புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
34 Posts - 52%
heezulia
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
17 Posts - 2%
prajai
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
9 Posts - 1%
jairam
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_m10மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:15 pm

மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம் !  Krishn10

அன்ன தானம் முதல் சொர்ண தானம் வரை நாம் அறிவோம்! மனிதன் தன் பாவங்கள் தீரவும் இன்னல்களை நீக்கிக்கொள்ளவும் இறைவன் நமக்குக் கொடுத்த கொடை, ஒரு வழிமுறையே தானம். அன்ன தானம் நம் தரித்திரத்தையும் கடன்களையும் நீக்கும் என்றால், அரிசி தானம் நம் பாவங்களைப் போக்கும்... இப்படி அத்தனைவிதமான தானங்களுக்கான பலன்களை புராணங்கள், இதிகாசங்கள் அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

ஒரு தந்தை, தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதையே `கன்னிகா தானம்’ என்றுதான் சொல்வார்கள். எத்தனையோ வகைகள் இதில் இருந்தாலும், தகுதியானவருக்கு, மனமுவந்து கொடுக்கும் தானத்துக்கே மகிமை அதிகம். இதை பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வும் உண்டு. அதைப் பார்க்கலாமா?  

ஒருமுறை அஸ்தினாபுரத்துக்கு வந்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா. காலை நேர நியமங்களை முடித்துக்கொண்டு பாண்டவர்களைப் பார்க்கச் சென்றார். வாயிலில் இருந்தே வரவேற்ற யுதிஷ்டிரரின் (தர்மர்) முகம் வாட்டத்தோடு இருப்பதைக் குறிப்பால் உணர்ந்துகொண்டார். உள்ளே வந்து அமர்ந்தவர் தர்மரைப் பார்த்தார். அவரோ தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

“மைத்துனா... ஏன் என்னவோபோல் இருக்கிறாய்? உடல் உபாதை ஏதும் இல்லையே?’’

“இல்லை கிருஷ்ணா... இரவில் சரியாகத் தூங்கவில்லை.’’

“உறக்கம் வரவில்லை என்றால் அது நிம்மதியின்மையைக் குறிக்கிறது. உன் மனம் அமைதியில்லாமல் இருக்கிறதா என்ன..?அப்படி அசம்பாவிதச் சம்பவம் எதுவும் அஸ்தினாபுரத்தில் தற்போது நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே..!’’

“அசம்பாவிதமெல்லாம் இல்லை கண்ணா... ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தேன். அது என்னை தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது.’’

“தர்மா... மனம் வேதனைப்படும் எதுவாக இருந்தாலும் யாரிடமாவது அதை வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால், அது உள்ளத்தை அரித்து அரித்து பெரும் துன்பத்தை வரவழைத்துவிடும். என்னிடம் சொல்... எதுவாக இருந்தாலும் சொல்! என்னால் தீர்க்க முடிகிறதா என யோசிக்கிறேன்...’’

தர்மர் சற்றுத் தயங்கிவிட்டு ஒரு கேள்வி கேட்டார்... “கிருஷ்ணா... பாண்டவர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தானே..?’’

“அதிலென்ன சந்தேகம்? அதனால்தான் நான் உங்களோடு இருக்கிறேன்.’’

“எங்களின் அருங்குணங்கள்..?’’

“எது வந்தாலும் நீதியின் பக்கம் நிற்கும் துணிவு, நல்லவர்க்கு உதவும் பாங்கு, எளியோர்க்கு இரங்கல்... என உங்கள் ஐவரின் நற்குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே! அத்தனையும் ஒருங்கே பெற்றவனாக நீ இருக்கும்போது, உன் தலைமையில் உன் தம்பிமார்களும் அப்படித்தானே இருப்பார்கள்?’’

“சரி... தான, தர்மத்தில்?’’

“அதையும் நீங்கள் செய்துகொண்டுதானே இருக்கிறீர்கள்..?’’

“அப்படியானால் ‘கொடைக்குச் சிறந்தவன் கர்ணன்’ என்று உலகமே பாராட்டுகிறதே... நாங்கள் அவனைவிட எவ்விதத்தில் குறைந்துபோனோம்? இந்த எண்ணம்தான் என்னை இரவெல்லாம் உறங்கவிடாமல் அடித்தது.”

கிருஷ்ண பரமாத்மாவின் அதரங்களில் மென்நகை நெளிந்தது. தர்மரின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.  

“சரி வா என்னோடு... உன் தம்பிகளையும் அழைத்துக்கொள். உன் சந்தேகத்துக்கு விடை கிடைக்கிறதா எனப் பார்ப்போம்...’’

கிருஷ்ணர் முன்னே செல்ல, பாண்டவர்கள் பின் தொடர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தின் எல்லையைத் தாண்டி ஓர் இடத்தில் எல்லோரையும் நிற்கச் சொன்னார் கிருஷ்ணர். ஆயர்குலத் தோன்றல் ஸ்ரீகிருஷ்ணர் தன் வலக் கரத்தை உயர்த்தினார். இரு சிறு குன்றுகள் தோன்றின. ஒன்று, தங்கக் குன்று. மற்றொன்று, வெள்ளிக் குன்று.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:17 pm

ஒரு சின்ன பரீக்‌ஷை தர்மா! நீயும் உன் தம்பிகளும் சேர்ந்து இந்த இரு குன்றுகளையும் தானமாகக் கொடுக்க வேண்டும். யாருக்கு வேணுமானாலும் கொடுக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை. மாலைக்குள் கொடுத்துவிட வேண்டும்... முடியுமா? அது நடந்தால், கர்ணனைவிட நீங்கள் சிறந்தவர்கள் என நான் ஒப்புக்கொள்கிறேன்... உலகுக்கே எடுத்துச் சொல்கிறேன்.’’

தர்மர் தன் தம்பிமார்களைப் பார்த்தார். வலுவிற் சிறந்த பீமன், வில்லிற் சிறந்த அர்ஜுனன், நகுலன், சாஸ்திரத்தில் சிறந்த சகாதேவன் அனைவரும் களமிறங்கினார்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் அழைத்து, தங்கக் குன்றையும் வெள்ளிக் குன்றையும் வெட்டி வெட்டிக் கொடுத்தார்கள். ஆனாலும், மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், அவர்கள் கொடுத்ததில், பாதி குன்றுகள் அப்படியே தீராமல் இருந்தன.

தர்மர், யோசனையோடு கிருஷ்ணர் முகத்தையே பார்த்தார்.

“இன்னுமா தீரவில்லை?’’ என்ற பகவான், “சரி... நான் ஒரு யோசனை சொல்கிறேன். யாரையாவது அனுப்பி, கர்ணனை அழைத்துவரச் சொல்!’’

கர்ணனை அழைக்க ஆட்கள் பறந்தார்கள். கர்ணனும் வந்து சேர்ந்தான்.

“கர்ணா..! இவை இரண்டும் அபூர்வக் குன்றுகள். இன்று மாலைக்குள் இவற்றைக் கொடுத்துவிட வேண்டும். மாலையாகிவிட்டால், இவற்றின் மகிமை போய்விடும்... உன்னால் முடியுமா?’’

கர்ணன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். சற்று தூரத்தில் ஒரு வயோதிக விவசாயி வருவதைப் பார்த்தான். ஓடிப் போய் அவர் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

“ஐயா... நான் மகிழ்ச்சியோடு கொடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்பீர்களா?”

கர்ண மகாராஜா கேட்கிறாரே... அது சாதாரணமாகவா இருக்கும்? விவசாயி சரியெனத் தலையசைத்தார்.

“இதோ... இந்த தங்கக் குன்று, வெள்ளிக் குன்று இரண்டையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்...” விவசாயி மலைப்போடு தன் பரிசுப் பொருளைப் பார்த்தார்.

‘கர்ணன் ஏன் சிறந்தவன் என்று இப்போது புரிகிறதா?’ என்று சொல்லாமல் தன் பார்வையாலேயே பார்த்தார் கிருஷ்ணர். தர்மர், தன் தலையைத் திருப்பிக்கொண்டார். மனமுவந்து கொடுப்பதில், வாரி வழங்குவதில் #கர்ணனுக்கு இணை யாரும் இல்லை. தர்மமோ, தானமோ இரண்டையும் மனமுவந்து செய்யவேண்டும் என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உணர்த்திய சம்பவம் இது.

இதைத்தான் `ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்...’ எனச் சொல்கிறது தைத்ரிய உபநிஷத். அதாவது, முழு நம்பிக்கையோடு, ஈடுபாட்டோடு (சிரத்தையோடு) எதையும் தானம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஸ்லோகம். பகவான், ‘தானத்தைக்கூட நிதானத்தோடு செய்தால் முழுப்பலன்’ என்பதை பாண்டவர்களுக்கு உணர்த்தினார்; தர்மருக்குத் தெளிவாக விளங்க வைத்தார். தானம் நல்லது... அதை மனமுவந்து செய்வது மிக நல்லது!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 02, 2018 12:07 pm

ஆம் அப்படி கொடுத்தால் ஒருநொடி போதும் அனைத்தையும் தானம் கொடுக்க 

அருமையான கருத்து
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 03, 2018 5:51 pm

அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 04, 2018 7:45 am

அருமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 11:30 am

SK wrote:ஆம் அப்படி கொடுத்தால் ஒருநொடி போதும் அனைத்தையும் தானம் கொடுக்க 

அருமையான கருத்து

நன்றி செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 11:31 am

பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.

அதனால் தான் நாம் இன்னும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஐயா ஜாலி ஜாலி ஜாலி.................

'கர்ண மஹா பிரபு' என்று !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 11:32 am

T.N.Balasubramanian wrote:அருமை

ரமணியன்

நன்றி ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 12:32 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.

அதனால் தான் நாம் இன்னும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஐயா ஜாலி ஜாலி ஜாலி.................

'கர்ண மஹா பிரபு' என்று !
உண்மையை சொன்னீர்கள்
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 1:44 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படி யாரும் தற்போது கர்ண பிரபுவாக
வாரி வழங்குவோர் யாருமில்லை.
நன்றி அம்மா அருமையான பதிவு.

அதனால் தான் நாம் இன்னும் அவர் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஐயா ஜாலி ஜாலி ஜாலி.................

'கர்ண மஹா பிரபு' என்று !
உண்மையை சொன்னீர்கள்
நன்றி அம்மா

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக