Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
+4
megastar
கார்த்திக்
அன்பு தளபதி
சிவா
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
First topic message reminder :
வாழ்த்துரை
யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.
காதல் வேறு ... மழை வேறா ....
எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.
அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.
மழைக்குச் சமாளித்த எறும்புகளிடம்தான் கேட்க வேண்டும் அதனை. அத்தகைய எறும்புச் சொற்களின் சேமிப்பாகத்தான் இந்தக்காதல் உரையாடல்கள்.
சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் தூறல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.
- அன்புடன் அறிவுமதி
வாழ்த்துரை
யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.
காதல் வேறு ... மழை வேறா ....
எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.
அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.
மழைக்குச் சமாளித்த எறும்புகளிடம்தான் கேட்க வேண்டும் அதனை. அத்தகைய எறும்புச் சொற்களின் சேமிப்பாகத்தான் இந்தக்காதல் உரையாடல்கள்.
சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் தூறல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.
- அன்புடன் அறிவுமதி
Last edited by சிவா on Thu Aug 03, 2023 11:31 am; edited 2 times in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
உன்மேல் கோபப்படுகிறபோதெல்லாம் ...
கொஞ்ச நேரங்கழித்து ... ஏன் கோபித்தோம்
என்றிருக்கும். அப்போதெல்லாம் உன்
மேலிருக்கிற அன்பு இன்னும் அதிகமாகும்.
ஆனால் நீயோ ... இனிமே கோபம் வருகிற
மாதிரி எந்தத் தப்பும் செய்யமாட்டேன்
என்பாய். இல்லையில்லை ... தவறுகள்
செய்துகொண்டே இரு. அன்பு
அதிகரித்துக்கொண்டே இருக்கட்டும்.
அழகாய் நீ சிரிக்கிற முகத்தை விட ...
கண்ணீர் மிதக்கும் உன் முகத்தை ஒரு முறை
பார்த்தது மறக்கவே இல்லை எனக்கு.
அதைவிட அழகாய் நீ எப்போதும்
இருந்ததில்லை. ஆனால் இப்போது
இருக்கிறாய். என் விரலில் ஏற்பட்ட
காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு.
ஒரு நாளாவது கதவைத் தட்டிவிட்டு
உனக்காக காத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். ஆனால் நீயோ நான்
தெருவில் வரும்போதே வாசலில் நின்று
எனக்காக உன் கண்களை நீட்டுகிறாய்
கொஞ்ச நேரங்கழித்து ... ஏன் கோபித்தோம்
என்றிருக்கும். அப்போதெல்லாம் உன்
மேலிருக்கிற அன்பு இன்னும் அதிகமாகும்.
ஆனால் நீயோ ... இனிமே கோபம் வருகிற
மாதிரி எந்தத் தப்பும் செய்யமாட்டேன்
என்பாய். இல்லையில்லை ... தவறுகள்
செய்துகொண்டே இரு. அன்பு
அதிகரித்துக்கொண்டே இருக்கட்டும்.
அழகாய் நீ சிரிக்கிற முகத்தை விட ...
கண்ணீர் மிதக்கும் உன் முகத்தை ஒரு முறை
பார்த்தது மறக்கவே இல்லை எனக்கு.
அதைவிட அழகாய் நீ எப்போதும்
இருந்ததில்லை. ஆனால் இப்போது
இருக்கிறாய். என் விரலில் ஏற்பட்ட
காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு.
ஒரு நாளாவது கதவைத் தட்டிவிட்டு
உனக்காக காத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். ஆனால் நீயோ நான்
தெருவில் வரும்போதே வாசலில் நின்று
எனக்காக உன் கண்களை நீட்டுகிறாய்
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
ஒரு நாளாவது யார் என்று கேள்விக்குறியுடன்
கதவு திறந்து எட்டிப் பார்க்கும் உன்
முகத்தினைப் பார்த்துவிடவேண்டும் என்கிற
ஆசையை நீ நிறைவேற்றி வைக்கப்
போவதில்லை போல ... என்ன காதல்
மனைவி நீ?
உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும்
நான் தொட்டுவிடாமல் இருக்க ஒரு
வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறாய் நீ.
நான்உன்னைத் தொடுகையில், எப்படியோ
என் விரல்களில் உன் அங்கங்களை ஒட்ட
விடுகிறாய்.
கதவு திறந்து எட்டிப் பார்க்கும் உன்
முகத்தினைப் பார்த்துவிடவேண்டும் என்கிற
ஆசையை நீ நிறைவேற்றி வைக்கப்
போவதில்லை போல ... என்ன காதல்
மனைவி நீ?
உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும்
நான் தொட்டுவிடாமல் இருக்க ஒரு
வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறாய் நீ.
நான்உன்னைத் தொடுகையில், எப்படியோ
என் விரல்களில் உன் அங்கங்களை ஒட்ட
விடுகிறாய்.
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
வேறு பெண்கள்பற்றிய எண்ணம் எதுவும்
எனக்கு இல்லையெனினும் உன்
மார்ப்புகளைச் சுமந்திருக்கும் என் கைகளால்
எப்படித் தொட முடியும் இன்னொரு
பெண்ணை!
உனக்காகச் செய்ய நினைத்த எதையுமே
உன்னால்தான் செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது. வாழ்க்கையையும் கூட.
நாம் இருவரும் பார்வையில் பழக ஆரம்பித்த
நாட்களில் ... என்னையே பார்த்துக்
கொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டால் ...
நான் ஒன்றும் உன்னைப் பா¡க்கவில்லையே
... என்று கலங்கரை விளக்கு மாதிரி
முகத்தைத் திருப்பிக் கொள்வாய். ஆனால்
உன்னையே நான் பார்த்துக்கொண்டிருப்பதை
நீ பார்த்துவிட்டால் ... ஐயோ பாத்துட்டானே ...
என்கிற பதைப்பில் சட்டென்று திரும்புகிற
போதே கொட்டிவிடுகிறது காதலெல்லாம்.
எனக்கு இல்லையெனினும் உன்
மார்ப்புகளைச் சுமந்திருக்கும் என் கைகளால்
எப்படித் தொட முடியும் இன்னொரு
பெண்ணை!
உனக்காகச் செய்ய நினைத்த எதையுமே
உன்னால்தான் செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது. வாழ்க்கையையும் கூட.
நாம் இருவரும் பார்வையில் பழக ஆரம்பித்த
நாட்களில் ... என்னையே பார்த்துக்
கொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டால் ...
நான் ஒன்றும் உன்னைப் பா¡க்கவில்லையே
... என்று கலங்கரை விளக்கு மாதிரி
முகத்தைத் திருப்பிக் கொள்வாய். ஆனால்
உன்னையே நான் பார்த்துக்கொண்டிருப்பதை
நீ பார்த்துவிட்டால் ... ஐயோ பாத்துட்டானே ...
என்கிற பதைப்பில் சட்டென்று திரும்புகிற
போதே கொட்டிவிடுகிறது காதலெல்லாம்.
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
சின்ன வயதில் சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன். ஆனால். அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை. வேறு
ஏதாவது இருக்கும் என்பது கூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை.
இன்று மாலை ... பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ என் கையைப் பிடித்துவிட்ட
போது ... உன் கைக்குள் இருக்கும் என்
பெண்மையிலும் ... வேண்டாம் இருக்கட்டும் ...
என்கிற காதலிலும் மாறி மாறித் தவித்த
தவிப்பில் ... அப்பா! வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.
அதைப் பற்றி இந்த இரவில் இப்படித்
தனிமையில் அசைபோடுகிறபோது ... எனக்கு
எதற்காக மார்புகள் வளர்ந்திருக்கின்றன
என்பது புரிந்துவிட்டது. நீ மட்டும் இப்போது
என் அருகில் இருந்திருந்தால், நீ என்
கையைப் பிடித்ததற்கும் உன் கையை
விட்டுவிட்டு நான் ஓடிவந்ததற்கும் சேர்த்து,
உன்னை இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ...
'களுக்' என்கிற வெட்கச் சிரிப்புடன் உன்
மார்பில் புதைந்துகொண்டிருப்பேன்.
வெட்கப்பட்டிருக்கிறேன். ஆனால். அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை. வேறு
ஏதாவது இருக்கும் என்பது கூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை.
இன்று மாலை ... பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ என் கையைப் பிடித்துவிட்ட
போது ... உன் கைக்குள் இருக்கும் என்
பெண்மையிலும் ... வேண்டாம் இருக்கட்டும் ...
என்கிற காதலிலும் மாறி மாறித் தவித்த
தவிப்பில் ... அப்பா! வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.
அதைப் பற்றி இந்த இரவில் இப்படித்
தனிமையில் அசைபோடுகிறபோது ... எனக்கு
எதற்காக மார்புகள் வளர்ந்திருக்கின்றன
என்பது புரிந்துவிட்டது. நீ மட்டும் இப்போது
என் அருகில் இருந்திருந்தால், நீ என்
கையைப் பிடித்ததற்கும் உன் கையை
விட்டுவிட்டு நான் ஓடிவந்ததற்கும் சேர்த்து,
உன்னை இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ...
'களுக்' என்கிற வெட்கச் சிரிப்புடன் உன்
மார்பில் புதைந்துகொண்டிருப்பேன்.
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
உன்னிடம் எந்தக் கெட்டப் பழக்கமும்
கிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும் வருத்தமாய் இருக்கிறது. நான்
சொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம்கூட
இல்லையே உன்னிடம்.
சின்ன வயதில் ... தோல்வியை
விரும்பியதில்லை. போட்டிகளை
விரும்பினேன். இப்போது போட்டிகளை
விரும்புவதில்லை. ஆனால் தோல்விகளை
விரும்புகிறேன். அதுவும் உன்னிடம் மட்டும்
தோற்பதில் இவ்வளவு ஆனந்தம் இருக்கிறது
என்பதை உணர்த்தியவன் நீதான்.
என் தோல்வியை விட என்னைத்
தோற்கடித்தவன்தான் என்னை நேசிப்பவன்
என்பதை நினைக்கையில் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கிறது.
கிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும் வருத்தமாய் இருக்கிறது. நான்
சொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம்கூட
இல்லையே உன்னிடம்.
சின்ன வயதில் ... தோல்வியை
விரும்பியதில்லை. போட்டிகளை
விரும்பினேன். இப்போது போட்டிகளை
விரும்புவதில்லை. ஆனால் தோல்விகளை
விரும்புகிறேன். அதுவும் உன்னிடம் மட்டும்
தோற்பதில் இவ்வளவு ஆனந்தம் இருக்கிறது
என்பதை உணர்த்தியவன் நீதான்.
என் தோல்வியை விட என்னைத்
தோற்கடித்தவன்தான் என்னை நேசிப்பவன்
என்பதை நினைக்கையில் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கிறது.
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
நாம் இருவரும் தனியாய் இருக்கையில் ...
இந்தக் கண்ணாடிக்கு ஏன் இத்தனை
கண்கள் முளைத்துவிடுகின்றன!
அன்றொரு நாள் நீ என் கையைப்
பிடித்தபோது உடைந்த வளையலை உடைந்த
மாதிரியே இன்னும் வைத்திருக்கிறேன்.
ஆனால் சற்றுமுன் நீ என்னைக்
கட்டிப்பிடித்தபோது கசங்கிய சேலையைக்
கசங்கியபடியே வைத்திருக்க முடியவில்லை.
உன் காதல் பற்றி எதுவும் தெரியாத இந்தச்
சேலையை வைத்துக்கொண்டு என்ன
செய்வது?
என்ன வேதனை ... என் இரண்டு
இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு
முத்தம்தானே தர முடிகிறது.
இந்தக் கண்ணாடிக்கு ஏன் இத்தனை
கண்கள் முளைத்துவிடுகின்றன!
அன்றொரு நாள் நீ என் கையைப்
பிடித்தபோது உடைந்த வளையலை உடைந்த
மாதிரியே இன்னும் வைத்திருக்கிறேன்.
ஆனால் சற்றுமுன் நீ என்னைக்
கட்டிப்பிடித்தபோது கசங்கிய சேலையைக்
கசங்கியபடியே வைத்திருக்க முடியவில்லை.
உன் காதல் பற்றி எதுவும் தெரியாத இந்தச்
சேலையை வைத்துக்கொண்டு என்ன
செய்வது?
என்ன வேதனை ... என் இரண்டு
இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு
முத்தம்தானே தர முடிகிறது.
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
உனக்கேன் இந்த மாதிரிஆசையெல்லாம்
வருகிறது? என் வளையலை உடைப்பது ...
கொலுசத் திருகாணியைக் கழற்றி விடுவது ...
கூந்தலில் இருக்கும் பூவைப் பறித்து உன்
கன்னத்தில் உரசிக் கொள்வது ... காதில்
தொங்கும் ஜிமிக்கியை ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது ...
ஆனால் ஒன்று ... சின்ன வயதிலிருந்து ...
இந்தத் தோடு ... வளையல் ... பூ ... கொலுசு ...
இதெல்லாம் எதற்காக அணிந்துகொள்ள
வேண்டும் ... என்று யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறது எனக்கு.
உன் காதலியாய் இருந்தவரையில் ... நான்
உடலால் ஆனவளாகத்தான் இருந்தேன். உன்
மனைவியாக ஆனபின்னே ... உன்
விரல்களால் ஆனவளாக ஆகிவிட்டேன்.
வருகிறது? என் வளையலை உடைப்பது ...
கொலுசத் திருகாணியைக் கழற்றி விடுவது ...
கூந்தலில் இருக்கும் பூவைப் பறித்து உன்
கன்னத்தில் உரசிக் கொள்வது ... காதில்
தொங்கும் ஜிமிக்கியை ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது ...
ஆனால் ஒன்று ... சின்ன வயதிலிருந்து ...
இந்தத் தோடு ... வளையல் ... பூ ... கொலுசு ...
இதெல்லாம் எதற்காக அணிந்துகொள்ள
வேண்டும் ... என்று யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறது எனக்கு.
உன் காதலியாய் இருந்தவரையில் ... நான்
உடலால் ஆனவளாகத்தான் இருந்தேன். உன்
மனைவியாக ஆனபின்னே ... உன்
விரல்களால் ஆனவளாக ஆகிவிட்டேன்.
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
இன்று நான் தரையில் படுக்கப் போகிறேன்.
வெறும் தரையிலா?
அப்போ ... உன் சேலையைக் கொடு.
கட்டியிருக்கேனே.
கொடுத்துட்டு ... என்னைக்கட்டிக்க.
ம் ... சேலை மாதிரி நீயும் சும்மா இருந்தா
தினம் கட்டிப்பேன். சேலை மாதிரி நானும் சும்மா இருக்கணுமா?
வேண்டாம்.
உனக்கு நான் விளையாட்டுப் பொருளாகி
விட்டேன். ஒரு விடுமுறை நாளில் ... நான்
குளித்து முடித்து சேலை மாற்றுகையில் ...
வந்து வம்பு செய்து ... நான் கட்டிவிடுகிறேன்...
என்றாய் ... உன்னிடமா தப்ப முடியும். ம் ம் ...
என்றேன். கற்றுக்கொடு என்றாய்.
இவ்வளவு ஆர்வமாகவும் ... இவ்வளவு
மெதுவாகவும் நீ கற்றுக்கொண்டது
இதுவாகத்தான் இருக்கும். நீ
கட்டி முடிப்பதற்குள் ... ஏய் உதைக்கணும்
உன்னை; சேலையைக்
கண்டுபிடித்தவனையும்.
உறக்கத்திலிருந்து சட்டென்று விழிப்பு வந்து
பார்த்தபோது ... அருகில் அமர்ந்து
என்னையே பார்த்துக்கெண்டிருந்தாய் நீ.
அப்புறம் விழிப்பு வராதா
வெறும் தரையிலா?
அப்போ ... உன் சேலையைக் கொடு.
கட்டியிருக்கேனே.
கொடுத்துட்டு ... என்னைக்கட்டிக்க.
ம் ... சேலை மாதிரி நீயும் சும்மா இருந்தா
தினம் கட்டிப்பேன். சேலை மாதிரி நானும் சும்மா இருக்கணுமா?
வேண்டாம்.
உனக்கு நான் விளையாட்டுப் பொருளாகி
விட்டேன். ஒரு விடுமுறை நாளில் ... நான்
குளித்து முடித்து சேலை மாற்றுகையில் ...
வந்து வம்பு செய்து ... நான் கட்டிவிடுகிறேன்...
என்றாய் ... உன்னிடமா தப்ப முடியும். ம் ம் ...
என்றேன். கற்றுக்கொடு என்றாய்.
இவ்வளவு ஆர்வமாகவும் ... இவ்வளவு
மெதுவாகவும் நீ கற்றுக்கொண்டது
இதுவாகத்தான் இருக்கும். நீ
கட்டி முடிப்பதற்குள் ... ஏய் உதைக்கணும்
உன்னை; சேலையைக்
கண்டுபிடித்தவனையும்.
உறக்கத்திலிருந்து சட்டென்று விழிப்பு வந்து
பார்த்தபோது ... அருகில் அமர்ந்து
என்னையே பார்த்துக்கெண்டிருந்தாய் நீ.
அப்புறம் விழிப்பு வராதா
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
இரவில் நீ து¡ங்கிக்கொண்டிருப்பதை பார்க்க
வேண்டும் என்பதற்காகவே ஒரு விளக்கு
வாங்கி வந்திருக்கிறேன் ... என்று ஒரு நாள்
விளக்கொன்றை என் கையில் கொடுத்தாய்.
ச்சீ .. அதைப் பிடித்துக்கொண்டிருக்கவே
வெட்கமாய் இருந்ததெனக்கு.
நீ இல்லாத பகல் நேரங்களில் ... அந்த
விளக்கை எடுத்து வைத்துக்கொண்டு தினம்
என் புடவைத் தலைப்பால் துடைத்துக்
கொண்டிருப்பேன் ... இந்த அறையின்
சுவர்களில் கூட து¡சு படிந்துவிடாத போது
இந்த விளக்கில் மட்டும் எப்படி து¡சு படியும் ...
என்கிற கேள்வியுடன்.
நான் உன் மடியில் படுத்துக்கொள்கிற
நேரங்களை விட ... உன்னை என் மடியில்
படுக்க வைத்துக்கொள்கிற
நேரங்களுக்காகவே நான் வாழ்கிறேன். நீ
இருக்கும்போது சுமைகளற்று இருக்கும் என்
மடியும் மார்பும் நீ எழுந்து போனபின்
கனமாகிப் போகிறது
வேண்டும் என்பதற்காகவே ஒரு விளக்கு
வாங்கி வந்திருக்கிறேன் ... என்று ஒரு நாள்
விளக்கொன்றை என் கையில் கொடுத்தாய்.
ச்சீ .. அதைப் பிடித்துக்கொண்டிருக்கவே
வெட்கமாய் இருந்ததெனக்கு.
நீ இல்லாத பகல் நேரங்களில் ... அந்த
விளக்கை எடுத்து வைத்துக்கொண்டு தினம்
என் புடவைத் தலைப்பால் துடைத்துக்
கொண்டிருப்பேன் ... இந்த அறையின்
சுவர்களில் கூட து¡சு படிந்துவிடாத போது
இந்த விளக்கில் மட்டும் எப்படி து¡சு படியும் ...
என்கிற கேள்வியுடன்.
நான் உன் மடியில் படுத்துக்கொள்கிற
நேரங்களை விட ... உன்னை என் மடியில்
படுக்க வைத்துக்கொள்கிற
நேரங்களுக்காகவே நான் வாழ்கிறேன். நீ
இருக்கும்போது சுமைகளற்று இருக்கும் என்
மடியும் மார்பும் நீ எழுந்து போனபின்
கனமாகிப் போகிறது
Re: வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
"என் உதடுகளைக் காணவில்லை. உனக்கு
முத்தமிடுகையில்தான் தொலைந்திருக்க
வேண்டும். தேடிப் பிடித்துத் திருப்பிக்
கொடுத்துவிடு" என்கிறாய். உன்னிடம்
திருப்பிக் கொடுத்தால் மட்டும் என்ன ...
மீண்டும் என்னில் எங்காவது
தொலைக்கக்தானே போகிறாய்.
ஒரு நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்து
பின் வாசல் திறந்து தோட்டத்தில்
புல்தரையில் அமர்ந்தாய். பனி கொட்டியது.
ஓடிப் போய் ஒரு போர்வை எடுத்து வந்து
உள் அருகில் அமர்ந்தேன். ஈரம் ஏந்திய
நிலா வெளிச்சம். ரொம்ப குளிர்.
போர்வையை உன் தலையில் போர்த்த
முயல்கையில் அதை வாங்கி தூர வைத்தாய்.
உன் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி ...
இப்படி பனியில் நனைந்தால் உடம்பு என்ன
ஆகும் ... என்றேன். அதற்குத்தான் நீ
இருக்கிறாயே ... என்றாய். உனக்கொரு
முத்தம் கொடுத்துவிட்டு உன் மடியில்
படுத்துக் கொண்டேன்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!
» சக்தி, திருவருள் தருவாய்!! (கவிதை)
» இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!
» சக்தி, திருவருள் தருவாய்!! (கவிதை)
» இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|