புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோளக்கதிர் Poll_c10சோளக்கதிர் Poll_m10சோளக்கதிர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
சோளக்கதிர் Poll_c10சோளக்கதிர் Poll_m10சோளக்கதிர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோளக்கதிர் Poll_c10சோளக்கதிர் Poll_m10சோளக்கதிர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
சோளக்கதிர் Poll_c10சோளக்கதிர் Poll_m10சோளக்கதிர் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சோளக்கதிர் Poll_c10சோளக்கதிர் Poll_m10சோளக்கதிர் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சோளக்கதிர் Poll_c10சோளக்கதிர் Poll_m10சோளக்கதிர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோளக்கதிர்


   
   
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Aug 11, 2019 3:12 pm

சோளக்கதிர்

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய உறக்கத்தை மறுத்த மனதோடு போராடிக் கொண்டிருந்தன ரவியின் இமைகள். கணினியிலிருந்து வெகுநேரமாக விலகாத பார்வை, “என்னங்க மணி அஞ்சரை ஆகப் போகுது பாருங்க. நான் கெளம்பிட்டேன்” என்ற மனைவியின் குரல் கேட்டு கடிகாரத்தை நோக்கியது. இப்போதுதான் ரவிக்கு தான் முதல்நாள் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அது, இன்று திரைப்படம் செல்வது.

“சாரிடா. மறந்தே போய்ட்டேன். இதோ டூ மினிட்ஸ்...” என்றபடி விளம்பர நூடுல்ஸை விட வேகமாக தயாரானான் ரவி. சற்று நேரத்தில் அருகில் இருந்த பிரபல திரையரங்கை அவர்கள் நெருங்கினர். அங்கே சாலையில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த சுண்டல் வண்டியைக் கண்டதும் ரவியின் குழந்தை அது வேண்டுமென்று அடம்பிடித்தது. பெற்றோர் இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அது அழுகையை நிறுத்துவதாய் இல்லை. வேறு வழியின்றி ரவியும் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு சுண்டல் வாங்க சென்றான்.

“எவ்வளவுப்பா சுண்டல்?” என்ற ரவியின் கேள்விக்கு பத்து ரூபாய் பதிலாக இருந்தது தள்ளுவண்டிக்காரனிடம். “என்னப்பா சுண்டல் இவ்வளவு கம்மியா இருக்கு? அஞ்சு ரூபாதான் இதுக்கு கொடுப்பேன்”, - “கட்டுப்படி ஆகாது சார்”, - “அப்போ இன்னும் கொஞ்சம் சேத்து பொட்டலம் போட்டுக்கொடு” என்று பேச்சு பேரமாக முற்றியபின் ரவிக்கு கூடுதல் சுண்டல் கிட்டியது.

திரையரங்கினுள் கார் பார்க்கிங் கட்டணம் முதல் இறுதிவரை கொறித்த இடைவேளை நொறுக்குத்தீனிகள் வரை அவனது பர்ஸை விழுங்கப் பார்த்தன. ஒரு வழியாக திரைப்படம் முடிந்து திரும்புகையில் அங்கிருந்த ஷாப்பிங் மால் அவர்களை விடவில்லை. பர்ஸில் கனமில்லை. ரவிக்கு மனமும் இல்லை. கடைசி ஷாப்பிங் வெகுநாட்களுக்கு முன்பு என்பதால் காரை விட்டு கால்கள் கீழே இறங்கின. அங்கிருந்த நடைபாதை வியாபாரியின் கரடி பொம்மை ஒன்றை ரவியின் குழந்தை ஆசையாய் கேட்டது.

அதன் விலை கேட்ட பிறகு, “அறுபது ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம்” என்று பொம்மையை வாங்க மறுத்தான் ரவி. “ஷாப்பிங்ல டாய்ஸ் வாங்கித் தரேன் பாப்பா” என்று குழந்தையை சமாதானப்படுத்தினான். மனைவி குழந்தையோடு ஒருபக்கம் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, ரவி சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் பகுதிக்கு சென்று பொம்மைகள் விலையை ஸ்டிக்கர்களில் ஆராயத் தொடங்கினான்.

“வெல்கம் சார். ஆல் ஆர் இம்போர்ட்டட் பிராண்ட்ஸ்” என்று அந்த பகுதியில் இருந்த சேல்ஸ்மேன் கூறவே, வேறு வழியின்றி கெளரவத்திற்காக நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு வெளியில் விற்ற அதே மாதிரியான பொம்மையை எவ்வித பேரமுமின்றி வாங்கினான் ரவி. ஷாப்பிங் முடிந்து வீடு திரும்புகையில் ஏதோ ஒரு குழப்பம் அவனைத் தொடர்ந்தது.

மறுநாள் அலுவலகத்தில் இருக்கும்போது ரவிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவனது பெயருக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், சந்தையில் அதிக மதிப்புள்ள சில சாதனங்களை சொற்ப தொகைக்கு அனுப்பவதாகவும் கூறி அவனது முகவரியை கேட்க, ரவியும் பேராசையில் முகவரியை கொடுத்தான். ஓரிரு நாட்களில் வந்த பார்சலை பணம்கட்டி வாங்கிய பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தான்.

மனதில் ஏதோ பாரம் தொற்றிக்கொள்ளவே, அருகில் இருந்த கோவிலுக்கு சென்றான். பிரகாரம் வலம்வந்து கோவிலை விட்டு வெளியேறும்போது மனம் கொஞ்சம் லேசானதை உணர்ந்தான் ரவி. காரை எடுப்பதற்காக உள்ளே அமர்ந்தபோது கோவிலுக்கு அருகே இருந்த சோள வியாபாரியிடம் ஒருவர் சோளக்கதிர் வாங்குவதை கவனித்தான்.

“கடைசி போனி சார். இந்தா நல்லா சாப்ட்டு போ சார்...” என்று இரண்டு சோளக்கதிர்களை சேர்த்துக் கொடுத்தார் அந்த வியாபாரி. அந்த மனிதர் சோளத்திற்கு பணம் கொடுக்கும்போது, “என்கிட்ட பாக்கி பத்து ரூபா இல்ல சார். சில்லறையா குடு சார்.” என்று பதில் வரவே, “பரவா இல்லப்பா. மீதி சில்லறைய நீயே வச்சிக்கோ” என்றார் அந்த மனிதர்.

“ரொம்ப டேங்க்ஸ் சார். நீ நல்லா இருக்கணும் சார்” என்ற வார்த்தைகளில் இருந்த உண்மையான மகிழ்ச்சியை வியாபாரியின் கண்களில் கண்டான் ரவி. மனதின் பாரம் இன்னும் குறையத் தொடங்கியது.

“ச்சே. இவ்வளவு காலம் இந்த மனிதர்களிடம் எப்படியெல்லாம் பேரம் பேசி வாங்கினோம்? இந்த ஒரு நாள் விற்பனை இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு சோறுபோடும் என்பதை ஏன் யோசிக்க தவறினேன்? ஷாப்பிங் மாலில் வாங்க எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஆதரிக்க நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம்தானே இருக்கிறது?!” என்று அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தொடுத்தவண்ணம் இருந்தது ரவியின் மனசாட்சி.

விரும்பத்தக்க மனமாற்றத்துடன், சென்ற ஞாயிறு வாங்க மறுத்த அதே அறுபது ரூபாய் பொம்மையை குழந்தையின் ஆசைக்காக வாங்க காரில் விரைந்தான் ரவி. ஆவலோடு தேடிய ரவியின் கண்களில் அந்த பொம்மைக்காரர் அங்கு தென்படவில்லை.

- பா.வெ.




எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 11, 2019 6:27 pm

நல்ல கருத்து .சோளக்கதிர் 1571444738 சோளக்கதிர் 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 11, 2019 8:33 pm

சோளக்கதிர் 103459460 சோளக்கதிர் 3838410834

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Aug 11, 2019 10:30 pm

மிக்க நன்றி ரமணியன் ஐயா மற்றும் அய்யாசாமி ஐயா.



எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக