புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
3 Posts - 3%
manikavi
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
1 Post - 1%
Baarushree
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
216 Posts - 42%
heezulia
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
6 Posts - 1%
manikavi
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
4 Posts - 1%
prajai
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_m10தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியின் பொதுமைப்பண்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 10, 2010 12:31 am

புரவலர் இல்லாமையினாலே
புலவர்களும் இல்லாது
போவர். குளிர்ந்த
ஆற்றங்கரையிலே பகன்றைக்
கொடி பூத்துத் தேன்
பிலிற்றுகின்றது. அதனைத்
பறித்துத் தலையிலே சூடிக்
கொள்கிற யாரும் இல்லை.
எத்தனை மலர்கள்
பூத்தென்ன? அணிவார்
இல்லாமையால் அம்மலர்கள்
பயனற்றனவே.


உலக மொழிகளில் வேறுபட்ட இலக்கியங்களில் காணப்படும் உறவை இணைத்துக் காட்டலே ஒப்பிலக்கிய இயலின் நோக்கம் என்றார் ஆஸ்கர் ஜெ. கம்பெல். இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் சிந்தை கவரும் பான்மையின் சிறந்து விளங்குவனவே ஆகும். எப்படிக் கனிவான புன்சிரிப்புக்கும், காதல் கனிந்த பார்வைக்கும், அப்படியே இதயத்தை அள்ளி எடுத்துக் கொள்ளும் குழந்தையின் குதூகலத்திற்கும், கப்பிய துயரைக் காட்டி நிற்கும் கண்­ருக்கும், மொழி வேறுபாடோ, இனவேறுபாடோ இல்லையோ, அப்படியே நல்ல இலக்கியங்களும் மொழி - சமய - இன - அரசியல் - நாட்டு எல்லைகளைத் தகர்த்தெறிந்து மானிடத்தை மகத்துவப்படுத்தும் வல்லமை கொண்டிலங்கும்.

அப்படிப் பல மொழி இலக்கியங்களில் பரவலாகக் காணப்படும் சிலநயமான பகுதிகளை உவமைகள் - சிந்தனைகளால் ஒத்த பகுதிகளைப் பற்றிச் சற்றுக் காண்போம்.

கோவலனுடன் மதுரைக்குச் செல்லும்போது, நாடுகாண் காதையிலே வழிக்கொண்ட பாதையில் வளங்களையெல்லாம் பார்த்தவாறே நடந்து வருகிறாள் கண்ணகி. நீர்பெருகிய வயல்களிலே புதுப் பயிரை நடுவதற்காக உழவர் பெருமக்கள் உழத் தொடங்குகிறார்கள். இவ்வாறு தொடங்குகின்ற புதிய உழவினைத் தலைமை தாங்கி நடத்துகின்ற ஏரை "பொன்னேர்" என்றும் "புத்தேர்" என்றும் வழங்குவது மரபு. அதனை அருகம் புல்லாலும், குவளை மலராலும் தொடுக்கப்பட்ட மாலையால் அழகு படுத்துவார்கள். அனைவரும் கூடி அகமகிழ்வு பொங்க இசைத்தமிழால் ஏர் மங்கலம் பாடுவார்கள்.

அவர்களின் ஏர் முனையில் கட்டி பட்டுக் கிடந்த பூமிப்பந்தின் மேற்பரப்பு உடைந்து வயல் நீரில் கரையும்; பூமியை உடைத்துப் பொன்கதிரை விளைவிக்க வேளாண்மை தொடங்கிவிட்டது. இந்தக் காட்சியை இளங்கோ அடிகள் படம்பிடித்துக் காட்டுகின்றார்; "கொழுங்கொடி அறுகையுங் குவளையுங்கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பார் உடைப்பனர்போற்பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்" நாடுகாண் காதை

முன்னோர் நடத்தும் முதல் உழவு பூமிப்பந்தை உடைப்பதுபோல் காட்சி தருகிறது இளங்கோ அடிகளுக்கு.

இதனைப் படித்தவுடனே எனக்கு ஓர் ஆங்கிலக் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. ஆங்கில இலக்கியத்தில் புகழ்வாய்ந்த கவிதைகளில் ஒன்று 'தாமஸ் கிரே' என்ற கவிஞர் எழுதிய 'Eleggy Written in a Country Church Yard."

ஒரு சிற்றூரில் அமைந்த சிறிய தேவாலயத்தின் இடுகாட்டில் நிரந்தரமாகத் துயில்கின்ற அவ்வூர் மக்களைப்பற்றி, அவர்களின் எளிய பயனுள்ள வாழ்க்கையைப் பற்றி, அவர்களின் உடல் உழைப்பின் உயர்வைப் பற்றிக் கவிஞன் பாடுகிறான்.

"இங்கே உறங்குபவர்கள் வாழ்கிற காலத்தில் வலிமையான பூமியை அவர்களது கொழுமுனைகள் உடைத்தன; அவர்களது அரிவாள்கள் விளைந்த பயிரை அறுத்துக் குவித்தன. அவர்கள் மகிழ்ச்சியோடு தங்களுடைய உழவுக் குதிரைகளை ஓட்டிச் சென்றார்கள். நெடிதோங்கி நின்ற வலிய மரங்கள் அவர்களுடைய கோடரி வீச்சால் தலை கவிழ்ந்து வீழ்ந்தன" என்றெல்லாம் தாமஸ் கிரே பாடுகிறார்.

அதிலே ஒரு வரிதான்.

"Their Furrow Off The Stubborn
Glebe Has broke"

தாமஸ் கிரே கி.பி. 1716 முதல் 1771 வரை வாழ்ந்தவர். இளங்கோ அடிகளுக்குக் காலத்தால் பல நூற்றாண்டுகள் பிற்பட்டவர். இவர் சிலப்பதிகாரத்தை கண்ணால்கூடப் பார்த்திருக்க முடியாது. ஆனாலும், ஓர் கவிஞனின் உள்ளம் இன்னொரு கவிஞனின் உள்ளத்தை அப்படியே பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

இளங்கோ அடிகள் உவமை 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய நாட்டில் எதிரொலித்தது இலக்கியச் சுவையில் இதுவோர் தனிச்சுவை!

இதனைத் தொடர்ந்து இன்னொரு எண்ணமும் எழுந்தது. தாமஸ் கிரேயின் கவிதையில் பல இலக்கியச் சுவைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட, அவர்களால் அடிக்கடி மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட வரிகள், பலருக்குப் பரிச்சயமான வரிகள் என் நினைவில் நிழலாடின.

அந்தச் சிற்றூரின் கல்லறைத் தோட்டத்தில் உறங்குகின்ற ஏழை எளிய மக்கள் உலகத்திற்கு அறிமுகமாகாமலே, புகழ் பெறாமலே வாழ்ந்து மறைந்தவர்கள் என்று சிந்திக்கின்றார் கவிஞர். அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தால், அவர்களிலேயிருந்து ஒரு புரட்சி வீரன் தோன்றியிருத்தல் கூடும். மில்டனைப்போல் ஒரு கவிஞன் பூத்திருக்கக் கூடும் என்றெல்லாம் கவிஞர் எண்ணுகின்றார். ஆனால், அத்தனை திறமைகளும் உலகுக்கு அறிமுகமாகாமலே மறைந்து விட்டனவே என்று கவிஞர் வருந்துகிறார்.

"Full many a Gem of purest ray serene
The dark unfathomed cares of Ocean bear
Full many a flower is born to blush unseen,
and wast its sweetness on the deser air"

ஓசை நயமும், ஒலியழகும், உவமைச் சிறப்பும், உருவகமும் சொல்லச் சொல்ல நாவினிக்கும்; நினைத்தாலே நெஞ்சினிக்கும். இதை நினைக்கும்போதே எனக்குப் புறநானூற்றில் ஒளவையார் பாடிய பாடலொன்று நினைவில் எழுந்தது.

ஒளவையார் மீது பேரன்பு பாராட்டிய அதியமான் நெடுமானஞ்சி, நெஞ்சிலே வேல் பாய்ந்து போர்க்களத்தில் உயிர் துறந்தான். அந்தச் செய்தி ஒளவையாரின் நெஞ்சைப் பிளந்தது. அவரைத் துயரக்கடலில் ஆழ்த்தியது. யாப்பிலக்கணத்தின் எல்லைகளைக் கடந்து ஒளவையாரின் உணர்வு ஊற்றுப் பெருகியது. அவனுடைய பெருமைகளையெல்லாம், பண்புகளையெல்லாம், வள்ளமையையும், தோள் வலிமையையும் இன்னும் பிறவற்றையெல்லாம் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்.

இது புறநானூற்றில் 235 ஆவது பாட்டு; தமிழிலக்கியச் சுவையின் கொடுமுடி என்று இதனைக் கூறலாம். அந்தப் பாடலை அவர் இவ்வாறு முடிக்கிறார்.

"இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று
ஈகுநரும் இல்லை;
பனித் துறைப்பகன்ற நறைக்கொல் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!"

புரவலர் இல்லாமையினாலே புலவர்களும் இல்லாது போவர். குளிர்ந்த ஆற்றங்கரையிலே பகன்றைக் கொடி பூத்துத் தேன் பிலிற்றுகின்றது. அதனைப் பறித்துத் தலையிலே சூடிக் கொள்கிற யாரும் இல்லை. எத்தனை மலர்கள் பூத்தென்ன? அணிவார் இல்லாமையால் அம்மலர்கள் பயனற்றனவே. அம்மலர்களைப் போலப் பிறர்க்கு வாரி வழங்கும் மனமற்ற செல்வர்கள் உலகத்தில் பலர் உளர் - அவர்களால் பயன் என்? (பகன்றை என்ற செடியை இக்காலத்தில் 'கந்தில்கொடி' என்பார்கள்).

சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காவியம் என்ற புகழுக்கு முற்றிலும் உரியது. அது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் மட்டுமல்லாது நாடகக் காப்பியமுமாகும். என்ன காரணத்தாலோ சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து தமிழில் நாடக இலக்கியங்கள் தோன்றவில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 10, 2010 12:31 am

இதற்கு மாறாக, ஆங்கில இலக்ககியத்தில் நாடக வடிவிலான இலக்கியங்கள் பல உள்ளன. ஒப்பற்ற நாடக ஆசிரியராகிய ஷேக்ஸ்பியருக்கு முன்னும் பின்னும் பல இலக்கிய மேதைகள் ஆங்கிலத்தில் நாடகங்களைப் படைத்தனர். ஆயினும் ஷேக்ஸ்பியர்தாம் நாடக இலக்கியத்தில் ஈடும் எடுப்புமற்ற தலைமகன். திறனாய்வாளர்கள் ஷேக்ஸ்பியரின் நாடக உத்திகளைப் பற்றி அவற்றின் அழகும், கலைநயமும் பற்றிப் பல நூறு நூல்களை எழுதிக் குவித்திருக்கின்றார்கள்; இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் காட்டுகின்ற நயங்கள் எல்லாம் சிலப்பதிகாரத்திலும் காணக் கிடைக்கின்றது. இவற்றை ஒத்துப பார்த்து ஒப்பிட்டு மகிழ்வது ஒரு தனி அனுபவம்.

ஷேக்ஸ்பியருடைய நாடகப் பாத்திரங்களில் ஒருவன் ஃபால்ஸ்டாஃப் (Falstaff) இவன் ஓர் நகைச்சுவைப் பாத்திரம். தற்பெருமை பேசுபவன் - பொய்யன் - கோழை. ஆனாலும் வீரத்தைப் பற்றி வெற்றுக்கதை பேசுபவன். அவன் ஓரிடத்திலே கூறுகிறான். "நான் அஞ்சவில்லை; என் வாளை உருவி எதிரியைத் தாக்கினேன். ஒரே இருட்டு - என் விரலை முன்னாள் நீட்டினால் அதுகூட என் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக் கும்மிருட்டு. ஆனாலும் வீரத்தோடு போரிட்டேன். பச்சை நிறச் சட்டை அணிந்திருந்த என் எதிரி இருட்டோடு இருட்டாகப் புகுந்து மறைந்தோடிப் போய்விட்டான்" என்று கதை அளக்கிறான். தன் விரலே கண்ணுக்குத் தெரியாத இருட்டில் எதிரி அணிந்திருந்த சட்டையின் நிறம் இவன் கண்ணுக்கு எப்படித் தெரிந்தது? இதுதான், ஃபால்ஸ்டாப் சரடு விடுகிறான் - உண்மை பேசவில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்ற பகுதி.

பாண்டியனின் ஆணைப்படி கோவலனைக் கொலைக்களத்திற்கு இட்டுச் செல்கிறார்கள் இரண்டு வீரர்கள். அதிலே ஒருவனுக்குக் கோவலன் மீது இரக்கம் பிறக்கிறது. "இவனைப் பார்த்தால் கள்வனைப் போல் தெரியவில்லையே; நல்ல குடும்பத்தில் வந்தவனைப்போல் தோன்றுகின்றதே" என்று கூறுகிறான். களவைத் தொழிலாகப் புரிகின்ற பேர்வழிகள் எப்படியெல்லாம் தந்திரசாலிகளாக இருப்பார்கள் என்று விரிவாக அவர்களிடம் பேசுகிறான் அரண்மனைப் பொற்கொல்லன்.

அவன் பேச்சில் மயங்கிய ஒரு படை வீரன், "நீங்கள் சொல்வது உண்மைதான்; முன்பொரு முறை அரண்மனையில் நான் காவல் புரிந்த போது திருடன் வந்தான் - நீலநிற உடை அணிந்திருந்தான். அப்போது நல்ல மாரி காலம்; வலிய இருள் உலகைப் போர்த்திருந்தது. அவனைக் கண்டவுடன் என் கைவாளை உருவி வெட்ட முயன்றேன். அவன் என் வாளைப் பறித்துக் கொண்டு இருட்டிலே மறைந்து போனான்" என்றும் மறுமொழி கூறுகின்றான்.

மாரிக் காலத்தில் வலிய இருட்டிற்குள்ளே அக்கள்வன் உடுத்தியிருந்த உடை நீலநிறம் கொண்டது என்று சொல்வதே இவனுடைய கூற்றில் உண்மையில்லை என்பதைக் காட்டும்.

"நிலன் அகழ் உளியன் நீலத் தானையன்
கலன் நசை வேட்கையிற் கடும்புலி போன்று
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்
கைவாள் உருவ என் கைவாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யான் அவற் கண்டிலேன்"
- கொலைக்களக் காதை 204-209

இலக்கிய உலகம் தனிச்சுவை உடையது. இறைக்க இறைக்க ஊறும் அமுத ஊற்று; அதிலும் இலக்கிய ஒப்பீடு சிந்தனைக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பது.

கரும்பையும் பொங்கலையும் சுவைத்து மகிழ்வதைப் போலவே இத்தமிழமுதையும் நாம் சுவைத்து மகிழலாம்.

உள்ளத்தையள்ளும் வள்ளுவரின் வான்மறையில் காணும் பல கருத்துக்கள் பல நூற்றாண்டுகள் - நிலப்பிரபுக்கள் - எல்லைகள் இவற்றையெல்லாம் கடந்து ஷேக்ஸ்பியரின் காப்பியங்களில் இடம் பெற்றிருத்தல் கருத்துக்கு இனிமையூட்டும் கவித்துவச் சிறப்புக்கு அத்தாட்சியாகும்.

திருக்குறள் இன்பத்துப் பாலில் 1091 ஆம் பாடல்

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக் கொன்றந்நோய் மருந்து"

"கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல"

என்பது வள்ளுவரின் 1100ஆவது குறள்.

இதோ ஷேக்ஸ்பியரின் மொழி

Sometimes from her eyes
I did receive fair
Speechless Messages.

"ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்."

Scorn at First Makes
The after Love More

என்பது ஷேக்ஸ்பியரின் கூற்று!

393 ஆம் குறளில் திருவள்ளுவர் தெரிவிக்கும் செய்தியை ஷேக்ஸ்பியரும் அப்படியே ஒப்புக் கொள்கிறார்.

"கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர்"

"Learning adds a precious
Seeing to the eye"

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்."

என்ற வரியை வெற்றி கொள்ளும் விறலாண்மையைப் போற்றுகின்றார் வள்ளுவர் 620 ஆவது குறட்பாவில்!

இதோ ஷேக்ஸ்பியர் கருத்து!

"Men at Sometime are
Masters of their Fate"

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், பொதுவுடைமை பூமியான ரஷ்யாவில் தோன்றி ரசூல் கம்சதோவும் தங்கள் சிந்தனைகளில் ஒன்றி நிற்கும் பான்மை மனத்தை வென்றிடும் சிறப்புடையதாகும்.

"நாளை என்
அவர் மொழி
அழியும் என்றால்
இன்றே சாவு
எனை அணுகிடும்தானே!"

என்ற இரசூல் கம்சதோவின் வரிகளில் பாரதிதாசனின் தமிழியக்கம் எதிரொலிக்கக் காண்கிறோம்!

செந்தமிழே
உயிரே
நறுந்தேனே!

செயலினை
மூச்சினை
உனக்களித்தேனே!

நைந்தாயெனில்
நைந்து போகும் என் வாழ்வு
நன்னிலை
உனக்கெனில்
எனக்கும்தானே!

தாயை நேசித்தல் எப்படி எல்லா உயிர்களுக்கும் இயற்கை நியதியோ, அப்படியே தாய்மொழியை நேசிப்பதும் கவிஞர்தம் இயல்பு என்பதற்குப் பொதுவுடைமைப் பூபாகத்தில் பூத்த இரசூல் கம்சதோவும் பாவேந்தர் பாரதிதாசனைப் போலவே எடுத்துக்காட்டாகத் திகழ்வது எண்ணி யெண்ணி இன்புறத் தக்கதாகும்.

மேற்கண்ட உதாரணங்கள் இன்பம் நல்குவது இலக்கிய மொழியின் இயற்கையான பொதுமைப் பண்பு என்பதை புலப்படுத்துகின்றன அன்றோ!

வை.கோபால்சாமி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 10, 2010 1:09 am

அருமையான செய்திகள் ... பகிர்வுக்கு நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக