புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
46 Posts - 40%
prajai
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
4 Posts - 3%
Jenila
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
2 Posts - 2%
M. Priya
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%
kargan86
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%
jairam
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
8 Posts - 5%
prajai
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
6 Posts - 4%
Jenila
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
4 Posts - 2%
Rutu
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%
jairam
காஞ்சி மகான். Poll_c10காஞ்சி மகான். Poll_m10காஞ்சி மகான். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகான்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 04, 2023 3:44 pm

ஒரு முறை பரிவாரங்களுடன் திருநெல்வேலி செல்லும் வழியில் புதுக்கோட்டையில் முகாமிட்டுருந்தார் காஞ்சி ஆச்சார்யாள். மெயின் ரோட்டில் இருந்த ஒரு பெரிய சத்திரத்தில் தங்கி இருந்தார். அங்கு வந்து சேர்ந்த அன்று இரவு, ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜையை முடித்து விட்டு அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.
தனக்குப் பணிவிடை பண்ணும் நாகராஜன் என்ற இளைஞனை அருகில் அழைத்து, “அப்பா நாகு…நாளைக்கு விடியகாலம்பற மூணரை மணிக்கெல்லாம் நான் எழுந்து ஸ்நானம் பண்ணி ஆகணும். நீ ஞாபகம் வெச்சுக்கோ” என்று கட்டளை இட்டார் ஆச்சார்யாள்.
உடனே அந்த இளைஞன் நாகு மிக அடக்கத்துடன், “உத்தரவு பெரியவா. நீங்க ஆக்ஞாபித்தபடியே சரியா மூணரைக்கு, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர’ னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா” என பவ்யத்துடன் தெரிவித்துக் கொண்டான்.
பெரியவா புரிந்து கொண்டு, லேசாகப் புன்னகைத்தபடியே, “மூணரை மணிக்கு ஒங்களை எழுப்பி விட்டுடறேன்னு சொன்னா அவ்வளவா நன்னா இருக்காதுங்கறதாலே, “ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர’ னு சொல்லி எழுப்பறேங்கறியாக்கும்” என்று நாகுவைப் பார்த்து பளிச்சென்று கேட்டார். நாகு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். என்ன பதில் சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.
“சரி..சரி. அப்டியே பண்ணு !” என்று கூறி விட்டு, உள்ளே சென்று விட்டார் ஆச்சார்யாள். இரவு மணி பதினொன்று. சத்திரம் உறக்கத்தில் ஆழ்ந்தது. பெரியவாளும் சயனத்துக்குச் சென்று விட்டார். நாகுவுக்குத் தூக்கமே வரவில்லை. கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அந்தச் சத்திரத்தில் சுவர்க் கடிகாரமோ, அலாரம் டைம்பீசோ இருக்கவில்லை. மடத்திலும் இல்லை. நாகுவிடம் இருப்பதோ அவனுடைய மாமா, ‘பூணூல்’ கல்யாணத்தில் பரிசளித்த ரொம்பப் பழைய வாட்ச் ஒன்று தான். பெரியவாள் உடனேயே எப்போதும் இருக்க வேண்டி உள்ளதால், அதையும் கையில் கட்டிக் கொள்வதில்லை. அது நாகுவின் பழைய டிரங்க் பெட்டிக்குள்ளேயே அடைக்கலமாகி இருக்கும். ஒவ்வொரு நாளும் நாகு அதற்கு ‘கீ’ கொடுக்க எடுத்துப் பார்ப்பதோடு சரி…அப்புறம் தொடுவதில்லை.
‘தானும் படுத்துத் தூங்கி விட்டால் விடியக் காலம் மூணரைக்குப் பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் ?’ என்ற விசாரம் நாகுவைத் தொற்றிக் கொண்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவன், நேராகப் ஸ்டார் ரூமுக்குப் போனான். டிரங்க் பெட்டியைத் திறந்து கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். நேராக ஸ்வாமிகள் சயனித்திருக்கும் அறைக்கு வெளியே சந்தடி இன்றி வந்து அமர்ந்தான். சத்தம் துளிக் கூட வெளியில் கேட்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ண ஆரம்பித்து விட்டான். திரும்பத் திரும்பப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். தனது கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக 3.30 . நாகு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு, ஸ்வாமிகள் சயனிக்கும் அறையைப் பார்த்தபடியே, சன்னமான குரலில், ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர..’ என நாமாவளி கோஷம் எழுப்பினான். சற்று நேரத்திலேயே அறைக் கதவு திறந்தது. சாட்சாத் ஸ்ரீ பரமேஸ்வரனே நடந்து வருவது போல சிரித்தபடியே மந்தகாசத்துடன் வெளிப்பட்டு, ‘சுப்ரபாத’ தரிசனம் அளித்தார் ஆச்சார்யாள். அந்த தரிசன பாக்கியம் அன்று நாகுவுக்கு மட்டுமே கிடைத்தது.
ஆச்சார்யாள், அந்த சத்திரத்து வாசற்படி வரை மெதுவாக நடந்து போய் விட்டு வந்தார். ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்ய விரைந்தான் நாகு. சத்திரம் விழித்துக் கொண்டது.
அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அதே மாதிரியே நாகுவின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாம கோஷம் எனத் தொடர்ந்தது.
நான்காவது நாள் இரவு, ‘தன் இடுப்பில் கைக் கடிகாரத்தைச் செருகிக் கொண்டு ஸ்வாமிகளின் அறைக்கு வெளியே விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் செய்தபடியே விழித்துக் கொண்டிருந்த நாகு, தன்னையும் அறியாமல் கண் அயர்ந்து விட்டான். திடீர் என்று, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்று ஒரு தெய்வீகக் குரல் நாகுவைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான். எதிரே, கருணை ததும்பச் சிரித்த முகத்துடன் ஆச்சார்யாள்.
ஸ்வாமிகள் வாத்ஸல்யத்துடன், “கொழந்தே, மணி சரியா மூணரை ஆறதுடாப்பா. அசதிலே நீ தூங்கிப் போயிட்டே போலிருக்கு. பாவம்..நோக்கும் நாள் பூரா கைங்கர்யம். சரீர சிரமம் இருக்குமோனோ ?” என்று சிரித்தபடியே கூறிவிட்டு, வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார். இடுப்பில் செருகி இருந்த கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான் நாகு. மணி சரியாக 3.30.
மிகவும் ஆச்சர்யப்பட்டான் நாகு. ‘நாம குரல் கொடுக்காமலே எழுந்து வந்து ‘மணி மூணரை’ னு சரியாச் சொல்லறாளே பெரியவா !
இது எப்படி சாத்தியம் என்று மிகவும் குழம்பினான். அவன் காதுகளில் ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்ற அந்த நடமாடும் தெய்வத்தின் தெய்வீகக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. இது வரை அவன் அப்படிக் கேட்டதே இல்லை.
அன்றிரவு பதினோரு மணி. பெரியவா, சயனத்துக்குச் சென்று விட்டார். ‘எப்படியும் இன்று இரவு கண்ணயரவே கூடாது’ என்று திட வைராக்கியத்துடன் ஸ்வாமிகளின் அரை வாசலில் வந்தமர்ந்தான் நாகு. கையோடு ஒரு சிறிய பித்தளை செம்பில் ஜலம். ஒரு வேளைஅசதியின் மிகுதியால் தூக்கம் வந்து விட்டால் கண்களைத் துடைத்துக் கொள்ளவே ஜலம்.
இரவு மணி 2 .30 . அது வரை தூங்காமல் தாக்குப்பிடித்து விட்டான் நாகு. ஆனால் தொடர் விஷ்ணு சஹஸ்ரநாம பாரயணத்தையும் மீறி அவனுக்குத் தூக்கம் வந்து விட்டது. தன்னையும் அறியாமல் கிழே சுருண்டு படுத்தான். உறங்கி விட்டான்.
கதவு திறந்தது. ஆச்சார்யாள் மெதுவாக வெளியே வந்தார். உறங்கிக் கொண்டிருந்த நாகுவைப் பார்த்தார்; அவனுக்குப் பக்கத்தில் இருந்த செம்பையும் பார்த்தார். புரிந்து கொண்டார். சிரித்தார்.
“ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாகு…எழுந்துறாப்பா” என மிருதுவாகக் குரல் கொடுத்தார் ஆச்சார்யாள். தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான் நாகு. எதிரே புன் முறுவலுடன் பெரியவா.
“நாகு, மணி சரியா மூணரை. பாவம்…இன்னிக்கும் முடியாம தூங்கிட்டே போலிருக்கு. சரி…சரி…ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று சொல்லி விட்டு, வழக்கப்படி வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார் ஸ்வாமிகள். தனது கடிகாரத்தைப் பார்த்தான் நாகு. சரியாக மூணரை. வியந்து நின்றான். அன்று மதியம் பூஜையை முடித்து விட்டு, ஏகாந்தமாக அமர்ந்திருந்தார் ஆச்சார்யாள். மெதுவாக அவரருகே வந்து நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றான் நாகு. வாய் திறந்து அவன் ஒன்றும் பேசவில்லை.
ஸ்வாமிகளே பேசினார், “ஏண்டாப்பா நாகு…நீ நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பாத்தா, ஏதோ எங்கிட்டே கேட்டு தெருஞ்சுக்க வந்துருக்காப்லே படறதே. என்ன தெரியணும் ? கேளு…சங்கோஜப்படாதே.”
நாகு மிகவும் தயங்கினான். “அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா…” என்று இழுத்தான். உடனே ஸ்வாமிகள் புன்முறுவல் பூத்தபடியே, “ஒம் மனுசுலே என்ன கேக்க நெனச்சுண்டு நீ தயங்கறேங்கறது நேக்குப் புரியறது. ‘ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே…பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரைக்கு எழுந்துண்டு வர்றார் ? அவர் கிட்டே தான் ஒரு கடிகாரமும் இல்லியே…எப்படி முழுச்சுக்கரார்னு’ னு கொழம்பிண்டிருக்கே…இல்லியா ?” என்று கேட்டார்.
நாகுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாம் கேட்க நினைத்ததைப் பெரியவா சொல்கிறாரே என்று மலைத்தான்.
நாகுவுக்கு இப்போது தைரியம் வந்து விட்டது. “ஆமா பெரியவா…என்னன்னே தெரியலே. ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிப் போயிடறேன். பெரியவா தான் சரியா மூணரை மணிக்கு எழுந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள். நேக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. சரியா மூணரை மணிக்கு எப்படிப் பெரியவாளுக்கு…” என்று நாகு முடிப்பதற்குள்…
ஸ்வாமிகள், “ஏதாவது கர்ண யக்ஷிணி (காதில் வந்து சொல்லும் தேவதை) காதுலே மணிய சொல்றதானு சந்தேகம் வந்துடுத்தோ நோக்கு ?” என்று கேட்டு விட்டு இடி இடி என்று சிரித்தார்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்…பெரியவா” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் நாகு.
பெரியவா சொல்ல ஆரம்பித்தார், “எங் காதுலே ஒரு யஷிணியும் வந்து சொல்லலே. எங் காதுலே மணி மூணரைங்கறதைச் சொன்னது ஒரு பஸ். அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ். பஸ். ஆச்சரியப்படாதே. மொத நாள் சரியா மூணரைக்கு நீ, ‘ஹர ஹர சங்கர…” சொல்லி எழுப்பி விட்டே. வெளியிலே வந்தே நான், வாசப் பக்கம் வந்தேனா…அப்போ ஒரு பஸ் சத்திர வாசலைக் கடந்து டவுன்குள்ளே போச்சு.
அடுத்தடுத்து ரெண்டு நாளும் பார்த்தேன். அதே மூணரைக்கு அந்த பஸ் சத்திர வாசலைக் தாண்டித்து. அப்புறமா விசாரிச்சேன். அது டி.வி.எஸ். கம்பெனியோட பஸ். மதுரைலேர்ந்து புதுக் கோட்டைக்கு விடியக் காலம் வர மொத பஸ்ஸுனும் சொன்னா…சத்திர வாசலுக்கு அந்த பஸ் விடியக் காலம் சரியா மூணரைக்கு வந்து தாண்டிப் போறது. ஒரு செகண்ட்…இப்படி அப்படி மாறல்லே. டி.வி.எஸ். பஸ் ஒரு எடத்துக்கு வர குறிப்பிட்ட டயத்த வெச்சுண்டே, நம்ம கடிகாரத்த கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்னு சொல்லுவா. அது வாஸ்தவம் தான். மூணு நாள் சரியா பார்த்து வெச்சுண்டேன். நாலாம் நாள்லேந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தான எழுந்துட்டுண்டேன்…வேற ஒரு ரகசியமும் இதுலே இல்லேடாப்பா நாகு…!” பெரியவா தன்னை மறந்து சிரித்தார்.
பதில் சொன்ன ஆச்சார்யாளின் முகத்தையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் நாகு.

நன்றி முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 04, 2023 3:48 pm

அந்த காலங்களில் மதுரையில் TVS பஸ் வரும் ஓசை கேட்டு
கடிகாரம் சரியாக ஓடுகிறதா அல்லது சாவி கொடுக்கவேண்டுமா
என்று சரிபார்ப்பார்களாம்.

TVS என்றாலே சரியான நேரம்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக