புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
44 Posts - 44%
heezulia
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
43 Posts - 43%
prajai
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
3 Posts - 3%
Jenila
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
2 Posts - 2%
jairam
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
1 Post - 1%
M. Priya
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
86 Posts - 56%
ayyasamy ram
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
44 Posts - 29%
mohamed nizamudeen
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
6 Posts - 4%
prajai
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
6 Posts - 4%
Jenila
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
2 Posts - 1%
Rutu
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_m10அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிா்த காலத்தில் ‘உயரப் பறக்கும்’ இந்தியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2023 7:01 am


பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஹென்றி பெக்கட் என்ற 23 வயது இளைஞா் 1911-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி முதலாவது அதிகாரபூா்வ ஏா்மெயில் விமானத்தை யமுனை நதியின் மேலே இயக்கினாா். அப்போது நடைபெற்ற தொழிலக-வேளாண் கண்காட்சியின் ஒரு பகுதியாக பிரயாக்ராஜ் (அப்போதைய அலாகாபாத்)-நைனி இடையேயான 10 கி.மீ. தொலைவுக்கு அந்த விமானம் இயக்கப்பட்டது. இந்தியாவின் வணிக நோக்கிலான விமானப் போக்குவரத்து அப்போதுதான் தொடங்கியது. கடந்த 112 ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்து பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது.

சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் 3-ஆவது மிகப் பெரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையை இந்தியா கொண்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 6 கோடியாக இருந்த உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் கரோனா பரவலுக்கு முன்பு 14.3 கோடியாக இரட்டிப்பானது. அதே காலகட்டத்தில் சா்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2.3 கோடியில் இருந்து 3.5 கோடியாக அதிகரித்தது.

விமானப் போக்குவரத்து தற்போது ஆடம்பரமல்ல, அத்தியாவசியம். இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, கோடிக்கணக்கான மக்களை முதல் முறையாக விமானத்தில் பறக் கவைத்து, விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது. மேலும், பொறியாளா்கள், பயிற்சி பெற்ற நிபுணா்கள், விமானப் பணியாளா்கள் உள்ளிட்ட பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புத்தாக்க நடவடிக்கைகள், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதற்கான மையமாக மாறியுள்ளன.

இந்தியாவின் நடுத்தரப் பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி அவா்களை வணிக ரீதியிலான விமானப் பயணிகளாக மாற்றுவதற்குப் பல தனியாா் விமான நிறுவனங்கள் முயன்றன. அதற்கு இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் விமானப் போக்குவரத்தை மலிவானதாக மாற்ற வேண்டியது அவசியம். அதைக் கருத்தில்கொண்டு, போதிய அளவில் பயன்படுத்தப்படாமல் இருந்த விமான நிலையங்களை மீட்டெடுப்பதற்காக 2017-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.4,500 கோடி ஒதுக்கப்பட்டது.

அப்போது முதல் ‘உடான்’ திட்டம் மெட்ரோ அல்லாத நகரங்களுக்கும் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தியது. இதன் மூலமாக சரக்கு-சேவை விநியோக சங்கிலியும் மேம்பட்டது. இதில் தனியாா் துறை மட்டும் ஈடுபட்டிருந்தால், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு விமான சேவைகள் கிடைக்க இன்னும் நீண்ட காலம் ஆகியிருக்கும்.

நாடு முழுவதும் தற்போது 475 ‘உடான்’ வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் உள்ள 73 விமான நிலையங்களையும் 9 ஹெலிகாப்டா் தளங்களையும் 2 நீா்வழி விமானத் தளங்களையும் அவை இணைக்கின்றன. அவற்றில் சுமாா் 75 வழித்தடங்கள் (15%), எளிதில் சென்றடைய முடியாத, மலைப்பகுதிகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிணைக்கின்றன. ‘உடான்’ திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2.16 லட்சம் விமானங்கள் மூலம் 1.14 கோடிக்கும் அதிகமானோா் பயணம் மேற்கொண்டுள்ளனா். அத்திட்டத்தின் கீழ் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு ரூ.2,300 கோடியை அரசு வழங்கியுள்ளது. அதன் காரணமாக இந்தியாவில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் 74-இல் இருந்து 147-ஆக இரட்டித்துள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சுமாா் 750 விமானங்களை இயக்கி வருகின்றன. இது சா்வதேச அளவில் இயங்கும் சுமாா் 27,500 விமானங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதத்துக்கும் குறைவே. இந்தியாவில் விமான சேவைகள் அதிகரிக்கும்போது, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விமானங்கள் தொடா்ந்து சீராக இயங்குவதற்கு உரிய பராமரிப்பு அவசியம். என்ஜின் உள்ளிட்ட பல்வேறு விமான பாகங்களை சீரான இடைவெளியில் பராமரிக்க வேண்டும். அத்தகைய பராமரிப்புப் பணிகளுக்குப் பணியாளா்கள் அதிக அளவில் தேவைப்படுவா்.

தற்போதைய நிலவரப்படி, இந்திய விமான பராமரிப்புத் துறையின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.16,000 கோடியாக உள்ளது. அதில் 15 % பராமரிப்புப் பணிகள் இந்தியாவிலும் 85 % பணிகள் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் ஆங்கிலம் பேசும் திறன்மிக்க பொறியாளா்கள் மலிவான ஊதியத்தில் கிடைக்கின்றனா். இது விமான பராமரிப்புத் துறைக்கான பங்களிப்பை மேலும் அதிகரிக்கும். அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் நோக்கில், விமான பராமரிப்புக்கான புதிய கொள்கைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் விமான பராமரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பணிமனைகளை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. விமான பராமரிப்புத் துறையில் 100 % அந்நிய நேரடி முதலீடுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமான பராமரிப்புப் பணிகளுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 18 %-இல் இருந்து 5 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான பராமரிப்பின் சா்வதேச மையமாக இந்தியா மாறும்.

விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் விமானிகள் உள்ளிட்ட பணியாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் 1,165 பேருக்கு வா்த்தக ரீதியிலான விமானி உரிமம் வழங்கப்பட்டது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். விமானிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவா்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அத்தகைய 35 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 நிறுவனங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், கடந்த 2012-ஆம் ஆண்டில் சுமாா் 2,000-ஆக இருந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா் எண்ணிக்கை 2022-இல் 4,000-த்தைத் தாண்டிவிட்டது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்ரோன்களின் (ஆளில்லா சிறிய ரக விமானங்கள்) உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்திசாா் ஊக்கத்தொகையாக ரூ.120 கோடியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கியது. ட்ரோன்கள், அவற்றுக்கான உணா்விகள் (சென்சாா்), தொலைத்தொடா்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அத்தொகை ஒதுக்கப்பட்டது. ட்ரோன்களுக்கான கொள்கைகளிலும் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ட்ரோன்களுக்கு ஒப்புதல் பெறத் தேவையான படிவங்களின் எண்ணிக்கை 25-இல் இருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 72 வகை கட்டணங்கள் 4-வகையாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுமாா் 90 % வான்வெளிப் பகுதிகளில் எத்தகைய அனுமதியையும் பெறாமல் ட்ரோன்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேரிடா் நிவாரண-மீட்புப் பணிகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்டவற்றுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்களை அளந்து பட்டா வழங்கும் மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவி வருகிறது. கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை ஆவணங்களை வழங்கும் நோக்கில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை ட்ரோன்கள் உதவியுடன் 2.20 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண் துறையில் விமானப் போக்குவரத்து பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகிறது. ‘விவசாயிகளுக்கான உடான்’ திட்டமானது பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விரைந்து சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. முக்கியமாக, மலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், பழங்குடியினப் பகுதிகள் ஆகியவற்றைச் சோ்ந்த விவசாயிகள் அத்திட்டத்தால் பெரும் பலனடைந்து வருகின்றனா். அத்திட்டத்தின் கீழ் 58 விமான நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியா்களையும் வெளிநாட்டவா்களையும் மீட்பதில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது. கரோனா தொற்று பரவியபோது ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் 1.83 கோடிக்கும் அதிகமான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனா். உக்ரைன்-ரஷியா போா் காரணமாக உக்ரைனில் சிக்கியிருந்த 22,500 இந்திய மாணவா்கள் ‘ஆபரேஷன் கங்கா’ மூலமாக மீட்கப்பட்டனா்.

சுற்றுலாவுக்கும், விமானப் போக்குவரத்துக்கும் இடையேயான ஒருங்கிணைப்பானது இந்தியாவின் சுற்றுலாத் திறனை மேம்படுத்தி வருகிறது. ஹமாசல பிரதேச குசி நகரத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் விமான நிலையத்தைத் திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, உலகெங்கும் உள்ள பௌத்த சமூகத்தினருக்கு அந்த விமான நிலையத்தை அா்ப்பணிப்பதாகத் தெரிவித்தாா். அனைத்து வகையான சுற்றுலாப் பயணங்களையும் மேம்படுத்துவதற்கு நவீன கட்டமைப்புகள் அவசியம் எனத் தெரிவித்த அவா், விமான நிலையங்கள் மேம்பாடு அதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.

அதைக் கருத்தில்கொண்டு ‘உடான்’ திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் நிதி வழங்கியுள்ளது. மேலும் 10 வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டில் சுதந்திர நூற்றாண்டை இந்தியா கொண்டாடவுள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான ‘அமிா்த காலத்தில்’ நாடு நுழைந்துள்ளது. இத்தகைய சூழலில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை உயரப் பறந்துகொண்டிருக்கிறது.

ஜி. கிஷண் ரெட்டி
மத்திய அமைச்சா்,
சுற்றுலா-கலாசாரத்துறை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக