புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
6 Posts - 4%
Ammu Swarnalatha
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
10 Posts - 5%
prajai
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்ம தத்துவம் Poll_c10ஆன்ம தத்துவம் Poll_m10ஆன்ம தத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ம தத்துவம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:13 am

ஆன்மஞானம்

ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள்.


பரமாணு


பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா என்பது அளப்பறிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது, உருவமாற்றது, அதன் சக்தியை, ஆற்றலை, உணர்ந்தவர்கள் மட்டுமே பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல் மிக்க ஆன்மாவின் சக்தியை உணர்ந்து அதை நமக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆன்மஞானமாகும். ஆனால் நம்மிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலைப் புரிந்து கொள்ளாமல், நம்மிடம் உள்ள ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வதுடூ எப்படி இயக்குவதுடூ எனத்தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையில் பலவித அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட அல்லல்களிலிருந்து விடுதலை பெற முயன்று வெற்றி கண்டவர்கள்தான் ஞானிகளும், சித்தர்களும்.

இறைவன் என்பவன் யார்?

எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், மேலும், வெளியும் அதுவதில் உயிர்சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இதை வள்ளலலார் பெருமான் சொல்லும்போது,

குலவு பேரண்டப்பகுதியோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட் பொருஞ்சோதி என் அரசே.

இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படிச் செயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்தியை நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும், உயிரையும் பேணப்பயன்படுத்தும் வழிவகைகளை தெரிந்து கொள்வதே ஆன்மஞானம். ஆன்மஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கண்டு நிம்மதியாக வாழலாம்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:13 am

ஞானம்

ஞானம் என்றாலே அறிதல், அறிவின் தெரிந்த நிலை என்று சொல்லலாம். இன்னொரு வகை விளக்கம் ஞாலத்தை அறிதல் என்றும் சொல்லலாம்.

ஆன்மா

ஆன்மா என்றால் நம்முடைய உடலை, உயிரை இயக்குகின்ற எளிதில் புரிந்து கொள்ளமுடியாத சூட்சமக் கருவி என்று சொல்லலாம். உயிர் இல்லையேல் உடல் இருக்காது, உடலை வைத்துத்தான் உயிர் உண்டா? இல்லையா? என்பததை அறிய முடியும். ஆகவே உயிர் உடல் இரண்டையும் இணைத்து வைக்கின்ற ஒப்பற்ற கருவியே ஆன்மா எனப்படுவது. இந்த இரண்டும் அதாவது உடலும், உயிரும் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு பொருளைத்தான் சீவன் என்கிறோம்.

உயில் சக்தி

உடலின் உள்ளே உயில் சக்தியானது அதாவது வெட்ட வெளியிலே உள்ள ஆற்றல்கள் பிராணவாயுவின் மூலம் மூச்சுக் காற்றால் உடலின் உள்ளே இழுக்கப்பட்டு கோடிக்கணக்கான நமது உடல் அணுக்களுக்கு ஆற்றலைக் கொடுத்து உடலை இயக்க வைக்கிறது. இப்படி இயக்குகின்ற அந்த சக்தியைத்தான் சுருக்கமாக உயில் சக்தி என்கிறோம். உடலின் உள்ளே உயில் சக்தியானது சுழன்று இயங்கும்போது அந்தந்த உடலின் அணுக்கூறுகளுக்கு ஏற்ப உயிரின் சிறப்பாற்றலாக எழும் விளைவுகளே உணர்ச்சிகள். இந்த உணர்ச்சிகளைத் துய்த்து உயிரானது பெரும் உண்மைத் தெளிவு, அறிவு, அல்லது ஞானம் எனப்படும் சீவனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நடைபெற்ற தொடர்பயணமே வாழ்க்கையாகும்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:16 am

வாழ்க்கை

வாழ்க்கை என்பது மூன்று அமைப்பிலே செயல்படுகிறது. இயற்கை, சமுதாயம், இன்ப துன்பங்கள். இம்மூன்றும் மனிதன் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. ஆகவே, இம்மூன்று பகுதிகளையும் தெளிவாக ஆராய்ந்து அறிவிலே முழுமை பெற்று வாழ்வதே ஞான வாழ்வு. தெளிந்த நீரிலே நீரின் ஆழத்திலே இருக்கின்ற கற்களை காண்பது போல வெளிச்சத்திலே பொருள்களைக் காண்பது போல ஒரு வியாரியானவனுக்கு தன்னுடைய பொருள் விற்பனை விலைநிர்ணயம் செய்வது எளிது. காரணம் கொள்முதல் விலை தெரிந்தவன் விற]பனை விலை எளிதாக நிர்ணயம் செய்வான். அதைப்போலவே ஆசையினால் குடும்பமும், என்னங்களால் உடலும், அறநெறியால் சமுதாயமும், தத்துவ ஞான விளக்கத்தால்ஞானமும் சமாதான வாழ்வும் நம்மை ஆக்கவும், காக்கவும் உதவுகின்றன. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவு ஞானம் இடம்பெறுகிறதோ அந்த அளவிலே நமக்குச் சிறப்பான வாழ்வு இன்புற்று வாழ்கின்ற நிலை, ஆழ்ந்த அமைதி கிடைக்கும்.

ஆன்ம ஞானம் என்பது சுடர்விட்டு பிரகாசிக்கும் விளக்கு, இருண்ட வாழ்க்கைக்கு வழிகாட்டி. ஆகவே ஒவ்வொருவரும் ஆன்ம ஞானம் பெற முயலவேண்டும். இயலாதவர்கள் ஞானிகள் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு.

என்ற வள்ளுவர் குறளின்படி உலகத்து உயிர்கள் முதல் இந்த உலகம் தோன்றுவதற்கு மூலகர்த்தா பகவன் அ என்ற ஒலியால் தோன்றின. ஆகவே அதுவே முதல் ஒலியான அ என்பதாகும். பிராணிகள் முதல் மனிதன் இயந்திரம் வரை வாயைத்திறக்கின்ற துடங்குகின்ற ஒலி அ என்பதாகும். ஆகவே தான் வள்ளுவப்பெருமான் மேற்கண்ட குறளின் மூலம் அ கரத்தை முதன்மைப்படுத்தினார். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாமே அறிவு சீவன்களாக உள்ளன. ஆனால் மனிதன் என்ற சீவனுக்கு மட்டுமே சிறப்பறிவு உண்டு. இந்த சிறப்பறிவின் மூலம் தெளிந்த நிலைபெற்ற தெளிந்தோரே ஞானிகள் எனஅழைக்கப்படுவர்.

துரிசற்ற தூய அறிவு வடிவான இயற்கையின் நல்ல சக்திகளை நினைத்து உணர்ந்து தெளிவு அடையாவிட்டால் ஒருவன் எத்தனை கற்றிருந்தும் பயன் இல்லை. உலகிலேயே மிகப்பெரிய கல்வி ஒன்ற உண்டு என்றால் அதுவே ஞானக் கல்வி.

ஞானமே கடவுள். ஆன்மஞானம் அடைந்தோரே கடவுள் ஆவார். இயற்கையில் உரைகின்ற பேராற்றலையே இறைவன் என அழைக்கிறார்கள். அகவே இயற்கையே இறைவன். அவன் பாதங்களை வணங்குவதே சிறப்பிறவு ஆகும். அதுவே ஞானமார்க்கத்தின் திறவுகோல் என்பதை மறவாதீர்கள்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:19 am

மனித அறிவு

7 வகைபிறப்பு, 4 வகைத்தோற்றம், 84 லட்சம் ஜீவராசிகள் அனைத்துமே ஆன்மாக்கள் கூட்டம்தான். ஆனால் இவற்றில் மனிதனுக்கு மட்டுமே சிறப்பறிவு உண்டு. அதைத்தான் ஆறாவது அறிவு என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். மனிதனால் மட்டுமே தான் யார்? என்று அறியும் சிறப்பாற்றல் இருப்பதால் மனிதன் மனிதனாகி, புனிதனாகி, பின் கடவுள் ஆகின்ற பேராற்றலைப் பெறமுடிகிறது. அதனால் மனிதன் மிகச்சிறந்தவனாகப் போற்றப் படுகிறான். காரணகாரியங்களைக் கண்டறியும் ஆற்றல் மனித அறிவுக்கு உண்டு. அதனாலே தான் உடல் இயக்கம் என்ற காரியத்திற்கு புலன் இயக்கம் காரணம், புலன் இயக்கத்திற்கு காரணம் எண்ணம், இப்படி ஒவ்வொன்றையும் கண்டறியும் ஆற்றல் மனித ஆன்மாவுக்கு உண்டு. அதனால்தான் புலன்கள் ஐந்தையும் கடந்து அதற்கு மேல் சென்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், தோற்றத்திற்கும் காரணம் என்ன? காரியம் எது? என்று கண்டு பிடிக்கும் ஆற்றல் ஆன்மாவிற்கு உண்டு. புலன்கள் கட்டுப்பாடு நீங்கிய ஆன்மா தூய ஆன்மாவாக மாறுகிறது. அந்த தூய ஆன்மாவால்தான் பிற உயிர்கள் பெறுகின்ற துன்பங்கைள, இன்பங்களை, அவற்றின் உணர்ச்சிகளின் அளவுகளை கனித்து இரங்கி உதவும் கருணையுள்ளம் பெறுகிறது. மனிதனின் உடல் கருவிகளுக்குத் தேவையான துணையாக பலவிதமாக ஆயுதங்கள், இயந்திரங்கள் கண்டு பிடித்து, செய்து, பயன்படுத்தவும் தகுதி பெற்றதும் மனித ஆன்மாதான்.


தன் இனம் தோன்றி வழிவழியாக பட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பாக மனித வாழ்க்கையை வளமாக்கும் ஆற்றலும் இதே மனித ஆன்மாவிற்கு உண்டு. பலகோடி உயிரினங்கள் வாழுகின்ற இந்த பூமியே உலகம். இந்த உலகத்தைப் போன்று எத்தனையோ உலகம் எத்தனையோ கோட்கள் அண்ட பேரண்டங்கள் கொண்ட பிரபஞ்சமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் என்பவன் சிறு அணு போன்றவன் தான். பேரியக்க மண்டலத்தில் மனித ஆன்மா அணுபோன்றது. இருந்தாலும் மனித ஆன்மாதான் இந்த பிரபஞ்சத்தை அளிக்கிறது. பேரியக்க மண்டலத்தின் ஒப்பற்ற சக்திகளை கண்டுபிடிக்கிறது. பேரியக்க மண்டலத்தின் அசைவுகளைக் கூட கணக்கிட்டுக் கூற முடிகிறது. கோட்களின் தோற்றங்களையும், அதன் சஞ்சாரத்தையும், நட்சத்திரக் கூட்டங்களையும் செயல்பாடுகளையும் கணக்கிட முடிகிறது என்றால் பேரியக்க மண்டலத்திற்கு அதன் இயக்கத்தின் ஆற்றல்களை எல்லாம் மனித ஆன்மா கணக்கிடுகின்ற ஆற்றலைப் பெற்றுள்ளது என்றால் இந்த மனித ஆன்மாவிற்கு பேரியக்க மண்டலத்தைப் போன்ற மாபெரும் ஆற்றல் உள்ளது என்பது அறிய முடிகிறது. அந்த ஆற்றல் இல்லையென்றால் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அறியமுடியாது.


மனித ஆன்மா மகத்தான சக்தி பெற்றது. சிறப்புப் பெற்றது. அதனால் தான் கோட்களில் நடைபெறும் இயக்கங்களையும், அதில் காணும் தோற்றுகளை, குணங்களை, கண்டறிந்து சிறப்பளித்து ஆன்மா வாழ்கிறது. அதன் சிறப்பை மனித ஆன்மா மட்டுமே உணர்கிறது. அதனால் தான் மனித ஆன்மா இயற்கைப் பிரஞ்சத்தை உணர்ந்து போற்றி வழிபட்டு அதில் கலக்க முயற்சிக்கிறது. மனிதன் ஒருவனே இந்த இயற்கையின் பேராற்றல் உண்மையை உணர்ந்தான். ஆன்மாவின் வளர்ச்சி அறிவிலே பரிணாமத்திலே மனித அறிவே முடிவான உச்சமான முடிவைத்தருகிறது. மனித அறிவலேதான் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளை அறியமுடிகிறது. பேரியக்க மண்டலத்தின் முடிவுகள் கூட மனித அறிவிலே சங்கமமாகிறது. அத்தகைய அறிவு உடற்கூறு, பெற்றவன் மனிதன்.

அவன் தன் ஆன்மாவை உணர்கின்ற தூய வேரறிவே ஞானம். ஆன்மா தனது தீய பதிவுகளை நீக்கிப் பரம்பொருளை உணர்ந்து மீண்டும் பிறவாத மொழி உணர்ந்த கரையேறவே உடலை கட்டிக் கொண்டது. அதைக் காத்தும் வருகிறது. புலன்களால் சிக்கித் தவித்து கட்டுண்டு மாயை என்கிற விலங்கின் வாயில் அகப்பட்டு அறிவு தெளிவு அற்ற நிலையிலும் அதுவே தன்னுடைய பற்றினால் தெளிந்த அறிவு பெற்று தெளிந்த நிலையிலும் செயலாற்றுகின்றது. மனித உடலை உணர்ச்சி என்ற செயல்பாடு பெரிதும் முடித்துக் கொண்டுள்ளது. மனித உடலில் இரத்தம், வெப்பம், காற்று, அதனதன் பாதைகளில் சீராக செயல்பட்டு வருகிறது.

உடலிலுள்ள அணுக்கள் கூட்டத்திற்கு அதுவே ஆரொக்கியத்தைக் கொடுக்கிறது. இவை சீராக, முறையாக, செயல்படாமல் இரத்தமோ, காற்றோ, வெப்பமோ, மாறுபட்டு செயல்படுமானால் எந்த இடத்தில் மாறுபாடாகச் செயல்படுகிறதோ அந்த இடத்தில் உள்ள அணுக்கூட்டம் நலிவுறும். அப்போது ஜீவசக்தியான உயிருக்குத் துன்பம் என்கிற உணர்வைத்தரும். இத்தகைய துன்பத்தில் இருந்து விடுபட ஏதாவது ஒரு வழியைத்தேடுகிறது. அது ஒரு செயலாகவோ பொருளாகவோ சூழ்நிலையாகவோ இருக்கலாம். இந்தத் தேடலே, நாட்டாகிறது, முயற்சியாகிறது, பின்பு செயலாக்கம். இந்த தேடலின் தொடர்பயணம் துன்ப உணர்வாகவும், தேவையுணர்வாகவும், முயற்சியாவும் செயலாகவும், இன்பதுன்ப விளைவுகளாயும், தெளிவாகவும் முடிவாகவும் விரிந்து செயல்படுகின்றது. இவ்வாறாக உடலோடு கொண்ட தொடர்பால் உயிருக்கு ஏற்படும் அனுபவங்களின் தொகுப்பாக மனம் என்ற சூட்சுமக்கருவி செயல்படு்கிறது.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:25 am


மனம்


மனதில் உதயம் ஆகும் ஒரு செயல்பாட்டை எண்ணம் என்றுகூறுகிறோம். எண்ணம் என்பது மனதின் ஒரு சக்தி ஆகும். வெட்டவெளி வெளியுலகில் புறப்பொருளிடம் ஆகர்ஷணம் என்ற கவர்ந்திழுக்கும் ஈர்ப்புச் சக்தி இருப்பதைப் போலவும் அந்த ஈர்ப்புச் சக்தியை எதிரிடையாக விலக்கித்தள்ளும் விகர்ஷண சக்தி இருப்பதைப் போலவும் எண்ணம் என்பது மனதில் இருக்கும் ஒருவகை சக்தியாகும். இயற்கையில் எல்லையற்ற ஆற்றல் அடங்கியுள்ளன. இயற்கையான இந்த இயற்கைக் களஞ்சியத்திலிருந்து மனது என்ற கருவியானது சிறிதளவு கிரகித்து எடுத்துக் கொள்கிறது. அவ்விதம் கிரகித்த அந்த சக்தியை மனம் தன்னுடையதாக தனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறது. பிறகு அந்தச் சக்தியை அது எண்ணங்களாக வெளியே செலுத்துகிறது. இந்த சக்தி நமது உணவின் மூலமும், சுவாசிக்கின்ற காற்றின் மூலமும், உணவின் மூலம் உடல் இயக்கம் நடைபெறுவதுபோல, இதுபோலவே அதே உணவின் மூலம் சூட்சமமான வேறு சக்திகளும் உண்டு பண்ணப்படுகின்றன. இந்த சூட்சும சக்திகளை அது நாம் எண்ணங்கள் என்று சொல்லும் வடிவத்தில் வெளியே துள்ளுகிறது. ஆகவே மனம் என்று சொல்லப்படுவது அறிவுள்ளதல்ல என்பதை அறிகிறோம்.

ஆனால் அது அறிவுள்ளது போல் தோன்றுகிறது. அவ்விதம் அது தோன்றுவாதற்கு என்ன காரணம்? என்றால் அறிவுள்ள ஆன்மா அதன் பின்னால் இருக்கிறது. உண்மையில் ஆன்மா ஒன்றே ஒன்று மட்டும்தான் அறிவுப் பொருளாக இருக்கிறது. மனம் என்பது வெளியுலகத்தை ஆன்மா பற்றுவதற்குப் பயன்படும் கருவியாக மட்டுமே இருக்கிறது. உதாரணமாக இந்தப புத்தகத்தை எடுத்துக்கொள்வோம். புறத்தில் புத்தகம் என்ற வடிவத்தில் இருக்கும். இந்தப்பொருளை உண்மையில் நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து கொள்ள முடியாத இந்தப்பொருள் நமது மனதைச்சென்று தாக்கி ஒரு தூண்டுதலை அதாவது அலைகள் உண்டு பண்ணுகின்றன. இந்த தூண்டுதலுக்கு பதில் தரும் வகையில் மனம் புத்தகம் என்ற வடிவத்தைப் பொருள்படுத்துகிறது.

இவ்விதமாக தண்ணீரில் அலைகள் உண்டாவதைப்போல மனதில் எண்ண அலைகள் தோன்றுகின்றன. வெளியே இருக்கினற உலகம் மனதில் அலைகள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. புகத்தகத்தின் உருவமோ யானையின் உருவமோ மனிதனின் உருவமோ வெளி உலகத்தில் இல்லை. அதாவது அவற்றைப்பற்றி வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்குப் பதிலாக நமது மனதில் ஏற்பட்ட விருத்திகளைப் பற்றி மட்டும்தான் நாம் அறிந்திருக்கிறோம். புறத்தில் இருப்பது மனதில் விசத்தியை உண்டுபண்ணுவதற்கு காரணமாக மட்டுமே அமைந்திருக்கிறது.

இந்த உண்மையை விளக்குவதற்கு ஒரு முத்துச்சிப்பியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். முத்து எப்படி உண்டாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. புறத்தில் இருக்கும் ஒட்டுண்ணியாக ஒரு கிருமி முத்துச்சிப்பியின் ஓட்டுக்குள் புகுந்து அதை உறுத்துகிறது. அதாவது சிப்பிக்குள் இருக்கும் பூச்சியை அது தினவுக்கு உட்படுத்துகிறது.

இந்த தொந்தரவிலிருந்து விடுவிப்பதற்காக சிப்பி மினுமினுப்பாக ஒருவித திராவகத்தை அதாவது எனாமல் வகையை கக்கி வெளிப்படுத்துகிறது. பிறகு சிப்பி தனக்கு உபத்திரவம் விளைவித்த கிருமியை சுற்றிலும் அந்த எனாமல் பசையைப் பூசிக்கிருமியை மூடி மறைத்து விடுகிறது. இதனால் முத்து உண்டாகிறது. நமது அனுபவத்தில் முத்து உண்டாவதற்கு ஒட்டுண்ணி கிருமி காரணமாக இருப்பதுபோல வெளிஉலகம் நமது அனுபவத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது. சிப்பிக்குள் கிருமி புகுவது போல் ஐம்புலன்கள் வழியாக புகுந்து பிரபஞ்சம் நமக்குப் புலப்படுகிறது.

சிப்பி எனாமல் பசையை வெளிப்படுத்துவது போல இந்த பிரபஞ்ச செயலை நாம் அறிகிறோம். இவ்விதம் மனதில் நடைபெறும் செயலை சாதாரண மனிதன் ஒருபோதும் அறிந்து கொள்ளமாட்டான். ஏனெனில் அவ்விதம் அவன் தெரிந்து கொள்ள முயற்சி செய்யும் அதேசமயத்தில் தன் எனாமல் பசையை வெளியே அனுப்புகிறான். பிறகு தன்னுடைய அந்த எனாமல் பூச்சையே பார்க்கிறான். ஆகவே மனம் உண்டுபண்ணிய அனுபவத்தைத் தவிர வேறு எதையும் மனிதனால் புரிந்து கொள்ள இயலுவதில்லை. உண்மையான ஆன்மா மனதிற்கு பின்னால் இருக்கிறது. அதன் கையில் உள்ள கருவியாக மனம் இருக்கிறது. உண்மையான மனிதனாகிய நீ (ஆன்மா) நிற்கும்போதுதான் மனம் அறிவுடைய தாகிறது.

அப்போதுதான் மனதுக்கு அறிந்து கொள்ளும் திறமையுண்டாகிறது. ஆன்மா மனதைக் கைவிட்டுவிடும்போது அது தூள்துளாகச் சிதறிப்போய் ஒன்றுமே இல்லாமல் வெறுமை அடைந்து விடுகிறது. இப்போது மனம் என்ன? என்பதைப் புரிந்து கொண்டீர்கள். சித்தம், மனம், எல்லாம் ஒரு இருப்பிடமாகும். அதில் எழுகின்ற அலைகளும், சுழிகளுமே விருத்தி என்ற பெயர். இந்த விருத்தியின் மூலமே நம்மால் அறியப்படும் நமது பிரபஞ்சமாக விளங்குகிறது. ஆன்மா, மனம் என்ற நிலையில் விருத்தி என்றகிற அலைகளாலும், சுழிகளாலும், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து அதிலேயே ஆழ்ந்த லயித்து தனது பிறவி நோக்கத்தை மறந்து மாய உலகில் வாழும்போது அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிவசப்படும் ஆன்மாவின் நிலைதான் பேராசை, சினம், பற்று, பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு, வஞ்சம்போன்ற அறுவகை குணங்களைப் பெறுகின்றன. ஆன்மா இப்படிப்பட்ட குணங்களின் எழுகின்ற எழுச்சியின் காரணமாக மீண்டும், மீண்டும் பழிச்செயல்கள் செய்து, தனக்கும், பிறர்க்கும் துன்பத்தை உண்டாக்கிறது. ஆகவே பிரஞ்ச மாயையில் ஆன்மா உழன்று தவிப்பதை தவிர்த்து மாயை மயக்கத்திலிருந்து விடுபட உண்டாக்கிய சித்தர்கள் பயிற்சியே யோகா என்பதாகும்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:29 am

யோகம்

யோகத்திற்கு முக்கியமாக பயன்படும் கருவியே மனமாகும். இந்த மனமானது தூய்மையாக இருக்கவேண்டும், மனம் மனசு, மருவற்ற தூய்மையில் இருக்கும் போது, தெளிந்த நீரில் நீரின் அடிமட்டத்தைக் காண்பதுபோல, தெளிந்த மனத்தால் உண்மைப் பொருட்களைக் காண முடியும். அந்த மனத்தைப் பண்படுத்தும் நெறியே யோகம். மனமானது அறிவாகி, ஆன்ம உணர்வைப் பெற்று விழிப்பில் தன் மூலம் நாடி ஒடுங்கும்போது தன்னை மெய்பொருளாகவே உணர்ந்து கொள்கின்ற இந்த முழுமை பேற்றினை அடைவதற்குத் தேவை யோகம் என்ற உடற்பயிற்சியே ஆகும்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:31 am


பிரபஞ்சம்



அணுக்கள் தோன்றி அணுக்களின் இணைப்பு இயக்கங்களால் அண்ட பேரண்டமாகி பிரபஞ்சமாகி உலகாகி உயிர்கள் பலவுமாகி, எத்தனையோ கோடி சீவராசிகளில் நானும் ஒருவன் என்கிற தெளிவு பெறுவதே ஞானமாகும். முடிவைப் பிடித்துக் கொண்டு போனால் தொடக்கத்தை அறியலாம். தொடக்கத்தைப் பிடித்தால் முடிவையும் அறியலாம். ஆக பிறப்பின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவதே ஞானம். இதையேதான் அகத்தியர் கூறும்போது,

மகத்தான ரகஸ்யமடா ஞானமார்க்கம்
இணங்கியதோர் அருதரங்க மான சூட்சம்
ஏகாந்த சூட்கமென்ற கதையைக் கேளு
குணங்குவிய ஆதி அந்தக் குறியை நன்றாய்


மேற்கண்ட பாடல் மூலம் ஆதி அந்தம் தெரிவதுதான் ஞானம் என்பதை அறியலாம். வெட்டவெளிதான் உண்மையான மெய்ப்பொருள். அப்பொருளிலே நானும் இருக்கிறேன் என்று உணர்ந்து வெட்ட வெளியிலே தோன்றிய உயிரினங்கள் அத்தனையும் என் உடன் பிற்ந்தோர்களே என்ற அக உணர்வு பிறந்து எந்த உயிரினங்களுக்கும் துன்பம் அளிக்கக்கூடாது, துன்பப்படுகின்ற உயிர்கள் மீது கருணை காட்டி இன்பத்துடன் வாழும் வாழ்க்கைதான் வீடுபேறு ஆகும். இதை அடையும் ஜீவன்தான் ஆன்மாவாகும். வெட்டவெளி, பெருவெளியாகிய மெய்ப்பொருளையே வானம் என்றும், வான் என்றும் கூறுவர். வீடு பேறு பெற்றவர்களை வான் அவா,; வானவர் என்று கூறுவர். தேவர் என்றும் கூறுவர். தான் அவர் தன்னை அவராகக் கண்ட காரணத்தால் தானவர், தலைவன் என்றும் கூறுவர். தனது பரந்த அறிவால் எப்பொழுதும் வெட்ட வெளி மெய்பொருள் இணைத்து சதாகாலம் நிலவும் செயலுமாக இருக்கின்றவர்களுக்கு அவர்களின் உள்ளத்தின் நிலை சுவர்க்கம், சுவர் அகம். சுவர் என்றால் பேரின்பம். கடுந்தவத்தின் மூலம் ஆன்மாவானது தன்னிலை விளக்கம் பெறுகிறது. அப்படி விளக்கம் பெறுகின்ற தூய நிலையைத்தான் ஞானம் என்கின்றனர்.

இந்த முழுமை பேற்றையே சான்றோர்கள் வீடுபேறு என்றும் கூறுகின்றனர். வீடு என்றால் இடம் அல்லது ஆதாரம் என்று பெயர். காரணம் இல்லாமல் காரியம் முடிப்பதில்லை. ஆதாரம் இல்லாமல் ஆதேயம் பிறப்பதில்லை. எந்த தோற்றத்திற்கும் ஒரு ஆதாரம் இருந்தேயாகவேண்டும். அதுபோல் ஆன்மாவிற்கும் ஓர் இடம் இருந்தாகவேண்டும். அதற்கு ஆதாரம் (எது) இடம் ஆக உள்ளது என ஆராய்ந்தால் முடிவாக நமக்குக் கிடைக்கும் விடை எந்த ஆதாரமும் இல்லாத ஒரு பொருளே எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், இடமாகவும் இருப்பது உணரப்பெறும். உதாரணமாக கோயில்மேல் கலசம் இருக்கிறது. கலசத்திற்கு கோயில் கோபுரம் ஆதாரமாக உள்ளது, கோபுரத்திற்கு பூமி ஆதாரமாக உள்ளது. பூமிக்கு வெட்டவெளி இடமாக உள்ளது. வெட்டவெளிக்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லை. அதன் அடிமுடியைக் காணமுடியாது என்பதை விளக்கவே அகத்தியரும்,

பாரப்பா அடிமுடியுந் தேடிப்போன
பதிவான மாலயனுங் காணா ரென்று
நேரப்பா வேத முரைத்திட்ட செய்தி
நீள் புவியில் யாவர்க்கும் உரைத்திட்ட செய்தி


வெட்டவெளியை அளக்க இயலாது என்பதை விளக்கவே திருமால் பன்றி அவதாரம் எடுத்து சிவன் பாதத்தைக் காணச் சென்றார் எனவும், திருமால் அன்னப்பட்சி வடிவம் கொண்டு சிவன்முடி காண மேலே சென்றார் எனவும், கதை மூலம் சொன்னார்கள். வெட்டவெளி என்றால் அதற்கென்று ஆதாரம் இல்லை. ஆகவே அது முதலாகிறது. அதிலிருந்துதான் தோற்றப்பொருள் தோன்றியி ருக்கவேண்டும். எனவே வெட்ட வெளியே ஆதியானது. அதற்கு வேறு ஆதாரம் இல்லாததால் அதுவே அநாதியானது. வெட்டவெளி என்கிற வீட்டின் இயக்க சக்தியால் அணுதோன்றி, அகம் என்றால் உள்ளம் என்பது பேரின்ப உள்ளத்தைப் பெற்றவர்களே சுவர்கலோக வாசிகள் என்பதாகும்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:33 am

வெட்டவெளிதான் மெய்ப்பொருள் என்பதற்கு மெய்ப்பொருள்
கண்டு விளங்கும் மெய் ஞானிக்கு,
கற்பங்கள் ஏதுக்கடி?
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு வீணாசை
ஏதுக்கடி?
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை
ஏதுக்கடி?
தந்திரமான தலந்தன்னில் நிற் போர்க்கு மந்திரம் ஏதுக்கடி?
முத்தமிழ் கற்று முயங்கும் மெய் ஞானிக்கு சத்தங்கள்
ஏதுக்கடி?
உச்சிக்கு மேல் சென்று உயர்வெளி காண்போர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி?
வேகாமல் வெந்து வெளியினைக் காண்போர்க்கு மோகாந்தம்
ஏதுக்கடி?
சாகாமல் தாண்பு தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி?
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு தூனந்தான்
ஏதுக்கடி?
சத்திக் கூடத்தை தினம் தினம் காண்போர்க்கு பத்திரம்
ஏதுக்கடி?
தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை
ஏதுக்கடி?
செத்தாரைப் போர்த் திரியும் மெய் ஞானிக்கு கைத்தாளம்
ஏதுக்கடி?

- குதம்பைச்சித்தர்


பிறப்பின் ஆதியையும் முடிவையும் அறிந்த ஞானிகளுக்கு எதுவுமே தேவையில்லை என்பதை விளக்கவே குதம்பைச்சித்தர் மேற்கண்ட பாடல் மூலம் கூறுவதைக் காணலாம்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:36 am


மனிதன்


மனு தன்வசமாக இருந்து ஆட்டிப் படைத்ததால் மனிதன் (மனது தன்) என்று பெயர் வந்தது. அதேபோல் நான் என்ற ஆவணம் மேலோங்கி இருந்தவனை நர அகம் கொண்டதால் நரன் என்றும் பெயர் உண்டாயிற்று. இன்னொன்று நரகம் என்று ஏன்? பெயர் உண்டாயிற்று என்றால், நான், எனது, என் மக்கள், என்பொருள், என் ஆஸ்தி, என்று குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டு அவனுடைய அறிவானது செயல்படும்போது காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சர்யம், டம்பம், ஈர்தை போன்ற தீய குணங்களினால் உண்டாகும் அறிவால் அதன் விளைவாய் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதையே நரகம் என்பது (நர அகம்), தீமையான அகத்தால் (தீமை அகம்) எழும் தொலைகளையே நரகம் என்று கூறினார். எனவேதான் ஆன்ம ஞானம் அடையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆன்மாவானது ஞானம் பெற்றார் அறிவை தன்மயமாக வைத்துக் கொண்டு முறையாவும், சிறப்பாகவும் வாழலாம். எனவே ஆன்மஞானம் மட்டுமே வாழ்விற்கு உயர்வும், இன்பமும் அளிக்கும். ஆத்மஞானம் என்றாலே மனிதனை அதற்குத்தகுதியாக்கும் சிறப்பறிவு என்பது பொருள். சிறப்பறிவு என்ன என்கிற விளக்கத்தைப் பெறுவதே ஞானம் ஆகும். ஞானியாக வேண்டும், ஞானம் பெறவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையை அர்ப்பணம் செய்யத்தேவையில்லை.

இன்றைய மனிதன் வாழ்க்கையே இயந்திரமயம், இன்றைய உலகம் விஞ்ஞான உலகம், தேவைகள் மிகுந்து இயந்திரசாதனங்கள் நுட்பமான கருவிகள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் அதிகரிப்பு, இவை மிகுந்து கொண்டே போகின்றன. இப்படிப்பட்ட இக்காலத்தில் எல்லோரும் ஞானம் பெற முடியுமா? என்பது எல்லோர் மனதிலும் எழுகின்ற மலைப்பான கேள்வி? மலைப்புத் தேவை இல்லை. எல்லோரும் ஞானம் பெறமுடியும். தங்கள், தங்களின் கடமைகளை கடமையுணர்வோடு செய்து, மகிழ்வோடு இல்லறத்தையும் செம்மையாக நடத்தி நன்மக்களைப் பெற்று ஒழுக்கத்திலும், அறத்திலும், சிறந்தவர்களாக பயிற்றுவித்து அதன் மூலம் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் அமைதியும், இன்பமாக வாழலாம்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:39 am

துறவு நிலை

இப்படிப்பட்ட தூய்மையான வாழ்க்கையால் அறிவு விளக்கம் பெற்று அறிவிலே முழுமை பெற்றபின் அதன் மூலம் ஆன்மா உலகுக்கு நலம்புரிய ஆர்வம் கொண்டு தன்னை மனித குலநன்மைக்கே ஆர்பணித்துக்கொண்டு இல்லறத்தை விட்டு, பொருள் தேடுதல், காப்பாற்றுதல் என்கிற அறிவை உதாதரித்தள்ளி அறிவை, தனது உடலை அறவழியில் தொண்டுக்கே பயன்படுத்தி தன்னுடைய பசிக்கு பிறர் கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையே துறவு வாழ்க்கையாகும். சிறந்த முறையில் தன்னுடைய ஆற்றலை பயன்படுத்தி சேவை செய்ய வாய்ப்பும், தேவையும் இருக்குமானால் அந்தத் துறவறமே மிகச்சிறந்ததாகும். ஆன்மா என்பது பரமாத்தலின்ஆற்றல்.

அறிவு என்பது ஆன்மாவின் இயக்கச் சிறப்பு. ஜீவ ஆன்மாவோ தன் நிலை மறந்து ஜம்புலன்களில் செயல்களுக்கு ஆட்பட்டு, புலன்களின் கவர்ச்சியில் சிக்கி மயங்குகின்ற மயக்க நிலையே மாயை எனப்படுவது. தன்னுடைய தவவலிமையால் புலன்கவர்ச்சியில் இருந்து மீட்டு, மாயை விட்டு விலகி அறிவை ஆன்மாவில் லயிக்கச் செய்து அதோடு ஒன்றோடு ஒன்று பிணைந்து லயமாகின்ற நிலையில் இருக்கின்றபோதுதான,; அந்த நிலையும் பிறழாமல் இருக்கும் போதுதான், ஞானம் என்கிற விழிப்பு நிலையில் ஆன்மா என்பது இயக்க ஆற்றலாகவும், உடல் ஆன்மாவிற்கு கருவியாகவும் இருக்கின்ற நிலை உணரப்படும். உடலுக்கு ஆன்மா அடிமையாகாமல் ஆன்மாவுக்கு உடலை கருவியாகக்கொள்ளும் தெளிந்த அறிவு நிலையே உண்மையான துறவு ஆகும்.

ஆன்மாவானது தெளிந்த அறிவிலே முழுமை பெற்ற பின் இல்லறத்திலிருந்தே துறவு நிலையில் வாழலாம். இன்று பலபேர் இல்லறக் கடமைகள் மறந்து, அறம் பிறழ்ந்து, சோம்பல் பேராசை இவற்றோடு பிறர் பொருள் மீது உயிர்வாழ்வது துறவறம் என கருதுகின்றனர். இத்தகைய இழிந்த வாழ்வைத் துறவறம் என்று தவறாகக் கூறி நம்பி தாம் ஏமாறுவதோடு பிறரையும் ஏமாற்றியும் உலவுகின்ற காட்சியைக் காணுகிறோம். துறவிகள் என்று வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவின் நிறைவு பெற்று துறவறம் என்றால் என்ன? எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் தெரிந்தவர்கள் துறவு வாழ்க்கைக்கு வரவில்லை.

அறியாமை, ஏழ்மை, வேலையின்மை, நோய், சோம்பேறித்தனம், பேராசை, வெறுப்பு குடும்பச் சண்டை, இவற்றால் இல்லறத்தை விட்டு கடமை மறந்து வெளியேறியவர்களே அதிகமாக உள்ளனர். சூழ்நிலைக் கைதிகளாகி வெளியேறி துறவு ஏற்றவர்களும் உண்டு. இவர்களில் ஏதோ ஒரு சிலரே நகரில் குருநாதன் கிடைக்கப்பெற்று தொடர்பு கொண்டு ஞான பேறு பெற்வர்கள், மற்ற பெரும்பாலோ வாழ்வு பாழாகி துன்புற்று மடிந்தார்கள், மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.



ஆன்ம தத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக