசி?” என்றாள்.
தவசியாண்டி புரியாமல் விழித்தான்.
“உடையப்பன் வாரிசும் எனக்கு வேணும்.”
துரைசிங்கம் குறுகுறுவென பார்த் தான்.
“பெத்தது பொம்மின்னாலும் பிறந் தது, உடையப்பனுக்கு. அவன், உடை யப்பனின் வாரிசு. உடையப்பனையும் உடையப்பனைச் சேர்ந்த புல்லு, பூண்டு எல்லாத்தையும் பொசுக்கணும். எல்லாத்துக்கும் மேலே, பெருநாழி முதலாளி! அவனை, உடனடியா கொல்லக் கூடாது. துள்ளத் துடிக்கக் கொல்லணும். பசிச்ச மிருகம், பாவம், புண்ணியம் பார்க்கக் கூடாது.” அரியநாச்சிக்கு இருட்டிலும் வியர்த்தது.
“அப்போ… நாளை காலையிலே நான்…” உத்தரவு கேட்டான் தவசியாண்டி.
“கோயில் பூசாரியாக நீ ஊருக்குள் போ. நானும் துரைசிங்கமும் கணக்கு முடிக்க வந்து சேர்வோம்.”
வாசலில் அமர்ந்திருந்த செவ்வந்தி, வானத்து விண்மீன்களை எண்ணி எண்ணி தோற்றுக் கொண்டிருந்தாள்.
சென்னைப் பட்டணத்து மொட்டை மாடியில் அமர்ந்து, விண்மீன்களை எண்ணி எண்ணி தோற்றுக் கொண்டிருந் தான் கஜேந்திரன்.
உறக்கம் வராத இரவுகளில், கண்ணை மூடிக்கொண்டு, ‘ஒண்ணு… ரெண்டு… மூணு…’ என எண்ணிக்கொண்டே இருந்தால் தூங்கிவிடலாம் என்பது ஒரு நம்பிக்கை. ம்ஹூம்... எண்ணி யும் மாளவில்லை; உறங்கியபாடும் இல்லை.
பாட்டி வெள்ளையம்மா கிழவியை ரயில் ஏற்றிவிட்ட நேற்றைய இரவு, எல்லா இரவுகளையும் போல் இருட்டி, விடிந்திருந்தது. ஆனால், இந்த இரண்டாம் இரவு, துளி தூக்கம் இல்லாமல் அலைக் கழிக்கிறது. இனம் புரியாத ஏதோ ஒன்றை மனம் நாடுகிறது. உருவமற்று கிளுகிளுப்பூட்டுகிறது.
இருபது வருடங்களில், கிழவி, ஒரு நாளும் தன்னை பிரிந்து போனதில்லை. பாட்டியைத் தவிர வேறு உறவு யாருமற்ற வன் கஜேந்திரன். ஈன்று போட்டதும் இறந்து போன தாயாரின் பெயர், ‘பொம்மி’ என அறிவான். தகப்பன் ‘எவன்’என, கிழவி சொன்னதே இல்லை.
பெற்றவன் மூச்சுக் காற்று பிள்ளையின் சுவாசத்தை தீண்ட இயலாத தூரத்துக்கு தூக்கி வந்து வளர்த்து ஆளாக்கியவள். பிறப்புக்கும் இருப்புக்குமான பெரிய இடைவெளியைத் திட்டமிட்டே உருவாக்கியவள். விரும்பிய திசைகளில் சிறகு விரிக்க அனுமதித்தவள்.
‘மலை இடுக்கு சுனை நீராய் குளிரும் பாட்டியின் அன்பையும் பின் தள்ளி, மனசை நனைக்கிறதே… அது என்ன? காதலா?’
‘ஆம்’ என்றால், காதலி? இதுவரை எவளும் இல்லையே! இருப்பாளேயா னால், அவளுக்கு என் பரிசு… என் படைப்புகள் எல்லாம். என் தூரிகை வரைந்த ஓவியங்கள் எல்லாம்.’
புரண்டு படுத்தவன், மறுபடியும் வானத்து விண்மீன்களை எண்ணக் கிளம்பினான்.
24
வனலட்சுமி!

விடிய விடிய யாரும் தூங்கலே.
உச்சி ராத்திரி தாண்டவுமே, அவரவர் வீட்டு வாசலை குமரிப் பெண்கள் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார்கள். பசுஞ்சாணி நீர்த் தெளித்து, கூட்டிப் பெருக்கி, கோலமிட்டார்கள்.
பத்தாம் நாள் திருவிழா அன்று, வீட்டு வாசலில் என்ன கோலமிடுவது என்பதை இரண்டு மூன்று நாட்களாக மனதுக்குள் போட்டு உருட்டியும், எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியாத குமரிகள், அடுத்த வீட்டு கோலங்களில் ஓரக் கண் பதித்திருந்தார்கள். கோலப் பொடி ஓசி கேட்கிற சாக்கில் ஒவ்வொரு வீடாக ஊரெல்லாம் அலசி வந்தார்கள்.
ஊரைச் சுற்றி வரும் அத்தனை குமரிகளையும் நல்லாண்டி வீட்டு வாசல் கோலம் நறுக் எனப் பிடித்து நிறுத்தியது. வாய்ப் பிளந்து வேடிக்கை பார்த்தார்கள். குத்துக்கால் வைத்தமர்ந்து கோலமிடுபவளின் கைப்பொடி, நில ஓவியமாக உயிர் துள்ள, கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. ஊர்குமரிகளெல்லாம் தன்னைச் சுற்றி நிற்பதை அறியாதவளாக, இடமும் வலமும் கண்ணளந்து இளகிக் கொண் டிருந்தாள்.
நேற்று பொழுது சாய ஊருக்குள் வந்த வெள்ளையம்மா கிழவி, இருபது வருடங்கள் கழித்து தான் வந்திருப்பதை எவரும் அறியாத வகையில் நல்லாண்டியின் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருந்தாள். பொட்டுத் தூக்கம் இன்றி உழன்று கொண்டிருந்தவள், எழுந்து நடுப் பத்திக்கு வந்தாள். வாசலில் குமரிக் கூட்டத்தைக் கண்டதும் முழுதாக முகம் காட்டாமல், கதவோரம் ஒதுங்கி நோட்டமிட்டாள்.
வாசலில் நிற்கும் எந்தப் பெண்ணும் வெள்ளையம்மாவுக்குப் பரிச்சயப்பட்ட வளாக இல்லை. எல்லோருமே தான் ஊரைவிட்டுப் போன பின்பு பிறந்த வர்களாக இருந்தார்கள். எல்லாக் கண் களும் கவிழ்ந்து மொய்க்கும் புள்ளி யைப் பார்த்தாள்.
கொடி மலரில் அமர்ந்து தேன் உறிஞ்சும் வண்டு போல், துறு துறுத்த குமரி ஒருத்தி, வண்ணக் கோல மிட்டுக் கொண்டிருந்தாள். விரல் அசைவுக்கு ஏற்ப, கரு விழி ஊர்ந்து கொண்டிருந்தது. பேரன் கஜேந்திரன் ஓவியம் வரையும்போதும் இப்படித்தான் விழிகளை ஓட்டுவான்.
‘இந்த ஊருக்குள் இவள் யார்? அதுவும் நல்லாண்டி வீட்டு வாசலில்!’
யார் என உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. திரும்பி உள் வீட்டுக்குள் பார்த்தாள். கண்ணாடியாகத் துலங்கும் வெண்கலப் பொங்கல் பானைக்கு கதம்ப பூச்சரத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் நல்லாண்டியின் மனைவி. அருகில் போனாள் வெள்ளையம்மா.
தன்னை நோக்கி வரும் வெள்ளை யம்மாவைக் கண்டதும் மரியாதை குழைய, “ராத்திரி முழுக்க தாயி தூங்கலே! எங்க வீட்டுச் சவுகரியம் உங்களுக்கு பத்தாது…” என்றாள் நல்லாண்டியின் மனைவி.
காதிலேயே வாங்கிக் கொள்ளாத வெள்ளையம்மா, நல்லாண்டி மனைவி யின் தோளைத் தொட்டு, “அந்தப் பொண்ணு யாரு?” என வாசலைக் கை காட்டினாள்.
பூச்சுற்றிய பொங்கல் பானையை இரண்டு கைகளாலும் தூக்கியவாறே, வாசலைப் பார்த்தாள் நல்லாண்டி யின் மனைவி. குமரிக் கூட்டத்துக்குள் யாரைக் கேட்கிறாள் எனப் புரியாதவ ளாக, “யாரைக் கேக்குறீக… தாயி” என்றாள்.
“கோலம் போட்டுக்கிட்டு இருக் காளே… அந்தப் பொண்ணு” என்றாள்.
“என் மகள்தான் தாயி. பேரு… வனலட்சுமி. பட்டணத்திலே காலேஜில படிக்கிறாள். திருவிழாவுக்காக வந்தி ருக்கா. கொஞ்சம் வாயாடி, ‘வாயாடி வனலட்சுமி’ன்னுதான் ஊரு சொல் லும்” என்றவள் பதறிப் போய், “ஏன் தாயீ… உங்களை இன்னாருன்னு தெரி யாமல் ஏதும் பேசிட்டாளா?” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா கேட்டேன்...” என்றவள், “சொந்தத்திலே யாரும் மாப்பிள்ளை இருக்கானா?” என்றாள்.
“மாப்பிள்ளைக்கா… பஞ்சம். இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் தாயீ, படிப்பு முடியணுமில்லே?” என்றபடி வாசலைப் பார்த்தாள்.
கோலம் போட்டு முடித்து எழுந்து நின்ற வனலட்சுமி, தன்னைச் சுற்றி ஊர்க் குமரிகள் எல்லாம் நிற்பதை இப்போது தான் பார்ப்பவளாய், “ஏய்… என்னடீ எல்லாரும் இங்கே வந்து நிக்கிறீக?” என்றாள்.
எழுந்து நின்ற வனலட்சுமியையும் காலடியில் விழுந்து கிடந்த வண்ணக் கோலத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த குமரிகளில் ஒருத்தி, “ஏன்டீ… வாயாடி வனலட்சுமி… உன் கையி பொடி மட்டும் எப்படில இப்பிடி கோலமாவுது?” என்றவள் சொல்லி வாய் மூடவில்லை.
“ம்… என் கையி கோலப்பொடி, இப்பிடியும் ஆகும்” என்றபடி, தன் கையி லிருந்த கோலப் பொடியைச் சுற்றி நின்ற எல்லோர் மீதும் சிதறவிட்டாள் வன லட்சுமி.
தலை, முகமெல்லாம் கோலப்பொடி யில் குளித்த குமரிகள், கண் விழிக்க முடியாமல், தலையை உதறினார்கள்.
‘கெக்கே… கெக்கே…’ எனக் கைகொட் டிச் சிரித்த வனலட்சுமி, “இப்பிடியே வாங்கடி பிசாசுகளா! ஊரணியிலே விழுந்து ஒரு ஆட்டம் போடு வோம்” என்றாள்.
வீட்டுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த வெள்ளையம்மா கிழவியும் நல்லாண்டி மனைவியும் திகைத்துப் போய் நின்றார்கள்.
“இப்பிடிதான் தாயி… சின்னப் பிள்ளை மாதிரி சேட்டை பண்ணுவா.”
“இதில் ஒண்ணும் தப்பில்லையே. களங்கமில்லாத பொண்ணு!” என்றாள் வெள்ளையம்மா.
உறக்கமில்லாமல் அலைந்தார் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம். மொத்தக் காரியங்களும் தன் தலை மேல் விழுந்ததாகக் கருதினார். ‘இந்தத் திருவிழாவை ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியா நடத்தி முடிச்சுட்டு, அரண்மனையில் இருந்து உத்தரவு வாங்கிக் கொள்ள வேண்டி யதுதான்’ என்கிற முடிவில் இருந்தார்.
‘அரண்மனை உடையப்பன் நடவடிக்கை ஆண்டவனுக்கே பொறுக் காது. கோயில் திருவிழா சாட்டிட்டு, சகல கெட்ட காரியங்களும் அரண்மனைக் குள்ளே நடக்குது. சாமி கோபம் யாரு மேலே சாடப் போவுதோ. உடன் இருந்த பாவத்துக்கு, நம்மளும் பழி சுமக்கணும். வேண்டாம்.’
கோயில் வாசலில் நின்றவாறு தவசியாண்டியை எதிர்பார்த்திருந்தார். ‘வருவானா… மாட்டானா?’என யோசனை யில் இருந்தபோதே, தவசியாண்டி கோயிலை நோக்கி வந்து கொண்டி ருந்தான்.
“அப்பாடி… வந்துட்டான்டா!” கணக் குப்பிள்ளை எதிர்கொண்டு ஓடினார்.
இருளப்பசாமியின் கை அரிவாள், ஒளி வெள்ளத்தில் மின்னியது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக