புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கு.மா.பா. நூற்றாண்டு: நெஞ்சினிலே நினைவு முகம்..
Page 1 of 1 •
-
மிக அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக்
கண்காட்சியில் புதிய புத்தகங்களை மட்டுமல்ல,
பழைய நூல்களையும் தேடித் தேடி வாசகர் வாங்கியதை
இந்த ஆண்டும் காண முடிந்தது.
ரசனையும், தேடலும் மிகுந்த மனிதர்கள் பழைய நினைவுகளை
அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக்கொண்டே தான்
இருக்கின்றனர். புத்தகங்களுக்கு மட்டுமல்ல,
திரைப்பாடல்களுக்கும் அந்தப் பெருமை உண்டு.
கு.மா.பா. எழுதிய ‘அமுதைப் பொழியும் நிலவு’ மட்டுமல்ல,
அது, ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா!’ காதல் மயக்கத்தை,
உருக்கத்தை, ஊடலை ஒரு ரசாயனக் குடுவையில் ஊற்றிக்
கொதிக்க வைத்துக் குளிர விட்டு ஆறவிட்டு ஓடவிட்ட பாடல்களை
விதவிதமாக கு.மா.பா. கடைசிவரை வார்த்துக்கொண்டே
இருந்தார்.
அவர் வரிகளில் வார்த்த ‘கனவின் மாயா லோகத்திலே நாம் க
லந்தே உல்லாசம்’ (அன்னையின் ஆணை) காண்பது தலைமுறைகள்
கடந்து தொடர்கையில், ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்
ஏனோ’ (கணவனே கண் கண்ட தெய்வம்) என்ற கேள்விக்குப் பதில்
கிடைத்து விடுகிறது.
-
-
கண்ணதாசனாக கருதிக் கொண்டவர்கள்!
பழைய பாடல்கள் சிலவற்றைக் கிறங்கிக் கேட்கும் ரசிகர்களுக்கு,
கண்ணதாசன் எழுதி இருப்பார் என்றே பதிவாகி இருந்து, வேறு
ஒரு கவிஞரது பாடல் என்று பின்னர் அறிந்துகொள்ளும் அதிர்ச்சி
நிகழ்வதுண்டு.
‘சித்திரம் பேசுதடி..’ (சபாஷ் மீனா) பாடலை எழுதியவர்
கு.மா.பா என்ற உண்மையை மிக அண்மையில்தான் கண்டடைந்தேன்
என்றார் நண்பர் ஒருவர் .
பி சுசீலாவும், வித்தியாசமான ஆண் குரலும் (டி.ஏ.மோதி) போட்டி
போட்டுப் பாடும் ‘காணா இன்பம் கனிந்ததேனோ’வை விவரிக்க
சொற்கள் உண்டா…! அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே
கு.மா. பா எழுதியது தான்!
புகழ் பெற்ற ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பத்துக்கு
மேற்பட்ட பாடல்கள் அனைத்துமே அவரது தூரிகை தீட்டிய நவரச
ஓவியங்கள்தான். ‘சிங்காரக் கண்ணே’, ‘அஞ்சாத சிங்கம் என் காளை’,
‘போகாதே போகாதே என் கணவா’, ‘ஜெக்கம்மா’ …. எத்தனை
எத்தனை அற்புதமான பாடகர்களின் குரலினிமைக் கூட்டணி!
அந்தக் காலத்தில் சிறந்த பாடலாசிரியருக்கு விருது
அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்திருந்தால், கெய்ரோவில்
நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க உலகப்பட விழாவில் இந்தப்
படத்துக்கு நடிகர் திலகத்தின் மெச்சத் தகுந்த நடிப்பிற்காகவும்,
ஜி.ராமநாதனின் தனித்துவ இசைக்காகவும் வழங்கப்பட்ட
விருதுகள், சிறந்த பாடலுக்காக நம் கவிஞருக்கும் அளிக்கப்பட்டிருக்கும்.
எஸ். வி. வேணுகோபாலன்
இந்து தமிழ் திசை: 24 Jan 2020
ஸ்ரீதரின் அன்பளிப்பு!
‘அம்பிகாபதி’ படத்துக்காக டி.எம்.எஸ் – பானுமதி குரல்களில்
மென்காதல் தும்பியாய்ச் சிறகடிக்கும் ‘மாசிலா நிலவே நம்’
பாடல், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் உருவாக்கிக்
கொடுத்த பெருமைக்குரியது.
டி.எம்.எஸ். துள்ளாட்டக் குரலில் ‘யாரடி நீ மோகினி’
(உத்தம புத்திரன்) எனக் கு.மா.பாவின் வரிகளில் பாடியதைக்
கேட்டுப் பரவசமுற்று, அந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம்
எழுதிய (இயக்குநர்) ஸ்ரீதர், கவிஞருக்குத் தன் அன்பளிப்பாக
ஆயிரம் ரூபாய் கொடுத்து மகிழ்ந்தாராம்.
பாடகி பி. சுசீலாவுக்குத் தொடக்க நிலையிலேயே புகழளித்த
‘உன்னைக் கண் தேடுதே’ பாடலில் இருந்து, ஜே.பி.சந்திரபாபு –
ஜமுனா ராணி இணை குரலில் ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே..’
(மரகதம்), ஏ.எம். ராஜா – பி சுசீலா குரல்களில் ‘ஆடாத மனமும்
ஆடுதே’ (களத்தூர் கண்ணம்மா), டி.எம்.எஸ். – பி.லீலா குரல்களில்
‘இகலோகமே’ (தங்கமலை ரகசியம்), பி.சுசீலா – ஜிக்கி குரல்களில்
‘மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக ‘ (உத்தம புத்திரன்) என்று
விரியும் மெல்லிசையில் கு.மா.பா. சொற்கட்டுகள் அபார சுகம்
அளிப்பவை.
‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் காதல்
பாட்டுக்களை சீர்காழி கோவிந்தராஜன் சிறப்பாகப் பாடிய
‘காதலெனும் சோலையிலே ராதே ராதே’, ‘எல்லை இல்லாத
இன்பத்திலே’ பாடல்களும், அதே படத்தில் இடம் பெற்ற
‘ஆட வாங்க அண்ணாத்தே’ என்ற பாடலும் அவர் எழுதியவை
தான்.
‘கண்மணியே இன்னமுதே..’ (அவன் அமரன்), ‘கண்ணே வண்ணப்
பசுங்கிளியே’ (யானை வளர்த்த வானம்பாடி) போன்ற தாலாட்டுப்
பாடல்களில் குழந்தையைக் கொஞ்சும் அருந்தமிழ்ச் சொற்கள்
பெரியவர்களையும் ஆனந்தமாகக் கண்ணுறங்க வைக்கும்.
‘ஏமாறச் சொன்னது நானோ’ (நானும் ஒரு பெண்), ‘காரு சவாரி
ஜோரு’ (விடி வெள்ளி), ‘தாரா அவர் வருவாரா ‘ (அரசிளங்குமரி),
‘என் ஆருயிரே நல் வானமுதே..’ (தெய்வத்தின் தெய்வம்),
‘ஓ..ஹோ நிலா ராணி…’ (சித்தூர் ராணி பத்மினி) என்று கவிஞரின்
ஆக்கங்களின் வரிசை ரசனைக்குரியது. பி சுசீலா சோகத்தோடு
தொடங்க, ‘ஆருயிர் என்று அழைத்தவளே’ என்று டி எம் எஸ் வந்து
இணையும் ‘நெஞ்சினிலே நினைவு முகம்’ (சித்ராங்கி) ஒரு
முத்திரைப் பாடல்.
அடங்காப் பட்டியல்
திருச்சி லோகநாதன் பாடிய ‘மாநிலம் மேல் சில மானிடரால்
வந்த மாறுதல் பாரய்யா..’ (நாஸ்திகன்) பாடலின் வரிகள், மதவெறி
உள்ளிட்டுப் பிரிவினையைத் தூண்டும் நிலைமைக்கு எதிரான
ஒருமைப்பாட்டுக்கான குரல், இக்காலத்துக்கும் மிகவும் பொருந்தக்
கூடியது.
‘ரத்தபாசம்’ திரைப்படத்தில், பாட்டாளிகளைச் சுரண்டிச்
சீமான்கள் கொழுத்திருப்பதைச் சாடும் ‘பணமிருக்கிற மனுஷன்
கிட்ட மனமில்லே..’ என்ற அருமையான பாடல் வரிகள், பி.லீலா குரலில்
‘உலகம் போகும் போக்கு ஒண்ணும் சரியில்லே, நிலைமை சரியில்லே,
இதை ஒழுங்கு பண்ணி அமைச்சுக்கிட்டா அழிவில்லே’ என்று
மிக எளிதான முறையில் மாற்றத்துக்கான குரலை எடுக்கும்.
கவிஞராக மட்டுமல்ல, கதை, வசனங்களிலும் அசாத்திய
சாதனை படைத்தவர் கு.மா.பா. ‘வேலைக்காரன்’ படத்தின் கதை,
பாடல்கள் எழுதினார். ஏவி.எம். இந்தியில் மறு ஆக்கம் செய்த.
திரைப்படங்களின் இயக்குநர் எம்.வி.ராமனின் ஆலோசனையை
ஏற்ற கவிஞர், பம்பாய் பிலிம்ஸ்தான் ஸ்டுடியோவின் கதை இலாகாவில்
பணியாற்றியதுடன் ‘சாம்ராட்’, ‘நாஸ்திக்’ ஆகிய திரைப்படங்களுக்கு
வசனம், பாடல்கள் எழுதி, தமிழில் மொழிமாற்றம் செய்யும் கலையைக்
கற்றறிந்தார்.
‘அம்பிகாபதி’ படத்துக்காக டி.எம்.எஸ் – பானுமதி குரல்களில்
மென்காதல் தும்பியாய்ச் சிறகடிக்கும் ‘மாசிலா நிலவே நம்’
பாடல், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் உருவாக்கிக்
கொடுத்த பெருமைக்குரியது.
டி.எம்.எஸ். துள்ளாட்டக் குரலில் ‘யாரடி நீ மோகினி’
(உத்தம புத்திரன்) எனக் கு.மா.பாவின் வரிகளில் பாடியதைக்
கேட்டுப் பரவசமுற்று, அந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம்
எழுதிய (இயக்குநர்) ஸ்ரீதர், கவிஞருக்குத் தன் அன்பளிப்பாக
ஆயிரம் ரூபாய் கொடுத்து மகிழ்ந்தாராம்.
பாடகி பி. சுசீலாவுக்குத் தொடக்க நிலையிலேயே புகழளித்த
‘உன்னைக் கண் தேடுதே’ பாடலில் இருந்து, ஜே.பி.சந்திரபாபு –
ஜமுனா ராணி இணை குரலில் ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே..’
(மரகதம்), ஏ.எம். ராஜா – பி சுசீலா குரல்களில் ‘ஆடாத மனமும்
ஆடுதே’ (களத்தூர் கண்ணம்மா), டி.எம்.எஸ். – பி.லீலா குரல்களில்
‘இகலோகமே’ (தங்கமலை ரகசியம்), பி.சுசீலா – ஜிக்கி குரல்களில்
‘மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக ‘ (உத்தம புத்திரன்) என்று
விரியும் மெல்லிசையில் கு.மா.பா. சொற்கட்டுகள் அபார சுகம்
அளிப்பவை.
‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் காதல்
பாட்டுக்களை சீர்காழி கோவிந்தராஜன் சிறப்பாகப் பாடிய
‘காதலெனும் சோலையிலே ராதே ராதே’, ‘எல்லை இல்லாத
இன்பத்திலே’ பாடல்களும், அதே படத்தில் இடம் பெற்ற
‘ஆட வாங்க அண்ணாத்தே’ என்ற பாடலும் அவர் எழுதியவை
தான்.
‘கண்மணியே இன்னமுதே..’ (அவன் அமரன்), ‘கண்ணே வண்ணப்
பசுங்கிளியே’ (யானை வளர்த்த வானம்பாடி) போன்ற தாலாட்டுப்
பாடல்களில் குழந்தையைக் கொஞ்சும் அருந்தமிழ்ச் சொற்கள்
பெரியவர்களையும் ஆனந்தமாகக் கண்ணுறங்க வைக்கும்.
‘ஏமாறச் சொன்னது நானோ’ (நானும் ஒரு பெண்), ‘காரு சவாரி
ஜோரு’ (விடி வெள்ளி), ‘தாரா அவர் வருவாரா ‘ (அரசிளங்குமரி),
‘என் ஆருயிரே நல் வானமுதே..’ (தெய்வத்தின் தெய்வம்),
‘ஓ..ஹோ நிலா ராணி…’ (சித்தூர் ராணி பத்மினி) என்று கவிஞரின்
ஆக்கங்களின் வரிசை ரசனைக்குரியது. பி சுசீலா சோகத்தோடு
தொடங்க, ‘ஆருயிர் என்று அழைத்தவளே’ என்று டி எம் எஸ் வந்து
இணையும் ‘நெஞ்சினிலே நினைவு முகம்’ (சித்ராங்கி) ஒரு
முத்திரைப் பாடல்.
அடங்காப் பட்டியல்
திருச்சி லோகநாதன் பாடிய ‘மாநிலம் மேல் சில மானிடரால்
வந்த மாறுதல் பாரய்யா..’ (நாஸ்திகன்) பாடலின் வரிகள், மதவெறி
உள்ளிட்டுப் பிரிவினையைத் தூண்டும் நிலைமைக்கு எதிரான
ஒருமைப்பாட்டுக்கான குரல், இக்காலத்துக்கும் மிகவும் பொருந்தக்
கூடியது.
‘ரத்தபாசம்’ திரைப்படத்தில், பாட்டாளிகளைச் சுரண்டிச்
சீமான்கள் கொழுத்திருப்பதைச் சாடும் ‘பணமிருக்கிற மனுஷன்
கிட்ட மனமில்லே..’ என்ற அருமையான பாடல் வரிகள், பி.லீலா குரலில்
‘உலகம் போகும் போக்கு ஒண்ணும் சரியில்லே, நிலைமை சரியில்லே,
இதை ஒழுங்கு பண்ணி அமைச்சுக்கிட்டா அழிவில்லே’ என்று
மிக எளிதான முறையில் மாற்றத்துக்கான குரலை எடுக்கும்.
கவிஞராக மட்டுமல்ல, கதை, வசனங்களிலும் அசாத்திய
சாதனை படைத்தவர் கு.மா.பா. ‘வேலைக்காரன்’ படத்தின் கதை,
பாடல்கள் எழுதினார். ஏவி.எம். இந்தியில் மறு ஆக்கம் செய்த.
திரைப்படங்களின் இயக்குநர் எம்.வி.ராமனின் ஆலோசனையை
ஏற்ற கவிஞர், பம்பாய் பிலிம்ஸ்தான் ஸ்டுடியோவின் கதை இலாகாவில்
பணியாற்றியதுடன் ‘சாம்ராட்’, ‘நாஸ்திக்’ ஆகிய திரைப்படங்களுக்கு
வசனம், பாடல்கள் எழுதி, தமிழில் மொழிமாற்றம் செய்யும் கலையைக்
கற்றறிந்தார்.
‘கோமதியின் காதலன்’ திரைப்படத்தில், இயக்குநர் ப.நீலகண்டனின்
உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் பெரும்பாலான
பாடல்களையும் எழுதினார்.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கிய தடம் பதித்த
‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள்
எல்லாம் கு.மா. பா.தான் இதில் எஸ்.ஜானகி பாடிய
‘சிங்கார வேலனே தேவா..’ அவருக்கு மட்டுமல்ல, பாடலை இயற்றிய
கவிஞருக்கும் பெரும்புகழை ஈட்டித்தந்தது.
இசைத்தட்டுகள் விற்பனையில் அந்தக் காலத்தில் முதலிடத்தைப்
பிடித்த இந்தப் பாடலுக்கு என்றென்றும் தொடரும் ரசிக பட்டாளம்.
இதே போல், இவர் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி
வெற்றியடைந்த இன்னொரு படம் ‘மகாகவி காளிதாஸ்’.
மரபிலக்கணம் வழுவாத வெண்பா, விருத்தப்பா, கட்டளை
கலித்துறை பாடல்களை இயற்றியதன் மூலம் வடமொழிக்
கவிஞரான காளிதாசனை அசல் தமிழ்க் கவியாகவே காட்சிப்
படுத்திய படம் அது.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில்
‘மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே..’
உள்ளிட்ட அத்தனைப் பாடல்களின் வரிகளும் அற்புதமானவை.
ஏவி.எம் தயாரிப்பில் 1951-ல் வெளியான ‘ஓர் இரவு’ திரைப்படத்தில்
முதல் பாடல் எழுதிய அவரது கவிதை மனம், அவர் காலத்தின்
மிகச் சிறந்த பாடல் ஆசிரியர்கள் இயங்கிக் கொண்டிருந்த அதே
வேளையில் தொடுத்துச் சென்றிருக்கும் வெற்றிப் பாடல்களின்
எண்ணிக்கை அடங்காப் பட்டியல். 1980-ல் வெளிவந்த
‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில் சலீல் சவுத்ரி இசையில் அனைத்துப்
பாடல்களையும் எழுதிய கவிஞர்,
அடுத்து, கங்கை அமரன் இசையில் ‘கனவுகள் கற்பனைகள்’ திரைப்
படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய, ‘வெள்ளம் போலே
துள்ளும் உள்ளங்களே..’ இவர் எழுதிய ஓர் இனிய பாடலாகும்.
ஓர் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, பத்திரிகையாளர்,
வெற்றிகரமான சிறுகதை எழுத்தாளர், கவிஞர், திரைப்படப்
பாடலாசிரியர், வசனகர்த்தா, தமிழக சட்ட மேலவை உறுப்பினர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் என்று
பன்முகத் தளங்களில் தமிழ்ப் பணியாற்றி, கலை மாமணி விருது
பெற்றது மட்டுமல்ல,
தனக்கென்று தமிழ் நெஞ்சங்களில் தனி இடம் பெற்றுள்ள
கவிஞர் காலத்தால் நிலை பெற்றுவிட்டவர்.
எஸ். வி. வேணுகோபாலன்
இந்து தமிழ் திசை: 24 Jan 2020
உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் பெரும்பாலான
பாடல்களையும் எழுதினார்.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கிய தடம் பதித்த
‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள்
எல்லாம் கு.மா. பா.தான் இதில் எஸ்.ஜானகி பாடிய
‘சிங்கார வேலனே தேவா..’ அவருக்கு மட்டுமல்ல, பாடலை இயற்றிய
கவிஞருக்கும் பெரும்புகழை ஈட்டித்தந்தது.
இசைத்தட்டுகள் விற்பனையில் அந்தக் காலத்தில் முதலிடத்தைப்
பிடித்த இந்தப் பாடலுக்கு என்றென்றும் தொடரும் ரசிக பட்டாளம்.
இதே போல், இவர் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி
வெற்றியடைந்த இன்னொரு படம் ‘மகாகவி காளிதாஸ்’.
மரபிலக்கணம் வழுவாத வெண்பா, விருத்தப்பா, கட்டளை
கலித்துறை பாடல்களை இயற்றியதன் மூலம் வடமொழிக்
கவிஞரான காளிதாசனை அசல் தமிழ்க் கவியாகவே காட்சிப்
படுத்திய படம் அது.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில்
‘மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே..’
உள்ளிட்ட அத்தனைப் பாடல்களின் வரிகளும் அற்புதமானவை.
ஏவி.எம் தயாரிப்பில் 1951-ல் வெளியான ‘ஓர் இரவு’ திரைப்படத்தில்
முதல் பாடல் எழுதிய அவரது கவிதை மனம், அவர் காலத்தின்
மிகச் சிறந்த பாடல் ஆசிரியர்கள் இயங்கிக் கொண்டிருந்த அதே
வேளையில் தொடுத்துச் சென்றிருக்கும் வெற்றிப் பாடல்களின்
எண்ணிக்கை அடங்காப் பட்டியல். 1980-ல் வெளிவந்த
‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில் சலீல் சவுத்ரி இசையில் அனைத்துப்
பாடல்களையும் எழுதிய கவிஞர்,
அடுத்து, கங்கை அமரன் இசையில் ‘கனவுகள் கற்பனைகள்’ திரைப்
படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய, ‘வெள்ளம் போலே
துள்ளும் உள்ளங்களே..’ இவர் எழுதிய ஓர் இனிய பாடலாகும்.
ஓர் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, பத்திரிகையாளர்,
வெற்றிகரமான சிறுகதை எழுத்தாளர், கவிஞர், திரைப்படப்
பாடலாசிரியர், வசனகர்த்தா, தமிழக சட்ட மேலவை உறுப்பினர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் என்று
பன்முகத் தளங்களில் தமிழ்ப் பணியாற்றி, கலை மாமணி விருது
பெற்றது மட்டுமல்ல,
தனக்கென்று தமிழ் நெஞ்சங்களில் தனி இடம் பெற்றுள்ள
கவிஞர் காலத்தால் நிலை பெற்றுவிட்டவர்.
எஸ். வி. வேணுகோபாலன்
இந்து தமிழ் திசை: 24 Jan 2020
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|