புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!




சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 7:06 pm

வணக்கம் ஆளுங்க !

உங்களின் இந்த மாதிரியான பதிவுகள் மிகுந்த வரவேற்பு செய்ய பட வேண்டியது. அப்போதுதான் வலி மிகு இடங்கள் ,, வலிமிகா இடங்கள் பற்றி நாங்கள் அறிந்துகொள்ள முடியும். எனக்கு பதில் தெரியவில்லை.

சதாசிவம் அவர்கள் வந்தால் நிச்சயம் பதில் கூறுவார். நன்றி !



சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Thank-you015
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Oct 21, 2011 7:10 pm

வாழ்த்துக்கள் என்பதே சரி...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 21, 2011 7:38 pm

வாழ்த்துக்கள் என்பதே சரி என கருதுகிறேன் புன்னகை

வாழ்த்துகள் என்பது வாழ்த்து +கள் என்றாகி, கள்ளை(toddy) வாழ்த்த வேண்டிய நிலைக்கு உங்களை கீழேதள்ளி விடுமோ என்ற ஐயம் எனக்கு உண்டாகிறது. என்றாலும், நன்றாகத் தமிழ் அறிந்த நண்பர் சதாசிவம் போன்ற தமிழ் அறிஞர்களின் அறிவுரையைக் கேட்டு தெரிந்துகொள்வதில் தவறு இல்லை என்பது என் கருத்து.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 22, 2011 1:49 pm

அருமையான திரியைத் தொடங்கிய ஆளுங்க அவர்களுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்த அய்யம்பெருமாளுக்கும் , சுந்தர ராஜ் ஐயா அவர்களுக்கும் முதற்கண் நன்றி.

இந்த கேள்வி கேட்கும் வரை, நானும் வாழ்த்துக்கள் தான் சரியான உச்சரிப்பு என்று எண்ணி இருந்தேன். இந்த கேள்விக்கு பிறகு நேற்று இணையதளத்தில் தேடியும், இலக்கண புத்தகத்தில் படித்ததையும் உறவுகளுடன் பகிர்வதில் மகிழ்வுருகிறேன். இதே கேள்வி பல இடங்களில் கேட்கப்பட்டும் பதில் முழுமையாக இல்லை. என்னால் இயன்ற அளவுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல விழைகிறேன், தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.

வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.

தமிழில் விருப்பம் இருப்பவர்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கீழ்வரும் விவரங்களை எழுதுகிறேன்.

தமிழ் இலக்கணம் அடிப்படையில் எழுத்துத்ததிகாரம், சொல் அதிகாரம், தொடர் மொழி அதிகாரம் என்று மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

தமிழ் எழுத்துக்கள் உயிர், மெய் , நெடில், குறில், வல்லினம் இடையினம், மெல்லினம் என்று பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

இந்த கேள்விக்கு குற்றியலுகரமும், புணர்ச்சி விதியும் அறிந்து விடை அறிவது தான் சாலச் சிறந்தது, அது இது போன்ற வேறு கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை காண உதவும். ஆதலால் அவற்றை மேலும் விவரிக்கிறேன்.

ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகார எழுத்து தன் இயல்பான கால அளவில் இருந்து குறைந்து ஒலிப்பது. அதாவது ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக ஒலிப்பது. (கு, சு, டு, து, வு போன்ற எழுத்துகள் உகார எழுத்துகள் ஆகும்) குற்றியலுகரம் ஆகும். இந்த குற்றியலுகரத்தில் கடைசியில் வரும் உகார எழுத்துகள் முன் வரும் எழுத்தை வைத்து இது ஆறு வகைப்படுகிறது. அவை

நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : ஆடு , நாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

தனிக் குறில் உடன் வரும் உகார எழுத்துகள், தன் இயல்பான ஓசை அளவை விட அதிகமாக ஒலிக்கும், இவை (யும்) முற்றியலுகரம் என்று கூறப்படும்.
உதாரணம் : பசு, வசு, கொசு, கடு, வடு, பரு, மரு, திரு, உரு, கணு, மனு, தெரு

புணர்ச்சி அடிப்படையில் விகாரப் புணர்ச்சி, அதாவது ஒரு சொல்லும், வேறு ஒரு சொல்லும் இணையும் போது புதிதாக ஒரு எழுத்து தோன்றல், திரிதல் அல்லது கெடுதல் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி, இல்லையேல் இயல்பு புணர்ச்சி ஆகும்.

நிலைமொழி வன் தொடர் குற்றியலுகரமாக இருந்து வரும் மொழி வினைஎச்சத்தின் முன் வரும் வலி மிகும், அது போல் ஈறு கேட்ட எதிர்மறைச்சொல் முன் வரும் வலி மிகும்.
உதாரணம் :
எடுத்து +கொடுத்தான் = எடுத்து க் கொடுத்தான்
அடித்து + கொன்றான் = அடித்து க் கொன்றான்
படித்து + கற்றான் = படித்துக் கற்றான்
படித்து + சென்றாள் = படித்துச்சென்றாள்
சுவைத்து + பார்த்தேன் = சுவைத்துப் பார்த்தேன்.
உண்ணா (து) + போனான் = உண்ணாப்போனான்

இதற்கு மாறாக வரும் மொழியில் வலி வராது போனால் அங்கே ஒற்று மிகாது.
உதாரணம் :
துவைத்து + வைத்தான் = துவைத்து வைத்தான்.
மடித்து + வைத்தான் = மடித்து வைத்தான்.

அது போல் வினைச் எச்சம் சொல் இல்லாத இடங்களில் வரும் போது ஒற்று மிகாது.

தனிக்குறில் முற்றியலுகரம் ஒற்று மிகும்.

இனி உங்கள் பார்வைக்கு


முத்து = முத்துகள்
சொத்து = சொத்துகள்
சிறகு = சிறகுகள்
வாழ்த்து = வாழ்த்துகள்
கழுகு = கழுகுகள்
பசு = பசுக்கள்
பரு = பருக்கள்
மரு = மருக்கள்
தெரு = தெருக்கள்
கணு = கணுக்கள்
கொசு = கொசுக்கள்
கயிறு = கயிறுகள்
உறவு = உறவுகள்
மரபு = மரபுகள்
படகு = படகுகள்
ஆடு = ஆடுகள்
மாடு = மாடுகள்
விலங்கு = விலங்குகள்
கதவு = கதவுகள்
கழிவு = கழிவுகள்
வரவு = வரவுகள்
செலவு = செலவுகள்.
நாற்று = நாற்றுகள்

எண் மற்றும் திசையில் (ஒன்று, இரண்டு, வடக்கு, கிழக்கு ) உள்ள உகார புணர்ச்சி இதில் அடங்காது.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 1:58 pm

அருமையான விளக்கம் வாழ்த்துகள் சதாசிவம் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 22, 2011 2:07 pm

வாழ்த்துகள் - இது தான் சரி - இது மேலே சொல்லப் பட்டு விட்டாலும் நான் தெரிந்து கொண்டது எப்படி என்றால் -
இயக்குனர் சீமான் அவர்கள் மாதவனை வைத்து ஒரு படம் எடுத்து இருந்தார்.படத்தின் பெயர் வாழ்த்துகள் - முதலில் அது வாழ்த்துக்கள் என்று தான் இருந்தது, அப்போது கலைஞரை அவர் சந்தித்து இது பற்றி பேசும் போது கலைஞர் அவர்கள் வாழ்த்துகள் என்பது தான் சரி யானவை - இடையில் க் வந்தால் அது கள்ளுடன் சேர்ந்து வரும் வார்த்தையாகி விடும் என்று விளக்கமளித்தார்.

அன்றிலிருந்து நானும் அதை தெரிந்து கொண்டேன்.அன்றிலிருந்து நான் எழுதுவதும் அப்படித்தான்

விரிவாக நிறைய விளக்கம் அளித்த திரு.சதாசிவம் அவர்களுக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Image010ycm
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 2:23 pm

சதாசிவம் wrote:அருமையான திரியைத் தொடங்கிய ஆளுங்க அவர்களுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்த அய்யம்பெருமாளுக்கும் , சுந்தர ராஜ் ஐயா அவர்களுக்கும் முதற்கண் நன்றி.
வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்

நன்றி சதாசிவம் அய்யா !

வாழ்த்துகள் என்பது என்ன வகையான சொல் என்பதையும் தெரிவித்திருந்தால் பயன்படும். நன்றி ! புதுவரவுடன் கொண்டாடும் தங்களின் தீப ஒளி திருநாளுக்கு வாழ்த்துகள் !




சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 2:31 pm

உண்மையாக இதை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி...உங்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துகள்...
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 2:46 pm

kitcha wrote:
இயக்குனர் சீமான் அவர்கள் மாதவனை வைத்து ஒரு படம் எடுத்து இருந்தார்.

நன்றி கிட்சா ! இதே படத்தில் இன்னும் நிறைய தகவல்களை கூறியிருப்பார்கள் !

உதாரணமாக ..கடிகார கடைகளில் 10.10 நேரம் வைப்பதற்கு ஒரு காரணம் கூறுவார்கள். அதையும் கூறினால் நன்று.



சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக