by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
மந்திரங்கள்
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மந்திரங்கள் சொல்லி தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்துமா?
இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே.
மந்திரங்களின் பின் உள்ள அறிவியல்
சரி. தற்போது நாம் சிந்தித்து கொண்டிருக்கும் முறையில் என்ன பிரச்னை?
மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது நமது மனதை குணப்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
நமது மனது 24 மணி நேரத்தில் 60 ஆயிரம் எண்ணங்களை நினைத்துக் கொண்டிருக்கும்.
ஒரு குரங்கைப் போல நமது மனது ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கு தாவாமல் இருப்பதற்கு இந்த மந்திரங்கள் உதவி செய்யும்.
நாம் எப்போதும் ஏதோ ஒரு வாழ்க்கைத் தரத்தை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்ஸ்டாகிராமையும், ஃபேஸ்புக்கையும் நிஜ உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். என்ன வென்றே தெரியாத ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த மந்திரங்கள் நமது ஆணிவேருடன் நம்மை இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மந்திரம் என்னும் பாதுகாப்பு கவசம்
சமஸ்கிருதத்தில் 'மந்த்ரா' - மன் என்றால் மனது; 'த்ரா' என்றால் கருவி என்று பொருள். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மந்திரங்கள் பணி செய்கின்றன.
"என்னுடைய இளம் வயதில் எனக்கு மந்திரங்கள் பழக்கமானது மற்றொரு பக்கம் நமது மானிட இருப்பின் இன்றியமையாத ஒன்று சத்தம். அதாவது நாம் பேசும் வார்த்தைகள் நமது உலகை உருவாக்கும் அல்லது உடைக்கும். வார்த்தைகளால் இது இரண்டுமே சாத்தியம்," என்கிறார் ஓம் ஸ்வாமி. இவர் தி ஏன்ஷியண்ட் சயின்ஸ் ஆஃப் மந்த்ராஸ் என்னும் புத்தகத்தை எழுதியவர்.
"ஒருவரிடம் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று கூறி அதன்படி நடந்து கொண்டால், இந்த மொத்த உலகமும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும். 'மனது' என்ற பூ பூத்தவுடன் ஒருவரின் வாழ்வில் அழகு கூடிவிடுகிறது. மனம் எனும் பூ வாடினால் நாம் சோர்ந்து போகிறோம். இந்த உலகில் இருந்து மறைந்துவிடப் பார்க்கிறோம். எனவே மந்திரங்கள் உங்கள் மனதிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது. தேவையில்லாத எண்ணங்களிலிருந்து உங்கள் மனதைக் காக்கிறது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
ஆய்வு சொன்ன தகவல்
ரோசலின் மற்றும் அவர் உடன் பணிபுரியும் மரியா, இந்த 'மந்த்ரா தியானம்' அறிவியல் ரீதியாக பயன் கொடுக்குமா என்பதை நிரூபிக்க முடியுமா என்று பார்த்தார்கள்.
பெண்கள் அமைதியான மந்திரங்களை சொல்லும்போது அவர்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வில் ஈடுபட்டார் மரியா. ரோசலின் அதன் விளைவுகளை ஆராய்ந்தார்.
"இரண்டு வார காலத்தில் திரும்ப திரும்ப மந்திரங்களை சொல்லும்போது மூளையின் அந்த டீஃபால்ட் மோட் நெட்வொர்க் பகுதி அமைதியானது," என்கிறார் ரோசலின்.
எனவே மந்திரங்களை சொன்னவர்கள், தங்களைத் தாங்களே எடைபோட்டுக் கொள்ளும் பழக்கம் குறைந்ததாக தெரிவித்தனர்.
அதேபோல ஒரு பணி குறித்த அவர்களின் நினைவாற்றலும் அதிகரித்தது. ஓம் ஸ்வாமி, தனது வாழ்நாளில் 15 ஆயிரம் மணி நேரங்களை மந்திரங்கள் ஓதவும், தியானம் செய்யவும் செலவிட்டார்.
2018ஆம் ஆண்டு அவரின் மூளையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது அவர் தனது மனதை இயல்பைக் காட்டிலும் அமைதியாக வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவர் என்பது தெரியவந்தது.
தியானத்தை எப்படி தொடங்க வேண்டும்?
"ஒரு நல்ல மந்திரம் ஒரு சிறிய கடிதத்தை போன்று இருக்கலாம். அல்லது ஆயிரம் சொற்களை கொண்டதாகவும் இருக்கலாம். இதை நாம் மாலை மந்திரம் என்போம். அதாவது மணியால் ஆன மாலையை கொண்டு மந்திரம் ஓதுவது. மந்திரம் என்பது சொற்களின் அழகான வடிவமைப்பு," என்கிறார் ஓம் ஸ்வாமி.
"நீங்கள் என்ன வாக்கியத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதும்தான். அது சத்தமும் அமைதியும் கலந்தது. அமைதியை கொண்டு ஓசைக்கு அழகு சேர்ப்பது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
மந்திரங்களை சொல்ல நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
"எந்த மொழியிலும் மந்திரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, ஒரு 6 மாத காலத்தில் அது நரம்பியல் பாதையை உருவாக்கும். 'இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி' என்றும் நீங்கள் சொல்லலாம். ஆங்கிலத்திலும் கூட அது இருக்கலாம்.
ஆனால் நீங்கள் பாரம்பரிய முறையை தேர்ந்தெடுப்பவராகவோ அல்லது மந்திரங்கள் மூலம், உங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த விரும்பினாலோ நீங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் உங்கள் தியானத்தை தொடங்கலாம்" என்கிறார் ஓம் ஸ்வாமி.
"அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது உங்கள் தோள்களை தட்டி, 'வாவ் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது' என்று தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம், அந்த ஆற்றலை சேகரிக்கத் தொடங்கும்போது உங்கள் மூளை அதைக் குறித்து வைத்து கொள்ளும். சில நாட்கள் கழித்து நீங்கள் சோர்வாக இருக்கும்போது, உங்கள் தோள்களைத் தட்டினால், அனைத்தும் சரியாக உள்ளது என உங்கள் மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பப்படும்" என்கிறார் அவர்.
நீங்கள் முயன்றால், நமது எதிர்பார்ப்புகளிடமிருந்து மந்திரங்கள் நம்மை விடுவிக்கும் என்பதும் மந்திரங்கள் குறித்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
"புத்தா என்றால் விழித்தல், அவர் நாம் நமது வாழ்நாள் முழுவதும் நமது ஆசைகள் மூலமும், தேவைகள் மூலமும் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். நாம் நம் மீதும் பிறர் மீதும் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புகள் மூலம் பிணையப்பட்டு அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் குற்ற உணர்ச்சியிலோ அல்லது கோபத்தாலோ சூழப்படுகிறோம்," என்கிறார் ஓம் ஸ்வாமி.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். எனவே நான் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பது மிக அவசியம். நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் மூளை அமைப்பும் மாறுகிறது. காலப்போக்கில் அதன்படியே செயல்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
லக்ஷ்மீபதே கமலனாப ஸுரேஶ விஷ்ணோ
யஜ்ஞேஶ யஜ்ஞ மதுஸூதன விஶ்வரூப
ப்ரஹ்மண்ய கேஶவ ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் ||
லட்சுமியின் தலைவனே, தாமரைப் போன்ற நாபிக்கமலத்தை உடையவனே, தேவர்களின் தலைவனே, எங்கும் நிறைந்தவனே, யாகங்களின் அதிபதி என துதிக்கப்படும் லட்சுமி நரஸிம்மா, இந்த பிறவிப் பெருங்கடலிலிருந்து எனை கைக்கொடுத்து காப்பாயாக.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்||
முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மகுடம் உடையவளும், முழுமதியைப் போன்ற முகம் உடையவளும்,கிண்கிண் என ஒலிக்கும் சிலம்புகளை அணிந்தவளும்,தாமரைப்போன்ற அழகு உடையவளும்,அடியவரின் ஆசைகளை அருள்பவளும், மலைமகள்-கலைமகள்-அலைமகளால் வணங்கப்படுபவளும், கருணைக்கடல் ஆனவளுமான மீனாட்சியை வணங்குகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர் அடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸத்யக்ஞான ஸுகஸ்வரூப அமலம் க்ஷீராப்தி மத்யஸ்திதம்
யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம்
த்ரயக்ஷம் சக்ர பினாகஸா பயவரான் பிப்ராண மர்கச்சவிம்
சத்ரீபூத பணீந்த்ர இந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே||
மெய்ப்பொருளானவரும் களங்கமற்றவரும் யோகநிலை தரித்தவரும் சந்திரனைப்போன்ற பிரகாஸமான முகம் உடையவரும் சூரியன்-சந்திரன்-அக்கினி ஆகிய முக்கண்களை உடையவரும் சக்கரம் மற்றும் பினாகம் எனும் வில்லை கைகளில் ஏந்தியவரும் அபயவரம் அளிப்பவரும் ஆதிசேஷனைக்குடையாக கொண்ட லக்ஷ்மீ நரசிம்மரை வணங்குகின்றேன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பரித்ராணாய ஸாதூநாம்
விநாஶாய ச துஷ்க்ருதாம்|
தர்மஸம்ஸ்தாபநார்தாய
ஸம்பவாமி யுகே யுகே||
சாதுக்களைக் காப்பதற்காகவும், பாவச்செயல்கள் செய்கிறவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும், நான் யுகந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸதாம்போதி வாஸம் கலத்புஷ்ப ஹாஸம்
ஜகத்ஸன்னி வாஸம் ஷதாதித்ய பாஸம்
கதாசக்ர ஷஸ்த்ரம் லஸத்பீத வஸ்த்ரம்
ஹஸசாரு வக்த்ரம் பஜேஹம் பஜேஹம்||
பாற்கடலில் குடிகொண்டவரும், மலர்ந்த புஷ்பம் போன்ற புன்சிரிப்பைக் கொண்டவரும், உலகம் முழுவதையும் வியாபித்திருப்பவரும்,நூறு சூரியன்களை மிஞ்சும் ஒளி படைத்தவரும், கதை-சக்கரம் ஆகிய ஆயுதங்களை தரித்தவரும், மஞ்சள் ஆடை அணிந்தவரும்,அமைதியான புன்சிரிப்பும் உடைய அந்த பரம்பொருளை வணங்குகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மௌன வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்
வர்ஷிஷ்டாந்தேவ ஸத்ரிஷிகணைராவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரமானந்த ரூபம்
ஸ்வாத்மாராமம் முதித வதனம் தக்ஷிணாமூர்த்திமீடே ||
மௌனத்தின் மூலம் பரப்பிரம்ம தத்துவத்தை விளக்கும் நிலையில், இளமை தோற்றத்துடன்,வயதில் முதிர்ந்த முனிவர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்டு,தென்திசை நோக்கி அமர்ந்து தனது கரத்தில் சின்முத்திரை காண்பித்து,ஆனந்த நிலையில் புன்முறுவலுடன் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|