புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 14%
Manimegala
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
11 Posts - 4%
prajai
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
9 Posts - 4%
Jenila
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
4 Posts - 2%
Rutu
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
2 Posts - 1%
jairam
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_m10அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்)


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Tue Oct 18, 2022 12:18 pm

கயிலை மலைவாழ்க் கடவுளே ஈசா!
காமனை எரித்த காலசம் ஹாரா!
மயிலையில் கோவில் கொண்டம கேசா!
மனதிலே தோன்றிய ஐயம் தீர்ப்பாய்!
உனைச்சில கேள்விகள் கேட்க நினைத்தேன்;
உண்மை விளக்கிநீ உதவிட வேண்டும்!
ஒருநாள் நானொரு மங்கையைக் கண்டேன்;
ஒளியிலே அவள்முகம் மின்னுதல் கண்டேன்;
ஆதி சங்கரர் ஆக்கிய பாடலை
அழகிய குரலில் பாடிடக் கேட்டேன்;
இசையும் அவளே அமைத்திருந் தாளெனும்
விசயம் அறிந்ததும் வியப்பினில் ஆழ்ந்தேன்;
கால பைரவா! உன்னட் டகத்தை
குயில்போல் பாடும் அவள்திறம் கண்டேன்.
கோபிகோ பாலம் எனும்பெயர் கொண்ட
கீதம் இசைத்தாள்; அதில்மெய்  மறந்தேன்!
உனைக்கா ணாமல் நானில் லையென
விதையில் லாமல் வேரில் லையென
எழில்மிக அவள்பின் பாடிடக் கேட்டென்;
விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இதுநே ராமல் இந்தப் பிறவியின்
இனிவரும் காலம் முழுவது மாகப்
போயிருந் தாலது மிகமிகக் கொடுமை;
பார்த்தபின் னால்வீண் ஏக்கம் ஏனெனும்
பாடல் வரிகளைத் தொடர்ந்தவள் பாட
பனித்தயென் கண்களில் அருவி வழிந்தது;
நானென் மனதில் நினைத்த எண்ணமே
நங்கையின் பாடலின் பொருளும் ஆனதால்
கடவுளைக் கண்ட பக்தனைப் போலக்
களிப்பிலும் வியப்பிலும் உள்ளம் ஆழ்ந்தது;
அவளைக் காணா திந்தவோர் பிறவியே
முடிந்துபோ யிருந்தால் வாழ்க்கையே வீண்தான்;
மடிந்துபோய் என்னுடல் மண்ணில் புதையுமுன்
மனமெலாம் குளிர அவளைநான் கண்டேன்;
என்னள வெடுத்து நெய்தவோர் ஆடைபோல்
எத்தனை பொருத்தம் எங்களுக் குள்ளே!
இப்படி ஒருத்தி இருக்கி றாளென
இதுவரை எனக்கேன் தெரிய வில்லையோ!
கடவுளே! உந்தன் பரிசவள் என்று
கொஞ்சமும் ஐயமே இன்றி விளங்க
அந்த நொடியிலே அவளது குரலின்
ஆழத் தில்நான் இதயம் தொலைத்தேன்;
முந்திய பிறவியில் பழகிய தொடர்ச்சியால்
வந்தவள் இவளோ என்று வியந்தேன்;
காமனின் கரும்புவில் மலர்க்கணைப் பாய்ச்ச
தாமத மின்றிநான் காதலில் விழுந்தேன்;
ஆனால் இதிலொரு சிக்கல் இருப்பதால்
ஆண்டவ நேவுன் அருளை நாடினேன்;
பதினா றேயப் பெண்ணின் அகவை;
பாவி எனக்கோ வயது நாற்பது;
உலகம் இதனை ஏற்குமோ என்றென்
உள்ளம் வலிக்கவோர் ஐயம் பிறந்தது;
இருவரும் இணைந்தால் இருக்கும் நாளெலாம்
இறைத் தொண்டாற்றி இசையில் நனையலாம்;
இதனை உலகம் ஏற்றுக் கொள்ள
இனிவுனை யன்றி யாரருள் புரிவார்?
காளி பக்தனாம் ராம கிருஷ்ணனைக்
குமரி சாரதை மணந்தது போல,
கடவுள் தூதனாம் முகமது கரத்தைக்
கன்னி ஆயிஷா பிடித்தது போல,
தந்தைப் பெரியார் மணியம் மைதனைத்
திருமணம் செய்து வாழ்ந்தது போல,
சிந்தை கவர்ந்தயென் சின்னக் குயிலுடன்
சேர்ந்துநான் வாழ்வதில் தவறெதும் உண்டா?
மரபுக் கவிதைகள் ஆக்கும் திறமையை
வரமாய் எனக்குநீ அளித்தருள் செய்தாய்;
மெல்லிசை யாலே மகிழ்ச்சியைப் பரப்பும்
மாபெரும் பொறுப்பை அவளுக் களித்தாய்;
கவிதையும் இசையும் இணைந்தால் உலகில்
கலைகள் வளரும்; காவியம் மலரும்;
நாங்கள் இணைந்தால் நாட்டிற் கேபல
நன்மையும் பெருமையும் மேன்மையும் சேரும்;
இதனை உலகம் ஏற்கும் வகையில்
இன்றே நல்ல வழிசெய் வாயா?
இனிமே லாவது எந்தன் வாழ்வின்
தனிமை போகத் துணைசெய் வாயா?
உன்மேல் வைத்த நம்பிக் கையினால்
உலகம் பழிப்பதைப் பொருட்படுத் தாமல்,
என்னவள் சிந்தும் இசையினில் களித்தேன்;
என்னிசைத் திறனும் அதனால் வளர்ந்தது;
கண்மணி அவளை நினைக்க நினைக்க
கவிதை மழையாய்க் கொட்டித் தீர்த்தது;
வெண்பா விருத்தம் எனப்பல பாக்கள்
வெள்ளமாய்ப் பெருகித் தமிழ்க்கடல் சேர்ந்தது;
இருந்த சஞ்சலம் போகா மல்நான்
வருந்தி வாய்க்கு வந்ததைப் பேசினேன்;
காதலைச் சொல்லும் வழிதெரி யாத
கவலையால் பலர்முன் அழுது புலம்பினேன்;
மதுவை நாடி மயக்கம் அடைந்ததால்
புதுப்புது சோதனை வாழ்வில் வந்தன;
பழியும் அவமா னங்களும் என்னைப்
புரட்டி யெடுத்துக் கசக்கிப் பிழிந்தன;
எந்தன் நோக்கம் என்னவென் றறிவாய்!
எந்தன் பக்தியின் ஆழமும் அறிவாய்!
கலைகளை வளர்க்கும் குறிக்கோ ளுடன்நான்
கனவுகள் சுமந்து திரிவதும் அறிவாய்!
எல்லாம் அறிந்தும் இத்தனை சோதனை
என்னை அண்டிட விடுவது முறையோ!
அல்லல் படுமுன் அடியவர் துயரை
அழிப்பது தானே உனதுப ழக்கம்?
அன்பே சிவமாய் ஒளிரும் ஜோதியே?
அடைக்கலம் நீயே! நல்வழி காட்டு;
உன்னை முழுவது மாக நம்பினேன்;
உதவி நாடியுன் காலடி பிடித்தேன்;
என்னை நீகை விட்டுவி டாதே!
இனியும் எனைநீ சோதிக் காதே!
அண்ணா மலையில் தோன்றிய நெருப்பே!
ஆனைக் காவில் வழியும் நீரே!
காஞ்சி புரத்து நெல்வயல் மண்ணே!
காள கத்தியில் வீசும் காற்றே!
சிதம்பர வானின் நீல நிறத்தைச்
சந்தனம் போலக் கழுத்தில் பூசிய
சம்போ! சிவனே! சண்முகன் தந்தையே!
சரணம் அடைந்தேன்; எனைக்காப் பாற்று!



அன்புடன்
பி.சண்முகம்
https://www.youtube.com/c/tamilmanam37

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக