புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_m10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10 
21 Posts - 66%
heezulia
மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_m10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_m10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10 
63 Posts - 64%
heezulia
மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_m10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_m10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_m10மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 5:36 pm



மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் தங்களால் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

“கொள்கைக் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, மனுதாரர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகினால் அது சரியாக இருக்கும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தலைமை நீதிபதி தனது உத்தரவில் கூறி, திரிபாதி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தார்.

இந்த மனுவை நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று வேலை வழங்குபவர்களை கட்டாயப்படுத்தினால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களை தடுக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தது.“இந்த விவகாரம் கொள்கை தொடர்புடையது என்பதால் நாங்கள் அதனை கையாளவில்லை ” என்று உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவில் தெரிவித்தது.

மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கை
மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது மாதாந்திர விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

தனது மனுவில், மகப்பேறு காலத்தின் கடினமான கால கட்டத்தில் இருக்கும் பெண்களை கவனித்துக் கொள்ள சட்டத்தில் அனைத்து விதிகளும் இருந்தும், மகப்பேறு காலத்தின் முதல் கட்டமான மாதவிடாய் காலம் தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிபிசியிடம் பேசிய சைலேந்திர மணி திரிபாதி, இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார்.

திரிபாதி தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவின் நகல் பிபிசி-க்கு கிடைத்தது. அதில், மகப்பேறு என்று அழைக்கப்படும் மனித உயிர்களை உருவாக்கும் சிறப்புத் திறன் படைத்தவர்கள் பெண்கள் மட்டுமே.

மாதவிடாய், கர்ப்பம், கருச்சிதைவு என மகப்பேறுவின் பல்வேறு நிலைகளிலும் ஏராளமான மனம் தொடர்பான, உடல் தொடர்பான இன்னல்களுக்கு பெண்கள் உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூகம், சட்டமன்றம் ஆகியவை இந்த விவகாரத்தில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியாவில் பிகார் மட்டுமே கடந்த 1992ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“1912 ஆம் ஆண்டில், கொச்சின் சமஸ்தானத்தின் (தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம்) திருப்புனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளி, மாணவிகள் ஆண்டுத் தேர்வின் போது 'மகப்பேறு விடுமுறை' எடுக்கவும் தேர்வை பின்னர் எழுதிக்கொள்ளவும் அனுமதி அளித்தது,” என்றும் தனது மனுவில் சைலேந்திர மணி திரிபாதி கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 3:00 pm

மாதவிடாய் வலி: பெண்களுக்கு கட்டாயம் விடுப்பு வழங்கப்பட வேண்டுமா?


மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் கருத்தில் கொண்டு ஸ்பெயினில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

கூடவே பெண்களுக்கு அளிக்கப்படும் மூன்று நாட்கள் விடுமுறையை ஐந்து நாட்களாக மாற்றும் விருப்பத்தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா அங்கீகரிக்கப்பட்டது.

பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான பல உரிமைகள் ஸ்பெயினில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இது ஒரு முக்கியமான முடிவு.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் ஐரோப்பாவின் முதல் நாடு ஸ்பெயின்.

இந்த உரிமைகள் இல்லாமல் பெண்கள் முழு குடிமக்கள் அல்ல என்றும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெறும் விடுமுறைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் ஸ்பெயின் அமைச்சர் ஐரீன் மோன்டெரோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாதவிலக்கு ஏற்படும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வலியை அனுபவிக்கிறார்கள். தங்களின் தினசரி செயல்பாடுகளைச் செய்வதே கடினமாக இருக்கும் அளவிற்கு சிலருக்கு வலி கடுமையாக இருக்கிறது என்று அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துக்கல்லூரியின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 3:01 pm

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?


ஸ்பெயினின் இந்த முடிவு மிகவும் முக்கியமானதாகவும், முற்போக்கானதாகவும் கருதப்படுகிறது.

அதே சமயம் இந்தியாவில் அப்படியொரு வசதியை வழங்க முடியுமா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்கேற்பு சுமார் 18% என்றும் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கும் வசதி கொண்டுவரப்பட்டால் அதன் மீது தாக்கம் ஏற்படும் என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.

பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இதை ஒரு கொள்கை விவகாரம் என்று கூறியது.

இதுபோன்ற முடிவுகள் பெண் ஊழியர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்ய மித்ரா தெரிவித்தார்.

"தனியார் நிறுவனத்தில் பெண்கள் விடுப்பு கேட்டால், நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை கொடுக்கத் தயங்கும். அது பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்," என்று சத்ய மித்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி இந்த வாதத்தை ஏற்க மறுத்தார். மகப்பேறு காலத்தில் பெண்களை கவனித்துக் கொள்ள சட்டத்தில் எல்லா விதிகள் இருந்தும், மகப்பேறுக்கு முந்தைய கட்டமான மாதவிடாய், தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தால் கவனிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

”பல நாடுகளில் பெண்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் நான் கூறினேன். மறுபுறம், பிகார் மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கும் ஏற்பாடு 1992 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகுமாறு நீதிமன்றம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 3:02 pm

இந்த விவகாரம் தொடர்பான வெவ்வேறு கருத்துக்கள்


" மகப்பேறு விடுப்பு கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை கொடுக்கத்தயங்குகின்றன. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலான வேலைகளை செய்யவே பெண்கள் விரும்புகின்றனர் என்ற தவறான எண்ணமும் உள்ளது,” என்று ஹைதராபாத்தில் உள்ள ஷாஹீன் மகளிர் வளம் மற்றும் நலச் சங்கத்தின் செயல்பாட்டாளர் ஜமீலா நிஷாத் கூறினார்.

"ஆனால் அது தவறு. ஏனென்றால் இப்போதெல்லாம் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஷிப்டிலும் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் சமத்துவ விஷயத்தில் அவர்கள் ஆண்களைவிட இப்போதும் பின்தங்கியே இருக்கிறார்கள் என்று சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவருமான ரஞ்சனா குமாரி சுட்டிக்காட்டினார்.

பாலின சமத்துவம் பற்றிய பேச்சு உள்ளது. ஆனால் அது சமூகத்தில் உண்மையிலேயே உள்ளதா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

"முதலில் பெண்களுக்கு வேலை கொடுங்கள், நாடாளுமன்றத்தில் சமத்துவம் கொடுங்கள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சம பங்கு வகிக்க வேண்டும். சமூகத்தில் சமத்துவம் இருந்தால் மகளிர் உரிமைகள் பற்றி யாரும் பேசக்கூட மாட்டார்கள். ஆனால் முதலில் பெண்களும் ஆண்களும் ஒரு நிலைக்கு கொண்டு வரப்படவேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

மறுபுறம் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத் துறையின் தலைவர் மான்வேந்திர கெளர் வேறொரு வாதத்தை முன்வைக்கிறார்.

"கிட்டத்தட்ட 90 சதவிகித பெண்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். இதன் பலன் அவர்களுக்குக்கிடைக்குமா? இந்த பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளோ, சம ஊதியமோ அல்லது வேறு எந்த பலனோ கிடைப்பதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த மாநிலங்கள் முன்முயற்சி எடுத்துள்ளன?


மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்கும் வசதியை அமல் செய்த முதல் மாநிலம் பிகார்.

1992 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தார். பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்க அவர் அனுமதி வழங்கினார்.

கேரள மாநிலத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள எல்லா பல்கலைக் கழகங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையில், பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறும் வகையில், தனியார் உறுப்பினர் மசோதா கொண்டு வர உள்ளதாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஹிபி ஈதன் கூறினார்.

முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நினாங் எரிங், 2017ஆம் ஆண்டு மக்களவையில் மாதவிடாய்ப் பலன் என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த மசோதா ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றாலும் மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் மாநிலத்தில் இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

"பெண்களுக்கு இதுபோன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் குறைமதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்று சில மகளிர் அமைப்புகள், என்னிடம் தெரிவித்தன. ஆனால் உண்மை அதுவல்ல. மாதவிடாய் காலத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டாலும்கூட பெண்கள் வேலைக்கு திரும்பும்போது அதிக உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள்,” என்றார் அவர்.

”காரணமே இல்லாமல் பெண்கள் விடுப்பு எடுப்பதாகத் தோன்றினால், ஸ்பெயினில் செய்யப்பட்டுள்ளபடி, அதிகப் பிரச்சனை உள்ள பெண்கள் மருத்துவச் சான்றிதழ் கொடுத்து விடுப்பு எடுக்கலாம்,” என்று ரஞ்சனா குமாரி கூறினார்.

எந்த நாடுகளில் பெண்களுக்கு இந்த வசதி உள்ளது?


ஆசியாவைப் பற்றிப்பேசினால், மாதவிடாய் காலத்தில் வழங்கப்படும் விடுப்பு, தொழிலாளர் நலச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே நாடு ஜப்பான்.

1947ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு இதுபோன்ற விடுப்பு வழங்குவதற்கான விதிமுறை அந்த நாட்டில் உள்ளது. இந்தோனேஷியா 1948 ஆம் ஆண்டு பெண்களுக்காக இத்தகைய கொள்கையை கொண்டு வந்தது.

மாதவிடாயின் போது ஒரு பெண்ணுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அவரை வேலை செய்ய வைக்க முடியாது என்றும், இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த நாடுகளில் கூறப்படுகிறது.

இது தவிர பிலிப்பைன்ஸ், ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பெண்களும் மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், தென் கொரிய அரசு 1953 இல் அத்தகைய விதிகளை கொண்டு வந்தது.

இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.

பெண்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். எனவே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வருமாறு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக மகளிர் உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகள் கூறுகின்றன.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 01, 2023 5:30 pm

ஜமீலா நிஷாத் கூறுகின்ற வாதமும்,

மன்வேந்திர கவுர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக