ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 12:08 am

» பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
by ரா.ரா3275 Today at 12:07 am

» ஹைக்கூ !!!
by அசுரன் Yesterday at 11:51 pm

» அறிமுக வணக்கம்
by அசுரன் Yesterday at 11:47 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Yesterday at 11:40 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரா3275 Yesterday at 11:38 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by ரா.ரா3275 Yesterday at 11:26 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by ரா.ரா3275 Yesterday at 11:22 pm

» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Yesterday at 11:10 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Yesterday at 11:06 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Yesterday at 11:02 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Yesterday at 10:58 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Yesterday at 10:32 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Yesterday at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Yesterday at 9:49 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Yesterday at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Yesterday at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Yesterday at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Yesterday at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Yesterday at 9:05 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Yesterday at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Yesterday at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Yesterday at 8:15 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Yesterday at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Yesterday at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Yesterday at 7:27 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Yesterday at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Yesterday at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Yesterday at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Yesterday at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Yesterday at 6:53 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Yesterday at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Yesterday at 5:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Yesterday at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Yesterday at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Yesterday at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Yesterday at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Yesterday at 1:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கலைவேந்தனின் கவிதைகள்....!

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Thu Feb 04, 2010 9:31 pm

[You must be registered and logged in to see this image.]

மன்னித்தருள்வாயா தேவி...?


செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!


Last edited by கலை on Thu Mar 03, 2011 8:50 pm; edited 10 times in total

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by சிவா on Thu Feb 04, 2010 9:41 pm

மிகவும் அருமையான கவிதை கலை!!!



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 787313 | உறுப்பினர்கள்: 15335 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: SKS

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by kalaimoon70 on Thu Feb 04, 2010 10:03 pm

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

செந்தமிழ் கொண்டு படைத்த கவி ஒன்று
சிங்க நடை போடுகிறது கலை என்று
சொல்வதில் உண்மை உண்டு

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by சிவா on Thu Feb 04, 2010 10:10 pm

kalaimoon70 wrote:தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

செந்தமிழ் கொண்டு படைத்த கவி ஒன்று
சிங்க நடை போடுகிறது கலை என்று
சொல்வதில் உண்மை உண்டு


கவிஞர்களாக இணைந்து கலக்குறீங்க!!! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 787313 | உறுப்பினர்கள்: 15335 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: SKS

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by nandhtiha on Thu Feb 04, 2010 10:11 pm

வணக்கம்
ஒவ்வொரு வரியும் தித்திக்கும் தேன். வேறென்ன சொல்வதற்கு.
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1586
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by இளமாறன் on Thu Feb 04, 2010 10:27 pm

அருமையான கவிதைகள்
நல்ல கவிதை இனிமை...
இன்னும் முயற்சி செய்யுங்கள்.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by Tamilzhan on Thu Feb 04, 2010 10:29 pm

[You must be registered and logged in to see this image.]

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7953
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Sat Feb 06, 2010 9:29 pm

வாசித்த ரசித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by தண்டாயுதபாணி on Sat Feb 06, 2010 9:33 pm

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!


கவிதை இனிமை... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

தண்டாயுதபாணி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by செந்தில் on Sat Feb 06, 2010 9:44 pm

அருமையான கவிதைகள்

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Sat Feb 06, 2010 9:46 pm

நன்றி தண்டாயுதபாணி மற்றும் செந்தில் அவர்களே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by செந்தில் on Sat Feb 06, 2010 9:47 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Sat Feb 06, 2010 10:14 pm

மகிஷாசுர மர்த்தினியின் அயிகிரி னந்தினி கேட்டிருப்பிங்க தானே?
அந்த மெட்டில் நான் எழுதிய பாடல் ஒன்று!
பொதுவாய் நான் கடவுளைப்பற்றி பாடியது குறைவு!
இந்த பாடல் எப்படின்னு சொல்லுங்க!


[You must be registered and logged in to see this image.]

அன்னையே வணங்குகிறேன்!

அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------(1)


கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!-----------------------(2)


ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!----------------------------(3)

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 2:38 am

அன்னையே வணங்குகிறேன்!

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Tue Feb 09, 2010 11:03 pm

வாசித்தமைக்கும் பாராட்டியமைக்கும் ( ? ).... நன்றிங்கப்பு...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum