புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தற்போது மற்றொரு ஆய்வுக் கலத்தை அனுப்பத் தயாராகி வருகிறது. இத்திட்டத்தில் சூரியனைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சந்திரயான்- 3 திட்டத்தின் மூலம் ஒரு ரோவர் மற்றும் லேண்டரை சமீபத்தில் விண்ணில் செலுத்திய இஸ்ரோ, ஆதித்யா எல்1 திட்டம் மூலம் சூரியனை ஆராய முயற்சித்து வருகிறது.
ஆதித்யா எல்1 விரைவில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இஸ்ரோ மேற்கொள்ளும் மிக முக்கியமான திட்டமாக ஆதித்யா எல்1 இருக்கப் போகிறது.
சூரியனைப் பற்றி ஆராய்வதன் மூலம் என்ன பயன்?
நாம் வாழும் பூமியை உள்ளடக்கிய பிரபஞ்சம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இந்த நட்சத்திரங்கள் தொடர்ந்து ஒரு வகை ஆற்றலை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் எதிர்காலம் பற்றி அறிய நட்சத்திரங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும். பூமியில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை உருவாக்கி அவற்றின் நிலைமைகளை ஆராய்ச்சி செய்வது சாத்தியமற்றது.
எனவேதான் சூரியனை நேரடியாக ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ஆதித்யா எல்1 என்பது இஸ்ரோவின் சூரியனைப் பற்றி அறியும் சோதனையின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள, ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன. இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும்.
சூரிய புயல்களை ஏன் கண்காணிக்க வேண்டும்?
சூரிய குடும்பத்தின் ஆற்றல் மூலமாக சூரியன் விளங்கிவருகிறது. சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள் இருக்கும். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. சூரியனில் தொடர்ச்சியான மைய இணைவு செயல்முறையால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தின் போது, அதிக அளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது.
சூரியனின் மையப்பகுதி கோர் என்று அழைக்கப்படும் நிலையில், அதன் மேற்பரப்பு குரோமோஸ்ஃபியர் என அழைக்கப்படுகிறது. அங்கு வெப்பநிலை 15 லட்சம் டிகிரி செல்சியஸாக இருக்கும். மையத்திலிருந்து விலகி மேற்பரப்புக்குச் செல்லச் செல்ல அதன் வெப்பநிலை குறைகிறது.
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ். இதிலிருந்து சூரியனைச் சுற்றியுள்ள பகுதி கொரோனா என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது இப்பகுதியை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேற்பரப்பில் இருந்து எல்லா திசைகளிலும் தொடர்ந்து உமிழப்படுகின்றன. சில சமயங்களில் சூரியனின் சில பகுதிகளில் தீவிர அணுக்கரு இணைவு நிகழ்வுகள் ஏற்பட்டு பெருமளவில் வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக உருவாகிறது.
இதுபோன்ற சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கினால், அதன் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் பூமியின் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் காரணமாக, இந்த சூரிய புயல்கள் நேரடியாக பூமியை அடைய முடியாது.
ஆனால் வானத்தில் உள்ள செயற்கைக்கோள்கள், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புக்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள், இது போன்ற சூரிய புயல்களால் நேரடியாக பாதிக்கப்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது அவசியம். ஆதித்யா எல்1 என்ன செய்கிறது என்பதற்கான மூலம் இதுதான்.
ஆதித்யா எல்1 என்றால் என்ன? சூரியனை ஆராயும் முயற்சிக்கு ஏன் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டது?
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடு இந்தியா. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, சில நேரங்களில் தனித்தனியாகவும், சில சமயங்களில் கூட்டாகவும் விண்கலங்களை அனுப்பியுள்ளன. இப்போது ஆதித்யா எல்1-ஐ அனுப்புவதன் மூலம், அந்த திட்டங்களை இஸ்ரோ எதிர்கொள்ளப் போகிறது.
ஆதித்யா எல்1, சூரியனை ஆய்வு செய்வதற்கான ஒரு தனி முயற்சி. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில், இரு கோள்களின் ஈர்ப்பு விசை சரிசமாக இருக்கும் லெக்ரேஞசியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One)-ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த விண்கலம் செலுத்தப்படும்.
ஆகஸ்ட் 26-ம் தேதி அனுப்பி வைக்கப்படும் விண்கலம், நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு அதன் சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. பின்னர் இந்த விண்கலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த விண்கலம் மேற்கொள்வதால் அதற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள்.
சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்'-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால், இஸ்ரோ இந்த திட்டத்துக்கு ஆதித்யா எல்1 என்று பெயரிட்டுள்ளது.
'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்' என்றால் என்ன?
சூரியன், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் என விண்வெளியில் ஏதேனும் இரண்டு விண் கோள்களுக்கு இடையே ஒரு பொருளை வைத்தால், எந்தக் கோளின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறதோ, அந்தக் கோளை நோக்கி அந்தப் பொருள் நகரும்.
ஆனால் அந்த இரண்டு கோள்களுக்கும் மையத்தில் இரண்டின் ஈர்ப்பு விசையும் பூஜ்ஜியமாக இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அவை லெக்ரேஞ்சியன் புள்ளிகள் (Lagrangian Points) என்று அழைக்கப்படுகின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன.
சூரியனையும் பூமியையும் இணைத்து ஒரு கோடு போட்டால், அந்த கோட்டில் பூமியின் பக்கம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கில் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 இருக்கும். அதற்குச் சமமாக பூமிக்குப் பின்னால் லெக்ரேஞ்ச் பாயிண்ட் 2 உள்ளது.
இதேபோல், சூரியனின் மறுபக்கம் லெக்ரேஞ்ச் புள்ளி 3 இருக்கிறது. ஜோசப் லூயி லெக்ரேஞ்சி என்ற பிரெஞ்சு வானியலாளர் இதைக் கண்டுபிடித்ததால் இந்த இடங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டையும் தவிர, இரண்டு கோள்களுக்கு வெளியே ஒரு சமபக்க முக்கோணத்தை வரைந்தால், அதன் இரண்டு முனைகளிலும் மேலும் இரண்டு லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கும். அவை L4 மற்றும் L5 என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றில், ஆதித்யா எல்1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ரேஞ்ச் பாயின்ட் 1 க்கு அருகில் உள்ள வெற்றிட சுற்றுப்பாதையில் நுழையப் போகிறது.
லெக்ரேஞ்சியன் புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?
இந்த லெக்ரேஞ்சியன் புள்ளிகள் வானியல் ஆராய்ச்சி மற்றும் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்த புள்ளிகள் மிகவும் முக்கியமானவை.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் அதாவது சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திலும் ஈர்ப்பு விசை உள்ளது. ஒரு கோளின் ஈர்ப்பு விசை அதன் நிறையைப் பொறுத்தது. இதன் பொருள் சூரியன் மற்றும் வியாழன் போன்ற பெரிய கோள்களின் ஈர்ப்பு விசை அதிகமாக உள்ளது என்பதே ஆகும்.
பூமி, வெள்ளி, புதன் மற்றும் சந்திரன் போன்ற சிறிய கோள்கள் அவற்றை விட குறைவான ஈர்ப்பு விசை கொண்டவை. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86 சதவீதம் சூரியனில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து கோள்களின் நிறை 0.14 சதவீதம் மட்டுமே.
சூரியன் பூமியை விட 3 லட்சத்து 33 ஆயிரம் மடங்கு பெரியது. அதாவது 13 இலட்சம் கோள்கள் சூரியனுக்குள் வரக்கூடியவை. சூரியன் மிகவும் பெரியது. சூரியனின் ஈர்ப்பு விசை, பூமியை விட 27.9 மடங்கு அதிகம்.
ஆனால் சந்திரன் பூமியை விட சிறியதாக இருப்பதால், அங்குள்ள ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியை அடைய ஒரு ராக்கெட் 11.2 கிமீ/வி வேகத்தில் செல்ல வேண்டும். இதே போல் சூரியனின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்ல வினாடிக்கு 615 கிலோமீட்டர் வேகத்தில் மேலே செல்ல வேண்டும்.
எனவே இந்த இரண்டு ஈர்ப்பு விசைகளையும் சமநிலைப்படுத்தும் புள்ளியில் இருந்து சூரியனை ஆராய ஆதித்யா எல்1 போன்ற விண்கலங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கும் போது இஸ்ரோ ஏன் புள்ளி ஒன்றைத் தேர்வு செய்தது?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன. ஆனால் இஸ்ரோ ஆதித்யா L1 ஐ லெக்ரேஞ்ச் பாயின்ட் 1க்கு அருகில் அனுப்புகிறது. ஏனெனில் இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் பத்தில் ஒரு பங்காகும். அதாவது சுமார் ஒன்றரை கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
L2 புள்ளி பூமிக்கு பின்னால் இருப்பதால், அங்கிருந்து சூரியனை ஆராய்ச்சி செய்வது கடினமாக இருக்கும். L3 சூரியனுக்குப் பின்னால் இருப்பதால் அங்கு செல்வதும் மிகவும் கடினம்.
L4 மற்றும் L5 ஆகியவை தொலைவில் உள்ளன. எனவே இஸ்ரோ தனது விண்கலத்தை எல்1 புள்ளிக்கு அருகில் அனுப்புகிறது. மேலும் L1-ல் நிலையான ஈர்ப்பு விசை இருப்பதால் அது பூமியினாலோ, சூரியனாலோ ஈரத்துக்கொள்ளப்படும் நிலை ஏற்படாது. இதுமட்டுமின்றி சூரியனின் மேற்பரப்பை ஆராய இந்த L1 புள்ளி தான் மிகச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக பூமியில் பல சூரிய ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஆனால் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சூரியனின் முழு அளவையும் அவைகளால் ஆய்வு செய்ய இயலாது. குறிப்பாக சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய, பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லவேண்டும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைந்துள்ள லெக்ரேஞ்சியன் பாயின்ட் 1-ற்கு அருகில் உள்ள ஆய்வுக் கலங்கள் ஒவ்வொரு கணமும் சூரியனை நேரடியாகப் பார்க்க முடியும். அவற்றிற்கும் சூரியனுக்கும் இடையில் எந்த தடுப்பும் இல்லை.
சூரியனில் இருந்து வரும் சூரியப் புயல்களை அவை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1ல் ஏழு வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு கருவிகள் தொடர்ந்து சூரியனை பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.
மற்ற மூன்று கருவிகள் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 அருகே உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அந்த தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பும். இந்த ஏழு கருவிகள் முக்கியமாக சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கே இருந்து பெரிய அளவில் வெளிப்படும் நிறை (Mass) போன்ற பல விஷயங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். மேலும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களையும் பகுப்பாய்வு செய்யும்.
சூரியனின் மேற்பரப்பை ஆராயும் போது, அங்கு வெப்பம் உருவாகும் வழிமுறை, அங்கிருந்து வெளியேறும் நிறை (Mass) - அதன் வேகம், சூரியனைச் சுற்றியுள்ள காந்தப்புலம், அவற்றின் இயக்கவியல் போன்ற பல்வேறு விஷயங்கள் கருத்திக்கொள்ளப்படும். இதற்காக, சக்திவாய்ந்த பல்வேறு கருவிகளும் ஆதித்யா எல் 1-ல் நிறுவப்பட்டுள்ளன.
இவை தவிர, ஆதித்யா சூரியப் புயலின் துகள் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றின் முடிவுகளை இஸ்ரோவுக்கு அனுப்பும்.
லெக்ரேஞ்சியன் புள்ளிகள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் மட்டும் தான் உள்ளனவா?
இந்த லெக்ரேஞ்சியன் புள்ளிகள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் மட்டும் இருப்பவை அல்ல. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த இரண்டு கோள்களுக்கும் இடையில் ஈர்ப்பு விசை சமமாக உள்ள இடங்கள் லெக்ரேஞ்சியன் புள்ளி எனப்படும். சூரிய குடும்பத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருப்பது போல, அனைத்து கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையிலும் இதே போன்ற லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கின்றன.
சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் L4 மற்றும் L5 புள்ளிகளில் பல சிறுகோள்கள் நிலையாக உள்ளன. 1906 ஆம் ஆண்டு இந்த இடத்தில் சிறுகோள்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், இது போன்ற 12,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், L4 புள்ளிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் இலியட் சிறுகோள்கள் (Iliad asteroids) என்றும், L5க்கு அருகில் உள்ள சிறுகோள்கள் ட்ரோஜன் சிறுகோள்கள் (Trojan asteroids) என்றும் அழைக்கப்படுகின்றன.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே L4 புள்ளிக்கு அருகில் இரண்டு ட்ரோஜன் சிறுகோள்களும் உள்ளன. அதேபோல், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள L1-க்கு அருகில் சீனா தனது ஷாங்கி விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்துவருகிறது.
அதேபோல், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கயா தொலைநோக்கியும், ஐரோப்பிய - அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான ஜேம்ஸ் வெப் விண்கலமும் சூரியனின் L2 லெக்ரேஞ்ச் பாயின்ட் அருகே உள்ள பகுதிகளை ஆய்வு செய்துவருகின்றன.
இவை சூரியனின் L2 அதாவது பூமிக்கு பின்னால் இருப்பதால், இந்த தொலைநோக்கிகளை பூமி சூரியப் புயல் தாக்குவதிலிருந்து தடுக்கிறது. இவற்றின் மீது சூரியப் புயல் தாக்கம் இருக்காது என்பதால் அது பிரபஞ்சத்தை வெகுதொலைவுக்கு உற்றுநோக்கமுடியும்.
ஆனால் லெக்ரேஞ்சியப் புள்ளி 1,2,3 இல் அமைந்துள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் நிலையற்றவை. அதனால்தான் ஒவ்வொரு 21 நாட்களுக்கும் ஒரு முறை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எரிபொருளை உட்கொண்டு அதன் நிலையை மாற்றிக்கொள்கிறது.
சூரியனுக்கு மிக அருகில் செல்ல முடியுமா?
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது, அந்த நிலையில் எந்த உயிரும் வாழ முடியாது. ஆனால் சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனாவைக் கண்காணிக்க பல ஆய்வுக் கலங்கள் சூரியனுக்கு அருகில் பறந்தன.
நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் ஆய்வு செய்யவிருக்கும் விண்கலமாகும். 2018 இல் இந்த விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து, ஜூன் 27, 2023 வரை சூரியனை 16 முறை வெற்றிகரமாகச் சுற்றியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பார்க்கர் ஆய்வுக் கலம், சூரியனின் ஈர்ப்பு விசைக்கு உள்ளாகாமல் ஒரு நிலையான நீண்ட வட்டப்பாதையில் நகர்வதற்கு வீனஸ் கோளின் ஈர்ப்பு விசைக்கு எதிராக சமநிலைப்படுத்துகிறது.
இருப்பினும், ஜூன் 22, 2023 அன்று, இது சூரியனுக்கு மிக அருகில் 5.3 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 3 லட்சத்து 64 ஆயிரத்து 610 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. பார்க்கர் ஆய்வுக் கலம் இதுவரை சூரியனின் கரோனா பற்றிய மதிப்புமிக்க தகவல்களை நாசாவுக்கு அளித்துள்ளது.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரியனைப் பற்றிய தகவல்களையும், சூரியப் புயல்களைப் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.
பிபிசி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி2023 இந்த பதிவை விரும்பியுள்ளார்
சூரியனின் மையப்பகுதி எவ்வளவு சூடாக இருக்கும்? எவ்வளவு தூரம் வரை நெருங்க முடியும்?
செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்ச்சி செய்யும் தனது முதல் விண்வெளித் திட்டமான ஆதித்யா-எல்1 திட்டத்தை விண்ணில் செலுத்தவிருகிறது. இது, சூரியனின் வெளிமட்டப் பகுதியான ‘சோலார் கொரோனா’ எனப்படும் சூரியனைச் சுற்றியுள்ள மண்டலத்தில் நிகழும் இயற்பியல் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இந்த விண்கலம ஏழு கருவிகளைச் சுமந்து செல்லும். அவை சூரியனின் சுற்றுப்புறத்தில் இருக்கும் மின்காந்த மற்றும் அணுத்துகள் புலங்களை ஆய்வு செய்யும். இந்நிலையில் சூரியனைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். சூரியனைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். |
சூரியனின் வயது என்ன? சூரியன் எவ்வளவு பெரியது?
சூரியனின் வயது என்ன?
சூரியன் அடிப்படையில் ஒரு நட்சத்திரம். நமது சூரிய குடும்பத்தின் மத்தியில் இருக்கும் இந்த நட்சத்திரத்திற்கு சுமார் 450 கோடி ஆண்டுகள் வயதாகிறது.
சூரியன் எவ்வளவு பெரியது?
சூரியனின் சராசரி விட்டம் சுமார் 14 லட்சம் கிலோமீட்டர். இது பூமியின் விட்டத்தைவிட 109 மடங்கு பெரியது. சூரியனின் முழு கொள்ளளவை நிரப்புவதற்கு 13 லட்சம் பூமிகள் பிடிக்கும்.
சூரியன் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சூரியனின் மையப்பகுதி எவ்வளவு வெப்பமானது?
சூரியன் எவ்வளவு வெப்பமானது?
சூரியனின் மேற்பரப்பு 10,000 டிகிரி ஃபாரன்ஹைட் அளவுக்கு வெப்பமானது.
ஆனால் சூரியனின் மிகவும் வெப்பமான பகுதி அதன் மையக்கரு தான். அது 2.7 கோடி சிகிரிக்கும் மேல் வெப்பம் கொண்டது. இந்த வெப்பம் நியூக்ளியர் ஃப்யூஷன் எனப்படும் அணுக்கரு இணைவு செயல்பாடு நடக்க ஏதுவான சூழ்நிலையை சூரியனில் ஏற்படுத்தியுள்ளது.
சூரியன் எதனால் ஆனது?
சூரியன் முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது.
சூரியனின் சுழற்சி எத்தகையது?
சூரியனின் சுழற்சியைக் கணக்கிடுவது பூமியின் சுழற்சியைப் போல எளிதான காரியமல்ல. காரணம் சூரியன் திடமான ஒரு பந்து போலச் சுழல்வதில்லை.
வாயுக்களால் ஆன இதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேகத்தில் சுழல்கின்றன. சூரியனின் மத்தியப் பகுதி 25 நாட்களில் ஒரு சுழற்சியை முடிக்கிறது. அதுவே சூரியனின் இரு துருவங்களும் ஒரு சுழற்சியை முடிக்க 36 நாட்கள் பிடிக்கும்.
இதுவரை சூரியனை ஆய்வு செய்யச் சென்ற விண்கலன்கள் என்னென்ன?
இதுவரை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழகம் ஆகிய நிறுவனங்கள் விண்ணில் செலுத்தியிருக்கும் விண்கலன்கள் ஏற்கெனவே சூரியனை ஆய்வு செய்து வருகின்றன.
நாசாவின் Parker Solar Probe, Solar Dynamics Observatory, மற்றும் STEREO போன்றவை சூரியனை ஆய்வு செய்து வருகின்றன.
ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் Solar Orbiter, Solar and Heliospheric Observatory ஆகிய விண்கலன்கள் சூரியனை நெருக்கமாக ஆய்வு செய்து வருகின்றன.
இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் எது?
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசா விண்ணில் செலுத்திய ‘Parker Solar Probe’ என்ற விண்கலம்தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்றது. இது சூரியனை 62 லட்சம் கி.மீ தூரத்தில் இருந்து ஆய்வு செய்தது.
சூரியனின் அதீத வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இந்த விண்கலம் 11.4 சென்டிமீட்டர் தடுப்புக் கவசத்தால் மூடப்பட்டிருந்தது. இது 2,500 டிகிரி ஃபாரன்ஹைட் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும்.
-எல்1 சூரியனைச் சுற்றியுள்ள மண்டலத்தில் நிகழும் இயற்பியல் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும்
இந்தியா அனுப்பவிருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் எல்1 என்ற புள்ளியில் இருந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
L என்பது ‘லக்ராஞ்ஜ்’ என்பதைக் குறிக்கும்.
இரண்டு கோள்களுக்கு இடையிலுள்ள ஈர்ப்பு விசை, அவற்றின் மைய விலக்கு விசைக்குச் சமமாக இருக்கும் புள்ளிகளே லக்ராஞ்ஜ் புள்ளிகள் எனப்படும்.
இந்தப் புள்ளிகளில் விண்கலங்கள் குறைந்த எரிவாயுவைச் செலவிட்டு, ஸ்திரமான நிலையில் இருக்க முடியும்.
எந்த இரண்டு கோள்களுக்கும் ஐந்து லக்ராஞ்ஜ் புள்ளிகள் இருக்கும். இதில் ஒரு புள்ளி அவ்விரண்டு கோள்களுக்கும் இடையில் இருக்கும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் எல்1 என்ற புள்ளி சூரியனை ஆய்வு செய்வதற்கு எந்தத் தடைகளுமற்ற சிறந்த புள்ளியாகக் கருதப்படுகிறது.
இந்த எல்1 புள்ளி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கிறது. ஆனால், இந்த L1, L2 புள்ளிகளின் கச்சிதமான அமைவிடம் ஸ்திரமற்றவை.
அவை 23 நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். இதனால் இந்த இடத்தில் இருந்து இயங்கும் விண்கலன்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
பிபிசி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆதித்யா எல்-1 கவுன்ட் டவுன் தொடங்கியது
#ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணியளவில் தொடங்கியது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.
சூரியனின் புறவெளி ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, சுமாா் 1,475 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கிலோ மீட்டா் தொலைவில் ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இதில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டா் உள்பட ஏழு வித ஆய்வு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.
அந்தப் பகுதியில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சரிநிகராக இருக்கும். அதனால், அந்த இடத்தில் இருந்தபடி சூரியனின் புறவெளிப் பகுதியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.
உலகிலேயே அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய கூட்டமைப்புகளைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் நடவடிக்கையை நான்காவது நாடாக இந்தியா முன்னெடுத்துள்ளது. இதற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது.
பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து செப். 2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். |
நிலவுக்கு சந்திரயான் -3 விண்கலம் அனுப்பப்பட்டதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ தயாராக உள்ளது.
இதற்கான கவுண்ட் டவுன் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியுள்ள நிலையில் நாளை(செப். 2) காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சிறிய மாதிரியை வைத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக, சந்திரயான் -3 விண்ணில் செலுத்துவதற்கு முன்பும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சூரியனை ஆய்வு செய்யும் திட்டம்: இயக்குநராக தமிழ்ப் பெண்
: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி உள்ளார்.
சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (செப்.,2) காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது.
நிலவை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான் 3 திட்டங்களில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம் இருந்தது. சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான்2 திட்ட இயக்குநராக முத்தையா வனிதாவும் சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேலுவும் செயல்பட்டனர். அதேபோல், சூரியனை ஆய்வு செய்ய போகும் ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றி உள்ளார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேக் மீரான் - சைத்தூன் பீவி தம்பதியினரின் இரண்டாவது மகள் தான் நிகர்ஷாஜி. இவரது இயற்பெயர் நிகர்சுல்தான்.
1978 - 79 கல்வியாண்டில் செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தார். பிளஸ் 2 தேர்வில் 1980 - 1981ம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து 1982 முதல் 1986 வரை இளநிலை பொறியியல் படிப்பை பூர்த்தி செய்தார். பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்து, இஸ்ரோவில் சேர்ந்தார்.
தற்போது பெங்களூருவில் செட்டிலாகிவிட்ட நிஜர் ஷாஜி, பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார்.
நிகர் ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராகவும், மகன் முகமது தாரிக் நெதர்லாந்தில் விஞ்ஞானியாகவும் உள்ளார். மகள் தஸ்நீம் பெங்களூருவில் மருத்துவம் படித்து வருகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சூரியனை நோக்கி.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்.1
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று (செப்டம்பர் 2) காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்.1 விண்கலம் அனுப்பபட்டது. இது இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு திட்டமாகும்.
சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யவதற்கான ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று ஏவப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் எல்.1 புள்ளியில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும். இன்று ஏவப்பட்ட விண்கலம் 4 மாத பயணங்களுக்குப் பிறகு எல்.1 புள்ளியை அடைந்து ஆய்வு செய்யும்.
எதற்காக ஆய்வு?
ஆதித்யா எல்.1 விண்கலம் 7 பேலோடுகளை சுமந்து செல்கிறது. இது போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை எலக்ரோமேக்னடிக், துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க அனுப்பபடுகிறது.
சூரிய எரிப்பு, கொரோனல் மாஸ் எஜெக்ஷன் அல்லது பூமியை நோக்கி செலுத்தப்படும் சூரியக் காற்று போன்றவற்றால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகளை கண்டறிவதற்கு இந்த திட்டம் மிக முக்கியமானது என இஸ்ரோ கூறியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
- Code:
தற்போது பெங்களூருவில் செட்டிலாகிவிட்ட நிஜர் ஷாஜி, பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார்.
நிகர் ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராகவும், மகன் முகமது தாரிக் நெதர்லாந்தில் விஞ்ஞானியாகவும் உள்ளார். மகள் தஸ்நீம் பெங்களூருவில் மருத்துவம் படித்து வருகிறார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரேவதி2023புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 17/09/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தற்போது மற்றொரு ஆய்வுக் கலத்தை அனுப்பத் தயாராகி வருகிறது. இத்திட்டத்தில் சூரியனைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சந்திரயான்- 3 திட்டத்தின் மூலம் ஒரு ரோவர் மற்றும் லேண்டரை சமீபத்தில் விண்ணில் செலுத்திய இஸ்ரோ, ஆதித்யா எல்1 திட்டம் மூலம் சூரியனை ஆராய முயற்சித்து வருகிறது.
ஆதித்யா எல்1 விரைவில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இஸ்ரோ மேற்கொள்ளும் மிக முக்கியமான திட்டமாக ஆதித்யா எல்1 இருக்கப் போகிறது.சூரியனைப் பற்றி ஆராய்வதன் மூலம் என்ன பயன்?
நாம் வாழும் பூமியை உள்ளடக்கிய பிரபஞ்சம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இந்த நட்சத்திரங்கள் தொடர்ந்து ஒரு வகை ஆற்றலை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் எதிர்காலம் பற்றி அறிய நட்சத்திரங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும். பூமியில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை உருவாக்கி அவற்றின் நிலைமைகளை ஆராய்ச்சி செய்வது சாத்தியமற்றது.
எனவேதான் சூரியனை நேரடியாக ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ஆதித்யா எல்1 என்பது இஸ்ரோவின் சூரியனைப் பற்றி அறியும் சோதனையின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள, ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன. இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும்.சூரிய புயல்களை ஏன் கண்காணிக்க வேண்டும்?
சூரிய குடும்பத்தின் ஆற்றல் மூலமாக சூரியன் விளங்கிவருகிறது. சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள் இருக்கும். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. சூரியனில் தொடர்ச்சியான மைய இணைவு செயல்முறையால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தின் போது, அதிக அளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது.
சூரியனின் மையப்பகுதி கோர் என்று அழைக்கப்படும் நிலையில், அதன் மேற்பரப்பு குரோமோஸ்ஃபியர் என அழைக்கப்படுகிறது. அங்கு வெப்பநிலை 15 லட்சம் டிகிரி செல்சியஸாக இருக்கும். மையத்திலிருந்து விலகி மேற்பரப்புக்குச் செல்லச் செல்ல அதன் வெப்பநிலை குறைகிறது.
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ். இதிலிருந்து சூரியனைச் சுற்றியுள்ள பகுதி கொரோனா என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது இப்பகுதியை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேற்பரப்பில் இருந்து எல்லா திசைகளிலும் தொடர்ந்து உமிழப்படுகின்றன. சில சமயங்களில் சூரியனின் சில பகுதிகளில் தீவிர அணுக்கரு இணைவு நிகழ்வுகள் ஏற்பட்டு பெருமளவில் வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக உருவாகிறது.
இதுபோன்ற சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கினால், அதன் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் பூமியின் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் காரணமாக, இந்த சூரிய புயல்கள் நேரடியாக பூமியை அடைய முடியாது.
ஆனால் வானத்தில் உள்ள செயற்கைக்கோள்கள், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புக்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள், இது போன்ற சூரிய புயல்களால் நேரடியாக பாதிக்கப்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது அவசியம். ஆதித்யா எல்1 என்ன செய்கிறது என்பதற்கான மூலம் இதுதான்.ஆதித்யா எல்1 என்றால் என்ன? சூரியனை ஆராயும் முயற்சிக்கு ஏன் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டது?
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடு இந்தியா. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, சில நேரங்களில் தனித்தனியாகவும், சில சமயங்களில் கூட்டாகவும் விண்கலங்களை அனுப்பியுள்ளன. இப்போது ஆதித்யா எல்1-ஐ அனுப்புவதன் மூலம், அந்த திட்டங்களை இஸ்ரோ எதிர்கொள்ளப் போகிறது.
ஆதித்யா எல்1, சூரியனை ஆய்வு செய்வதற்கான ஒரு தனி முயற்சி. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில், இரு கோள்களின் ஈர்ப்பு விசை சரிசமாக இருக்கும் லெக்ரேஞசியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One)-ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த விண்கலம் செலுத்தப்படும்.
ஆகஸ்ட் 26-ம் தேதி அனுப்பி வைக்கப்படும் விண்கலம், நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு அதன் சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. பின்னர் இந்த விண்கலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த விண்கலம் மேற்கொள்வதால் அதற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள்.
சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்'-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால், இஸ்ரோ இந்த திட்டத்துக்கு ஆதித்யா எல்1 என்று பெயரிட்டுள்ளது.'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்' என்றால் என்ன?
சூரியன், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் என விண்வெளியில் ஏதேனும் இரண்டு விண் கோள்களுக்கு இடையே ஒரு பொருளை வைத்தால், எந்தக் கோளின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறதோ, அந்தக் கோளை நோக்கி அந்தப் பொருள் நகரும்.
ஆனால் அந்த இரண்டு கோள்களுக்கும் மையத்தில் இரண்டின் ஈர்ப்பு விசையும் பூஜ்ஜியமாக இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அவை லெக்ரேஞ்சியன் புள்ளிகள் (Lagrangian Points) என்று அழைக்கப்படுகின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன.
சூரியனையும் பூமியையும் இணைத்து ஒரு கோடு போட்டால், அந்த கோட்டில் பூமியின் பக்கம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கில் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 இருக்கும். அதற்குச் சமமாக பூமிக்குப் பின்னால் லெக்ரேஞ்ச் பாயிண்ட் 2 உள்ளது.
இதேபோல், சூரியனின் மறுபக்கம் லெக்ரேஞ்ச் புள்ளி 3 இருக்கிறது. ஜோசப் லூயி லெக்ரேஞ்சி என்ற பிரெஞ்சு வானியலாளர் இதைக் கண்டுபிடித்ததால் இந்த இடங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டையும் தவிர, இரண்டு கோள்களுக்கு வெளியே ஒரு சமபக்க முக்கோணத்தை வரைந்தால், அதன் இரண்டு முனைகளிலும் மேலும் இரண்டு லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கும். அவை L4 மற்றும் L5 என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றில், ஆதித்யா எல்1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ரேஞ்ச் பாயின்ட் 1 க்கு அருகில் உள்ள வெற்றிட சுற்றுப்பாதையில் நுழையப் போகிறது.லெக்ரேஞ்சியன் புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?
இந்த லெக்ரேஞ்சியன் புள்ளிகள் வானியல் ஆராய்ச்சி மற்றும் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்த புள்ளிகள் மிகவும் முக்கியமானவை.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் அதாவது சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திலும் ஈர்ப்பு விசை உள்ளது. ஒரு கோளின் ஈர்ப்பு விசை அதன் நிறையைப் பொறுத்தது. இதன் பொருள் சூரியன் மற்றும் வியாழன் போன்ற பெரிய கோள்களின் ஈர்ப்பு விசை அதிகமாக உள்ளது என்பதே ஆகும்.
பூமி, வெள்ளி, புதன் மற்றும் சந்திரன் போன்ற சிறிய கோள்கள் அவற்றை விட குறைவான ஈர்ப்பு விசை கொண்டவை. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86 சதவீதம் சூரியனில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து கோள்களின் நிறை 0.14 சதவீதம் மட்டுமே.
சூரியன் பூமியை விட 3 லட்சத்து 33 ஆயிரம் மடங்கு பெரியது. அதாவது 13 இலட்சம் கோள்கள் சூரியனுக்குள் வரக்கூடியவை. சூரியன் மிகவும் பெரியது. சூரியனின் ஈர்ப்பு விசை, பூமியை விட 27.9 மடங்கு அதிகம்.
ஆனால் சந்திரன் பூமியை விட சிறியதாக இருப்பதால், அங்குள்ள ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியை அடைய ஒரு ராக்கெட் 11.2 கிமீ/வி வேகத்தில் செல்ல வேண்டும். இதே போல் சூரியனின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்ல வினாடிக்கு 615 கிலோமீட்டர் வேகத்தில் மேலே செல்ல வேண்டும்.
எனவே இந்த இரண்டு ஈர்ப்பு விசைகளையும் சமநிலைப்படுத்தும் புள்ளியில் இருந்து சூரியனை ஆராய ஆதித்யா எல்1 போன்ற விண்கலங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கும் போது இஸ்ரோ ஏன் புள்ளி ஒன்றைத் தேர்வு செய்தது?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன. ஆனால் இஸ்ரோ ஆதித்யா L1 ஐ லெக்ரேஞ்ச் பாயின்ட் 1க்கு அருகில் அனுப்புகிறது. ஏனெனில் இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் பத்தில் ஒரு பங்காகும். அதாவது சுமார் ஒன்றரை கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
L2 புள்ளி பூமிக்கு பின்னால் இருப்பதால், அங்கிருந்து சூரியனை ஆராய்ச்சி செய்வது கடினமாக இருக்கும். L3 சூரியனுக்குப் பின்னால் இருப்பதால் அங்கு செல்வதும் மிகவும் கடினம்.
L4 மற்றும் L5 ஆகியவை தொலைவில் உள்ளன. எனவே இஸ்ரோ தனது விண்கலத்தை எல்1 புள்ளிக்கு அருகில் அனுப்புகிறது. மேலும் L1-ல் நிலையான ஈர்ப்பு விசை இருப்பதால் அது பூமியினாலோ, சூரியனாலோ ஈரத்துக்கொள்ளப்படும் நிலை ஏற்படாது. இதுமட்டுமின்றி சூரியனின் மேற்பரப்பை ஆராய இந்த L1 புள்ளி தான் மிகச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக பூமியில் பல சூரிய ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஆனால் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சூரியனின் முழு அளவையும் அவைகளால் ஆய்வு செய்ய இயலாது. குறிப்பாக சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய, பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லவேண்டும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைந்துள்ள லெக்ரேஞ்சியன் பாயின்ட் 1-ற்கு அருகில் உள்ள ஆய்வுக் கலங்கள் ஒவ்வொரு கணமும் சூரியனை நேரடியாகப் பார்க்க முடியும். அவற்றிற்கும் சூரியனுக்கும் இடையில் எந்த தடுப்பும் இல்லை.
சூரியனில் இருந்து வரும் சூரியப் புயல்களை அவை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1ல் ஏழு வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு கருவிகள் தொடர்ந்து சூரியனை பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.
மற்ற மூன்று கருவிகள் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 அருகே உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அந்த தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பும். இந்த ஏழு கருவிகள் முக்கியமாக சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கே இருந்து பெரிய அளவில் வெளிப்படும் நிறை (Mass) போன்ற பல விஷயங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். மேலும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களையும் பகுப்பாய்வு செய்யும்.
சூரியனின் மேற்பரப்பை ஆராயும் போது, அங்கு வெப்பம் உருவாகும் வழிமுறை, அங்கிருந்து வெளியேறும் நிறை (Mass) - அதன் வேகம், சூரியனைச் சுற்றியுள்ள காந்தப்புலம், அவற்றின் இயக்கவியல் போன்ற பல்வேறு விஷயங்கள் கருத்திக்கொள்ளப்படும். இதற்காக, சக்திவாய்ந்த பல்வேறு கருவிகளும் ஆதித்யா எல் 1-ல் நிறுவப்பட்டுள்ளன.
இவை தவிர, ஆதித்யா சூரியப் புயலின் துகள் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றின் முடிவுகளை இஸ்ரோவுக்கு அனுப்பும்.லெக்ரேஞ்சியன் புள்ளிகள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் மட்டும் தான் உள்ளனவா?
இந்த லெக்ரேஞ்சியன் புள்ளிகள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் மட்டும் இருப்பவை அல்ல. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த இரண்டு கோள்களுக்கும் இடையில் ஈர்ப்பு விசை சமமாக உள்ள இடங்கள் லெக்ரேஞ்சியன் புள்ளி எனப்படும். சூரிய குடும்பத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருப்பது போல, அனைத்து கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையிலும் இதே போன்ற லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கின்றன.
சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் L4 மற்றும் L5 புள்ளிகளில் பல சிறுகோள்கள் நிலையாக உள்ளன. 1906 ஆம் ஆண்டு இந்த இடத்தில் சிறுகோள்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், இது போன்ற 12,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், L4 புள்ளிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் இலியட் சிறுகோள்கள் (Iliad asteroids) என்றும், L5க்கு அருகில் உள்ள சிறுகோள்கள் ட்ரோஜன் சிறுகோள்கள் (Trojan asteroids) என்றும் அழைக்கப்படுகின்றன.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே L4 புள்ளிக்கு அருகில் இரண்டு ட்ரோஜன் சிறுகோள்களும் உள்ளன. அதேபோல், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள L1-க்கு அருகில் சீனா தனது ஷாங்கி விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்துவருகிறது.
அதேபோல், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கயா தொலைநோக்கியும், ஐரோப்பிய - அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான ஜேம்ஸ் வெப் விண்கலமும் சூரியனின் L2 லெக்ரேஞ்ச் பாயின்ட் அருகே உள்ள பகுதிகளை ஆய்வு செய்துவருகின்றன.
இவை சூரியனின் L2 அதாவது பூமிக்கு பின்னால் இருப்பதால், இந்த தொலைநோக்கிகளை பூமி சூரியப் புயல் தாக்குவதிலிருந்து தடுக்கிறது. இவற்றின் மீது சூரியப் புயல் தாக்கம் இருக்காது என்பதால் அது பிரபஞ்சத்தை வெகுதொலைவுக்கு உற்றுநோக்கமுடியும்.
ஆனால் லெக்ரேஞ்சியப் புள்ளி 1,2,3 இல் அமைந்துள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் நிலையற்றவை. அதனால்தான் ஒவ்வொரு 21 நாட்களுக்கும் ஒரு முறை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எரிபொருளை உட்கொண்டு அதன் நிலையை மாற்றிக்கொள்கிறது.சூரியனுக்கு மிக அருகில் செல்ல முடியுமா?
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது, அந்த நிலையில் எந்த உயிரும் வாழ முடியாது. ஆனால் சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனாவைக் கண்காணிக்க பல ஆய்வுக் கலங்கள் சூரியனுக்கு அருகில் பறந்தன.
நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் ஆய்வு செய்யவிருக்கும் விண்கலமாகும். 2018 இல் இந்த விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து, ஜூன் 27, 2023 வரை சூரியனை 16 முறை வெற்றிகரமாகச் சுற்றியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பார்க்கர் ஆய்வுக் கலம், சூரியனின் ஈர்ப்பு விசைக்கு உள்ளாகாமல் ஒரு நிலையான நீண்ட வட்டப்பாதையில் நகர்வதற்கு வீனஸ் கோளின் ஈர்ப்பு விசைக்கு எதிராக சமநிலைப்படுத்துகிறது.
இருப்பினும், ஜூன் 22, 2023 அன்று, இது சூரியனுக்கு மிக அருகில் 5.3 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 3 லட்சத்து 64 ஆயிரத்து 610 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. பார்க்கர் ஆய்வுக் கலம் இதுவரை சூரியனின் கரோனா பற்றிய மதிப்புமிக்க தகவல்களை நாசாவுக்கு அளித்துள்ளது.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரியனைப் பற்றிய தகவல்களையும், சூரியப் புயல்களைப் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.பிபிசி
நல்ல பதிவு தெளிவான விளக்கம்!!!! நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
ஒரு வரி கருத்துக்கூற ஒரு முழு பக்கமளவு மேற்கோள் காண்பிப்பதை தவிர்க்கலாம் சகோதரி.
இது அவசியம் இல்லை .
புதியவர் என்பதால் எந்தன் பரிந்துரை
@ரேவதி2023
இது அவசியம் இல்லை .
புதியவர் என்பதால் எந்தன் பரிந்துரை
@ரேவதி2023
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சூரியனை பற்றி ஆராய ஆதித்யா செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்
» இஸ்ரோவின் 2020 புத்தாண்டு இலக்குசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்
» செவ்வாய்க் கிரகத்துக்கு அக். 28-ல் விண்கலம்:இஸ்ரோ தீவிரம்
» 2013 - ல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு
» முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி
» இஸ்ரோவின் 2020 புத்தாண்டு இலக்குசூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்
» செவ்வாய்க் கிரகத்துக்கு அக். 28-ல் விண்கலம்:இஸ்ரோ தீவிரம்
» 2013 - ல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு
» முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|