Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
First topic message reminder :
மெர்சலாக நடந்த ஐபிஎல் தொடக்க விழா..
தமிழ்ப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மொழிப் பாடலுக்கும் நடனமாடி கவனத்தை ஈர்த்தார். ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் தொடக்க விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடத்துவதை பிசிசிஐ நிறுத்திவிட்டது.
இதற்கு காரணம், 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, தொடக்க விழா நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு 10 அணிகள் மீண்டும் சொந்த மண் மற்றும் வெளியூர் என்ற வகையில் போட்டியை நடத்துகிறது.
இதனை கொண்டாடும் விதமாக தான் தற்போது ஐபிஎல் தொடக்க விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் முன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் மந்திரா பேடி தொகுத்து வழங்குகிறார். ஐபிஎல் தொடக்க விழாவில் ஜூனியர் ஜெய்ஷா.. குடும்பத்துடன் வந்த பிசிசிஐ நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட்டின் பிரபல பாடல்களை அச்சு அசலாக உற்சாகமாக பாடி, ரசிகர்களை சிலிர்க்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில சினிமாக்களின் பாடலுக்கு ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
மெர்சலாக நடந்த ஐபிஎல் தொடக்க விழா..
தமிழ்ப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மொழிப் பாடலுக்கும் நடனமாடி கவனத்தை ஈர்த்தார். ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் தொடக்க விழா விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடத்துவதை பிசிசிஐ நிறுத்திவிட்டது.
இதற்கு காரணம், 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, தொடக்க விழா நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு 10 அணிகள் மீண்டும் சொந்த மண் மற்றும் வெளியூர் என்ற வகையில் போட்டியை நடத்துகிறது.
இதனை கொண்டாடும் விதமாக தான் தற்போது ஐபிஎல் தொடக்க விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் முன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் மந்திரா பேடி தொகுத்து வழங்குகிறார். ஐபிஎல் தொடக்க விழாவில் ஜூனியர் ஜெய்ஷா.. குடும்பத்துடன் வந்த பிசிசிஐ நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட்டின் பிரபல பாடல்களை அச்சு அசலாக உற்சாகமாக பாடி, ரசிகர்களை சிலிர்க்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில சினிமாக்களின் பாடலுக்கு ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
217 ரன்கள் எடுத்த சென்னை, ஜெயிப்பதற்கு லக்னோவிற்கு 218 ரன்கள் என்ற கட்டாயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது லக்னோ
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேற்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உள்பட 21 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ரன்னில் அவுட்டானார்.
லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ரன்னிலும், தீபக் ஹூடா ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் கே.எல்.ராகுல் 35 ரன்னுடன் வெளியேறினார்.
இறுதியில், லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
ரஹானே அதிரடியில் சென்னை அணி வெற்றி!
நேற்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல்-16 வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேற்றைய 12 வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது.
டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. எனவே மும்பை அணி பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியில் ரோஹித் சர்மா 21 ரன்னும், கிஷன் 31 ரன்னும், கேமரூன்12 ரன்னும், டேவிட் 31 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், 8விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 157 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார், தேஷ்பாண்டே 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, பேட்டிங் செய்த சென்னை அணியில், ரஹானே 19 பந்துகளில் அரைசத அடித்து, 21 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். துபே 28 ரன்னும் அடித்தனர். எனவே ரஹானே அதிரடியில் சென்னை கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது..
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
Rinku Singh: `6,4,6,6,6,6,6' - நரம்புகளில் மின்னல் பாய்ச்சிய மாவீரன்! - யார் இந்த ரிங்கு சிங்?
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. |
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கின் அதிரடியால் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
கடைசி பந்து வரைக்குமே ஆட்டம் பரபரப்பாகச் சென்றிருந்தது. கடைசி பந்து வீசப்படுவதற்கு முன்பு கேமரா மேன் குஜராத் கேப்டன் ரஷீத் கானுக்கு ஒரு க்ளோஸ் அப் வைக்க ரஷீதோ என்ன நடக்கப் போகிறதோ எனும் பதைபதைப்பில் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ரஷீதின் மனநிலை மற்றும் ரியாக்சனோடுதான் போட்டியைப் பார்த்த அத்தனை பேரும் இருந்திருந்தனர். இது அத்தனைக்கும் காரணம் ரிங்கு சிங் மட்டும்தான். யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் அசாத்தியமான முறையில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு கொல்கத்தாவை யாரும் எதிர்பார்க்காத வகையில் வெல்ல வைத்திருக்கிறார். |
ஐ.பி.எல் வரலாற்றில் தனி இடத்தை பிடிக்கும், ஒரே ஆட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆடியிருக்கும் ரிங்கு சிங் 1997-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தவர், விடாமுயற்சியால் தனது 16 வயதிலேயே மாநில அணிக்காக ஆடத் தொடங்கிவிட்டார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தார். இதற்கடுத்து, 2016-17 சீசனில் ரஞ்சி கோப்பைத் தொடரில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 5, அன்று உத்தரப் பிரதேச அணிக்காக வெள்ளை உடையில் இறங்கினார். இந்தத் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தைப் பெற்றார்.
2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 80 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.. |
அந்த சீசனில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அதேநேரத்தில் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் ரிங்கு சிங்கிற்கு பிரத்யேக பயிற்சிகளை வழங்கினார். இதே அபிஷேக் நாயர்தான் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் முன்னேற்றமடைந்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பதற்குக் காரணமாக இருந்தார். அபிஷேக் நாயருடன் ரிங்கு சிங் செலவிட்ட தருணங்கள் அவருடைய கரியரில் பெரும் மதிப்புமிக்கதாக மாறியது. 2018-19 ரஞ்சி சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 953 ரன்களை அடித்திருந்தார். இதில் நான்கு சதங்களும் அடக்கம். இடையில் சில ஏற்ற இறக்கங்களையுமே ரிங்கு சிங் சந்தித்திருந்தார்.
201அபுதாபியில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற ஒரு தொடரில் பிசிசிஐயின் அனுமதியே வாங்காமல் பங்கேற்றிருந்தார். இதனால் பிசிசிஐ ரிங்கு சிங்கிற்கு கிரிக்கெட் ஆட 3 மாதங்கள் தடைவிதித்தது.. |
இளம் வயதிலேயே தடையையெல்லாம் எதிர்கொண்ட ரிங்கு இதுவரை 78 டி20 போட்டிகளில் விளையாடி 1392 ரன்களை அடித்துள்ளார். ரிங்குவை மீண்டும் கடந்த ஆண்டின் மெகா ஏலத்தில் 55 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியே வாங்கியது.
பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பில் ஷர்துல் தாகூர் ஒரு அற்புதமான இன்னிங்ஸை ஆடியிருந்தார். அந்தப் போட்டியில் ஷர்துலுக்கு உறுதுணையாக நின்றது ரிங்கு சிங்தான். இருவரும் இணைந்து 100+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த கூட்டணியில் ஷர்துல்தான் அதிரடியாக ஆடியிருந்தார். ரிங்கு சிங் நின்று நிதானமாக ஷர்துலுக்கு செகண்ட் ஃபிடிலாகத்தான் ஆடியிருந்தார்.
போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேசுகையில், 'விக்கெட்டுகள் அதிகம் விழுந்திருந்தால் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காத்து கடைசி வரை பேட்டிங் ஆட நான் உதவ வேண்டும். அதேநேரத்தில் அதிரடியாக ஷாட்கள் ஆடும் வேலையை ஷர்துல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. அதனால்தான் நான் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து கொண்டிருந்தேன்' என்றிருந்தார். அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ரிங்கு சிங் பற்றி பேசுகையில், 'ரிங்கு சிங்கால் நினைத்தமாத்திரத்தில் சிக்சர்களை அடிக்க முடியும். ஆனால், அப்படி ஆடாமல் ஒரு முனையில் நின்று பொறுமையாக ஆட வேண்டும் என அறிவுறுத்தினோம். அவரின் செகண்ட் ஃபிடில் இன்னிங்ஸிற்கும் முழுமையான க்ரெடிட் கொடுத்தே ஆக வேண்டும்.' என பேசியிருந்தார்.
கொல்கத்தாவிற்கு எதிரான அந்தப்போட்டியில் ரிங்கு சிங் 33 பந்துகளில் 46 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 139. அதிலும் முதல் 27 பந்துகளில் 30 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.
201ஸ்ட்ரைக் ரேட் 100 ஐ சுற்றி மட்டும்தான் இருந்தது. அணிக்காக நின்று நிதானமாக பொறுமையாக ஆடிய அதே ரிங்கு சிங்தான் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 228 ஸ்ட்ரைக் ரேட்டில் 48 ரன்களை எடுத்திருக்கிறார். கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு அசாத்தியமான டார்கெட்டை அசால்ட்டாக எட்ட வைத்திருக்கிறார். ரிங்கு சிங் எப்படியான திறன் மிக்கவர் என்பதற்கு இந்த இரண்டு இன்னிங்ஸ்களும்தான் உதாரணம். |
அணிக்கு தேவைப்படும்பட்சத்தில் அவரால் எந்த தயக்கமும் இல்லாமல் செகண்ட் ஃபிடிலும் ஆட முடியும். அதேநேரத்தில் சுழன்றடிக்கும் சூறாவளியாக முழுக்க முழுக்க ஆக்சனை மட்டுமே வெளிக்காட்டும் இன்னிங்ஸை கூட ஆட முடியும். பேட்டிங்கை தாண்டி ஒரு வீரராக அணியின் திட்டத்திற்கும் தலைவனின் சொல்லுக்கும் முழுமையாக கட்டுப்படும் அந்த பெரும் குணமும் ரிங்கு சிங்கை தனித்துவமிக்க வீரராக மாற்றுகிறது.
இதே பண்புகளையும் அதிரடியையும் ரிங்கு சிங் அப்படியே தக்கவைத்துக் கொள்ளும்பட்சத்தில் பெரிய பெரிய உச்சங்களை ரிங்கு சிங் விரைவிலேயே எட்டுவார்.
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
பெங்களூரை வீழ்த்தியது லக்னோ
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். தீபக் ஹூடா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் 18 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார். அவர் 30 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பூரன் 15 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 19 பந்தில் 62 ரன்னில் அவுட்டானார்.
ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
ரிங்கு சிங் 5 சிக்சர்களுடன் வின்னிங் சாட் அடிதததும் மொத்த கேகேஆர் டீமும் பிட்ச்ல வந்து ரிங்கு சிங்க தூக்கி வச்சு கொண்டாடுனாங்க.
அந்த சமயம் பவுலர் யாஷ் தயால் இடிஞ்சு போய் அப்படியே க்ரவுன்ட்ல உக்காந்துட்டான்....
அப்ப ஒரு கை அவனது சோல்டரில் வைத்து ஆறுதல் சொன்னது.
அது வேறு யாருமல்ல..
ரிங்கு சிங் பேட் செய்த போது எதிர்முனையில் ஓரு ரன் அடித்து சிங்கிற்க்கு ஸ்ட்ரைக் தந்து நின்றிருந்த உமேஷ் யாதவ்..
ஒரு பவுலராக அந்த தருணம் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உமேஷ் யாதவ் நன்கு அறிவார்....
இதனால் தான் கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்கிறார்கள்...
#வெல்டன்_உமேஷ்_யாதவ்.
அந்த சமயம் பவுலர் யாஷ் தயால் இடிஞ்சு போய் அப்படியே க்ரவுன்ட்ல உக்காந்துட்டான்....
அப்ப ஒரு கை அவனது சோல்டரில் வைத்து ஆறுதல் சொன்னது.
அது வேறு யாருமல்ல..
ரிங்கு சிங் பேட் செய்த போது எதிர்முனையில் ஓரு ரன் அடித்து சிங்கிற்க்கு ஸ்ட்ரைக் தந்து நின்றிருந்த உமேஷ் யாதவ்..
ஒரு பவுலராக அந்த தருணம் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உமேஷ் யாதவ் நன்கு அறிவார்....
இதனால் தான் கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்கிறார்கள்...
#வெல்டன்_உமேஷ்_யாதவ்.
Re: IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தொடர் பதிவு
» ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - தொடர் பதிவு
» ஐபிஎல் கிரிக்கெட்: எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடக்கம்
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
» ஐ.பி.எல். கிரிக்கெட் - தொடர் பதிவு
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - தொடர் பதிவு
» ஐபிஎல் கிரிக்கெட்: எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடக்கம்
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|