புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
83 Posts - 43%
prajai
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
6 Posts - 3%
Jenila
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
jairam
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
kargan86
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
10 Posts - 4%
prajai
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
8 Posts - 3%
Jenila
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
3 Posts - 1%
jairam
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_m10கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 3:05 pm

கோணங்கி பாலியல் குற்றச்சாட்டு  Images?q=tbn:ANd9GcRsDiql_kXF1L9ZnxlzC2-zAXff0khGp4wkErfAr6WzE59bNUge

எழுத்தாளர்கள் அல்லது பிரபலங்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள், அது சார்ந்த வம்புகளில் நான் இன்று வரை கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. முதன்மைக் காரணம் அன்றன்றைய வம்புகளில் ஈடுபடுவதில்லை என்பது. இரண்டாவது காரணம், நான் அதில் என் கண்டனத்தை தனியாகத் தெரிவிக்க வேண்டியதில்லை, என் நிலைபாடு அனைவருமறிந்ததாகவே இருக்கும் என்பது. அதோடு, நான் தொடர்பு கொண்டிருக்கும் நபர்கள் மேல் அக்குற்றச்சாட்டுகள் வந்ததில்லை என்பதும் காரணம்.



ஆனால் அண்மையில் மூன்று நிகழ்வுகள்.



ஒன்று ,இருபதாண்டுகளுக்கு முன் என் நண்பராக இருந்தவரும் சொல்புதிது இதழுடன் தொடர்புகொண்டிருந்தவருமான செந்தூரம் ஜெகதீஷ் ஒரு பெண்ணிடம் பாலியல் மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு.

செந்தூரம் ஜெகதீஷுக்கு நான் பலவகையிலும் உதவிசெய்ததுண்டு. அவருக்கு வேலை வாங்கிக்கொடுத்ததும் நான்தான். என் சிபாரிசால் வெங்கட் சாமிநாதன் மற்றும் திலீப்குமார் இருவரும் என்.டிடி.வி தலைவர் ஜெனிஃபர் அருளிடம் பரிந்துரை செய்தார்கள். துணிக்கடை ஏஜெண்ட் ஆக இருந்த அவர் ஊடகவியலாளராக ஆனார் -போதிய கல்வித்தகுதி இல்லாதபோதிலும். அது நட்பு கருதி நான் செய்த உதவி.

ஆனால் செந்தூரம் ஜெகதீஷுடன் எனக்கு இருபதாண்டுகளாக அணுக்கமேதுமில்லை. என் வாசகர், நண்பராக அவர் இருந்த காலகட்டத்தில் அவருடைய ஆளுமையில் ஓர் அசட்டுத்தனத்தை மட்டுமே நான் கண்டிருக்கிறேன். அதை ஒரு நண்பராக நான் பொருட்படுத்தவுமில்லை. நானும் இன்னொருவகை அசடுதான். ஆனால் அவரது அந்த அசட்டுத்தனமே தீமையின் விளைவை அளிக்க ஆரம்பித்தபோது முழுமையாக விலகிக்கொண்டேன்.

செந்தூரம் ஜெகதீஷின் பிற்கால மாற்றங்கள் எனக்கு தெரியாது. அவர் மிகக் கடுமையாக என்னைப்பற்றி எழுதுகிறார் என்று சொல்லி அறிந்திருக்கிறேன். எதிர்வினையாற்றியதில்லை. அப்பாலியல் குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் வெளிவந்ததை சுட்டிக்காட்டியிருந்தனர். என் பதில் இதுவே, இருபதாண்டுகளுக்கு முன் நானறிந்த செந்தூரம் ஜெகதீஷ் அல்ல அவர். என் பார்வையில் இலக்கியவாதி அல்லது இலக்கியவாசகர் என்னும் இரு தகுதிகளுமில்லாத, பலவகை உளச்சிக்கல்கள் கொண்ட எளிய மனிதர் அவர். அதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.

இரண்டாவதாக, இன்று மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பற்றிய ஓரினச்சேர்க்கைக் குற்றச்சாட்டு சதீஷ்குமார் என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மணல்வீடு ஹரிகிருஷ்ணனை என் தளத்தில் நான் அறிமுகம் செய்திருக்கிறேன். நாட்டாரியல் சார்ந்து அவர் பணியாற்றுகிறார் என்பதனாலும், நாஞ்சில்நாடனின் சிபாரிசினாலும்தான் அதைச் செய்தேன். என் வாசகர்கள் பலர், குறிப்பாக வெளிநாட்டினர், அதன்பொருட்டு அவருக்கு உதவியும் செய்தனர்.

ஆனால் பின்னர் அவர் மேல் பல குற்றச்சாட்டுக்கள் நண்பர்களால் சொல்லப்பட்டன. நிதி ஒழுங்கு சார்ந்தவை. மிகத்தீவிரமானவை. ஆகவே அவரைப் பற்றிய எச்செய்தியையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் வெளியிடவில்லை. நிதியளிப்பவர்களுக்கும் அவருக்குமான சிக்கல் அது. அவரை நான் இலக்கியவாதியாகவோ இதழாளராகவோ எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவராக கருதவுமில்லை.

மூன்றாவதாக, இப்போது கோணங்கி மீது ஓரினச்சேர்க்கைக்கு தூண்டினார் என்று குற்றச்சாட்டுக்கள் பலரால், வெளிப்படையாக, இணையத்தில் முன்வைக்கப்படுகின்றன. கோணங்கி முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு வேண்டியவராக இருந்தார். அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட இயல்பின் எந்த ஒரு சான்றும் அவரிடம் நான் கண்டதில்லை. நேற்று காலைவரை எவரும் என்னிடம் ஒரு சொல்கூடச் சொன்னதில்லை. பவா செல்லத்துரையிடம் பேசினேன். அவருக்கும் ஒன்றும் தெரியாது. அவரும் அதிர்ந்துபோயிருக்கிறார்.



அப்படியென்றால் இக்குற்றச்சாட்டை எப்படி எடுத்துக் கொள்வது? இளங்கோ கிருஷ்ணன் அவருக்கு முன்னரே தெரியும் என இப்போது சொல்கிறார். கடலூர் சீனு அவருடைய நண்பருக்கு இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டதாக இப்போது குறிப்பிடுகிறார்.மேலும் பலர் ஆம் என்கிறார்கள். எனக்கு இவை முற்றிலும் புதிய செய்திகள். என்னிடம் இவை பற்றி எவரும் உரையாடுவதில்லை. அல்லது, இவை பற்றிய உரையாடற்களத்திற்கு வெளியே நானே என்னை வைத்திருந்திருக்கிறேன்.

ஆனால் பெரிய அதிர்ச்சி ஏதுமில்லை. கலைஞனின் மனம் இருளுக்குள்ளும் ஒளிக்குள்ளும் மாறிமாறிச் செல்வது. அவனால் கட்டுப்படுத்தப்பட இயலாதது. நுண்ணுணர்வு என்பது நேர்நிலையிலும் எதிர்நிலையும் செயல்படுவதுதான். பாலுணர்வு என்பதுக் கலைஞர்களிடம் ஒரு நோய்க்கூறாகவே ஆகக்கூடும். அவ்வியல்பை கருத்தில்கொண்டே அவனை, அவன் கலையை அணுகவேண்டும். அதற்குமேல் சொல்ல ஏதுமில்லை.

நான் ஓர் எழுத்தாளனாகவே இதைச் சொல்கிறேன். என் அக- புற நடத்தையை இதுவரை முற்றிலும் கட்டுப்படுத்தியே வந்துள்ளேன். பொதுக்களத்தில் ஒழுக்க எல்லைகளை நான் கறாராகப் பேணுவது என் படைப்பியக்கம் அதனால் பாதிக்கப்படலாகாது என்பதனால்தான். ஆனால் நான் ஒழுக்கவாதி அல்ல. ஒழுக்கத்தை மாறாநெறியாக நான் முன்வைப்பதுமில்லை. ஆகவே இப்போது பாய்ந்து குதறும் கும்பலில் நான் சேரப்போவதில்லை.

கோணங்கிமேல் இளைஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மை என்றால் வலுவான பொதுச்சமூகக் கண்டனத்திற்குரியது. முதிரா இளைஞர்களிடம் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அது சட்டப்படி குற்றமும் கூட. ஆகவே ஒரு சமூக உறுப்பினராக அச்செயலை கண்டிக்கிறேன். இளைஞர்கள் இனிமேல் அவரிடம் கவனமாக இருக்கலாம்.

கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்.

நான் கோணங்கியை அவருடைய தொடக்ககாலச் சிறுகதைகளுக்காக முதன்மையான இலக்கியக் கலைஞராகவே மதிக்கிறேன். இந்த விவாதத்தால் அம்மதிப்பீடு மாறப்போவதில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் மௌனியும் நகுலனும் தன்னிடம் அவ்வாறு நடந்துகொண்டதாகவும், அது கலைஞர்களின் வழிமுறை என்றும் கோணங்கி தன்னிடம் சொன்னதாக குற்றம் சாட்டுபவர் ஒருவர் எழுதியிருக்கிறார். அவ்வாறு சொல்லியிருந்தால் அது அந்த தேவையின்பொருட்டு சொல்லப்பட்டது. ஆனால் இந்த வம்புகள் வழியாக அது நினைவில் நிறுத்தப்பட்டுவிடலாம். அது முழுக்கவே பொய்யானது. அதை முன்வைக்கவேண்டிய கடமை உண்டு என்பதனாலேயே இதை எழுதுகிறேன்.

நகுலனை எனக்கு நன்றாகவே தெரியும். நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு அவர் மிக அணுக்கமானவர். அவர்மேல் அத்தகைய பேச்சு எதுவும் எழுந்ததில்லை. அவருக்கு பாலியல் சார்ந்த மிகத்தீவிரமான உடற்குறைபாடுதான் இருந்தது. வேறுபல உடற்சிக்கல்களும் குடிப்பழக்கமும் இருந்தன. அவற்றை நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியோர் புனைவுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்

மௌனியின் குணச்சிக்கல்கள் பற்றி பலரும் எழுதியுள்ளனர். தாசிகளுடனான உறவு, சாராயம் குடிக்கும் வழக்கம், கூடவே சாதிமேட்டிமைத்தனம் ஆகியவை அவரை வழிபட்ட வெங்கட் சாமிநாதன் முதல் அவரை எதிர்த்த பிரமிள் வரை பலரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் பாலியல் சார்ந்து இப்படி ஒரு சித்திரம் பதிவானதில்லை. அவரை மிக அணுக்கமாக அறிந்த திலிப்குமார் போன்றவர்கள்கூடச் சொன்னதில்லை.

மேலும் மௌனி 1907ல் பிறந்தவர். கோணங்கி அவரை முதன்முதலில் சந்திப்பது தன் இருபத்தியாறாவது வயதில் ,1984 ல். அதற்கு அடுத்த ஆண்டுதான் நான் கோணங்கியைச் சந்தித்தேன். சேர்ந்து மௌனியை சந்திக்கச் செல்லலாம் என கோணங்கி என்னை அழைத்தார். அப்போது மௌனிக்கு 77 வயது. அடுத்த ஆண்டு, 1985ல் மௌனி மறைந்தார்.

மௌனியின் முதுமை மிகத்துயரமானது. 1982ல் அவருடைய இரு மகன்கள் விபத்தில் மறைந்து இன்னொரு மகன் மனநோயாளியாகியிருந்தான். மௌனியின் கண் பார்வையும் பெரும்பாலும் போயிருந்தது. நரம்புச்சிக்கலால் அவரால் எழுந்து நடமாடமுடியவில்லை என்றும், கைகளை ஊன்றி நண்டுபோல தவழ்ந்தே வீட்டுக்குள் நடமாடினார் என்றும் திலீப்குமார் சொன்னார். (மௌனியுடன் கொஞ்சதூரம் என்னும் கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறார்)

நகுலனை கோணங்கி சந்திப்பது 1987 ல் குற்றாலம் கவிதைமுகாமில், அதன்பின்னரே அவரை தேடிச்சென்று இல்லத்தில் சந்தித்தார். அப்போது நகுலனுக்கு வயது 66 வயது. அதற்கு எட்டாண்டுகளுக்கு முன்னரே நகுலனுக்கு நரம்புத்தளர்ச்சியும் நினைவிழப்பும் தொடங்கியிருந்தது. பின்னர் அது அல்ஷைமர் நோயாக மாறியது. அவருடைய அந்த மறதிநிலையைத்தான் ’மிஸ்டிக் கிழவன்’ என்றெல்லாம் கோணங்கி போன்றவர்கள் ’ரொமாண்டிஸைஸ்’ செய்தார்கள். அவர்களால் அதை நோய் என உணர முடியவில்லை.

நான் நகுலனை 1985ல் என் இருபத்து மூன்றாவது வயதில் ஆ.மாதவனுடன் சென்று சந்தித்தேன். பலமுறை அவருக்கு பிடித்தமான மதுக்குப்பியுடன் சென்று பார்த்துள்ளேன். என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 1987ல் நகுலனால் சீராக எந்த முகத்தையும் நினைவுகூர முடியவில்லை. இளமை முழுக்க அவருடன் அணுக்கமாக இருந்த நாஞ்சில்நாடனையே நீ யார் நீ யார் என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார். அவரால் இயல்பாக நடமாட முடியாது. கைகால்களில் கடுமையான நடுக்கமும், நாக்குழறலும் இருந்தன.

ஆகவே இவ்விரு எழுத்தாளர்கள் பற்றியும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலரால் முன்வைக்கப்படும் அவதூறுகள் அருவருப்பானவை. இருவருமே மிக அபூர்வமான அறிவுத்திறன் கொண்டவர்கள். மௌனி ஒரு கணிதமேதை என்றே சொல்லத்தக்கவர். இசைவிற்பன்னர். நகுலனின் ஆங்கில அறிவு பிரமிப்பூட்டுவது. ஆனால் இருவரின் வாழ்க்கையும் இருவகையில் சிதைவுண்டது. இருவருமே இயல்பான வாழ்க்கை அமைந்திருந்தால் மிகப்பெரிய சமூகநிலைக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள். எழுத்தாளர்களாக எவ்வளவு மதிக்கத்தக்கவர்களோ, மனிதர்களாக அவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்.

மௌனி தொடர் பொருளியல் வீழ்ச்சிக்காளானார். அதன்பின் அவருடைய மொத்த வாழ்க்கையும் படிப்படியான சரிவுதான். நகுலனுக்கு அவருடைய ஐந்து வயதில் முதல் வலிப்பு நோய் வந்தது. மூளையில் உயிர்மின்சாரம் அதிகமாவதன் விளைவு. அன்றெல்லாம் அதற்குச் சரியான மருந்துகள் இல்லை. அவர் அம்மா அவரை தன் அருகிலேயே வைத்துக்கொண்டு வளர்த்தார். வலிப்புநோய் அடிக்கடி வந்து கடைசிவரை நீடித்தது. அதன்விளைவான உடற்குறையுடன் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்தமையால் உருவான ஆளுமைக்குறுகுதலும் அவருக்கு இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கவும், இலக்கிய முன்னோடிகளையே சிறுமைசெய்யவும் சமூகவலைத்தளக் கும்பல் ஒன்று முயல்கிறது. ஆகவேதான் இதை எழுதினேன். இதற்குமேல் விவாதமோ உரையாடலோ இல்லை.

எழுத்தாளர் ஜெயமோகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 3:09 pm

எழுத்தாளர் கோணங்கி மீது பாலியல் குற்றச்சாட்டு: மீண்டும் எழுந்த 'மீ டூ' விவாதம்


தான் கல்லூரி மாணவராக இருந்தபோது தனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி எழுத்தாளர் கோணங்கி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக, கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் இரு தினங்களுக்கு முன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது, இலக்கிய உலகில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் 'மீ டூ' குறித்த விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

'மதினிமார்கள் கதை' சிறுகதை தொகுப்பு, 'பாழி', 'பிதிரா' உள்ளிட்ட நாவல்களுக்காக அறியப்படுபவர் எழுத்தாளர் #கோணங்கி. கார்த்திக் ராமச்சந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுத்தாளர் கோணங்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தனக்கு கோணங்கியின் புத்தகங்கள் மற்றும் அவருடைய தம்பி முருகபூபதியின் 'மணல்மகுடி' நாடகக் குழு மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதனை பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்காக என தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து கோணங்கி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தனக்கு மனநல பிரச்னைகளும் தற்கொலை எண்ணங்களும் எழுந்ததாக குறிப்பிட்டுள்ள கார்த்திக், பாலியல் சீண்டல்கள் குறித்த போதிய விழிப்புணர்வு அச்சமயத்தில் தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் இளம் நாடக கலைஞர்கள், வாசகர்கள் பலரும் கோணங்கியால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதும் அவை இயல்பானதுதான் என்ற சூழல் உருவாக்கப்பட்டதும் குறித்து தான் அறிந்ததாக தெரிவித்துள்ள கார்த்திக், "வெளியே சொன்னால் நாடக கலை அழிந்துவிடும்" என்ற காரணத்திற்காக பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளுமாறு நாடகக் குழுவினர் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"மன உளைச்சலில் இருக்கிறேன்"



இதையடுத்து, ஷ்யாம் சுந்தர் வேல் என்பவரும் தன் முகநூல் பக்கத்தில், "வெவ்வேறு சூழ்நிலைகளில் கோணங்கியின் பாலியல் சீண்டல்களுக்கு தான் ஆளானதாகவும்" அவை அனைத்தும் "ஆள் பார்த்து கோணங்கியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கார்த்திக் ராமச்சந்திரனின் பதிவையடுத்து, ஆண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், இலக்கிய உலகில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் கவனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, கார்த்திக் ராமச்சந்திரனிடம் 'பிபிசி தமிழ்' பேச முயன்றது. அப்போது, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்த கார்த்திக் ராமச்சந்திரன், இதுகுறித்து பேசும் நிலையில் தான் இல்லை என தெரிவித்தார்.

"திட்டமிட்டு நடத்தப்படும் சதி"



கார்த்திக் ராமச்சந்திரனின் புகார்கள் குறித்து சில ஊடகங்களுக்கு கோணங்கி அளித்துள்ள பேட்டியில், "என் மீது ஒரு குழு திட்டமிட்டு பொய்யான புகாரைத் தெரிவித்து வருகிறது.

இந்தப் புகாரால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அதனை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இது திட்டமிட்டு நடத்தப்படும் சதி'' என தெரிவித்துள்ளார்.

சக எழுத்தாளர்களின் கண்டனங்கள்



இதனிடையே, எழுத்தாளர் கோணங்கிக்கு சக எழுத்தாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, கோணங்கியின் அண்ணனும் எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன், "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறேன்" எனவும் "மணல்மகுடியின் வெள்ளிவிழா நேரத்தில் இக்குற்றச்சாட்டுகள் என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீண்டெழுவது எப்படி என்றும் தெரியவில்லை" என தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், "கோணங்கியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். கோணங்கி மற்றும் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்தும் முருகபூபதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா குற்றச்சாட்டை முன்வைப்பவர் ஓர் ஆண் என்பதால் "தமிழ்ச் சமூகம் அமைதியாகிவிட்டதாக" தெரிவித்துள்ளார். அவர் தன் இணையதளத்தில், "இந்தப் பிரச்னையில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இதுவே அந்த எழுத்தாளர் பெண்கள் மேல் “கை” வைத்திருந்தால் தமிழ்ச் சமூகமே கொழுந்து விட்டு எரிந்திருக்கும். ஆண் உடம்பு என்றால் அத்தனை இழிவாக, கேவலமாகப் போய் விட்டது போலும்" என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "குற்றச்சாட்டுகளுக்கு மணல்மகுடி பொறுப்பாளர் முருகபூபதியும் கோணங்கியும் உரிய விளக்கத்தைத் தர வேண்டும்" எனவும், "பாதிப்புக்கு ஆளாகியுள்ள கலைஞர்கள் தமக்கு நீதி வேண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமுஎகச உறுதுணையாக இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.

'மீ டூ' தருணம்



கார்த்திக் ராமச்சந்திரன் பதிவுக்குப் பின்னர், இலக்கிய உலகில் இம்மாதிரியான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடப்பதாக பலரும் பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கவிஞர் - பாடலாசிரியர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி எழுப்பிய 'மீ டூ' புகாரைத் தொடர்ந்து மீண்டும் எழுந்துள்ள 'மீ டூ' (MeToo - தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை பொதுவெளியில் தெரிவிப்பது) தருணமாக இது அமைந்திருக்கிறது.

கவிஞரும் பாடலாசிரியருமான இளங்கோ கிருஷ்ணன், தன் முகநூல் பக்கத்தில், "தமிழ் இலக்கியச் சூழலில் கணிசமான ஒரு பால் ஈர்ப்பாளர்கள் உண்டு. என்னால் ஒரு பட்டியலே சொல்ல முடியும். இருபது வருடங்களுக்கு முன்பு என்னிடமும் ஒரு சீனியர் அத்துமீற முயன்றார். நான் உதறிவிட்டு வந்துவிட்டேன். கோணங்கி விவகாரம் எனக்கு அதிர்ச்சி எதுவும் அளிக்கவில்லை. அது முன்பே தெரியும் என்பதுதான் காரணம். ஆனால், 'அப்யூஸ்' என்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. கோணங்கிக்கு எனது கண்டனங்கள்" என பதிவிட்டுள்ளார்.

'மீ டூ' புகார்களின் போது குற்றச்சாட்டுகளை முன்வைப்போரை நோக்கி வைக்கப்படும் கேள்விகளை இந்த விவகாரத்திலும் பார்க்க முடிகிறது. "இத்தனை ஆண்டுகள் கழித்து பொது வெளியில் சொல்வது ஏன்?", "பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் என்ன?" என்பன போன்ற கேள்விகளையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு எதிர்வினையாக, இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் பெருந்தேவி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் குரலெழுப்பி வருகின்றனர். "பாலியல் புகார்களில் பொதுவாக ஆதாரத்தை வைத்துக்கொண்டு யாரும் செயல்படுவதில்லை. சட்டரீதியான நடவடிக்கைகள் பல சமயம் சாத்தியப்படுவதில்லை" என தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் எழுத்தாளர் பெருந்தேவி.

விமர்சிக்கப்படும் ஜெயமோகனின் கருத்து



கோணங்கி மீதான குற்றச்சாட்டுகள் - கண்டனங்கள் ஒருபுறம் இருக்க அவருக்கு ஆதரவான கருத்துகளையும் பார்க்க முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடைய இணையதளத்தில் கோணங்கி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், "கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்" என எழுதியுள்ளார்.

பிபிசி தமிழ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக