புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
21 Posts - 66%
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
63 Posts - 64%
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 11:12 am

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Main-qimg-dc47c1fd76ee196874672ca9941cd4e0
-
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*

மார்கண்டேய மகரிஷிக்கு கண்ணனை யாரும் சேவிக்க 
முடியாத திருக்கோலத்தில் சேவிக்க ஆசையிருந்தது.

அப்போது ஒரு ப்ரளயம் நடந்தது.

மார்கண்டேய மகரிஷி தன் ஆசிரம வாசலில் நின்று தர்ப்பணம் 
செய்து கொண்டிருந்தார்.

அப்போது கண்ணனின் அழகான திருக்கோலத்தை சேவை 
சாதித்தருளுமாறு மனதார ப்ரார்த்தித்துக் கொண்டார்.

கண்ணன் எங்கெல்லாம் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டார்.

அப்போது ஊழிக்காற்று வீசும் சத்தம் கேட்டது.

மரம், செடி, கொடிகள் என அனைத்தும் அசைய ஆரம்பித்தது.

பேய்காற்று வீசியது.

மழை கொட்ட ஆரம்பித்தது.

பெரிய மழை, பேய் மழை!

என்ன நடக்கிறதென்று அவருக்குப் புரியவில்லை.

நேரம் கடக்க, கடக்க, தவிக்கிறார்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

ஆசிரமம் கண்ணிற்குத் தெரியவில்லை.

எங்கேயும் தண்ணீர்!

அந்த தண்ணீரில் அவர் தேடிக்கொண்டுப் போக ஆரம்பித்தார்.

அப்போது எங்கிருந்து வந்ததென்றுத் தெரியவில்லை.

அந்த தண்ணீரில் ஒரு ஆலிலை கிடந்தது.

அந்த ஆலிலைக்குப் பக்கத்தில் சென்றார்.

ஒரு சின்னக் குழந்தை அந்த ஆலிலையின் மேல் படுத்திருந்தது!

*"ஆலிலையில் குழந்தை படுத்துக்கொண்டிருக்கிறதே! உருண்டு
விடப்போகிறதே"* என அதனருகில் சென்றார்.

அப்போதுதான் அந்தக்குழந்தை தனது கால் கட்டைவிரலை 
எடுத்து தன வாய்க்குள் சேர்த்துக்கொண்டது.

மார்க்கண்டேய மஹரிஷிக்கு ஏன் அந்தக் குழந்தை அவரைப் 
பார்த்தவுடன் அப்படி செய்ததன்று புரியவில்லை!

பதாரவிந்தேன கராவரவிந்தம்
முகாரவிந்தே விநிவேஷயந்தம்
வடஸ்யப்பத்ரஸ்ஷபுடே ஷயானம்
பாலம் முகுந்தம் மநஸாஸ்மராமி

பாலமுகுந்தனான கண்ணன், எம்பெருமான் தன் சிறு பிஞ்சு 
விரல்களால் தனது கால் கட்டை விரலை எடுத்து திருவாயில் சேர்த்துக் 
கொண்டார்.

எதற்கு?

திருவிக்ரமாவதாரத்திலே இதே திருவடிகளால்தானே இவ்வுலகத்தைத் 
தாவி அளந்தார்?

இப்போது இவ்வுலகத்தை எல்லாம் வயிற்றுள் அடக்கி, அப்போது அளந்த 
வஸ்துக்கள் அனைத்தும் உள்ளே வந்து சேர்ந்துவிட்டதா என்பதை, 
இவ்வுலகத்தை அளந்த அதே திருவடிக்கொண்டு அளந்துப் பார்க்கிறாராம்!

மார்கண்டேய மகரிஷி அந்தக்குழந்தைக்கு அருகில் சென்றார்.

இந்தக் குழந்தை யார்?

இப்படி, அப்படி என்று அசைந்தால் கூட கீழே விழுந்து விடுமே என்று 
கவலையுடன்,

"குழந்தாய்… நீ யார்?" என்றார்.

அந்தக் குழந்தை பேசவில்லை.

தனது கையை மார்பை நோக்கிக் காட்டிற்று.

மார்கண்டேய மகரிஷி இன்னும் அருகில் சென்று அந்தக் குழந்தை கை 
காட்டிய இடத்தில உற்று நோக்கினார்.

அந்த சிறிய திருமேனிக்குள்ளே மஹாலக்ஷ்மி எழுந்தருளியிருந்தார்!

மார்கண்டேய மகரிஷிக்குப் புரிய ஆரம்பித்தது.

இருப்பினும், குழந்தை தண்ணீரில் விழுந்துவிடக் கூடாதே என அதனருகில் 
செல்லும்போது, குழந்தையின் மூச்சுக் காற்றில் வேகமாக இழுக்கப்பட்டு, 
மூக்கின் வழியே மார்கண்டேய மகரிஷி உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே சென்றதும் சுற்றினார்.... சுற்றினார்.

உலகம் முழுவதும் அங்குப் பார்த்தார்!

என்னென்ன நதிகளோ பர்வதங்களோ, அத்தனையும் உள்ளே தரிசித்தார்!

அதைவிட ஆச்சர்யம், அங்கே தன்னையே பார்த்துக்கொண்டார் 
மார்கண்டேய மகரிஷி!

தனது ஆச்ரமத்தையம் பார்த்தார்!

தான் உள்ளே உலகத்தை சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்பதையும் 
பார்த்தார்!

மார்கண்டேய மகரிஷிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"நாம் ஆச்ரம வாசலில் அல்லவா இருந்தோம்? இங்கு எப்படி வந்தோம்? 
நானும் தெரிகின்றேனே! நம் ஆசிரமமும் தெரிகின்றதே! இந்தக்
குழந்தை எங்கிருந்தது?

நாம் இப்போது எங்கிருக்கிறோம்? ஆசிரமம் எங்கிருக்கிறது? 
உள்ளே இருக்கிறதா? அல்லது வெளியில் இருக்கிறதா?

இந்தக் குழந்தை உலகம் முழுக்க உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் 
படுத்துக்கொண்டிருக்கிறதே?

அவ்வளவு பாரத்தை உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் படுப்பது 
சாத்தியமா?

உலகம் முழுக்க உண்ட அந்தக் குழந்தை, தான் படுத்திருக்கும் ஆலிலை 
தளிரை விட்டுவிட்டு மற்றதை உண்டதா?

அல்லது ஆலிலையையும் சேர்த்து உண்டதா?

அப்படி ஆலிலையை உண்டிருந்தால், எதன் மேலே படுத்துக் 
கொண்டிருக்கிறது?"

என்று பலவாறு புரியாமல் இருக்க, இதை கண்டுபிடிக்க வேண்டும் 
என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, குழந்தை வேகமாக வெளி
மூச்சு விட, மூக்கின் வழியே வெளியில் வந்து விழுந்தார்!

உள்ளே பார்த்ததெல்லாம் வெளியிலும் இருக்கிறதா என்ற சந்தேகத்திற்காக, 
தனது ஆஸ்ரமத்தை தேடி சென்றார்.

அங்கு ஆஸ்ரமம் அப்படியே இருந்தது!

வெளியே இருந்ததெல்லாவற்றையும் உள்ளே பார்த்தார்.

உள்ளே இருந்ததையெல்லாம் வெளியேயும் பார்த்தார்!

உடன் அந்தக் குழந்தையிடம் சென்று, திருவடியில் விழுந்து, 
நமஸ்கரித்து "நீங்கள் யார்? எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று கேட்டார்.

அதற்கு அந்தக் குழந்தை, " நானே நாரயணன். லோகத்தையனைத்தையும் 
படைத்தவன் நான். அழித்தவன் நான்" என்று சாதித்தது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லதோர் எழில்
நீல மேனி ஐயோ !

நிறை கொண்டது என் நெஞ்சினையே.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீவைஷ்ணவிசம் முகநூலில் பதிவு செய்தவர் திருமதி ரங்கநாயகி 
அவர்கள்.
-
--------------------------------
தமிழ்’கோரா’-வில் பதிவிட்டவர்
கிருஷ்ணசாமி ராமச்சந்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக