புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
69 Posts - 52%
heezulia
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:09 pm

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Bliss
-
இந்த நாள் இனிய நாள்!

அறுசீர் ஆசிரிய விருத்தம்
-------------------------
இந்த நாளும் இனிய நாளாய்
……….இன்பம் தரவே மகிழ்ந்திருந்தோம்..!
இந்த விடியல் இன்று சிறப்பாய்
……….இருந்த தென்று மனமகிழ்ந்தோம்..!
எந்த நாளும் என்ன நடக்கும்.?
……….ஏக்கம் கொண்டே காத்திருந்தோம்..!
வந்த நாள்கள் வருமே இனியும்
……….வளமை தருமே.? வாழ்வினிலே.?
.
அந்தம் சொந்தம் அறிவ தற்கே
……….ஆதி பகவன் துணையுமுண்டு..!
பந்தம் உண்டு பாசம் உண்டு
……….பற்று மிகுந்த உறவுமுண்டு..!
சொந்தம் எல்லாம் சுகமும் தரவே
……….சோகம் மறந்த காலமுண்டு..!
மந்த புத்தி மாந்த ரானால்
……….மனித நேயம் புரிந்திடுமா..?
.
எண்ணம் எல்லாம் எங்கும் விரவி
……….இனித்தி ருக்கும் போதினிலே..!
வண்ணம் ஆகும் வாழ்க்கை எல்லாம்
……….வளமை மிகும்நல் வார்த்தையாலே..!
மண்ணில் ஆசை மறுக்க மாதும்
……….மதுவும் சூதும் வெறுத்ததாலே..
எண்ணில் அடங்கா எழுச்சி பெறுமே
……….எந்தச் செயலும் செய்கையிலே..!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:09 pm



இந்த நாள் இனிய நாளே,
காலை கண்விழித்தேன்,
உறுப்புகள் கொண்டுள்ளேன்,
வசிக்க கூரை இருக்கின்றது,
உடுத்த உடுப்புகள் இருக்கின்றது!
இத்தனை தொடர்வதே இந்நாளை இனிதாக்குகிறதே!

புத்துயிர்க்கும் சுவாச காற்றிற்கு நன்றி,
காண கிட்டும் வெளிச்சத்திற்கு நன்றி,
பருக சுவைக்கும் நீருக்கும் நன்றி!
எனை உயிர்ப்புடன் வைக்கும் பயிர்களுக்கும் நன்றி!
எனை வாழ்த்தி வளர்த்திட்ட உற்றாருக்கும் நன்றி!

நன்றி உரைக்க ஓராயிரம் பட்டியல் இருக்க,
இன்று துவங்கிய இந்த நாள் இனிய நாளே!

-செல்வா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:10 pm



இந்நாளில் எரிமலையே வெடிக்கும் என்றே
எவரேனும் அறிவாரா ? இயம்பற் கில்லை !
இந்நாளில் நிலநடுக்கம் நடக்கும் என்றே
ஏதேனும் அறிகுறிகள் ? இமியும் இல்லை !
இந்நாளில் கடுமழையே பெய்யும் என்றே
இயம்பலினும் மிகப்பெய்யும், தடுப்பார் இல்லை !
இந்நாளின் ஆழ்துயரம் தடுப்போம் என்றே
எவருள்ளார் இவ்வுலகில் ? சொல்வார் இல்லை !

இந்தநாளே இனியநாளாய் எண்ண வேண்டும் !
இனிமையுடன் ஏற்றமுடன் இலங்க வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயங்க வேண்டும் !
எப்போதும் இனியவழி ஏற்க வேண்டும் !
இந்தநாள்போல் எந்நாளும் எழவே வேண்டும் !
இயன்றவரை இனியவையே செய்தல் வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயம்ப வேண்டும் !
எந்ததமிழ்போல் எந்நாளும் இனிக்க வேண்டும் !

-ஆர்க்காடு. ஆதவன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:10 pm



இந்த நாள் இனிய நாளே!

உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,

உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,

பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!

புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
மனிதனுக்கோர் மனமுண்டு
அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!

மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-இனிய தமிழ் செல்வா, ஓமன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:10 pm


**
சென்ற நாள் மீண்டும் திரும்பிவரப் போவதில்லை
இன்றுதான் எங்களுக்கு இனிய நந்நாளாகும்
நாளை எதுநடக்கும்? நாமறியோம் ஆதலினால்
ஆற்றும் கடமைகளை அன்றே புரிந்துவிட்டால்
ஏற்கும் பொறுப்பெல்லாம் இலகுவாய் ஆகிவிடும்.
தாமசத்திலூறித் தவறவிட்டால் எம்பொறுப்பை
நாமிழக்கும் வாய்ப்பு நமையழித்து வீழ்த்திவிடும்.

காலம் அழிவதி்ல்லை காட்சிகள்தான் மாறுதென்பார்
ஞாலம் சுழல்கிறது நாமுமதிற் சுற்றுகிறோம்.
ஏலும் வரைக்கும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டு
தூல உடலழிய சூனியத்திலே கலக்கும்
மாயப் பிரபஞ்ச வாழ்வைச் சதமென்று
எண்ணிக் கவலையின்றி என்றும் மகிழ்வோடு
ஆற்றிக் கடமைகளை அறத்தின் வழிநிற்க
ஏற்ற நாள் இந்நாள் எமக்கென்ற எண்ணமுடன்
போற்றித் தொடங்கல் பொறுப்பு.

- சித்தி கருணானந்தராஜா.

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:11 pm


இனிய நாள் என்றுநான்
எந்தநாளைச் சொல்ல?
பிறந்த நாளைச் சொல்லவா? - அது
வெறும் செய்தி அல்லவா?
இந்த நாள் இனிய நாள் என்று
சொன்ன நாளது – பின்
வந்த நாளால் நொந்த நாளால்
துக்கநாள் ஆனது
சுவாசித்தல் அன்றி
வேறெதுவும் செய்யாத
நாட்கள் காலண்டரில் கிழிபடும்
தாள்கள்
வாழ்ந்த நாட்களைக் குப்பையில்
கொட்டியபின் காலம் வந்து
எரித்துவிடுகிறது
ஒருநாள்
சலவைசெய்த நாட்களைக்
கொடியில் தொங்கப் போட்டால்
ஈரத்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன

காலாவதி ஆகிவிட்ட
நாட்களில்
இனிய நாள் என்ன
இனி நாள் என்ன?

- கவிஞர் மஹாரதி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக