புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
4 Posts - 3%
prajai
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%
kargan86
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%
jairam
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
8 Posts - 5%
prajai
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
6 Posts - 4%
Jenila
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
2 Posts - 1%
viyasan
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_m10பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 10:18 am

கேள்வி : பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது. தங்கள் அழகை வெளிகாட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பெண்கள் தங்கள் முகத்தை திறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இது பற்றி என்ன முடிவுக்கு வருவது..? ஷேக் தம்பி யூசுப் - ஹாட் அஞ்சலில்

இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.

குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.
இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக!
அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது
மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை வெளிப்படுத்தக் கூடாது
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (ப+மியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)

இந்த வசனத்தில் ஜீனத் என்ற பதம் மூன்று இடங்களில் வந்துள்ளது. இவற்றிர்க்கு அலங்காரம் என்று பொதுவாக அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள். இது முழுமையான அர்த்தம் அல்ல.
நாமாக தேவைக்கேற்ப செயற்கையாக செய்துக் கொள்ளும் அழகிற்கே அலங்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.
வீட்டை அலங்கரிக்கிறார்கள், புதுப் பெண் அலங்கரிக்கப்படுகிறாள், கணவனுக்காக மனைவி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் போன்ற வற்றிலிருந்து செயற்கையாக செய்துக் கொள்வதையே அலங்காரம் என்ற சொல் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
திருக்குர்ஆனில் ஜீனத் என்று வரும் எல்லா இடங்களிலும் நாம் பயன் படுத்தும் அர்த்தத்தில் அலங்காரம் என்ற பொருளை கொடுக்க முடியாது இடத்திற்கு ஏற்றார்போல் அதன் அர்;த்தம் மாறுபடும்.
இதை புரிந்துக் கொள்வதற்காக சில வசனங்களைப் பார்க்கலாம்.
அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிபடுத்தி இருக்கும் ஜீனத்தையும் உணவுப் பொருள்களில் நல்லவற்றையும் தடுப்பது யார்..? (7:32)
இந்த வசனத்தில் இடம்பெறும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. - இயற்கை அழகு - என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
பிர்அவ்னுக்கும் அவன் அமைச்சர்களுக்கும் ஜீனத்தும் வாழ்வாதார தேவைகளும் கொடுக்கப் பட்டிருந்தன (10:88)
இந்த வசனத்திலும் ஜீனத்திற்கு - இயற்கை செல்வம் - என்று தான் பொருள் கொள்ள முடியும்.
குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறி செல்வதற்காகவும் ஜீனத்தாகவும் படைத்துள்ளான். (16:8)
இங்கும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
ஆதமின் மக்களே..! தொழுமிடங்களில் உங்களை ஜீனத்தாக்கிக் கொள்ளுங்கள்(7:31)
இங்கு ஜீனத் என்பதற்கு பொருள், நிர்வாணமாக பள்ளிகளுக்கு செல்லாமல் ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
ஜீனத் என்ற பதம் இப்படி பல பொருள்களை கொண்டுள்ளது.
இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் - அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர - என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.
இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.
இந்த விளக்கம் ஏன் என்றால் 24:31 வசனத்தில் முதலில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு ஆடை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியாது என்பதற்குதான். பெண்களை பொருத்தவரை அவர்கள் உடுத்தும் எந்த உடையும் அவர்களுக்கு அலங்காரம்தான். சல்வார் கமீஸ_டன் வெளிபட்டாலும் சரி, சேலையோ, புர்காவோ. துப்பட்டியோ எதுவும் அவர்களுக்கு அலங்காரம்தான். அப்படியானால் அந்த வசனத்தில் பேசுவது அலங்காரம் பற்றியது அல்ல. அங்கு வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயற்கை அழகு என்பது தான் பொருள்.
இப்போது பொருளைப் பார்ப்போம்.
முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.
அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.
இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டு இடங்களில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயல்பாக வீட்டில் இருக்கும்போதுள்ள செயற்கை அலங்காரம் என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது.
நபியே.............. விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)
பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.
இந்த வசனத்தில் இடம் பெறும் - தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் -
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.
நபி ஸல் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து......... - பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் - என்று கூறினார்கள். (அலி ரலி, நூல் : முஸ்லிம்)
தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.
(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல் , உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். ( பாத்திமா பின்த் கைஸ் ரலி, நூல் : நஸயி)
மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் - தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் - என்று கூறுகிறான்.
நபி ஸல் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 27, 2010 10:13 am

அருமையான தகவல் மாமு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக