புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
85 Posts - 51%
heezulia
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
127 Posts - 54%
heezulia
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_m10ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தான்... அதிர்ச்சிகரமான அலசல்...!


   
   
sr.sakthivel
sr.sakthivel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 13/02/2010

Postsr.sakthivel Tue Feb 16, 2010 1:08 pm

(ஆப்கானில்தான் விவகாரத்தில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் எடுத்துள்ள ஒரு புதிய முடிவு குறித்து ஆராயும் தொடர் இது. சில பகுதிகளாக வெளியாகும்)

''There is nothing either good or bad but thinking makes it so''
-William Shakespeare

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து லண்டனில் ஒரு மாநாடு நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு வெளியுலகுக்கு அவ்வளவாகத் தெரியாமல் போய்விட்டது. காரணம், அந்த முடிவை இங்கிலாந்தோ அல்லது மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவோ அவ்வளவாக வெளியில் பரப்பாதது தான்.

லண்டனின் லான்கேஸ்டர் ஹவுசில் நடந்த இந்த மாநாட்டில் ஐ.நா மற்றும் 70 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் பாகிஸ்தான் [You must be registered and logged in to see this image.]சொன்னதை லண்டனும் வாஷிங்டனும் அப்படியே தலையை ஆட்டி கேட்டுக் கொண்டன. இந்தியா [You must be registered and logged in to see this image.]வின் கருத்து முழுமையாக நிராகரிக்கப்பட்டதால் சோகத்துடன் ஊர் திரும்பினார் நமது வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

அந்த மாநாட்டில் அப்படி என்ன தான் விவாதி்க்கப்பட்டது?.

இதற்கு முன் ஆப்கானிஸ்தானின் வலி நிறைந்த வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.

ஆப்கானிஸ்தானி்ல் ஆழம் தெரியாமல் அல்லது தெரிந்தே காலை விட்டுவிட்ட அமெரிக்காவுக்கு அதை விட்டு எப்படி வெளியேறுவது என்பது இன்னும் புரியவில்லை. ஆனால், கூடிய சீக்கிரம் வெளியேறிய ஆக வேண்டிய நிலைக்கு அந் நாட்டு அரசும் ராணுவமும் தள்ளப்பட்டுவிட்டன. காரணம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை வருடக்கணக்கில் நிறுத்தியும் அங்கு எதுவும் மாறவில்லை. வெட்டிச் செலவும் உயிரிழப்புகளும் (அமெரிக்க உயிரிழப்புகள், ஆப்கானியர்கள் சாவது குறித்து இவர்களுக்கு கவலையில்லை) மட்டுமே தொடர்ந்து கொண்டுள்ளன.

மேலும் பனிப் போர் நிலவியபோது ஆப்கானி்ஸ்தானை யார் கட்டுப்படுத்துவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் போட்டி நிலவி வந்தது. காரணம், ஆப்கானிஸ்தான் அமைந்துள்ள இடம் அப்படி.

கிழக்கு ஆசியா-அரேபிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த தேசம் ஆசியா கண்டத்தின் பிற நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தான் இந்த நாடு பல்லாயிரம் ஆண்டுகளாகவே பிற நாடுகள், அரசர்களின் படையெடுப்புகளுக்கு ஆளாகி வந்திருக்கிறது.

சைரஸ், டேரியஸ், அலெக்ஸாண்டரில் ஆரம்பித்து கனிஷ்கர், அசோகர், திமூர்கள், செங்கிஸ் கான் உள்பட பல பேரரசர்களும் இந்த நாட்டின் மீது படை எடுத்துள்ளனர் (பாமியான் பகுதியில் இருந்த மாபெரும் புத்தர் சிலைகளை தலிபான்கள் பீரங்கிகளால் தாக்கி உடைத்தார்களே நினைவிருக்கிறதா.. ஆப்கானிஸ்தானில் எப்படி புத்தர் சிலை வந்தது?. அங்கு புத்த மதத்தை பரப்பியது அசோகர் தான்!).

இப்படியாக எந்த ஒரு காலத்திலும் ஏதாவது ஒரு நாட்டால் ஆக்கிரமி்க்கப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது ஆப்கானி்ஸ்தான். அங்கு ஒழுங்கான உள்நாட்டு ஆட்சி நடந்தது என்றால் அது முகம்மத் ஷகீர் ஷாவின் காலத்தில் தான்.

அதுவும் 1933ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை தான். முன்னாள் அரசர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஜனநாயகத்தைக் கொண்டு வந்தார். நாட்டின் அனைத்து பழங்குடியின பிரிவுகளின் ஆதரவோடு அவரது ஆட்சி நடந்தபோது நாட்டில் அமைதி நிலவியது. நாட்டில் கல்வியைப் பரப்பவும், நவீன பொருளாதார கொள்கைகளை அமலாக்கவும் பெண்களுக்கு சம உரிமை வழங்கவும் முயன்றார்.

ஆனால், 1973ம் ஆண்டு சிகிச்சைக்காக இவர் இத்தாலி சென்ற நிலையில் ஆட்சியைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினார் இவரது உறவினரும் முன்னாள் பிரதமருமான முகம்மத் தெளத் கான். ஆப்கானிஸ்தான் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இவரையும் ஒரு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

தெளத் கான் கிட்டத்தட்ட கொடுங்கோல் ஆட்சியைத் தான் நடத்தினார். சோவியத் யூனியன் (ஆப்கானி்ஸ்தான்-சோவியத் இரண்டும் அண்டை நாடுகளாக இருந்தன, சோவியத் யூனியனின் துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய பகுதிகள் ஆப்கானிஸ்தான் எல்லையோடு ஒட்டியவை. இதனால், இந்தப் பகுதிகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கலாச்சாரரீதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறவு உண்டு) ஆதரவு பெற்ற முக்கிய கட்சியான பிடிபிஏ இவரை எதிர்க்க, அதை அடக்க அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்தார் தெளத்.

இதையடுத்து 1978ம் ஆண்டு ஆப்கான் ராணுவம் புரட்சி நடத்தி (சோவியத் யூனியனின் உளவுப் பிரிவு தூண்டுதலுடன்) தெளத்தை கொலை செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியான பிடிபிஏ ஆட்சியில் அமர்ந்தது.

ஆப்கானிஸ்தானி்ல் சோவியத் யூனியனின் மறைமுக ஆட்சி நடக்க ஆரம்பித்தது. இதற்கு எதிராக ஜமாயத் இஸ்லாமி என்ற கட்சி போராட்டத்தைத் துவக்கியது.

சோவியத்தை ஒட்டிய பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியில் தான் முதன்முதலாக இந்தப் போராட்டம் வெடித்தது. ஆனால், போராட்டக்காரர்களை சோவியத் உதவியோடு ஆப்கான் அரசு ஒடுக்கியது. மிச்சமிருந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடையவே அவர்களை அப்படியே அரவணைத்துக் கொண்டார் அப்போதைய அந் நாட்டுப் பிரதமர் சுல்பிகர் அலி புட்டோ.

இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை என்கிறீர்களா?.. காரணம் இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டது பஸ்தூனிஸ்தான் பகுதி. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இந்தப் பகுதியில் பெரும்பாலானவர்கள் பஸ்தூன் இன பழங்குடியினர். ஆப்கானிஸ்தான் மக்களில் பெரும்பாலானவர்களும் இந்த இனத்தினர் தான்.

ஆக, இந்தப் பகுதியை தனது நாட்டுடன் இணைக்க முயன்றார் ஆப்கானிஸ்தானை ஆண்ட தெளத் கான். இதற்காக இந்தப் பகுதி பஸ்தூன்களை தூண்டிவிட்டு ஆயுதங்களும் கொடுத்து வந்தார். (இப்போது இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் பாகிஸ்தான் என்ன செய்து கொண்டுள்ளதோ அதே வேலையை பஸ்தூனிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராகச் செய்தார் தெளத்).

அதே போல இந்தப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சோவியத் யூனியனும் முயன்றது.

நாடு துண்டாவதைத் தவிர்க்க பஸ்தூன் பழங்குடியினருடன் பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி இந்தப் பகுதிக்கு North-West Frontier Province (NWFP) என பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பகுதியை பஸ்தூன் பழங்குடியினரே சுதந்திரமாய் நிர்வகித்துக் கொள்ள அதிகாரம் தரப்பட்டது.

இங்கு பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ, நீதிமன்றமோ, அரசியலோ தலையிட முடியாது. அதாவது பாகிஸ்தானுக்குள்ளேயே ஒரு தனி நாடு மாதிரி. (இங்கு தான் ஒசாமா பின் லேடன் அண்ட் கோ இப்போது பதுங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இப்போது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் உதவியோடு அவ்வப்போது இந்தப் பகுதியில், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். தனது நாட்டுக்குள்ளேயே இன்னொரு நாட்டின் உதவியோடு தாக்குதல் நடத்தும் உலகின் ஒரே நாடு பாகிஸ்தானாகத் தான் இருக்கும்)

இவ்வாறு தனது நாட்டின் ஒரு பகுதியையே தன் வசமிருந்து பிரிக்க முயன்ற ஆப்கானிஸ்தான்-சோவியத் மீது கடுப்பில் இருந்த பாகி்ஸ்தானுக்கு, அந் நாட்டு கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக போராளிகள் கிளம்பியபோது மகிழ்ச்சி தாங்கவில்லை.

இதனால் அந்த போராளிகளுக்கு அடைக்கலம் தந்ததோடு ஆயுதங்களும் தந்து சண்டையை தீவிரமாக்கியது. பாகிஸ்தான். அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ உதவியுடன் முஜாகிதீன்கள் என்ற போராளிகள் உருவாகியினர்.

1978ம் ஆண்டில் சோவியத் ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக முஜாகிதீன்களின் போராட்டங்கள் தீவிரமாகி நாடு முழுவதும் வெடித்த கலவரத்தில் அரசே கவிழும் நிலை உருவாகவே அந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி டாங்கிகளையும் ராணுவ ஹெலிகாப்டர்களையும் அனுப்பியது சோவியத் யூனியன். முதலில் ஆப்கான் அரசை காக்க என்று உள்ளே நுழைந்த சோவியத் யூனியன் படிப்படியாக தனது ராணுவ பலத்தை விரிவாக்கியது. அந்த நாட்டையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆரம்பித்தது.

இதை எதிர்த்து ஆப்கானி்ஸ்தான் ராணுவத்தில் இருந்த 80,000 வீரர்களில் பாதிப் பேர் அதிலிருந்து விலகி முஜாகிதீன்களுடன் கைகோர்த்தனர்.

இந் நிலையில் தான் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முதன்முறையாக தலையிட்டது அமெரிக்கா. தெற்காசியாவில் சோவியத் யூனியனின் அதிகாரம் பரவுவதைத் தடுக்க களத்தில் குதித்தது சிஐஏ.

ஒரு பக்கம் சோவியத் ஆதரவு நாடான இந்தியா, இன்னொரு பக்கம் சோவியத் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானி்ஸ்தான் என இரு 'சோவியத் பஜ்ஜிகளுக்கு' மத்தியில் 'சட்னியாகி' வந்த பாகிஸ்தானை தனது கையில் போட்டுக் கொண்டது அமெரிக்கா.

பஸ்தூன்-ஆப்கானிஸ்தான்-சோவியத் யூனியன் என புதிய கூட்டணியால் மிரண்டு போய் இருந்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பெரிய ஆபத்பாந்தவனாகத் தெரிந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியனை விரட்டும் தனது மறைமுகப் போருக்கு பாகிஸ்தானுக்கு முழு அளவில் உதவியது அமெரிக்கா. அப்படி ஆரம்பித்தது தான் அமெரிக்க-பாகிஸ்தான் 'நல்லுறவு'.

சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராகப் போராட ஐஎஸ்ஐ மூலமாக சிஐஏ ஏராளமான ஆயுதங்களை வழங்கியது. தரையில் முஜாகிதீன்களின் கொரி்ல்லா தாக்குதலை சமாளிக்க முடியாத சோவியத் யூனியன் ஹெலிகாப்டர்களையே அதிகமாக பயன்படுத்தி எதிர் தாக்குதலை நடத்தியது.

இதனால் முஜாகிதீன்களுக்கு ஏராளமான உயிர்ப் பலி. இதையடுத்து சோவியத் ஹெலிகாப்டர்களை தாக்க முஜாதீன்களுக்கு அமெரிக்கா தந்த பயங்கர ஆயுதம் தான்
Shoulder-aided-Misslles (SAM) எனப்படும் ஏவுகணைகள்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியது இந்த ஏவுகணை தான். தோளில் வைத்துக் கொண்டு இயக்கப்படும் இந்த ஏவுகணையைக் கொண்டு எதிரியின் விமானத்தையோ-ஹெலிகாப்டரையோ கச்சிதமாக சுட்டுத் தள்ள முடியும்.

எதிரி விமானத்தின் எரிபொருள் எரியும்போது வெளியேறும் புகையின் கார்பனை 'ட்ரேஸ்' செய்து, விடாமல் விரட்டிச் சென்று அதை தாக்கி அழிக்கும் ஆயுதம் 'சாம்'.

இப்படியாக, சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆப்கான் முஜாகிதீன்களுடன் சேர்ந்து போராட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த போராளிகளில் ஒருவர் தான் ஒசாமா பின் லேடன்.

அமெரிக்கா தந்த ஆயுதங்களைக் கொண்டு சோவியத் யூனியனை முஜாகிதீன்கள் தடுமாற வைத்தனர். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சோவியத் யூனியன் தனது படைகளை தொடர்ந்து ஆப்கானி்ஸ்தானில் வைத்திருந்தது. காரணம், அந்த நாட்டை விட்டு வெளியேறினால் அது அமெரிக்காவிடம் தோற்றுப் போனதாக அர்த்தமாகிவிடும் என்பதால்.

ஆனால், 1989ல் ரஷ்யாவில் கொஞ்சம் ஜனநாயகத்தைக் கொண்டு வரலாம் என நினைத்து கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் கம்யூனிஸத்தை ஆட்டம் காண வைக்க, இனியும் ஆப்கானி்ஸ்தானில் படைகளை வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தது சோவியத் யூனியன்.
இதையடுத்து தனது படைகளை வாபஸ் பெற்றது. (இதைத் தொடர்ந்து கொஞ்ச நாளி்ல் சோவியத் யூனியன் துண்டு துண்டானது வேறு கதை!).

சோவியத் யூனியன் படைகள சென்ற அடுத்த சில நாட்களில் அவர்களது ஆதரவோடு அதிபராக இருந்த நஜிபுல்லாவையும் அவரது குடும்பத்தினரையும் மின் கம்பத்தில் தூக்கில் போட்டுக் கொன்றனர் முஜாகிதீன்கள்.

இதையடுத்து ஆப்கானி்ஸ்தானில் மாபெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு முஜாகிதீன் தலைவரும் குறு நில மன்னர் போல பிடித்து வைத்துக் கொண்டு ஆள ஆரம்பித்தனர்.

இவர்களில் முக்கியமானவர் அஹமத் ஷா மசூத். சோவியத் யூனியனின் தஜிகிஸ்தான் பகுதியை ஒட்டிய பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்குப் பகுதி இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. Lion of Panjshir என்று அழைக்கப்பட்ட மாவீரன்.

1992ம் ஆண்டு இந்த 'குறு நில மன்னர்கள்' அனைவரும் சேர்ந்து ஒரு தேசிய அரசை அமைத்தனர். அந்த அரசின் அதிபரானார் புர்ஹானுதீன் ரப்பானி. அவரிடம் பாதுகாப்பு அமைச்சரானார் அஹமத் ஷா மசூத்.

ஆனால், இந்த அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை. காரணம், அவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல்.

இதனால் நாடு திக்குத் தெரியாமல் தடுமாற முல்லா ஒமர் தலைமையில் ஆப்கானி்ஸ்தான் மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தலிபான்.

சோவியத் என்ற ஒரு நாடே இல்லை.. இதனால் சண்டை போடவும் ஆள் இல்லை என்ற நிலையில் கையில் அமெரிக்கா தந்த ஏராளமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு திரிந்த முஜாகிதீன்களும் இவர்களுடன் கைகோர்த்தனர். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவும் உதவ, உருவானது தலிபான் அரசு.

தலிபான் என்றால் பஸ்தூன் மொழியில் மாணவர்கள் என்று அர்த்தம். இவர்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை இனி தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என கணக்குப் போட்டது பாகிஸ்தானின் உளவுப் பிரிவு.

ஆனால், நடந்தது..!

(தொடரும்..)

sr.sakthivel
sr.sakthivel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 13/02/2010

Postsr.sakthivel Tue Feb 16, 2010 1:12 pm

பாகிஸ்தான் உளவுப் பிரிவின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்த தலிபான்களுக்கு பெரும் சவாலாக மாறினார் 'Lion of Panjshir' என்று அழைக்கப்பட்ட அஹமத் ஷா மசூத்.

முந்தைய அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மசூத், ஆட்சியைப் பிடிக்க முயல, அவரை தலிபான்கள் போட்டுத் தள்ள முடிவு செய்ய, தனது ஆதரவுப் படைகளை காபூலில் இருந்து விலக்கிக் கொண்டு நாட்டின் வட பகுதியில் உள்ள தனது பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கில் தஞ்சமடைந்தார் மசூத்.

நாட்டின் 90 சதவீத பகுதிகளை தலிபான்கள் பிடித்துவிட மிச்சமிருந்த 10 சதவீத பகுதியை பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கில் இருந்தபடி நிர்வகித்தார் மசூத். இந்தப் பகுதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் உதவியோடு தலிபான்கள் முயல, அவர்களை கடைசிவரை தனது பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்துக் காட்டினார் மசூத்.

சோவியத் படைகள் விட்டுச் சென்ற பழைய டாங்கிகள், துப்பாக்கிகள், சில ஹெலிகாப்டர்களை வைத்துக் கொண்டு தலிபான்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார் மசூத்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அநியாயங்களும் அரங்கேறிய நிலையில், மசூதின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நாகரீகமான ஆட்சி நடந்தது. பெண்களுக்கு சம உரிமையும், அனைத்து தரப்பினருக்கும் சம நீதி என நேர்மையான ஆட்சியை நடத்தினார் மசூத்.

மசூதின் படைகளையும் தலிபான்களையும் பிரித்து வைத்தது ஒரு மலைத் தொடர் தான். அந்த மலைத் தொடரை தாண்டி வந்தால் தான் பஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கை அடைய முடியும் என்ற நிலையில் மலைகளில் தனது படைகளை நிறுத்தி இரவு பகலாக தலிபான்களுடன் மோதி, அவர்கள் பள்ளத்தாக்கை நெருங்கிவிடாதபடி தடுத்தார் மசூத்.

அவருக்காக உயிரைத் தந்து போராடினார் அவரது ஆதரவு படையினர். ஏராளமான இழப்புகள்.. ஆனாலும் தனது போர்க் குணத்தை இழக்காத மசூத், மக்களின் பேராதரவுடன் தலிபான்களுக்கு எதிராக ஒரு தனி மனித போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் மசூத்.

ஆப்கானிஸ்தானி்ல் பாகிஸ்தான்-தலிபான் கூட்டணியால் அண்டை நாடுகளான இந்தியா [You must be registered and logged in to see this image.], ஈரான், ரஷ்யா ஆகியவை மிரண்டு போயின. தலிபான்களை ஒடுக்காவிட்டால் தெற்காசியாவே அமைதியிழக்கும் என்பதை அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துச் சொன்னது.

ஆனால், அமெரிக்காவுக்கு அப்போதெல்லாம் தலிபான் குறித்து எந்தக் கவலையும் இல்லை, ஆப்கானி்தானில் நடந்த மனித உரிமை மீறல்களைக் கூட அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.

இதனால் இந்த விவகாரத்தை வேறு மாதிரியாகக் கையாள முடிவு செய்த இந்தியா-ரஷ்யா-ஈரான் ஆகியவை ரகசிய கூட்டணி அமைத்தன. தலிபான்களை எதிர்க்க சரியான ஒரே ஆள் அஹமத் ஷா மசூத் மட்டுமே என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த இந்த நாடுகள் அவருக்கு ஆயுத, நிதி உதவிகளை செய்ய ஆரம்பித்தன.

இந்தியா மட்டும் 40 மில்லியன் டாலர் அளவுக்கு அவருக்கு நிதி உதவி செய்ததாகக் கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான நிதி ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது. மேலும் தலிபான்களுடன் போரிட்டு காயமடையும் மசூதின் வீரர்களுக்கு சிகி்ச்சையளிக்க ஒரு மருத்துவமனையை ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்தியா கட்டியது. அங்கு இந்திய உளவுப் பிரிவினரும், ராணுவ டாக்டர்களும் தங்கியிருந்து மசூதின் வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

ரஷ்யா தன் பங்குக்கு ஆயுதங்ளையும் டாங்கிகளையும் ஹெலிகாப்டர்களையும் வழங்கியது. இந்த ஆயுதங்களுக்கான விலையில் ஒரு பகுதியை ரஷ்யாவுக்கு ஈரான் தந்தது.

மசூத் ஒரு 'முஜாகிதீனாக' எந்த நாட்டை (சோவியத் யூனியனை) எதிர்த்துப் போரிட்டாரே அந்த நாடே (இப்போது ரஷ்யா) அவருக்கு ஆயுத உதவி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது தான் 'வரலாற்று வேடிக்கை'. ரஷ்யாவின் செசன்யா பகுதியில் மதரீதியிலான தீவிரவாதம் தலையெடு்க்க தலிபான்கள் ஒரு காரணமாக அமைந்ததால், தலிபான்களை ஒடுக்க ஓடி வந்து உதவியது ரஷ்யா.

மேலும் இந்தியா இன்னொரு முக்கிய உதவியையும் செய்தது. மசூதின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்துல்லா அப்துல்லா போன்றவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா அடைக்கலம் தந்தது. அடிப்படையில் ஒரு கண் டாக்டரான அப்துல்லா அப்துல்லா, மசூதின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராக விளங்கியவர்.

தலிபான்களால் எந்த நேரமும் தனது உயிர் போகலாம் என்பதால், தனது குடும்பத்தினரை பாதுகாக்குமாறு இவர் வைத்த கோரிக்கையை இந்தியா ஏற்றது. இவரது குடும்பம் இந்தியாவில் ஏதோ ஓரிடத்தில் ரகசியமாக குடியேற்றப்பட்டு ரா மற்றும் ஐ.பி. உளவுப் பிரிவுகளின் 24 மணி நேர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டது. குடும்பத்தை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு மசூதுடன் சேர்ந்து தலிபான்களுக்கு எதிரான தனது போரில் ஈடுபட்டிருந்தார் அப்துல்லா அப்துல்லா. (கடந்த ஆப்கானி்ஸ்தான் தேர்தலில் அதிபர் ஹமீத் கர்சாயை எதிர்த்துப் போட்யிட்டு தோற்றவர் தான் இந்த அப்துல்லா).

வெளியுறவு அமைச்சர் என்றால் ஏதோ 'நார்த் பிளாக்' மாதிரி ஒரு கட்டிடத்தில் அதிகாரிகள் புடை சூழ ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, முடிவுகள் எடுப்பது அல்ல, அப்துல்லா செய்து வந்த பணி. தனது தலைவனான மசூத்துடன் இணைந்து எந்த நேரமும் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஹெலிகாப்டர்களிலும் போர் முனையிலேயே இரவு-பகலை கழித்தார் அப்துல்லா. அத்தோடு இந்தியா-ஈரான்-ரஷ்யாவுடன் அவ்வபபோது ரகசிய பேச்சு நடத்தி நிதி, ஆயுத, தூதரக உதவிகளைப் பெறுவதும் இவரது முக்கிய வேலையாக இருந்தது.

மேலும் இந்தியா-ஈரான்-ரஷ்யாவோடு நின்றுவிடாமல் தலிபான்களால் வரப் போகும் ஆபத்து குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கவும் மசூதும் அப்துல்லாவும் தீவிரமாக முயன்றனர்.

ஆனால், அதையெல்லாம் கேட்கும் மன நிலையி்ல் அப்போது அமெரிக்கா இல்லை. சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு இல்லாமல் போய்விட்டது, இனி நமக்கென்ன கவலை என்ற மிதப்போடு வாழ ஆரம்பித்திருந்தது.

இந் நிலையில் தான் கடும் முயற்சி்க்குப் பின் 2001ம் ஆண்டு ஏப்ரலில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேச மசூதுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்த பிரான்ஸ் நாட்டு பெண் அரசியல் தலைவரான நிக்கோல் போன்டேன்.

அவரது உதவியோடு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய மசூத், முதன்முதலாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அதை அமெரிக்கா கவனமாகக் கேட்டிருந்தால் நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலையே தவிர்த்திருக்கலாம்!

(தொடரும்)

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 1:20 pm

இவ்வளவு விசயம் நடந்திருக்கா



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 1:23 pm

Manik wrote:இவ்வளவு விசயம் நடந்திருக்கா

எனக்கு புரியலப்பா.
[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 24, 2010 8:24 pm

அருமையான அலசல் கட்டுரை ... மிகுதியையும் தாருங்கள் நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 24, 2010 8:29 pm

(ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த கட்டுரை தொடர்ச்சி)

2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய அஹமத் ஷா மசூத் கூறியது இது தான்: ''சோவியத்தை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் ஆப்கானி்ஸ்தான் பிரச்சனையை மிக லேசாக எடுத்துக் கொள்ளாதீ்ர்கள். அங்கு தலிபான்களின் பிடியில் மகா கொடுமைகள் நடக்கின்றன. அதை தடு்க்க வேண்டிய பொறுப்பு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு.

தலிபான்கள் உதவியோடு அங்கு பின் லேடனின் அல்-கொய்தா பலமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் அவர்கள் அமெரிக்காவில் பயங்கர தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் எனக்கு வரும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவிலேயே அமெரிக்காவில் மாபெரும் தாக்குதல் நடக்கப் போகிறது'' என்றார் மசூத்.

ஆனால், தலிபான்களுக்கு எதிராக மசூத் ஏதோ உளறுகிறார் என்ற அளவோடு அவரது பேச்சை ஐரோப்பிய நாடுகளும் மதிக்கவி்லலை, அமெரிக்காவும் மதிக்கவில்லை.
---------------------------------------------

செப்டம்பர் 9, 2001
இடம்-கிவாஜே பாஹா ஓ டின், வடக்கு ஆப்கானிஸ்தான்

அஹமத் ஷா மசூதை சந்திக்க இரு அரபு நாட்டு டிவி 'நிருபர்கள்' வந்து ஒரு வாரமாகக் காத்திருக்கின்றனர். போர் முனையில் இருக்கும் மசூத், 9ம் தேதி காலை அவர்களை சந்திப்பதாக அப்பாயின்மெண்ட் தருகிறார்.

சொன்னபடியே அந்த தினத்தில் கிவாஜே பாஹா ஓ டின், பகுதிக்கு வருகிறார். வந்தவுடன் அந்தப் பகுதியின் நிலைமை குறித்து தனது தளபதிகளுடன் பேசிவிட்டு 'நிருபர்களை' சந்திக்க மகிழ்ச்சியாக வருகிறார்.

'நிருபர்களுக்கு' தனது கையால் டீயை பரிமாறிவிட்டு பேச அமர்கிறார். அடுத்த நொடியே டிவி கேமராவில் இருந்த மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறுகிறது. அந்த இடமே சுக்குநூறாகிறது. அங்கிருந்த இரு நிருபர்களில் ஒருவர் உள்பட பலரும் பலியாகிவிட, மசூத் மிக பலத்த காயமடைகிறார்.

உயிரோடு இருக்கும் ஒரு 'நிருபர்', உடனே தனது சேட்டிலைட் போனில் யாரையோ தொடர்பு கொண்டு மசூத் படுகாயமடைந்த விஷயத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு ஓடி வந்த மசூதின் பாதுகாவலர்கள் அந்த 'நிருபரை' அங்கேயே சுட்டுத் தள்ளுகின்றனர்.

வந்தவர்கள் நிருபர்கள் அல்ல.. பின் லேடன் அனுப்பிய தறகொலைப் படையினர்.

மசூத் படுகாயமடைந்த செய்தி ரஷ்யா, ஈரான், இந்தியத் தலைவர்களுக்கு வந்து சேருகிறது. அவருக்கு வடக்கு ஆப்கானிஸ்தானி்ல் உள்ள இந்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காயங்கள் மிக பலமாக இருப்பதால் அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரஷ்யா கொண்டு செலகின்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறக்கிறார்.

மசூத் இல்லாத நிலையில் ஆப்கானி்ஸ்தானில் தலிபான்களை எதிர்த்துப் போரிட யாரும் இல்லாத ஒரு வெற்றிடம் உருவாகிறது.

மசூத் பலியான விவரத்தை வெளியிடாமல் மூடி மறைக்கலாம் என்று ரஷ்யா-இந்தியா [You must be registered and logged in to see this image.]-ஈரான் திட்டமிட, இந்த விவரம் அமெரிக்க, ஐரோப்பிய உளவுப் பிரிவுகளுக்குப் போய்ச் சேருகிறது.

ஆனால், அப்போதும் கூட இதெல்லாம் 'ஆப்கானி்ஸ்தான்ல சகஜமப்பா' என்று தான் பிரச்சனையை எடுத்துக் கொண்டனரே தவிர, அந்தக் கொலைக்கு எந்த முக்கியத்துவத்தையும் தரவி்ல்லை.
--------------------------------------------------

இரண்டு நாட்களுக்குப் பின்..
செப்டம்பர் 11, 2001
நியூயார்க்

பின் லேடன் அனுப்பிய 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் 4 விமானங்களைக் கடத்தி நியூயார்க்கை சிதறடிக்கின்றனர். அமெரிக்கா நிலைகுலைகிறது, உலகமே அச்சத்தில் உறைகிறது.
---------------------------------------------------

அமெரிக்காவைத் தாக்கிய பின் என்ன நடக்கும் என்பதை யூகித்த பின் லேடன் மிகக் கச்சிதமாகக் கணக்கிட்டு முதலில் மசூதின் கதையை முடித்தார். மசூதுக்கு அமெரிக்க ஆயுத உதவி கிடைத்தால், அடுத்த சில மாதங்களிலேயே (அல்லது ஆண்டுகளிலேயே) அவரால் தலிபான்களை விரட்டியடித்து அவர்கள் வசம் இருக்கும் பகுதியை மீட்டுவிட முடியும் என்பது பின் லேடனுக்குத் தெரியும்.

ஆப்கானிஸ்தானின் மூலை முடுக்கையெல்லாம் அறிந்தவர் என்பது மட்டுமல்ல, சோவியத் யூனியனுக்கு எதிராக முஜாகிதீன்களுடன் இணைந்து மண்ணிலும் மலைகளிலும் புரண்டு போர் நடத்தியவர் மசூத். தலிபானை சமாளிப்பது அவருக்கு அத்துப்படி.

அதே நேரத்தில் மசூத் இல்லாத நிலையில், அமெரிக்காவால் தரையில் வந்து தாக்கி தலிபான்களை ஒடுக்குவது இயலாத காரியம் என்பதும் லேடனுக்குத் தெரியும்.

இதனால் தான் அமெரிக்காவைத் தாக்கும் முன் முதலில் மசூதி்ன் கதையை முடித்தது அல்-கொய்தா.
-------------------------------------------------

பின் லேடன் கணக்கிட்டது போலவே இப்போது ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டு அமெரிக்கா படும் பாடு அவர்களைத் தவிர யாராலும் விவரிக்க முடியாது.

இரண்டு அமெரி்க்க ஜனாதிபதிகள்.. 3 ஆட்சிகளையும் தாண்டி ஆப்கானிஸ்தான் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது 'நேடோ படைகள்' என்ற பெயரில் ஆப்கானி்ஸ்தானில் அமெரிக்கா மட்டும் தான் அங்கு சண்டை போட்டுக் கொண்டுள்ளது. மற்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் எல்லாம் வரிசையாகக் கழன்று கொண்டுவிட்டன.

இங்கிலாந்து மட்டும் தான் அமெரிக்காவுடன் நிற்கிறது. ஆனாலும் போதிய அளவில் வீரர்களைத் தர மறுக்கிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியே ஆக வேண்டிய நிலைக்கு அமெரி்க்கா தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானை அப்படியே விட்டுவிட்டுப் போய் விடாதீ்ர்கள் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிடம் கெஞ்சிக் கொண்டுள்ளன.

காரணம், ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறினால் அந்த நாடும் தலிபான்களும் மீண்டும் பாகிஸ்தான் [You must be registered and logged in to see this image.] உளவுப் பிரிவின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவார்கள் என்ற அச்சம் தான்.

ஆனால், அமெரிக்கா பொறுமை இழந்துவிட்டதாகவே தெரிகிறது. இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தின் துவக்கத்தில் நான் சொன்னதை இங்கே நினைவுகூர்வது அவசியம்.

இரு வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து லண்டனில் நடந்த ஒரு மாநாட்டில் அமெரிக்கா ஒரு மிக முக்கிய முடிவை எடுத்தது என்று சொல்லியிருந்தேனே.

அது இது தான்..

ஆப்கானிஸ்தானி்ல் உள்ள 'நல்ல' தலிபான்களுடன் (!!) ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது. ஆட்சியை அவர்களிடம் தருவது அல்லது ஆட்சியில் அவர்களுக்கும் பங்கு தருவது.

அதன் பின்னர் தனது படைகளை படிப்படியாக வாபஸ் பெற்றுக் கொண்டு இனிமேல் தவறிப் போய் கூட ஆப்கானிஸ்தான் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருப்பது... இது தான் அமெரிக்கா எடுத்துள்ள புதிய முடிவு!.

இந்த முடிவுக்கு அமெரிக்கா வர முக்கியமாக விளங்கியது பாகிஸ்தான் தான்.

''இன்னும் 50 வருடம ஆப்கானி்ஸ்தானில் படைகளை நிறுத்தி வைத்தாலும் உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்... எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், நிதியைக் கொடுக்க வேண்டியது தான். தேவைப்பட்டால் எங்களது ராணுவத்தோடு ரகசியமாக இணைந்து தலிபான்களை கட்டுப்படுத்தும் வேலைகளைப் பாருங்கள். இனியும் ஆப்கானிஸ்தானில் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு நேரடியாக தலிபான்களுடன் சண்டை போட்டு உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்காதீர்கள்... வேண்டுமானால் தலிபான்களில் ஒரு பிரிவினரை உங்களுடன் கைகோர்க்க வைக்கிறோம். அவர்கள் வசம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நடையைக் கட்டுங்கள்.. அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.. அவர்கள் மற்ற தலிபான்களை சமாளித்துக் கொள்வார்கள்..''

இது தான் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் போட்டுத் தந்துள்ள பிளான்.

அமெரிக்கா எப்படி தலிபான்களுடன் கைகோர்க்க முடியும் என்ற கேள்வி எழும் அல்லவா.. அதற்கு அமெரிக்காவும் பாகிஸ்தானும் உருவாக்கி வைத்துள்ள பதில் தான் 'நல்ல தலிபான்'.

அதாவது இதுவரை தலிபான்கள் என்றாலே மோசமானவர்கள் என்று சொல்லி வந்த அமெரிக்கா.. அதில் ஒரு தரப்பினரைப் பிரித்து அவர்களுடன் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறது. அவர்களுக்கு 'நல்ல தலிபான்' என்று பெயர் சூட்டப் போகிறது.

இந்த 'நல்ல தலிபானும்', பாகிஸ்தானும் அமெரிக்காவின் கண்காணிப்பில் கீழ் இணைந்து செயல்படுவார்கள்.

இந்த 'நல்ல தலிபானிடம்' அமெரிக்கா வைக்கப் போகும் ஒரே கோரிக்கை.. எங்கள் நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்படும் களமாக ஆப்கானி்ஸ்தான் இருக்கக் கூடாது. அதை நீங்கள் உறுதி செய்தால் போதும்.. நீங்கள் அதைச் செய்தால் உங்களுக்கு எங்கள் ஆதரவும் உதவியும் தொடரும்.

இதை ஏற்றுக் கொண்டு, பிற தலிபான் குழுக்களை ஒடுக்க முன் வரும் தலிபான் பிரிவுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சில தலிபான் பிரிவுத் தலைவர்களோடு பேச்சு நடத்தவும் ஆரம்பித்துவிட்டு சிஐஏ. இதற்காக அவர்களை தீவிரவாதிகள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டதோடு, ஐ.நா. மூலமாக அவர்கள் மீது போடப்பட்ட தடைகளையும் நீக்கியுள்ளது. (மொத்தம் 268 அல்-கொய்தா, 137 தலிபான் தலைவர்கள் மீது இந்தத் தடைகள் அமலில் உள்ளன)

அதில் முக்கியமானவர் வகீ்ல் அஹமத் முட்டாவகீல். தலிபான் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் இவர். இவர் இப்போது சிபிஐவின் தீவிரவாத லி்ஸ்டிலும் இல்லை, இவர் மீது ஐ.நா. விதித்த தடைகளும் கடந்த வாரத்தில் திடீரென காணாமல் போய்விட்டன. (அமெரிக்கக் கோரிக்கைப்படி நீக்கப்பட்டுவிட்டன)

அதே போல மேலும் 5 முக்கிய தலிபான் தலைவர்கள் மீதான தடைகளும் நீக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான வேலைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

ஆனால், தலிபான்களின் மிக முக்கியத் தலைவரான முல்லா ஒமர் உடனோ அல்லது இப்போது அமெரிக்கப் படைகளை மிகத் தீவிரமாக தாக்கி வரும் ஹக்கானி நெட்வொர்க் (Haqqani network) பிரிவு தலிபான்களுடன் எந்தக் காரணம் கொண்டும் பேச்சு அமெரி்க்கா பேச்சு நடத்தாதாம். இவர்கள் மீதான தடைகளும் தொடருமாம்.

மேலும் பல தலிபான் பிரிவுகளையும் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வர வைக்கும் நெருக்கடி உத்திகளில் ஒன்றாக, கடந்த 10ம் தேதி முதல் ஆப்கானி்ஸ்தானில் மிக பயங்கரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டுள்ளது அமெரிக்கா ([You must be registered and logged in to see this link.]).

எங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு நடத்த வந்தால் நீங்கள் 'நல்ல தலிபான்' லிஸ்டில் சேருவீர்கள்.. இல்லாவிட்டால் 'உதை தான்' என்பதைத் தான் தனது இந்த லேட்டஸ்ட் தாக்குதல் மூலம் சொல்கிறது அமெரிக்கா.

இவ்வாறு, ஆப்கானில்தான் விவகாரத்தில் அமெரிக்கா அடிக்க ஆரம்பித்துள்ள 'வியூக பல்டிகளை' மிகக் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியா.

இதில் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை...?

(தொடரும்)




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக