புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஹெபடைட்டிஸ் பி Poll_c10ஹெபடைட்டிஸ் பி Poll_m10ஹெபடைட்டிஸ் பி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெபடைட்டிஸ் பி


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Wed Dec 06, 2017 1:23 pm



மக்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளில் வைரஸ் மிக மோசமானது. இது ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமை யானவை; மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. உதார ணத்துக்கு... சென்ற நூற்றாண்டில் எய்ட்ஸ்; இப்போது எபோலா. இந்த வரிசையில் சத்தம் இல்லாமல் உயிரைப் பறிக்கும் மற்றொரு வைரஸ் கிருமி 'ஹெபடைட்டிஸ் பி’ (Hepatitis - B). இதற்கு 'உயிர்க்கொல்லி நோய்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆனால், இந்த வைரஸ் தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

பொதுவாக, எந்த ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கினாலும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். அது பாக்டீரியாவாகவும் இருக்கலாம்; வைரஸாகவும் இருக்கலாம். வைரஸ்களில் 'ஹெபடைட்டிஸ்’ வைரஸ் முக்கியமானது. ஏ, பி, சி, டி, இ என இவற்றில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் பி மற்ற வைரஸ்களைவிட மிகவும் மோசமானது. இது கல்லீரலைத் தாக்கி மஞ்சள் காமாலை – பி எனும் தொற்று நோயை ஏற்படுத்துகிறது.

உலகில் சுமார் 20 கோடிப் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிரத்யேகமாக மருந்து, மாத்திரை, சிகிச்சை எதுவும் இல்லை. இது வந்தால் மரணம் நிச்சயம் என்பதால், ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

பரவும் விதம்

ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களின் மூலம் இந்த நோய்க்கிருமி வெளியேறி பரவுகிறது. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய் இருந்தால், குழந்தைக்கும் இது தொற்றுகிறது. உடலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவுகிறது.

தனக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பதை அறியாமல் யாராவது ரத்ததானம் செய்தால், அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்ட வருக்கும் இந்த நோய் வரும்.(தற்போது பரிசோதனைகள் பல செய்து நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகே தானமாகப் பெறப்பட்ட ரத்தம் மற்றவர்களுக்கு செலுத்தப்படுகிறது.) இவர்களுக்குப் போடப்பட்ட ஊசியையும் சரியாகத் தொற்று நீக்கம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால், நோய் பரவும்.

போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள், டாட்டூ குத்திக்கொள்பவர்களுக்கு இந்த நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சவரக்கத்தி, ரேசர் பிளேடு...போன்றவற்றில் சுமார் ஏழு நாட்கள் வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்தச் சமயத்தில் அந்தப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும் இந்த நோய் வந்துவிடும்.

நோய் பாதிப்பு

இந்த நோய்த்தொற்று உள்ளவருக்குப் பசி இருக்காது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால், கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும். வயிறு வலிக்கும். தோல் அரிக்கும். எலும்பு மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் சில வாரங்களில் மறைந்துவிடும் என்றாலும், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, நோய் கடுமையாகும். அதேநேரத்தில் இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், சிறுவர்சிறுமிகளுக்கும் இந்த நோய் இருப்பதே வெளியில் தெரியாது. அந்த நேரத்தில் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே மற்றவர்களுக்கு இந்த நோயைப் பரப்புவார்கள். ஆதலால், இவர்களை 'நோய்க் கடத்துநர்கள்’ என்று கூறுகிறார்கள். இவர்

களுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும் (Liver Cirrhosis). கல்லீரலில் புற்றுநோய் வரும். இறுதியில், மரணம் ஏற்படும்.

தடுப்பூசி வகை

மஞ்சள் காமாலை – பி நோய்க்கு சிகிச்சைதான் இல்லை. 100 சதவீதம் இதை வராமல் தடுக்க 'மஞ்சள் காமாலை – பி தடுப்பூசி’ உள்ளது. இது தனியாகப் போடப்படும் ஊசியாகவும், பென்டா

வேலன்ட் என்னும் கூட்டுத் தடுப்பூசியாகவும் கிடைக்கிறது. இந்த நோய்க் கிருமியை மரபு

சார் பொறியியல் தொழில்நுட்பத்தில் ஈஸ்ட் செல்களில் வளர்த்து, அதன் மேல் அடுக்கு ஆன்டிஜெனைப் (Surface antigen) பயன்படுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள்.

தடுப்பூசியின் அவசியம்

இந்தியாவில் 100ல் 4 பேர் மஞ்சள் காமாலை பி கிருமியைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். 100 கர்ப்பிணிகளைப் பரி சோதித்தால், குறைந்தது 3 பேரிடம் இந்த நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் இந்தத் தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொள் கிறவர்களுக்கு இந்த நோய் வருவதே இல்லை. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி போடத் தொடங்கிய பிறகு, கல்லீரல் புற்றுநோயும் கல்லீரல் சுருக்க நோயும் ஏற்படுவது மிகவும் குறைந்துள்ளது.

போட்டுக்கொள்ளும் முறை

குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை என்று இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதன் அளவு அரை மில்லி. குழந் தையின்வெளிப்பக்கத் தொடையில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை குறை மாதத்தில் பிறந்து உடல் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், முதல் தவணைத் தடுப்பூசியைப் பிறந்தவுடன் போடக்கூடாது. பிறந்த 30ம் நாளில் முதல் தவணையையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக வழக்கம் போலவும் போட வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி, சிறிது வீக்கம், மிதமான காய்ச்சல், களைப்பு, தலைவலி போன்ற சிறு அவஸ் தைகள் உண்டாகலாம். ஆனால், இவை தானாகவே சரியாகிவிடும். கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் இதில் இல்லை என்பது ஆறுதலான விஷயம்!

தடுப்பூசியைப் போடவில்லை எனில்....?

ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் எந்த வயதிலும் இதைப் போட்டுக் கொள்ளலாம். மொத்தம் மூன்று முறை இதைப் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கும் இரண்டாம் ஊசிக்கும் ஒரு மாதம் இடைவெளியும், இரண்டாம் ஊசிக்கும் மூன்றாம் ஊசிக்கும் ஐந்து மாதம் இடைவெளியும் விட வேண்டும். 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதன் அளவு அரை மி.லி. 10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இதன் அளவு ஒரு மி.லி. குழந்தைகளுக்குத் தொடையிலும், பெரியவர் களுக்கு இடது புஜத்திலும் போட வேண்டும். இடுப்பில் மட்டும் போடவேகூடாது.

யாருக்கு இது அவசியம் ?

இந்தியாவில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை பி தடுப்பூசி அவசியம். அவர்களோடு, போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு வைத்துக்கொள்பவர்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், நெடுங்காலம் கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள், கல்லீரல் நோய் வந்துள்ளவர் வீட்டில் வசிக்கும் மற்றவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள்... ஆகியோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணி உதவியாளர்கள், செவிலியர்கள், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவச் சமூகப்பணி செய்பவர்கள், ரத்த வங்கி மற்றும் ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் பணிபுரிபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரும் இந்தத் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால்?

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன், மஞ்சள் காமாலை பி இம்யுனோகுலோபுலின் எனும் தடுப்பு மருந்தை அரை மில்லி அளவில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் போடவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்குள் இதை அவசியம் போட்டுவிட வேண்டும். இத்துடன் வழக்கமான மஞ்சள் காமாலை பி தடுப்பூசியையும் போட வேண்டும். இந்த இரண்டையும் ஒரே தொடையில் போடக்கூடாது. தனித்தனி தொடைகளில் போட வேண்டும்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 6:55 pm

ksikkuh wrote:
மக்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளில் வைரஸ் மிக மோசமானது. இது ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமை யானவை; மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. உதார ணத்துக்கு... சென்ற நூற்றாண்டில் எய்ட்ஸ்; இப்போது எபோலா. இந்த வரிசையில் சத்தம் இல்லாமல் உயிரைப் பறிக்கும் மற்றொரு வைரஸ் கிருமி 'ஹெபடைட்டிஸ் பி’ (Hepatitis - B). இதற்கு 'உயிர்க்கொல்லி நோய்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆனால், இந்த வைரஸ் தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1252655
ஹெபடைட்டிஸ் பி 103459460 ஹெபடைட்டிஸ் பி 1571444738 ஹெபடைட்டிஸ் பி 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக