புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடந்த வாரத்துக் கட்டுரை பற்றி இரு விளக்கங்கள். ஒன்று, மதம் குறித்து நான் பேசியது. அதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடினத் தொனி இருப்பதாக வடநாட்டு ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் தீவிரவாதம் என்றால் அவர்கள் ‘டெரர்’ என்று அடிக்கிறார்கள். முன்புதான் நாம் `சதக் சதக்’, `ரத்தம் சொட்டச் சொட்ட’, `கத்தி குத்தக் குத்த...’ என்று செய்திகளைப் பரபரப்பாக்கி எழுதுகிறோம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது நாம் அதிலிருந்து மாறிக் காலங்கள் பல ஆகின்றன. ஆனால் அந்த ‘சதக்’கை இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். அவர்களின் டி.ஆர்.பி பரபரப்பிலும் எனக்கு ஒன்றே ஒன்று பிடித்திருந்தது. தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ‘ஒரு வார இதழில் வந்த...’ என்று இழுத்தபோது, அவர்கள் ‘ஆனந்த விகடனில் வந்த’ என்று வெளிப்படையாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு முன்னேற்றம். ரஜினி என் பெயரைச் சொல்வதோ, அவரைப்பற்றி நான் சொல்வதோ தவறில்லையே. அதேபோல்தான் இதுவும்....
நன்றி
விகடன்
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விஷயத்துக்கு வருகிறேன். நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. கிறிஸ்து பிறந்த யூதேயாவில் புரட்சி ஏற்பட்டது. அதில் பொந்தி பிலாத்துவினுடைய ஆட்சியை எப்படியாவது ஆட்டிவிடவேண்டும் என்கிற ஆர்வம் யூதர்களுக்கு இருந்தபோதுகூட இயேசுவின் நல் சீடர்களாக இருந்தவர்கள் அந்த வன்முறை வேண்டாம் என்று தடுத்ததாகத்தான் நமக்குச் செய்திகள் வருகின்றன. பைபிளைத் திருத்தம் செய்ய எத்தனை முறை முற்பட்டாலும் அதில் இருக்கும் உண்மை இன்னும் பிரகாசமாகத்தான் இருக்கிறது. இப்படி எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும்தான் போதிக்கின்றன.
அடுத்து இன்னொரு விளக்கம். எண்ணூர்க் கழிமுகத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்துப் பேசியபோது நித்தியானந்த் ஜெயராமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னை அழைத்தார். ‘ஐயய்யோ சார், என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மை. ஆனால் ‘இது நான் மட்டும் செய்யும் சாகசம்’ என்ற தொனியில் அமைந்துள்ளது. இதன் பின்னால் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை’ என்று பதறினார். ‘ஏன் எங்களின் பெயர்களை விட்டீர்கள்’ என்று மற்ற சூழலியலாளர்கள் கேட்காததும், தன் பெயர் மட்டும் வந்ததை நினைத்து நித்தியானந்தம் பதறுவதும்தான் அவர்களின் குணம்.
அடுத்து இன்னொரு விளக்கம். எண்ணூர்க் கழிமுகத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்துப் பேசியபோது நித்தியானந்த் ஜெயராமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னை அழைத்தார். ‘ஐயய்யோ சார், என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மை. ஆனால் ‘இது நான் மட்டும் செய்யும் சாகசம்’ என்ற தொனியில் அமைந்துள்ளது. இதன் பின்னால் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை’ என்று பதறினார். ‘ஏன் எங்களின் பெயர்களை விட்டீர்கள்’ என்று மற்ற சூழலியலாளர்கள் கேட்காததும், தன் பெயர் மட்டும் வந்ததை நினைத்து நித்தியானந்தம் பதறுவதும்தான் அவர்களின் குணம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆனால், அந்தக் குணத்தை உணராது, நமக்காக வீதியில் நின்று குரல் கொடுப்பதற்கென்றே பிறந்தவர்கள் என்று நினைத்து, அவர்களைக் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறோம். ‘அவர்கள் நம்மவர்கள்’ என்ற எண்ணம் நமக்கு இல்லாததால்தான் அரசு அவர்கள்மீது தைரியமாக வழக்குத் தொடுக்கிறது, கைது செய்து உள்ளே தள்ளுகிறது. ஆனால், அவர்கள்தாம் நாம் கரையேற, நம்மைக் கரைசேர்க்க உதவும் கலங்கரை விளக்கங்கள். ஆமாம், அந்தக் கலங்கரை விளக்கங் களோடுதான் இன்று நான் கைகோத்துள்ளேன். இந்தச் சமூகம் மேம்பட அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனையெத்தனை திட்டங்களை வைத்துள்ளார்கள் என்று நினைக்கையில் அவர்கள் எனக்கு ஆதர்சமாக மாறிப்போகிறார்கள்.
இந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரல்களைப் பெருங்குரலாக மாற்ற வேண்டும் என்ற என் பேராசையின் வெளிப்பாடே நான் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி. (Mobile App) ஆம், கல்லா கட்டும் கறைபடிந்த ஆட்சியாளர்களை வெளுத்து, துவைத்து, தூய்மைப்படுத்தி மக்களுக்குச் செயல்பட வைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இதில் சமூகச் செயற்பாட்டாளர்களும் என் லட்சக்கணக்கான நற்பணி இயக்கத்தாரும் இணைந்து இருப்பார்கள். லஞ்ச லாவண்யங்களை, அரசின் பாராமுகங்களை... இதில் நீங்கள் பட்டியலிடலாம். இந்தச் செயலி வழி இணைந்திருப்பவர்கள் உங்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்துவைத்து நீதிபெற உதவி செய்வார்கள்.
இந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரல்களைப் பெருங்குரலாக மாற்ற வேண்டும் என்ற என் பேராசையின் வெளிப்பாடே நான் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி. (Mobile App) ஆம், கல்லா கட்டும் கறைபடிந்த ஆட்சியாளர்களை வெளுத்து, துவைத்து, தூய்மைப்படுத்தி மக்களுக்குச் செயல்பட வைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இதில் சமூகச் செயற்பாட்டாளர்களும் என் லட்சக்கணக்கான நற்பணி இயக்கத்தாரும் இணைந்து இருப்பார்கள். லஞ்ச லாவண்யங்களை, அரசின் பாராமுகங்களை... இதில் நீங்கள் பட்டியலிடலாம். இந்தச் செயலி வழி இணைந்திருப்பவர்கள் உங்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்துவைத்து நீதிபெற உதவி செய்வார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
‘அந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களை உங்கள் இயக்கத்துடன் இணைக்கப்போகிறீர்களா’ என்று சிலருக்கு மட்டும் சில கேள்விகள் எழும். அவர்கள் என் ரசிகர்கள் அல்லர், நான் அழைத்ததும் வந்து என்னுடன் இணைந்துகொள்ள. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துள்ளதால் இயல்பாக இணக்கமாக எங்களால் இயங்க முடிகிறது. அந்தவகையில் நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இணைந்துள்ளோம். அதனால் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் முதற்கட்டமாக எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அருண் கிருஷ்ணமூர்த்தி ஆறு, ஏரி, வாய்க்கால், குளம்... என நம் பாரம்பர்ய நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை என் நற்பணி இயக்கத்தாருக்குத் தருவார். அதை எங்கள் இயக்கத்தார் நம் தமிழக மக்களுக்கு மடைமாற்றுவார்கள். மக்களும் இயக்கத்தாரும் தங்கள் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை அரசின் ஒப்புதலுடன் மேற்கொள்வார்கள். ஓராண்டுக்குள், ஈராண்டுக்குள், மூன்றாண்டுக்குள்... சீரமைக்கும் நீர்நிலைகளைப் பொறுத்து இப்படி டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொள்வோம். இதற்கு, கோடிகளில் பணம், பொக்லைன் போன்ற முரட்டு இயந்திரங்கள் தேவை என்று எண்ணம் வேண்டாம். சாதாரண மண்வெட்டிகளும் சாமானிய மக்கள் செல்வங்களுமே போதுமானவை.
அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் முதற்கட்டமாக எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அருண் கிருஷ்ணமூர்த்தி ஆறு, ஏரி, வாய்க்கால், குளம்... என நம் பாரம்பர்ய நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை என் நற்பணி இயக்கத்தாருக்குத் தருவார். அதை எங்கள் இயக்கத்தார் நம் தமிழக மக்களுக்கு மடைமாற்றுவார்கள். மக்களும் இயக்கத்தாரும் தங்கள் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை அரசின் ஒப்புதலுடன் மேற்கொள்வார்கள். ஓராண்டுக்குள், ஈராண்டுக்குள், மூன்றாண்டுக்குள்... சீரமைக்கும் நீர்நிலைகளைப் பொறுத்து இப்படி டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொள்வோம். இதற்கு, கோடிகளில் பணம், பொக்லைன் போன்ற முரட்டு இயந்திரங்கள் தேவை என்று எண்ணம் வேண்டாம். சாதாரண மண்வெட்டிகளும் சாமானிய மக்கள் செல்வங்களுமே போதுமானவை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்படிச் செய்வதன்மூலம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சென்னை மக்கள் மழை வந்தால் மகிழலாம். ஆம், அந்த மழை மக்களை வதைக்காமல் பொருளாதாரத்தை வீணாக்காமல் நீரும் வீணாகாமல் அந்தந்த நீர்நிலைகளில் சேகரிக்கப்படும். இப்படி எளிய வார்த்தைகளைக் கோத்துச் சொல்வதால் இது ஏதோ இன்று தொடங்கி நாளை முழுமையடையும் திட்டம் என்று எண்ணிவிடாதீர்கள். ‘இன்னைக்கு விதைபோட்டுட்டு நாளைக்கே பழம் சாப்பிடணும்னு நினைச்சா முடியுமோ’ என்ற என் பட வசனத்தையே துணைக்கு அழைக்கிறேன். இது எங்களின் நீண்டகாலக் கனவு. ஆனால் சாத்தியமாகக்கூடியது.
அடுத்து, அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். `மை சன் இஸ் எ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் இன் அமெரிக்கா’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதுபோல், ‘என் மகன் கிராமத்துல விவசாயம் பண்றான்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் காலத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்தும் முனைப்பில் இருக்கும் போராளி.
அடுத்து, அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். `மை சன் இஸ் எ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் இன் அமெரிக்கா’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதுபோல், ‘என் மகன் கிராமத்துல விவசாயம் பண்றான்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் காலத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்தும் முனைப்பில் இருக்கும் போராளி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சம்பா, குருவை என்று காலம் பிரித்துச் சாகுபடி செய்துகொண்டிருந்த விவசாயிகளை, சாகும்படி செய்தது யார் குற்றம்? காலங்காலமாகக் கொடுக்கும் இடத்தில் இருந்த இவர்களைக் கையேந்தும் இடத்துக்குத் தள்ளியது யார்? இனி வருங்காலம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாகவும், இவர்களை மீண்டும் கொடுக்கும் இடத்தில் அமரவைப்பதாகவும் இருக்கும். அதற்கான முனைப்புதான் எங்களின் இந்த இணைப்பு.
அடுத்து, ‘அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பார் ஜெயராமன். இவருடைய அணியின் பணிகள், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு நிகரானவை. இந்த ‘அறப்போர்’ இயக்கத்தை 2015-ல் ஊழலை எதிர்க்கக்கூடிய 25 முதல் 30 பேர் சேர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள். மக்கள் பங்கெடுக்கும் உண்மையான ஜனநாயகமாக, தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடிய ஜனநாயகமாக மாறும்போதுதான் இது உண்மையான மக்களாட்சியாக மாறும். அதைநோக்கி, இவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள்; மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்கிறார்கள். நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். என் நோக்கமும் அதுதான் என்பதால் இவர்களுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்.
அடுத்து, ‘அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பார் ஜெயராமன். இவருடைய அணியின் பணிகள், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு நிகரானவை. இந்த ‘அறப்போர்’ இயக்கத்தை 2015-ல் ஊழலை எதிர்க்கக்கூடிய 25 முதல் 30 பேர் சேர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள். மக்கள் பங்கெடுக்கும் உண்மையான ஜனநாயகமாக, தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடிய ஜனநாயகமாக மாறும்போதுதான் இது உண்மையான மக்களாட்சியாக மாறும். அதைநோக்கி, இவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள்; மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்கிறார்கள். நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். என் நோக்கமும் அதுதான் என்பதால் இவர்களுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர்களின் முக்கியமான கருவி, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பாமரர்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்கிறார்கள். ஆம், நமக்குக் கிடைத்த முதல் சுதந்திரத்தை நாம் யார் யாரிடமோ அடகு வைத்துவிட்டோம். அடகு வைத்த அந்தச் சுதந்திரத்தை மீட்க இந்தச் சட்டம் ஒரு மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படும். இந்தச் சட்டத்தைக் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இயற்றிய அரசு, அதைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் வேதனை. ‘அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும்’ என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால், இருட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அரசு நடைமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமே இருட்டில்தான் கிடக்கிறது என்பதே நிதர்சனம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அரசு, அரசு உதவி பெறும் அனைத்து அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இவற்றிலிருந்து உங்களுக்கு ஒரு தகவல் தேவை என்றால், நீங்கள் மனு செய்த குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தத் தகவல் உங்களுக்குத் தரப்படவேண்டும். இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் தகவல் ஆணையத்துக்குச் சென்று தகவல் பெறலாம். இதுதான் நடைமுறை. ‘எப்படித் தகவல் பெறலாம், எப்படித் தகவல் தரலாம்’ என்ற இந்த நடைமுறையை மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், ‘எந்தெந்தச் சட்ட நுணுக்கங்களை மேற்கோள்காட்டி எப்படியெல்லாம் தகவல்களைத் தராமல் இருக்கலாம்’ என்ற அடிப்படையில் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிகிறேன்.
மேலும், ஒரு நீதிமன்றத்தைப்போல் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டிய தகவல் ஆணையமும் பூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தத் தயங்குகிறது. இப்படி வெளிப் படைத்தன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே இவர்கள் பூட்டிவைத்துள்ள அவலம் இங்கு மட்டுமே சாத்தியம். அந்தப் பூட்டை அறப்போர் இயக்கத்தார் போன்ற சிலர் முட்டி மோதி உடைக்கத் தொடங்கி அவலங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஒரு நீதிமன்றத்தைப்போல் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டிய தகவல் ஆணையமும் பூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தத் தயங்குகிறது. இப்படி வெளிப் படைத்தன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே இவர்கள் பூட்டிவைத்துள்ள அவலம் இங்கு மட்டுமே சாத்தியம். அந்தப் பூட்டை அறப்போர் இயக்கத்தார் போன்ற சிலர் முட்டி மோதி உடைக்கத் தொடங்கி அவலங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்படி இந்தச் சட்டம் பற்றியும், அதன்மூலம் மேற்கொள்ள வேண்டிய நற்பணிகள் குறித்தும் என் இயக்கத்தாருக்கு இவர்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவார்கள். இதன்மூலம் எளிய மக்களின் கரங்கள் வலுப்படும். ஊழல்கள் அம்பலப்படும். நாளடைவில் உண்மையான மக்களாட்சி மலரும்.
`இப்படி அரசைக் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கிறாயே... உன் நோக்கம்தான் என்ன?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களைப் பதில் சொல்லும் இடத்தை நோக்கி நகர்த்துவது. அதன் மூலம் அவர்களைச் செயல்பட வைப்பது. இதுதான் எங்களின் நோக்கம். ‘இல்லையில்லை... இதன்மூலம் பதிலளிக்கும் இடத்தை நோக்கி நீ நகர முயற்சி செய்கிறாய்’ என்ற சிலரின் சந்தேகப்பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. முடிந்தால் செய்யுங்கள்; இல்லையேல் எங்களையாவது செய்ய விடுங்கள். ஆம் ‘செய் அல்லது செய்ய விடு’ என்கிறேன். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?
- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
`இப்படி அரசைக் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கிறாயே... உன் நோக்கம்தான் என்ன?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களைப் பதில் சொல்லும் இடத்தை நோக்கி நகர்த்துவது. அதன் மூலம் அவர்களைச் செயல்பட வைப்பது. இதுதான் எங்களின் நோக்கம். ‘இல்லையில்லை... இதன்மூலம் பதிலளிக்கும் இடத்தை நோக்கி நீ நகர முயற்சி செய்கிறாய்’ என்ற சிலரின் சந்தேகப்பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. முடிந்தால் செய்யுங்கள்; இல்லையேல் எங்களையாவது செய்ய விடுங்கள். ஆம் ‘செய் அல்லது செய்ய விடு’ என்கிறேன். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?
- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
Similar topics
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2
» என்னுள் மையம் கொண்ட புயல்! - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்!”
» என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2
» என்னுள் மையம் கொண்ட புயல்! - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்!”
» என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|