புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
7 Posts - 2%
jairam
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_m10ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 25, 2018 6:07 am

  ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  

அமெரிக்காவில் அன்றைய அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய ஒபாமா கேர் என்று பரவலாக அறியப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல இப்போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் என்கிற மோடி கேர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அவரால் அறிவிக்கப்பட்ட இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் செலவுகளை 60% மத்திய அரசும், 40% மாநில அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா - ஆயுஷ்மான் பாரத் என்கிற இந்தத் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 25 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் கைகோக்கின்றன. 

ஏறத்தாழ 10 கோடி குடும்பத்தைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள். இதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லாமல் 9,000க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பல தனியார் மருத்துவமனைகள் விரைவில் இணைக்கப்பட இருக்கின்றன. இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள், மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட ஏறத்தாழ 1,350 வகையான உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தத் திட்டத்தில் வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 2,500 அதிநவீன மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு கோடிக்கும் அதிகமானோர் மருத்துவச் செலவுகளால் வறுமையை எதிர்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாகவே மத்திய-மாநில அரசுகள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் மருத்துவ சேவையை ஈடுகட்ட முயற்சிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 

மக்களின் மருத்துவத் தேவையை எதிர்கொள்ள உலகில் இரண்டு முன்மாதிரிகள் உள்ளன. இங்கிலாந்தில் அரசின் நேரடிக் கண்காணிப்பிலுள்ள பொது மருத்துவமனைகளின் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் மூலம் மக்களின் மருத்துவத் தேவைக்கு அரசு உதவுகிறது. நரேந்திர மோடி அரசு மேலே குறிப்பிட்ட இரண்டு முன்மாதிரிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. 

நரேந்திர மோடி அரசு அறிவித்திருக்கும் ஆயுஷ்மான் பார்த் என்கிற தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் இப்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதா என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்கிற அச்சமும் ஏற்படாமல் இல்லை.

இதுபோன்ற திட்டங்கள் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுபவை. ஒருமுறை தொடங்கிவிட்டால், சரிவர இயங்காவிட்டாலும், மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அதை நிறுத்த முடியாமல் அரசு அதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. ஆனால், அவர்களது காப்பீட்டின் அளவு, மருத்துவமனைக்குத் தரும் கட்டணம் உள்ளிட்டவை மாறுபடுகின்றன, அவ்வளவே. 

இந்தத் திட்டங்கள் எல்லாமே குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குவதைக் கட்டாயப்படுத்துவதால், சிகிச்சையின் தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு சிகிச்சை அளிப்பது இயலாது என்று ஏற்கெனவே இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தேவையில்லாமல் இடைத்தரகர்களும், மருத்துவமனைகளும் சம்பாதிப்பதற்கு இந்தத் திட்டம் வழிகோலுமே அல்லாமல், நோயாளிகளுக்குப் பயன்படாது என்கிற பரவலான கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. 

இந்தியாவில் 1,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவர்தான் காணப்படுகிறார். 90,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனைதான் இருக்கிறது. இன்னும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் தேவையை விட 22% குறைவாகக் காணப்படுவதாக மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. தனியார் மருத்துவமனைகளும் கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ வசதிகளுடன் இல்லாமல் இருக்கும் சூழலில் இவ்வளவு பெரிய திட்டத்தை அரசு எப்படி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது புரியவில்லை.

நல்லெண்ணத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம்தான் என்றாலும், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதையும் அதில் தவறுகள் நேர்ந்துவிடாமல் கண்காணிப்பதையும் உறுதிப்படுத்தாமல் போனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் நலன்தான் பேணப்படுமே ஒழிய, மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

  தினமணி




ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 8:30 am

நல்ல திட்டம் ...நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் புன்னகை............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 26, 2018 7:52 am

நல்ல திட்டம், வரவேற்போம்!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Sep 26, 2018 8:05 am

திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.

மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்


அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .

முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:28 am

கார்த்திக் செயராம் wrote:திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.

மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்


அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .

முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1279211


நீங்கள் சொல்வதும் உண்மை கார்த்தி, எப்போது மருத்துவமும் கல்வியும் வியாபாரம் என்று ஆகிவிட்டதோ அப்போது இவை எல்லாம் அத்தனை சுலபமாக வெற்றி பெறமுடியாது தான் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 26, 2018 6:07 pm

நல்ல திட்டம் ரபேல் போல ஊழல் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 26, 2018 6:38 pm

எந்த ஒரு நல்ல /நல திட்டத்திலும் கருப்பாடுகள் புகுந்தால்
அந்த திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டியவரை சேராது.
போக போகத்தான் தெரியும்.
வெற்றி பெற்றால் சந்தோஷம்.
வீட்டில் 3 பேர் இருந்தால் 3 x 5 =15 லக்ஷம், மோடி ஒவ்வொருவர் கணக்கிலும்
போடுவதாக சொன்ன பணம் இதுதானோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Sep 27, 2018 6:19 am

அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:28 am

anikuttan wrote:அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .
மேற்கோள் செய்த பதிவு: 1279334

ஆமாம் நண்பரே, டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, காரணம் அங்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன.

விரைவில் அங்கும் பாஜக ஆட்சி அமைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவோம்! சிரி



ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக