ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கேள்வி பதில்கள்

+3
sakthi23
amkrkalyan
சிவா
7 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?


ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?


உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by amkrkalyan Sun Apr 19, 2009 4:34 pm

தொடை இடுக்குகளில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு சொரிந்து புண்ணாகிறது. நிறைய மாத்திரை ஆய்ன்மெண்ட் உபயோகித்தும் பலனில்லை. நிரந்தரமாக குணமாக வழியுண்டா?
avatar
amkrkalyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 27/03/2009

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sun Apr 19, 2009 4:42 pm

தொடைகளுக்கிடையில் ஏற்படும் அரிப்புக்கு காரணம்:

* அதிகமான உடல் எடை
* அடிக்கடி பொதுக் கழிவறைகளை உபயோகிப்பது
* உள்ளாடைகளை சரிவர பராமரிக்காதது
* அதிகமாக வியர்வை வெளியேறி அதை சுத்தம் செய்யாமல் படுப்பது
* ringworm (fungus)


தீர்வு:

1% hydrocortisone cream ஒரு வாரத்திற்கு உபயோகித்து வர குணமாகும்.
உடல் சுத்தம் பேணுவது மிக முக்கியம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Apr 24, 2009 2:52 am

ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ?

நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில் - குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலையில் வைத்துக் கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. தற்குக் காரணம் என்னவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகள் செயற்பாட்டைத் தற்காலிமாக இழந்து விடுகின்றன. இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. த்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Apr 24, 2009 2:55 am

பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன்?


முகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம். இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கே முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப் பிசுப்புடைய ஒருவகைக் கொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன. பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும், நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய், சீழாக மாறிச் சிவந்து பருக்களாவதுண்டு.

ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி, அவ்வப்போது முகத்தைக் கழுவி, தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Apr 24, 2009 2:57 am

அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன்?


வியர்வை வருவதற்குக் காரணம், நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக் கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும்,
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Apr 24, 2009 3:02 am

மழைகாலத்தில் நாம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏன்?

நுரையீரல் நம் உடலில் இருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது; உப்புப் பொருட்கள் தோல் மூலமும், நைட்டிரஜன் கழிவுகள் சிறுநீர் மூலமும் வெளியேற்றப்படுகின்றன. மிகுதியான தண்ணீர் வியர்வையாகவும், சிறுநீராகவும் உடலை விட்டு வெளியேறுகிறது. கோடைக்காலத்தில் வெப்ப மிகுதியின் காரணமாக, அதிக அளவு நீரைப் பருகுகிறோம். அதில் பெரும்பகுதி வியர்வையாக வெளியேறி உடனே ஆவியாகி விடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை. மழை மற்றும் குளிர்காலங்களில் வெப்ப அளவு மிகவும் குறைந்திருப்பதால் வியர்வை வருவது குறைவு; வரும் வியர்வை ஆவியாதலும் குறைவு. இதனால் அருந்தும் தண்ணீரை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமல் அதிகம் சிறுநீர் கழிப்பதன் மூலமே வெளியேற்ற வேண்டியுள்ளது. எனவேதான் குளிகாலத்திலும், மழை நாட்களிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sun Apr 26, 2009 10:59 am

* என் அம்மாவிற்கு வயது 55. அவருக்கு இருதயத்தில் இரண்டு வால்வுகள் பழுதடைந்து உள்ளது. இந்த வயதில் அறுவை சிகிச்சை செய்யலாமா?

- எஸ். ஜெயகுமார், சாத்தூர்.


இருதயத்தில் இரண்டு வால்வுகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை முறை சரியானதே. தற்போதுள்ள நவீன மருத்துவத்தில் வால்வுகளை ரிப்பேர் செய்வதோ, செயற்கை வால்வுகளை பொருத்துவதோ எளிதாக செய்யப்படுகிறது. உங்கள் தாயாருக்கு 55 வயது ஆகிறது என்பதால் அறுவை சிகிச்சை செய்யும்முன்பு "ஆஞ்சியோ கிராம்' டெஸ்ட் செய்வது மிகவும் அவசியம். இந்த டெஸ்ட்டில் இருதயத்தில் உள்ள ரத்த நாளங்கள் அடைப்பு உள்ளதா என அறியலாம். ஏனெனில் இருதய வால்வு அறுவை சிகச்சையின் போது ரத்தநாளங்களில் அடைப்பு இருந்தால் அதையும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்து விடலாம். செயற்கை வால்வுகளை பொருத்தினால் வாழ்நாள் முழுவதும் ஒரு சில மாத்திரைகளை அவசியம் எடுத்து வரவேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sun Apr 26, 2009 11:01 am

* நாற்பது வயதான எனக்கு மாரடைப்பு வந்து 6 மாதங்களாகிறது. இருதய மாத்திரை எடுத்துக் கொள்ளும் போதெல்லாம் அதிக தலைவலி ஏற்படுகிறது. அதனால் மாத்திரைகளை நிறுத்திவிட்டேன். இது சரிதானா?


- எஸ். குருசாமி, தேனி.


இருதய நோயாளிகள் தங்களது மாத்திரைகளை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. இந்த மாத்திரைகளை ஒருவேளை கூட தவறாமல் எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் சில மாத்திரைகளை நிறுத்தினால் இருதயத்தில் கடும் பாதிப்பு ஏற்படுவதற்கான தன்மை உள்ளது. இருதய மாத்திரை வகைகளில் சில வகை மாத்திரைகள் இருதயத்தில் ரத்த நாளங்களை விரிவடைய செய்கின்றன. இந்த மாத்திரைகளை இருதயத்தில் ரத்தநாளங்களை மட்டுமில்லாமல் மூளையில் உள்ள ரத்தநாளங்களையும் விரிவடைய செய்கின்றன. அதனால்தான் இந்த மாத்திரைகள் சிலருக்கு தலைவலியை தீவிரமாக ஏற்படுத்துகின்றன. எனவே நீங்கள் உடனடியாக உங்கள் இருதய டாக்டரிடம் கூறி மாற்று மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sun Apr 26, 2009 11:14 am

* எனக்கு வயது 38. அடிக்கடி டென்ஷன் ஆகிறேன். இதனால் ரத்தஅழுத்தம், இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?


அடிக்கடி மனதை குழப்பிக் கொண்டு எப்போதும் டென்ஷனாக வாழ்பவர்களுக்கு ரத்த அழுத்தம் மட்டுமல்ல, உடலின் பல உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான தன்மை உள்ளது. இருதயத்தை பொறுத்தவரை நிச்சயமாக ரத்தஅழுத்தம் கூடுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான தன்மையும் பல மடங்கு கூடுகிறது. இதற்காகதான் மனதை நிம்மதியுடன் வைத்துக் கொண்டால் இருதய பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் வருவதற்கான பாதிப்பு பலமடங்கு குறைகிறது என்று கூறலாம். தற்போது யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் பெருமளவு இதற்கு பயன் அளிக்கின்றன. தினமும் நடைபயிற்சி, மனதை கட்டுப்பாட்டில் வைப்பது, சரியான நேரத்தில் அளவான உணவை எடுத்துக் கொள்வது டென்ஷனை குறைப்பதாக தெரியவந்துள்ளது. இன்றைய நவீன உலகில் டென்ஷன் எல்லா இடத்திலும், எப்போதும் இருக்கிறது என்பது உண்மையே. இது நமது மனதை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது நமது கடமையே.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by sakthi23 Thu May 07, 2009 5:20 am

i like litter send to you in tamil how can send to you?
avatar
sakthi23
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 2 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum