புதிய பதிவுகள்
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_m10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_m10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_m10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_m10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_m10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_m10முற்றுப் பெற்றது மும்பை மோதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றுப் பெற்றது மும்பை மோதல்


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Sat 4 Apr 2009 - 14:25

மும்பை நகரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற மோதல்கள் 62 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
இறுதியாக பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த தாஜ் மஹால் ஹோட்டலும் இன்று காலை மீட்கப்பட்டது. மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.

முற்றுப் பெற்றது மும்பை மோதல் 20081129053759tajablaze416

அதேபோல், நாரிமன் ஹவுஸ் பகுதியில் இருந்த யூத மையமும் வெள்ளி இரவு பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். அந்தக் கட்டடத்தில் இருந்த ஐந்து பிணைக் கைதிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ ஒருவரும் அதில் கொல்லப்பட்டார்.

ஏற்கெனவே, நேற்று பிற்பகலில், ஓபராய்-டிரைடன்ட் ஹோட்டல்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டன.

இதுவரை மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் 195 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 370-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

தாஜ் ஹோட்டலில் சனி அதிகாலை முதல் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் கடும் மோதலில் ஈடுபட்டார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மற்றும் கடற்படைக் கமாண்டோக்களுடன் சனிக்கிழமை காலை ராணுவ கமாண்டோக்களும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

அதைத் தொடர்ந்து தாக்குதல் மேலும் உக்கிரமடைந்தது. ஹோட்டலின் முதல் தளத்தில் இருந்த ஓர் அறையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர்.. கமாண்டோக்கள் நெருங்கிய நேரத்தில், அவர்கள் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அதையும் மீறி கமாண்டோ படையினர் முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார்கள். சனிக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் அந்தப் பணி முடிவடைந்தது.

அந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புப்படைத் தலைவர் ஜே.கே. தத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்த பயங்கரவாதிகளில் ஒருவரது சடலம், ஜன்னல் வழியாக வெளியே கீழ் தளத்தில் விழுந்ததை தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு மூலம் காண முடிந்தது.


தாக்குதல் பணியில் கமாண்டோக்கள்

அதே நேரத்தில், தற்போது தாஜ் ஹோட்டலில் ஒவ்வொரு அறையாக தேடுதல் பணி நடைபெற்றுவருவதாகவும், அறைகளில் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கும் விருந்தினர்கள் ஜன்னல் வழியாக அடையாளம் காட்டலாம் என்றும் தத் கூறினார்.

அந்த மோதலில், கமாண்டோ படையைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் உயிரிழந்தார்.

தாஜ் ஹோட்டல் கீழ் தளததில் தேடுதல் பணி நிறைவடைந்ததும், பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிக் குழுவினரும் சிறிது உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அங்குள்ள அறைகளும், உணவு விடுதியும் ரணகளம் போல காட்சியளித்தது. தரை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

தாக்குதல் பணி முடிவடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் உள்ளே அறைகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டார்கள். மேலும், பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான சடலங்களும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

படையினர் வசம் நாரிமன் ஹவுஸ்

நேற்றிரவு பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட நாரிமன் ஹவுஸ் கட்டடம் மும்பை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு 48 மணி நேர முற்றுகைக்குப் பிறகு, இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றார்கள்.

ஐந்து மாடிக் கட்டடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை மேல் தளம் உள்பட பல்வேறு முனைகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். கிரானைட் லாஞ்சர்கள் மூலம் சுவர்களைத் தகர்த்தெறிந்தார்கள். நான்காவது தளத்தில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
யூத மையத்தில் மீட்புப் பணி

அந்தக் கட்டடத்தில், மூன்று சடலங்களும், நான்காவது மாடியில் வேறு இரு சடலங்களும் கிடந்தன. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்த அவர்கள் ஐந்து பேரும் இஸ்ரேலிய நாட்டவர்கள். அவர்களை பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் இறுதிக்கட்ட தாக்குதல் நடத்திய நேரத்திலும், துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியின்போது, கமாண்டோ கஜேந்திர சிங் உயிரிழந்ததாக ஜே.கே. தத் தெரிவித்தார்.

18 வெளிநாட்டவர்கள்

மும்பை மோதல்களில், 16 பாதுகாப்புப் படையினர் உள்பட 170 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் வெளிநாட்டவர்கள் 18 பேர். அவர்களில் மூன்று இஸ்ரேலியர்கள், மூன்று ஜெர்மானியர்கள். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் தலா ஒருவர் கொல்லப்பட்டார்கள் என மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் பிரஜைகள் என்று செய்திகள் வெளியாகியிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மகாராஷ்டிர முதல்வர், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார். உயிருடன் பிடிபட்ட ஒரு பயங்கரவாதி மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தாஜ், ஒபராய்-டிரைடன்ட் ஹோட்டல்கள், நாரிமன் ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களிலும் பத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாகவும், அவர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு, ஒருவர் பிடிபட்டுள்ளதாக ஜே.கே. தத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நிலையில் திருப்பம்

இதனிடையே, இந்தியா கேட்டுக் கொண்டபடி மும்பை சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவரை புதுடெல்லிக்கு அனுப்ப சம்மத்திருந்த பாகிஸ்தான் தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டது.

ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுஜா புஷாவுக்கு பதிலாக, ஐஎஸ்ஐ பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்குச் சென்று, மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவார் என்று இஸ்லாமாபாத்தில் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஜர்தாரி, பிரதமர் யூஸுஃப் ராஜா கிலானி, ராணுவத் தளபதி கயானி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடலோரத்தில் தேடுதல் பணி

இதனிடையே, பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக மும்பை நகருக்கு வந்து சேர்ந்ததாக பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வருவதை அடுத்து, கடலோரப் பகுதிகளில் இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல் படையினரும் தீவிரமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மும்பை கடலோரப் பகுதியில் ஒரு சடலத்துடன் தனித்துவிடப்பட்டிருந்த படகு ஒன்றைக் கைப்பற்றியிருப்பதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் மனோகர் நம்பியார் தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக