புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 5:26 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
83 Posts - 43%
prajai
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
6 Posts - 3%
Jenila
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
jairam
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
kargan86
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
10 Posts - 4%
prajai
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
8 Posts - 3%
Jenila
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
3 Posts - 1%
jairam
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காதல் பிச்சை Poll_c10காதல் பிச்சை Poll_m10காதல் பிச்சை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிச்சை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 2:15 am

காதல் பிச்சை Scan0005a

பிச்சைமுத்து தன் காதலிக்காக கோவில் வாசலில் காத்திருந்தான். `கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' இது முதுமொழி. ஆனால், பிரசித்தி பெற்ற கோவில் உள்ள ஊரில் குடியிருப்பதில் பல சங்கடங்கள். நேரடி அனுபவங்கள் கிடைக்காதவர்கள் இவற்றை உணரமுடியாது.

ஆனால் இடைïறுகளுக்கிடையே ஒரே ஒரு சவுகரியம்! காதலியைக் காதலன் கோவிலுக்கோ குளக்கரைக்கோ வரச் சொல்லிக் கூட்டத்தோடு கூட்டமாக யாருக்கும் தெரியாமல் உள்ளூரிலேயே சந்தித்துக் கொள்ளலாம்.

இதோ நமது பிச்சைமுத்துவும் கோவில் வாயிலருகே காதலி பிச்சையம்மாளுக்காகத்தான் காத்திருக்கிறான்.

பிச்சைமுத்து இளங்கலை படிக்கும் இளைஞன். ஒவ்வொருவருக்குக் காதல் ஒவ்வொரு காரணத்துக்காக வரும். உண்மைக்காரணம் ஒன்றே ஒன்றுதான். சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வேண்டாம்!

பெரும்பாலும், பொதுவாகக் கண்களில் புதிதாகத் தோன்றும் ஒரு ஜொலிப்பே காதலுக்குக் காரணமாகும்.

அப்புறம் முகம், மூக்கு, முன்னழகு, பின்னழகு, சுருள்முடி, நீள்சடை இத்யாதி...

அன்பு, பண்பு, அறிவு, திறமை, வீரம், நெஞ்சின் ஈரம் இவை மிக அரிதாக உண்மைக் காதலின் காரணங்களாவதும் உண்டு.

ஆனால், பிச்சைமுத்துக்கோ, பிச்சையம்மாள் என்கிற அவள் பெயர்தான் காதல் தோன்றக் காரணம். அவனுக்கு முதலில் பிடிக்காத பிச்சை, இப்போது, பிடித்த பிச்சை ஆயிற்று.

அவன் பெற்றோர்க்கு எட்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை. பிறகு தான் அவன் பிறந்தான். பல கடவுள்களிடம் பிச்சை கேட்டுப் பிறந்ததால் பிச்சைமுத்து என்று பெயர் சூட்டினார்கள்.

பிச்சை என்னும் சொல்லின் பொருள் தெரிந்ததிலிருந்து அவனுக்குப் பெயர் பிடிக்கவில்லை. அவ்வளவு அழகான பெயர்கள் இருக்கின்றன? பிச்சைமுத்துவாம் பிச்சைமுத்து! எல்லோரும் `பிச்சை', என்று சுருக்கி வேறு கூப்பிடுகிறார்கள். கேவலமாயிருந்தது.

அவள் பெயருக்கு வேறு காரணம்.

ஒரு பெண் குழந்தைக்குத் தலைவாரிப் பூச்சூட்டிக் கண்ணுக்கு மை தீட்டி பட்டுப்பாவாடை கட்டிக் கால்களில் வெள்ளிக் கொலுசு மாட்டி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஐந்து ஆண்களைப் பெற்று கடைசியில், மாரியம்மனிடம் மடிப்பிச்சை ஏந்தி இவளைப் பெற்றதால் பிச்சையம்மாள் என்று பெயர் வைத்தார்கள்.

பிச்சையம்மாளுக்கும் பெயர் பிடிக்கவில்லை, அவள் வயசுக்கு வந்ததிலிருந்து.

பெண்களின் பெயர்கள் பெரும்பாலும்`ஆ' அல்லது `இ' ஒலியில் முடியும். அமலா, கவிதா, தமிழ்ச்செல்லி, மங்கையர்க்கரசி, சுகந்தி... இப்படி எவ்வளவோ பெயர்களிருக்க, பிச்சையம்மாளாம்! பிச்சையம்மாள்! ஒரு பிச்சைக்காரன் கூட இப்பெயரைக் கேட்டால் பெண் பார்க்க வரமாட்டான்.

அதிலும், இது போன்ற பெரிய ஸ்தலங்களிலுள்ள பிச்சைக்காரர்களை `உருவு கண்டு எள்ளாமை வேண்டும்'. அலட்சியமாக நினைக்க முடியாது.

இங்கே நல்ல வரும்படி. கூட்டுறவு முறைப்பிச்சை சங்கம், தலைவர், நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு எல்லாம் உண்டு. சுமார் நூறுபேர் உறுப்பினர்கள். தலைவர் கெட்டிக்காரர். அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவார்.

வியாழன் நாகூர் தர்கா, வெள்ளி திருக்கடவூர், சனி இங்கே, ஞாயிறு வேளாங்கண்ணி மாதா கோவில் என்று குழுவாகவே செல்வார்கள். திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்களில் குழு, மூன்றாகப் பிரிந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் செல்லும்.

பிச்சையெடுப்பதிலும் ஒரு புது முறையை உருவாக்கினார் தலைவர். தீர்த்தக் குளத்திலிருந்து கோவில் செல்லும் பாதை ஓரங்களில் பத்துப் பத்துப் பேராக இடைவெளி விட்டு உட்கார வைப்பார்.

தனித்தனியாகப் பிச்சை கேட்டால் பக்தர்கள் யாரோ ஒருவருக்கு ஐம்பது காசு போட்டுவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்வார்கள்.

`நாங்க பத்துபேர் தனிங்க. எங்க எல்லோருக்கும் சேர்த்து ஒருத்தர்கிட்டே பிச்சைபோடுங்க! நாங்க பிரிச்சு எடுத்துக்கிறோம், என்றால், பத்து ரூபாயோ, இருபதோ, ஐம்பதோ, நூறோ பிச்சையிடுவார்கள். வரும்படி கூடுதலாகும்.

ஒரு வாரத்தில் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாயளவு கிடைக்கும்.

இப்படியுள்ள பிச்சைக்காரன் எவனாவது பிச்சையம்மாள் என்கிற பெயருள்ளவளைத் திரும்பிப் பார்ப்பானா?

ஒரு மாதத்துக்கு முன்பு..

நூல் நிலையத்தில் புத்தகம் எடுத்துக்கொண்டு, பிச்சைமுத்து என்று கையெழுத்திட்டவனை அவள் பார்த்தாள்.

அவள் பார்த்ததால், பெயர் தெரிந்து கொள்வதற்காக அவள் கையெழுத்துப் போடுவதை அவனும் பார்த்தான்.

``உங்க பேர் பிச்சையம்மாளா?''

``உங்க பேர் பிச்சைமுத்துவா?''

வெளியில் வந்து காத்திருந்து அவள் வந்ததும், ``உங்க பேர் நல்லாயிருக்குங்க!'' என்றான், துணிச்சலாக.

``உங்க பேரும் தான், என்றாள் அவள், அனிச்சையாக.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு வைக்கும் நேரத்தில் அவள் கோவிலுக்கு வருவாள். உள் பிரகாரம், வெளிப்பிரகாரங்களைச் சுற்றுவாள். கொடி மரத்தைச் சுற்றுவாள். நந்தவனத்திலிருக்கும் திருமணமான அரசையும் வேம்பையும் சுற்றுவாள்.

அவனும் சுற்றுவான் - அவளை

காதல் தீ பற்றிக்கொண்டது.

இதோ இப்போது கோவில் வாசலருகே பிச்சைக்காகப் பிச்சை காத்திருக்கிறான்.

நிஜப் பிச்சைக்காரி ஒருத்தி அவனருகே வந்து, ``பிச்சை சாமி!'' என்றாள். வயது இருபது இருபத்திரண்டு இருக்கும்.

``போ போ!'' முகஞ்சுளித்து விரட்டினான்.

அவளோ அவனிடம் பிச்சை வாங்காமல் போகக்கூடாது என்று நின்றாள்.

``பிச்சை போடுங்க! உங்களுக்கு நல்ல பொண்ணா கெடைக்கும்.''

அவனுக்குக் காதில் ஏறவில்லை.

ஆனால் காதலியாகக் கிடைத்திருக்கும் பிச்சையம்மாள் போன வெள்ளிக்கிழமை சொன்னது காதில் ஒலித்தது. `என்னைத்தவிர நீ எந்தப் பெண்கிட்டேயும் பேசக்கூடாது, பிச்சை!'

`சரி, பிச்சை!' என்று தான் வாக்குறுதி கொடுத்ததும் நினைவுக்கு வந்தது.

காதலி வரக்கூடிய நேரத்தில் பிச்சைக்காரி தொந்தரவு செய்கிறாளே! இளம் பெண் வேறு. கறுப்பி என்றாலும் குளிப்பாட்டி அழகுபடுத்தினால் நன்றாகவே இருப்பாள். இவளோடு பார்த்தால் காதலி சந்தேகப்படுவாள். ``போ! எங்காவது போய் வீட்டு வேலை செய்! பிச்சைஎடுக்காதே!'' என்று துரத்தப் பார்த்தான்.

அவளோ விடாக்கண்டியாக இருந்தாள். ``அய்ய..! உன் வீட்டிலே என்னை வேலைக்கு வெச்சுக்கிறியா? வர்றேன்'' என்றாள், பதிலுக்கு.

`விடமாட்டாள் போலிருக்கிறதே! அதோ, காதலி வருகிறாளே! இவளோடு பேசிக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் கோபிப்பாளே!' பிச்சைமுத்து உடனே காதலி வரும் திசையை நோக்கி நடந்தான். பிச்சைக்காரியும், ``பிச்சை சாமி'', என்றபடி அவனைத் தொடர்ந்தாள் நெருங்கி வந்த காதலி, ``என்னா பிச்சை? யாரிவ? இன்னொரு பிச்சையா?'' என்று கேட்டாள்.

அவன் தர்ம சங்கடத்துடன், ``ஆமாம், பிச்சை!'' என்றான். அடுத்த வார்த்தை இருவரும் பேசிக் கொள்வதற்குள் பிச்சைக்காரி வந்து விட்டாள். ``ஐயா! நான் சொன்னாப்பலே நல்ல பொண்ணு தேடி வந்துட்டு. பார்த்தியா?

தாராளமா பிச்சை போடு சாமி! நீயும் சொல்லு, தாயீ!''

பிச்சைமுத்துக்கு எரிச்சலான எரிச்சல்! கன்னாபின்னாவென்று அவளைத் திட்ட வேண்டும் போல் ஆத்திரம்! காத்திருந்து. கண்பூத்து காதலியைச் சந்தித்தும், பேசக்கூட விடாமல் தொந்தரவு செய்கிறாளே! `காதலி தவறாக நினைப்பாளே', என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தான்! `இவளுக்கு ஏதாவது பிச்சைபோட்டு அனுப்பாத வரைக்கும் விடமாட்டாள் போலிருக்கிறதே என்று உணர்ந்து சட்டைப்பையில் கைவிரல்களை விட்டான். பகீரென்றது, அல்லது திகீரென்றது.

காதலி பார்க்கவேண்டும் என்பதற்காக மெல்லிய வெள்ளைச் சட்டையணிந்த, பையில், தெரிகிற மாதிரி நூறு ரூபாயை வைத்து, பை, காதலி முன் அசிங்கமாகத் தொங்கக்கூடாது என்பதற்காகச் சில்லறைக் காசுகளை வீட்டிலேயே வைத்து, காதலியுடன் பிரகாரம் சுற்றுவதற்காக வேட்டி கட்டிக்கொண்டு வந்திருந்தேன். நூறு ரூபாயைத் தவிர சில்லரை இல்லவே இல்லை அவனிடம்.

காதலியிடம் சில்லரை கேட்கலாமா? இது, முதல் பிச்சையாகுமே! வேறு வழியே தோன்றவில்லை பிச்சைமுத்துக்கு.

பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்துப் பிச்சைக்காரியிடம் கொடுத்தான்.. ``சந்தோஷமாக போ!'' என்றான், வயிற்றெரிச்சலுடன். வாங்கிக் கொண்ட பிச்சைக்காரி, எங்கே மனம் மாறித் திரும்பப் பிடுங்கிக்கொள்வானோ என்று அஞ்சி, உடனே நகர்ந்தாள் இடத்தை விட்டு சற்று தூரம் சென்று நின்று அவர்களைப் பார்த்தாள்.

காதலியிடம், ``எனக்கு இரக்க மனசு,'' என்றான் பெருமிதமாய்.

`இது காதல் பிச்சை. கல்யாணமானபின் இப்படிக்கொடுப்பானா? விடுவேனா?' என்று நினைத்தாள் காதலி பிச்சைம்யம்மாள்.

பிச்சைக்காரியோ, ``தண்ணியடிக்கிறவனும் பொண்ணுகளைச் சுத்துறவனும் அந்த நேரத்தில் தாராளமாத்தான் இருக்கிறானுங்கோ'', என்று சொல்லிக்கொண்டே நூறு ருபாய் பிச்சையோடு வேகம் பிடித்தாள்.

***
ப.திரிபுரசுந்தரி




காதல் பிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 2:22 am

காதல் பிச்சை 677196 காதல் பிச்சை 677196 காதல் பிச்சை 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Feb 23, 2010 2:36 am

ஹா... பிச்சை பிச்சைக்குப் பிச்சையிட்டகதை அருமை காதல் பிச்சை 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக