ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by இரா.பகவதி Today at 8:53 pm

» திருமண அறிவிப்பு
by பிஜிராமன் Today at 8:52 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆத்திசூடி 5 5 2

ஆத்திசூடி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆத்திசூடி

Post by சிவா on Fri Sep 26, 2008 5:49 am

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:01 pm

1. அறம் செய விரும்பு

நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்

2. ஆறுவது சினம்

கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்

3. இயல்வது கரவேல்

இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்

4. ஈவது விலக்கேல்

பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது

5. உடையது விளம்பேல்

உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:02 pm

6. ஊக்கமது கைவிடேல்

செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது

7. எண் எழுத்து இகழேல்

கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது

8. ஏற்பது இகழ்ச்சி

பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்

9. ஐயம் இட்டு உண்

பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்

10. ஒப்புரவு ஒழுகு

உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:02 pm

11. ஓதுவது ஒழியேல்

படிப்பதை விட்டுவிடக் கூடாது

12. ஒளவியம் பேசேல்

பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.

13. அஃகஞ் சுருக்கேல்

தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.

14. கண்டு ஒன்று சொல்லேல்

கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே

15. நுப்போல் வளை

'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:02 pm

16. சனி நீராடு

சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக

17. ஞயம்பட உரை

கனிவான முறையில் எதையும் கூறுவாயாக

18. இடம்பட வீடு எடேல்

தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே

19. இணக்கம் அறிந்து இணங்கு

நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்

20. தந்தை தாய் பேண்

பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:03 pm

21. நன்றி மறவேல்

ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது

22. பருவத்தே பயிர் செய்

உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்

23. மண் பறித்து உண்ணேல்

மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.

24. இயல்பு அலாதன வெயேல்

வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.

25. அரவம் ஆடேல்

பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:03 pm

26. இலவம் பஞ்சில் துயில்

இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்

27. வஞ்சகம் பேசேல்

கபடமாகப் பேசக்கூடாது

28. அழகு அலாதன செயேல்

பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது

29. இளமையில் கல்

சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்

30. அரனை மறவேல்

இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:03 pm

31. அனந்தல் ஆடேல்

கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்

32. கடிவது மற

பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.

33. காப்பது விரதம்

பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.

35. கீழ்மை அகற்று

கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:03 pm

36. குணமது கைவிடேல்

நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்

37. கூடிப் பிரியேல்

நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.

38. கெடுப்பது ஒழி

ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.

39. கேள்வி முயல்

அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.

40. கைவினை கரவேல்

கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:04 pm

41. கொள்ளை விரும்பேல்

ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி

ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.

43. சக்கர நெறி நில்

அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்

44. சான்றோர் இனத்திரு

அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.

45. சித்திரம் பேசேல்

பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:04 pm

46. சீர்மை மறவேல்

சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.

47. சுளிக்கச் சொல்லேல்

மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.

48. சூது விரும்பேல்

சூதாட்டங்களினால் பொருள் நஸ்டமும் மனக்கஸ்ரமும் உண்டாகும்

49. செய்வன திருந்தச் செய்

செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.

50. சேரிடம் அறிந்து சேர்

சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:04 pm

51. சை எனத் திரியேல்

மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.

52. சொல் சோர்வு படேல்

மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.

53. சோம்பித் திரியேல்

முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.

54. தக்கோன் எனத் திரி

கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.

55. தானமது விரும்பு

ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:05 pm

56. திருமாலுக்கு அடிமை செய்

மகாவிஸ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்

57. தீவினை அகற்று

பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.

58. துன்பத்திற்கு இடம் கொடேல்

மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது

59. தூக்கி வினைசெய்

எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்

60. தெய்வம் இகழேல்

கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:05 pm

61. தேசத்தோடு ஒத்து வாழ்

தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.

62. தையல் சொல் கேளேல்

மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.

63. தொண்மை மறவேல்

பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.

64. தோற்பன தொடரேல்

தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.

65. நன்மை கடைப்பிடி

நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆத்திசூடி

Post by சிவா on Sun Sep 28, 2008 4:05 pm

66. நாடு ஒப்பன செய்

நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்

67.நிலையில் பிரியேல்

மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.

68. நீர் விளையாடேல்

ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.

69. நுண்மை நுகரேல்

நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.

70. நூல் பல கல்

அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum