புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
68 Posts - 49%
heezulia
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
5 Posts - 4%
prajai
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 3%
Jenila
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
kargan86
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
9 Posts - 5%
prajai
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
6 Posts - 3%
Jenila
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_m10வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 8:32 am

வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா? 202012260552289231_Can-we-forget-the-tsunami_SECVPF
-
சென்னை,

2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி
இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவுகளையும்,
உடைமைகளையும் ஒருசேர பறித்துச்சென்ற அந்த கோர தாண்டவம்
இன்னமும் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது.

இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும்
மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன. அந்த
வகையில் டிசம்பர் 26-ந்தேதி (இன்று) எனும் இந்த நாள், தமிழகத்தின்
கறுப்பு நாள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லட்சக்கணக்கான உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி, பெரும்
பணக்காரர்களையும் நடுரோட்டில் நிர்க்கதியாக நிற்கவைத்த
துயரத்தை என்ன சொல்ல... உறவுகளையும், உடைமைகளையும்
பறிகொடுத்து அடுத்தவேளை உணவுக்காக கண்ணீருடனும்,
கவலை தோய்ந்த முகங்களுடனும் வரிசையில் காத்திருந்த மக்களை
நினைத்தாலே நம் கண்கள் குளமாகி விடும்.

இந்தியா, அந்தமான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில்
முந்தைய நாள் இரவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு நிம்மதியாக
உறங்க சென்றவர்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்களை
கடல் தாய் அழைத்துக்கொண்டு போய் விடுவாள் என்று தெரியாது.

ஆம், சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள்
ஆகிவிட்டன.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி காலை 6.29 மணிக்கு
இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள்,
இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா,
தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.

இந்தியாவில் சுனாமியின் தாக்கம் வெகுவாகவே எதிரொலித்தது.
தாலாட்டுடன் கரையை தொட்டுச்சென்ற வங்ககடலின் அலைகள்,
அன்றைய தினம் திடீரென தனது ஆக்ரோஷத்தை காட்டின.

அதுவரை கவிதையையும், இனிய நினைவுகளையும், சந்தோஷத்தையும்,
நிம்மதியையும், மன அமைதியையும் அளித்து வந்த அலைகள் முதன்
முறையாக பயத்தை ஏற்படுத்தியது.

வழக்கத்தை விட கொந்தளிப்பாகவும், கோபமாகவும், ராட்சத
வேகத்துடன் வந்த அலைகளை தூரத்தில் இருந்து பார்த்த மக்கள் பீதி
அடைந்தனர்.

பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் என்னவென்று
சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானோரை வாரி சுருட்டிக்கொண்டு
கடலுக்குள் சென்றது.

‘எட்ட நின்னு பார்க்கும் எதுவும் கிட்ட வந்தால் கஷ்டமே’,
என்பதுபோல கரை தாண்டி, சாலையை தாண்டி குடியிருப்பு
பகுதிகளையும் கோப கனலாக கொந்தளித்து வந்த கடல் அலைகள்
புரட்டியெடுத்து விட்டன.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 8:33 am

16 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்க மறுக்கும் கோர தாண்டவம்



கரையோரம் இருந்த கடைகள், சாலையோரம் நின்றிருந்த கார்கள்
கடல் நீரில் சிக்கி நாசமானது. உயிர் பயத்தால் வீட்டின் மேற்கூரைகளிலும்,
மொட்டை மாடிகளிலும் கூச்சலிட்டு கொண்டிருந்த மக்களின்
அபயகுரலையும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவிக்கும் மக்களும்,
கால்நடைகளும் நீரில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகளை காண்போர்
கண்கள் நிச்சயம் குளமாகிவிடும்.
அந்தளவு சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவம் ஆடியது.

இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது
தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது.

சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள்
உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர்
சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க
இயலாது.

குறிப்பாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன.
நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும்
7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில்
சிக்கியும் உயிரிழந்தனர்.
ஆடுகள், கோழிகள், மாடுகள் என கால்நடைகளும் பரிதாபமாக
உயிரிழந்தன.

ஆழிப்பேரலை அழித்தொழித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் மனதில் ஏற்பட்ட
சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சன
உண்மை. அந்த சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு
வருகிறது.

இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை
எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள்
தூவப்படும், பால் ஊற்றப்படும்.

சென்னை உள்பட கடலோர கிராமங்களில் சுனாமியில்
உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலியும் செலுத்துவார்கள். அப்போது உயிரிழந்தவர்களை
நினைத்து கண்ணீர் சிந்தி வருந்துவார்கள்.
அந்த நாள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வருத்தம் தோய்ந்த
நிகழ்வாகவே அமைந்து வருகிறது.

சொல்லமுடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத
இழப்புகளையும் ஏற்படுத்திய சுனாமி தனது கோரத்தாண்டவத்தை
ஆடி ஆண்டுகள் கடந்தாலும் சுனாமி ஏற்படுத்திய சோகவடு இன்னும்
நம் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது.

ஹாலிவுட் படங்களில் சுனாமி போன்ற பேரழிவு தரும் இத்தகைய
காட்சிகளை கண்டாலே மனம் பதறிவிடும். ஆனால் 16 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த காட்சியை கண்முன்னே பார்த்தவர்கள் அந்த அதிர்ச்சியில்
இருந்து மீளவா முடியும்?

2004-ம் ஆண்டு சுனாமியில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர்
இறந்திருக்கிறார்கள் என்று கணக்கீடுகள் கூறுகின்றன. இழப்புகள்
என்றுமே பெரிது. அதிலும் மனித உயிரிழப்புகள் மனதை
பாதிக்கக்கூடியவை. அத்தகைய பாதிப்புகளில் இருந்து உறவுகளை
பறிகொடுத்தோர் மீளவும், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போம்.

காலம் மாறலாம், ஆனால் கண்ட காட்சிகள் இன்னும் ஆறாத வடுவாக
இருப்பதை மறுக்கமுடியாது. எல்லா வலிகளுக்கும் மருந்து உண்டு.
ஆனால் இந்த வலிக்கான மருந்தை காலம் தான் கூறவேண்டும்.
-
-------------------------------------
தினத்தந்தி



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 10:13 am

அது 2004!
சென்னை மெரீனாக் கடற்கரை! எங்களது ‘அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ அதன் அருகில்தான் இருந்தது! ஆழி அலையால் நம் சுவடிச் செல்வம் அழிந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தேன், அம் மையத்தின் தலைவன் என்ற முறையில்! நல்ல வேளையாக எங்கள் வளாகத்துக்கு முன்னரே அலை பின்வாங்கிவிட்டது! அப்போது கடற்கரையில் கூடிநின்று கடலைச் சினத்துடன் முறைத்துப் பார்த்தவர்களில் நானும் ஒருவன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக