புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
31 Posts - 45%
ayyasamy ram
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
31 Posts - 45%
mohamed nizamudeen
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
2 Posts - 3%
jairam
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
2 Posts - 3%
சிவா
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
161 Posts - 51%
ayyasamy ram
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
13 Posts - 4%
prajai
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
9 Posts - 3%
Jenila
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
4 Posts - 1%
jairam
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_m10தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 10:13 pm

தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?

காளையார் கோவில் தேர் பவனியின் போது நடந்த நிகழ்வு!!!!

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில்.

இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.

புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.

எனது தலைமையில் தேர் செய்யப் படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.

தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார்.

இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்து விட்டது.

அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.

இதன்பின் அவரை அழைத்தனர்.

பெரிய மருது, தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன் என்றார். அதற்கு சிற்பி

உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.

தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.

பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.

மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.

வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி

சாதாரண பிரஜைக்காக சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த மாமன்னர் மருது பாண்டியர்கள்

இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்.

நன்றி:- வாட்ஸ் அப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 10:14 pm

எத்தனை  முறைப்படித்தாலும் அலுக்காது எனக்கு... ஓவ் வொரு முறையும் கண்களில்  நீர்  துளிக்கும் கதை இது ...புன்னகை ..எப்பேர் பட்ட  மக்களையும் மன்னர்களையும் பெற்ற நாடு இது.... இதன் இன்றைய நிலைமை?????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 10:46 pm

தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? 103459460 தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? 3838410834
-
போரில் சரண்டையாவிட்டால் நீங்கள் கட்டிய
காளையார்கோயிலை இடித்து விடுவோம் என்று
ஆங்கிலேயர்கள் கூறியதால் தங்களது உயிரை விட
கோயிலே முக்கியம் என்று ஆங்கிலேயரிடம் பிடிபட்டு
24-10-1801 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்
மருது சகோதரர்கள்.
-
நன்றி-தினமணி
.


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 08, 2020 11:18 pm

krishnaamma wrote:எத்தனை  முறைப்படித்தாலும் அலுக்காது எனக்கு... ஓவ் வொரு முறையும் கண்களில்  நீர்  துளிக்கும் கதை இது ...புன்னகை ..எப்பேர் பட்ட  மக்களையும் மன்னர்களையும் பெற்ற நாடு இது.... இதன் இன்றைய நிலைமை?????
மேற்கோள் செய்த பதிவு: 1327171


இன்றைய நிலைமை என்னவோ கேள்விக்குறி தான்




தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Mதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Uதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Tதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Hதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Uதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Mதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Oதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Hதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Aதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Mதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? Eதட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Aug 09, 2020 11:15 am

எனக்கு இப்போது இது தான் நினைவுக்கு வருகிறது

தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? RDkBTR1USOiwUtwxEdPJ+IMG_20200809_111321



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 09, 2020 12:17 pm

SK wrote:எனக்கு இப்போது இது தான் நினைவுக்கு வருகிறது

தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி? RDkBTR1USOiwUtwxEdPJ+IMG_20200809_111321
மேற்கோள் செய்த பதிவு: 1327251
-

மீண்டும் இந்த சர்க்கஸ் நடக்க வாய்ப்பு
இருக்காம்...
அதுக்கு, உடம்பு ஒத்துழைக்கிற மாதிரி
ஃபிட்னஸாக வைச்சுக்கணும்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக