புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
11 Posts - 4%
prajai
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
3 Posts - 1%
jairam
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_m10இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 9:50 pm


இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !  2775f613


இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !

சென்னைக்கு மிக அருகிலேயே  ஒரு ஸ்ரீ ரங்கம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?  நான்  நான்கு ஐந்து முறை தரிசித்தும் இன்னும் தாகம் தீரவில்லையே.

திருவள்ளூர் ஜில்லா, பொன்னேரி தாலுக்காவில், தேவதானம் என்று ஒரு அருமையான கிராமம்.   இது  வட ஸ்ரீரங்கம் என பெயர் பெற்றது.  அங்கு எங்கும் பச்சை பசேல் என்று வயல்கள் இருந்தது முதலில் நான் சென்றபோது. அடுத்து அடுத்து சென்றபோது  வயல்கள் நடுவிலே வீட்டு மனைகள் வியாபாரம் பலகைகள் நின்றபோது வயிற்றில் பகீர் என்றது.  

ஏனென்றால் இங்கே ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி  நீளம் அதிகமானவர்.  ஆகிருதியாக சேஷன் மேல் சுகமாக யார் தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருக்கிறாரே.  எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்கவைப்பவர்களும் இல்லையே.

இயற்கை சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு  ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.  அருகே அவரை தொடும்  தூரத்தில் நின்று மணிக்கணக்காக அவரோடு பேசலாம், பாடலாம், யாரும் தடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் யாருமே இல்லை.

தேவதானம் பெருமாள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலானவர்.  பெருமாள் மேல் அவர் செய்த சேவைக்கு நன்றியாக  தேவர்கள் சேர்ந்து அளித்த தானம்  இந்த வயல் சூழ்ந்த இடம். தேவதானம்.   சிறிய கோவில் என்றாலும் சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட  ஆலயம்.  ஆலயம்  வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது.

வளைந்து வளைந்து வண்டியில் செல்ல  பாதை அமைத்திருக்கிறார்கள். யாரும் தன்னை தொந்தரவு செய் யக்கூடாது என்ற நோக்கத்தோடு தானே  ரங்கநாதர்  இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கோவிலை  அடுத்து பெரிய வயதான மரங்கள். நிறைய பக்ஷிகள் அவருக்கு இன்னிசை  பாட கொடுத்து வைத்திருக்கின்றன.  சிறிய சாதாரண நுழைவாசல், அதை தொடர்ந்து பலி பீடம், கொடிமரம், எதிரே  பெருமாளை தொழுதபடி  கருடாழ்வார்.

அப்புறம்  நம் கண் முன்னே பிரம்மாண்டமான  ரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். தலைகள் தான் குடை. கிழக்கு நோக்கிய திருமுகம். யோக சயன ரங்கநாதர்.  எல்லோருக்கும் நெல் அளந்து கொடுத்து களைத்து அளந்த மரக்கால் படியை தலைக்கு வைத்தவாறு பதினெட்டு அடி நீளத்தில்  தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.

தாமரைக்கண்ணன். வலது கையை அழகாக மடித்து  தலைக்கு கீழே. இடது காய் நீட்டியபடி.  
ஒரு ஆச்சர்யமான விஷயம். இந்த ரங்கநாதர் கல்லால் செதுக்கப்பட்டவர் அல்லர். சுதை. திருமேனி  முழுதும் சாளக்ராம கற்களால் வடித்தது. என்ன வசீகரமான புன்னகை பூத்த ;முகம். அப்பப்பா. நாள் முழுதும் ரசிக்க ஒரே இடம்.  

பத்மநாபன்  நாபியில் ப்ரம்ம தேவன்.  தாமரை மலர் கையிலேந்திய  ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை அடுத்து நீலோத்பல மலர் ஏந்திய  பூமா தேவி.  கையில் தம்புராவோ வீணையோ கையில் கொண்டு போற்றி பாடும் தும்புரு,  வணங்கிக்கொண்டே இருக்கும் ஆஞ்சனேயர்.  சுதை சாளக்ராம விக்ரஹம் என்பதால்  அபிஷேகம் இல்லை.  தைல காப்பு. மினுமினுக்கிறார்.  பிரகாரத்தில்  ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சந்நிதி.  

ஸ்தல விருக்ஷம் பாரிஜாதம் பூத்து குலுங்குகிறது. பறிப்பதற்கு ஆளில்லையா?  எங்கும் கம்மென்று பாரிஜாத நறுமணம். பெரிய புற்று ஒன்று. உள்ளூர் பக்தர்கள் அடிக்கடி வந்து பால் ஊற்றுகிறார்கள்.

சென்னையிலிருந்து  ரெண்டு மணி நேரத்தில் காரில் சென்று அனுபவித்தேன். ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை நான்கைந்து முறை. விரும்பியவர்களை அழைத்துச்சென்று காட்டினேன்.

மீஞ்சூர்  ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய மினி பஸ், ஆட்டோ   கிடைக்கிறதால் வயல் வழியே சென்று ரங்கநாதனாரை பார்க்கலாமே.

whatsup  இல் வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 21, 2018 6:25 am

ஸ்ரீ ரங்கம் கோபுரம் :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக