புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமண மகரிஷி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ரமண பகவான்
[அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான், ரமணமகரி"களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.]
{எழுதியவர் திரு இ.ஆர்.கோவிந்தன், பதிப்பாளர் சி.டி.என்.வெங்கட்ராமன், நிர்வாகி,-தலைவர் , ரமணாச்ரமம்திருவண்ணாமலை 1963}
பாரத நாட்டின் புண்ணிய தினங்களில் ஆருத்ரா தர்சனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.கௌதமர், பதஞ்சலி போன்ற பக்தசிரேஷ்டர்களுக்கு சிவ பெருமான் காட்சியளித்த இப்புனித நாளன்று, 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இரவு ஒரு மணிக்கு , ரமண மகரிஷி பிறந்தார்.
அவர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை அருகே அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமம். அவரது தந்தை திரு சுந்தரம்ஐயர். கண்ணியமாக வக்கில் தொழில் நடத்திவந்தார்.அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகியரமணனுக்கு வேங்கடராமன் என்று நாமகரணம். குழந்தை வேங்கடராமனை உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர்திண்டுக்கல் சென்று ஒரு ஆண்டு ஐந்தாவது வகுப்பில் படித்தார். இதற்குப் பின்னர் மதுரைக்குப் போய் ஸ்காட்ஸ்இடைநிலைப் பள்ளியிலும், மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் வாசித்தார்.
பள்ளிப் பிராயத்திலெல்லாம், வருங்காலத்து மகிமையைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் அச்சிறுவனிடத்தில் காணப்படவில்லை. வகுப்பிலே அபார அறிவுடன் பிரகாசிக்கவில்லை. மகா புத்திசாலி என்றும் பேரும் எடுக்கவில்லை. நல்லவலுவான உடல் உறுதி உண்டு. இதைத் தவிர மற்றச் சிறுவர்களைவிட எவ்விதத்திலும் அவர் சிறந்து விளங்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குறிப்பிடத் தக்க நிகழ்வு.
பதினாறு வயது வரை இப்படிப் படிப்பில் கழிந்தது. 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவரது வாழ்வில் ஓர் முக்கியசம்பவம் நிகழ்ந்தது. ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார்."எங்கிருந்து வருகிறீர்?" என்று வேங்கடராமன் நலம் விசாரித்தார்."அருணாசலத்திலிருந்து வருகிறேன்" என்று வந்தது பதில். அது அவரைப் பரவசப்படுத்தியது. சிறு வயது முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்த 'அருணாசலம்' என்னும் ஏதோ ஒன்று,பூமியிலுள்ள ஓர் தலம், மலை என்னும் உரையைக் கேட்டு அவர் ஆச்சரியமுற்றார். ஆனால் அவர் அதைப் பற்றி அதிகம் ஒன்றும் நினைக்கவில்லை. இதன் பிறகு பெரிய புராணம் என்னும் நூல் கிடைத்தது. அதிலடங்கிய நாயன்மார்களுடையதிவ்ய சரித்திரங்கள் அவரது சிந்தையைக் கவர்ந்தன. ஆயினும் இந்த அனுபவங்கள்கூட மனதில் ஆழப் பதியவில்லை.
கடைசியாக 1896-ஆம் ஆண்டில் தான் திடீரெனஒரு மாறுதல் ஏற்பட்டது.
ஆத்ம சாக்ஷாத்காரம்.
ஒருநாள் வேங்கடராமன் தனதுசிறிய தந்தை வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உடலிலே நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று ஏதோ ஒருவித பயம் உள்ளத்தில் எழுந்தது. தான் மரணத் தருவாயில் இருப்பதாகச் சிறுவருக்குத் தோன்றியது. ஆனால் பெரியவர்கள் எவரிடத்திலும் இதை அவர் சொல்லவில்லை. தன் மனதுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளத் துணிந்தார். பிற்காலத்தில் இதை இவர்விவரிக்கும் போது , மகரிகளே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. 'சரி, சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால்என்ன? எது சாகிறது? இந்த உடல் தானே செத்துப்போகிறது?' என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு உடனே மரணானுபவத்தை ஏகாக்கிரமாய் பாவித்துப் பார்த்தேன்."
" பிணம் போல விறைக்குமாறு கைகால்களை நீட்டிப் படுத்தேன்.'சரி; இந்த உடம்பு செத்துவிட்டது' என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்துவிடுவார்கள். இது சாம்பராய்ப் போகும்.ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் 'நானும்' இறந்து விட்டேனா? இந்த உடல் தான் நானா? இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக்கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்குமப்பாற் கூட 'நான்' என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே! ஆகவே'நான்'தான் ஆத்மா--உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வயது, என்ற முடிவுக்கு வந்தேன். இதெல்லாம் ஒரு மனத் தோற்றம் அல்ல. நிதர்சனமான உண்மை அனுபவமென்று தெளிவாய் விளங்கிற்று.
பதினாறு வயது வரை இப்படிப் படிப்பில் கழிந்தது. 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவரது வாழ்வில் ஓர் முக்கியசம்பவம் நிகழ்ந்தது. ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார்."எங்கிருந்து வருகிறீர்?" என்று வேங்கடராமன் நலம் விசாரித்தார்."அருணாசலத்திலிருந்து வருகிறேன்" என்று வந்தது பதில். அது அவரைப் பரவசப்படுத்தியது. சிறு வயது முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்த 'அருணாசலம்' என்னும் ஏதோ ஒன்று,பூமியிலுள்ள ஓர் தலம், மலை என்னும் உரையைக் கேட்டு அவர் ஆச்சரியமுற்றார். ஆனால் அவர் அதைப் பற்றி அதிகம் ஒன்றும் நினைக்கவில்லை. இதன் பிறகு பெரிய புராணம் என்னும் நூல் கிடைத்தது. அதிலடங்கிய நாயன்மார்களுடையதிவ்ய சரித்திரங்கள் அவரது சிந்தையைக் கவர்ந்தன. ஆயினும் இந்த அனுபவங்கள்கூட மனதில் ஆழப் பதியவில்லை.
கடைசியாக 1896-ஆம் ஆண்டில் தான் திடீரெனஒரு மாறுதல் ஏற்பட்டது.
ஆத்ம சாக்ஷாத்காரம்.
ஒருநாள் வேங்கடராமன் தனதுசிறிய தந்தை வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உடலிலே நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று ஏதோ ஒருவித பயம் உள்ளத்தில் எழுந்தது. தான் மரணத் தருவாயில் இருப்பதாகச் சிறுவருக்குத் தோன்றியது. ஆனால் பெரியவர்கள் எவரிடத்திலும் இதை அவர் சொல்லவில்லை. தன் மனதுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளத் துணிந்தார். பிற்காலத்தில் இதை இவர்விவரிக்கும் போது , மகரிகளே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. 'சரி, சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால்என்ன? எது சாகிறது? இந்த உடல் தானே செத்துப்போகிறது?' என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு உடனே மரணானுபவத்தை ஏகாக்கிரமாய் பாவித்துப் பார்த்தேன்."
" பிணம் போல விறைக்குமாறு கைகால்களை நீட்டிப் படுத்தேன்.'சரி; இந்த உடம்பு செத்துவிட்டது' என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்துவிடுவார்கள். இது சாம்பராய்ப் போகும்.ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் 'நானும்' இறந்து விட்டேனா? இந்த உடல் தான் நானா? இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக்கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்குமப்பாற் கூட 'நான்' என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே! ஆகவே'நான்'தான் ஆத்மா--உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வயது, என்ற முடிவுக்கு வந்தேன். இதெல்லாம் ஒரு மனத் தோற்றம் அல்ல. நிதர்சனமான உண்மை அனுபவமென்று தெளிவாய் விளங்கிற்று.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆத்மானுஸந்தானம் - பாகம் 2
இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறிவிட்டது. மரண பயம் பறந்து போய்விட்டது. அவரது மனம் ஆத்ம தியானத்தில்ஆழ்ந்து, படிப்பைச் சிறிதும் நாடவில்லை. வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை.விளையாட்டுத் தோழர்களையும்மறந்தார். விளையாடலும் சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை.சாந்தமும் வணக்கமும் நிறைந்தவரானார். உணவைப்பற்றிச் சிறிதும் கவலை இல்லை. நல்லதோ, கெட்டதோ கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார்.
கோவிலுக்குப் போவதிலே புதிய ஸ்ரத்தை ஏற்பட்டது. இதற்கு முன்னமெல்லாம், எப்போதாவது, ஸ்ரீ மீனாக்ஷியம்மன் சந்நிதிக்குப் போவதென்றால் தமாஷாக, சினேகிதர்களுடன் போய்வருவது வழக்கம். ஆனால் இப்போது அப்படியில்லை! நாள்தவறாது, தனியே கோவிலை அடைந்து அம்மன், சுவாமி, நடராஜர், அறுபத்து மூவர் சந்நிதிகளில் நீண்ட நேரம் தொழுதுவிட்டு வருவார். "அறுபத்துமூவரது அன்பைப் போன்று எனது பக்தியைப் பெருக்கி நிலைக்கச் செய்ய அருள் சுரக்குமாறு ஒவ்வோர் சமையம் இறைவனை இறைஞ்சுவேன்.
ஆனால் அநேகமாக எதையும் அபேக்ஷ¢த்துப் பிரார்த்திப்பதில்லை. அகக் கடல் பொங்கி அருட்கடலோடு கலக்கும் இந்த ஹிருதய சங்கமத்தினால், கண்களில் நீர் துளிக்கும் அவ்வளவுதான் இன்பதுன்ப உணர்ச்சி ஒன்றும் கிடையது" என்று சுவாமி சந்நிதியில் தான் அடைந்த இன்பத்தை விளக்கியிருக்கிறார்.
இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறிவிட்டது. மரண பயம் பறந்து போய்விட்டது. அவரது மனம் ஆத்ம தியானத்தில்ஆழ்ந்து, படிப்பைச் சிறிதும் நாடவில்லை. வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை.விளையாட்டுத் தோழர்களையும்மறந்தார். விளையாடலும் சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை.சாந்தமும் வணக்கமும் நிறைந்தவரானார். உணவைப்பற்றிச் சிறிதும் கவலை இல்லை. நல்லதோ, கெட்டதோ கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார்.
கோவிலுக்குப் போவதிலே புதிய ஸ்ரத்தை ஏற்பட்டது. இதற்கு முன்னமெல்லாம், எப்போதாவது, ஸ்ரீ மீனாக்ஷியம்மன் சந்நிதிக்குப் போவதென்றால் தமாஷாக, சினேகிதர்களுடன் போய்வருவது வழக்கம். ஆனால் இப்போது அப்படியில்லை! நாள்தவறாது, தனியே கோவிலை அடைந்து அம்மன், சுவாமி, நடராஜர், அறுபத்து மூவர் சந்நிதிகளில் நீண்ட நேரம் தொழுதுவிட்டு வருவார். "அறுபத்துமூவரது அன்பைப் போன்று எனது பக்தியைப் பெருக்கி நிலைக்கச் செய்ய அருள் சுரக்குமாறு ஒவ்வோர் சமையம் இறைவனை இறைஞ்சுவேன்.
ஆனால் அநேகமாக எதையும் அபேக்ஷ¢த்துப் பிரார்த்திப்பதில்லை. அகக் கடல் பொங்கி அருட்கடலோடு கலக்கும் இந்த ஹிருதய சங்கமத்தினால், கண்களில் நீர் துளிக்கும் அவ்வளவுதான் இன்பதுன்ப உணர்ச்சி ஒன்றும் கிடையது" என்று சுவாமி சந்நிதியில் தான் அடைந்த இன்பத்தை விளக்கியிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்பன் அழைப்பு
இவ்வாறு ஆறு வாரங்கள் கடந்தன. வேங்கடராமனின் மாறுதலைக் கண்ட உறவினர்களுக்கு அது பிடிக்காமலிருந்தது ஆச்சரியமல்ல. படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிந்ததும் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29-ஆம் தேதி விஷயம் முற்றிவிட்டது.
அன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடம் எழுதிக்கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. மூன்றாவது முறையாக எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று வெறுப்புணர்ச்சி தோன்றிவிட்டது. புத்தகத்தைகட்டி மூலையில் போட்டுவிட்டு, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து," இப்படிப் பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு? என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதிரியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன. இவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அன்று மட்டும், அக்கேள்வி சுருக்கென்று தைத்தது.
" ஆமாம்; வாஸ்தவம் தானே. எனக்கு இங்கு என்னவேலை?" என்று சிந்தனை எழுந்தது. அதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்னே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய §க்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தைவிட்டு எழுந்து," பள்ளியில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்", என்று அண்ணனிடம் சொன்னார். "அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டி விட்டுவா ", என்று கூறினார் நாகசாமி. "இதுவும் தெய்வ கடாக்ஷம் தான்" என்று நினைத்துக் கொண்டு வேங்கடராமன் அவ்வாறே ரூபாயை எடுத்துக்கொண்டார். பின்னர் 'அட்லஸ்' புத்தகம் ஒன்றை எடுத்து ரயில் மார்க்கத்தைக் குறிப்பாகப் பார்க்கவே மூன்று ரூபாய் போதும் என்று தோன்றியது. உடனே, ஒரு கடிதமெழுதி, பாக்கி ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெரியும்படியான ஒரு இடத்தில் வைத்துவிட்டு புகைவண்டி நிலையத்துக்குப் புறப்பட்டார்.
கடிதத்தில் கண்டிருந்ததாவது: "நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக்காரியத்திற்கு ஒருவரும் விசனப் படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணச்செலவும் செய்ய வேனாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. இரண்டு இதோடுகூட இருக்கிறது. இப்படிக்கு..........."கடிதத்தின் வார்தைகளில் அவரது மனநிலை ஸ்பஷ்டமாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். "நான்" என்ற ஆரம்பம் சில வரிகளுக்கப்பால், ஏதோ ஓர் அஃறிணை 'இது' வாக மாறி, கடைசியில் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஒருவரும் இல்லாமல் மறைந்துவிட, கடிதமும் கையெழுத்தில்லாமலே முடிந்துவிடுகிறது.
இவ்வாறு ஆறு வாரங்கள் கடந்தன. வேங்கடராமனின் மாறுதலைக் கண்ட உறவினர்களுக்கு அது பிடிக்காமலிருந்தது ஆச்சரியமல்ல. படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிந்ததும் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29-ஆம் தேதி விஷயம் முற்றிவிட்டது.
அன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடம் எழுதிக்கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. மூன்றாவது முறையாக எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று வெறுப்புணர்ச்சி தோன்றிவிட்டது. புத்தகத்தைகட்டி மூலையில் போட்டுவிட்டு, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து," இப்படிப் பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு? என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதிரியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன. இவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் அன்று மட்டும், அக்கேள்வி சுருக்கென்று தைத்தது.
" ஆமாம்; வாஸ்தவம் தானே. எனக்கு இங்கு என்னவேலை?" என்று சிந்தனை எழுந்தது. அதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்னே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய §க்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தைவிட்டு எழுந்து," பள்ளியில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்", என்று அண்ணனிடம் சொன்னார். "அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டி விட்டுவா ", என்று கூறினார் நாகசாமி. "இதுவும் தெய்வ கடாக்ஷம் தான்" என்று நினைத்துக் கொண்டு வேங்கடராமன் அவ்வாறே ரூபாயை எடுத்துக்கொண்டார். பின்னர் 'அட்லஸ்' புத்தகம் ஒன்றை எடுத்து ரயில் மார்க்கத்தைக் குறிப்பாகப் பார்க்கவே மூன்று ரூபாய் போதும் என்று தோன்றியது. உடனே, ஒரு கடிதமெழுதி, பாக்கி ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெரியும்படியான ஒரு இடத்தில் வைத்துவிட்டு புகைவண்டி நிலையத்துக்குப் புறப்பட்டார்.
கடிதத்தில் கண்டிருந்ததாவது: "நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக்காரியத்திற்கு ஒருவரும் விசனப் படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணச்செலவும் செய்ய வேனாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. இரண்டு இதோடுகூட இருக்கிறது. இப்படிக்கு..........."கடிதத்தின் வார்தைகளில் அவரது மனநிலை ஸ்பஷ்டமாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். "நான்" என்ற ஆரம்பம் சில வரிகளுக்கப்பால், ஏதோ ஓர் அஃறிணை 'இது' வாக மாறி, கடைசியில் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஒருவரும் இல்லாமல் மறைந்துவிட, கடிதமும் கையெழுத்தில்லாமலே முடிந்துவிடுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தந்தையை நோக்கி - பாகம் 3
மதுரையைவிட்டு வெங்கடராமன் திருவண்ணாமலைக்கு மேற்கொண்ட பயணம் தனித் தன்மை வாய்ந்தது. . மாலையில் அவரது சிற்றப்பா வீட்டினிலிருந்து புறப்பட்டார். அரை மைல் தூரம் உள்ள மதுரை ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றார்.
ஆனால் அன்று வண்டி அதிர்ஷ்ட வசமாக நிலையத்தினின்றும் தாமதமாகப் புறப்பட்டது. எனவே அவர் பயணம் தடங்கலின்றி அமைந்தது.
ரயில்வே கால அட்டவணையில் மதுரையிலிருந்து திண்டிவனம் செல்வதற்கான வண்டிச் சத்தம் இரண்டு ரூபாய் பதிமூன்று அணா என்பதை அறிந்து கொண்டார். ஒரு சீட்டினை வாங்கிக் கொண்டு மீதம் மூன்று அணாவை வைத்துக் கொண்டார்.
விசாரித்திருந்தால் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு வேறுவழி இருப்புப் பாதை உள்ளது என்பதையும் அதற்கான சத்தம் ரூபாய் மூன்றுதான் என்பது தெரியவந்திருக்கும். வண்டியில் பயணம் செய்யும்போது உடனிருந்த மௌல்வி வாயிலாக திருவண்ணாமலை செல்வதற்கு தனியே பாதை உள்ளது என்றும், அதற்கு திண்டிவனம் செல்லவேண்டியதில்லை என்றும் முன்பாகவே விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறவேண்டும் என்றும் கூறினார்.
திருச்சிராப்பள்ளியை வந்தடைந்தபோது இருட்டிவிட்டது. வெங்கடராமனுக்கு பசித்தது. அரையணாவுக்கு மூன்று பழங்கள் வாங்கினார். ஒன்றைச் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணவு ஏற்பட்டது. அதிகாலை மூன்றுமணியளவில் வண்டி விழுப்புரத்தை அடைந்தது.
அங்கிருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே செல்வதாகத் தீர்மானித்தார். விழுப்புரம் நகருக்குள் சென்றார். திருவண்னாமலை செல்லும் பாதையை அறிந்து கொள்ள கைகாட்டியைத் தேடினார். ஒரு கைகாடிப் பலகையில் மாம்பலப்பட்டு என்று காணப்பட்டது. மாம்பலப்பட்டு திருவண்ணாமலை செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை அவர் அறியவில்லை. அசதியும் பசியும் இருந்ததால் சற்று ஓய்வு எடுக்க நினைத்தார்.
மதுரையைவிட்டு வெங்கடராமன் திருவண்ணாமலைக்கு மேற்கொண்ட பயணம் தனித் தன்மை வாய்ந்தது. . மாலையில் அவரது சிற்றப்பா வீட்டினிலிருந்து புறப்பட்டார். அரை மைல் தூரம் உள்ள மதுரை ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றார்.
ஆனால் அன்று வண்டி அதிர்ஷ்ட வசமாக நிலையத்தினின்றும் தாமதமாகப் புறப்பட்டது. எனவே அவர் பயணம் தடங்கலின்றி அமைந்தது.
ரயில்வே கால அட்டவணையில் மதுரையிலிருந்து திண்டிவனம் செல்வதற்கான வண்டிச் சத்தம் இரண்டு ரூபாய் பதிமூன்று அணா என்பதை அறிந்து கொண்டார். ஒரு சீட்டினை வாங்கிக் கொண்டு மீதம் மூன்று அணாவை வைத்துக் கொண்டார்.
விசாரித்திருந்தால் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு வேறுவழி இருப்புப் பாதை உள்ளது என்பதையும் அதற்கான சத்தம் ரூபாய் மூன்றுதான் என்பது தெரியவந்திருக்கும். வண்டியில் பயணம் செய்யும்போது உடனிருந்த மௌல்வி வாயிலாக திருவண்ணாமலை செல்வதற்கு தனியே பாதை உள்ளது என்றும், அதற்கு திண்டிவனம் செல்லவேண்டியதில்லை என்றும் முன்பாகவே விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறவேண்டும் என்றும் கூறினார்.
திருச்சிராப்பள்ளியை வந்தடைந்தபோது இருட்டிவிட்டது. வெங்கடராமனுக்கு பசித்தது. அரையணாவுக்கு மூன்று பழங்கள் வாங்கினார். ஒன்றைச் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணவு ஏற்பட்டது. அதிகாலை மூன்றுமணியளவில் வண்டி விழுப்புரத்தை அடைந்தது.
அங்கிருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே செல்வதாகத் தீர்மானித்தார். விழுப்புரம் நகருக்குள் சென்றார். திருவண்னாமலை செல்லும் பாதையை அறிந்து கொள்ள கைகாட்டியைத் தேடினார். ஒரு கைகாடிப் பலகையில் மாம்பலப்பட்டு என்று காணப்பட்டது. மாம்பலப்பட்டு திருவண்ணாமலை செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை அவர் அறியவில்லை. அசதியும் பசியும் இருந்ததால் சற்று ஓய்வு எடுக்க நினைத்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா அண்ணா அருமை தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல அறிய தகவல் அண்ணா . தொடருங்கள்
ஒரு உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பாடு சமைக்க மதியம் வரை ஆயிற்று. உணவு அருந்திவிட்டு இரண்டு அணா தன் சாப்பாட்டிற்கெனத் தரலாமா என்று உரிமையாளரிடம் கேட்டார். “நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்” என்று அவர் திரும்பக் கேட்டார்.”என்னிடம் இரண்டரை அணா” என்று வெங்க்ட்ராமன் சொன்னார். பணம் ஏதும் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் உரிமையாளர். அவர் மாம்பலப்பட்டு திருவண்ணாமலலை செல்லும் வழியில்தான் உள்ளது என்று விளக்கினார். வெங்கடராமன் மீளவும் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து கைவசம் உள்ள பணத்திற்கு மாம்பலப்பட்டுவரை மட்டுமே சீட்டு வாங்கிக் கொண்டார்.
மாம்பலப்பட்டு ரயில் நிலையத்தில் இற்ங்கினார். . அங்கிருந்து கால் நடையாகவே திருவண்ணாமலை செல்லும் வழியில் நடந்தார். ப்த்து மைல்கள் நடந்தபின் அரையாணி நல்லூர் கிராமத்திற்கு வந்தார். அங்கே சிறிய குன்றின் மீது ஒரு கோயில் தென்பட்டது. அந்தக் கோயிலை நோக்கி நடந்து நுழைவாயில் கதவுகள் திறப்பதற்காகக் காத்திருந்தார். நடை திறந்தபின்னர்.
கோயிலின் பிரகாரத்தில் ஒரு தனியிடத்தில் அமர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அற்புதமான சுகானுபவம் ஏற்பட்டது. கோயில் முழுதும் எல்லா இடத்திலும் கண் கூசும் பிரகாசமான ஒளிவெள்ளம் தென்பட்டது. அந்த வெண்மை ஒளி வந்ததைப் போன்றே சிறிது நேரத்தில் மறைந்தது. வெங்கடராமன் ஆழ்ந்த தியான நிலையில் மூழ்கியிருந்தார். நேரம் போனதே தெரியாமல் அவர் மோன நிலையில் இருந்தார். நடை சாத்தும் நேரம் வந்ததும் வெங்கடராமனை எழுப்பினார்.கோயில் அர்ச்சகர் மூன்றுகல் தொலைவில் உள்ள கிலூர் (திருக்கோவலூர் வீரட்டம்) பூஜைக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததால் பணியாளர்கள் புறப்பட முற்பட்டனர். வெங்கடராமனும் அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கும் அவர் சகஜ சமாதி நிலை அடைந்தார். பூஜை முடிந்தபின்னர் அவர்கள் மீளவும் அவரை உணர்வு நிலைக்கு எழுப்பினர்.
ஆனால் அவருக்கு எவரும் உணவு அளிக்க முன்வரவில்லை. அர்ச்சகர்களின் போக்கைக் கண்டித்து மேளகாரர் தன் பங்கு உண்டைக்கட்டியினை ( பச்சையரிசிச் சாதம் உருண்டை அச்சில்) கொடுத்தார். தாகவிடாய் ஏற்பட்டபோது சற்று தூரத்தே உள்ள ஒரு சாஸ்த்ரி வீட்டிற்கு சென்று நீர் பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
அந்த சாஸ்த்ரிகள் வீட்டினை நெருங்கும் போது வெங்கடராமன் மயக்கமுற்று வீழ்ந்தார். அக்கம் பக்கத்தினர் நீர் தெளித்து அவரை ஆசுவாசப் படுத்தினர். அந்தகூட்டத்தைப் பார்த்துவிட்டு அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.
மறுநாள் காலயில் அவர் எழுந்தார். அன்று கோகுலாஷ்டமி தினம். ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி,1896. அருணாசலத்தை நோக்கி மீண்டும் நடைபயில ஆரம்பித்தார். அசதியும் பசிப்பிணியும் வாட்டியது. அங்கிருந்த ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு முத்துகிருஷ்ண பாகவதர் என்பவருடைய வீடு. வெளியிலிருந்தே பசிக்கின்றது என்று கேட்டார். பாகவதர் அவரை உள்ளே அழைத்தார். அந்த இல்லத்து மாதரசி அவருக்கு உணவு கொடுத்து கண்ணனே அன்று அவர்கள் வீட்டிற்கு வந்து உண்டதாக நினைத்து இளைய சாதுவை ஆராதித்தார்.
தன் இரு கடுக்கன்களையும் (காதணி) அடகாக பெறுக்கொண்டு தன் யாத்திரைக்கென ரூபாய் நான்கு தரும்படி கேட்டார். சோதித்துப் பார்த்தார் பாகவதர் இருபது ரூபாய் பெறுனமானமுள்ள காதணிகளுக்கு கேட்டபடி ரூபாய் நான்கு கொடுத்தார். ஒரு கடுதாசியில் முகவரி எழுதிக்கொடுத்து எப்போது விரும்பினாலும் வந்து கடுக்கன்களை மீட்டிச் செல்லலாம் என்று கூறினார்.
வெங்கடராமன் மதியச் சாப்பாட்டினை அவர்கள் வீட்டடிலேயே முடித்துவிட்டுப் புறப்பட்டார். அவருடைய மனைவியார் கோகுலாஷ்டமி இனிப்புத் தின்பண்டங்கள் கட்டிக் கொடுத்தார்.ரயில் நிலையம் சென்று இரவு வண்டியில்லாததால் நிலையத்திலேயே கழித்தார்.
1896 செப்டெம்பர் மாதம் முதல் தேதி திருவண்ணாமலை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தார். பயணம் சிறியதே. சற்று நேரத்தில் திருவண்ணாமல் நிலையம் வந்தது. ரயிலை விட்டுஇறங்கியவுடன் அருணாச்லேச்வரர் கோயிலை நோக்கி விரைந்தார். கோயில் அவருடைய வருகைக்கென காத்துத் திறந்தே இருந்தது போலும். எவருமே அர்ச்சகர்கள் உட்பட் மக்கள் நடமாட்டமே இல்லை. வெங்கடராமன் வாயிலில் நுழைந்து தந்தை அருணாசலேச்வரர் முன் நின்றார். சொல்லொணா பேரின்ப உணர்ச்சி பெற்றார். காவியப் பயணம் நிறைவுற்றது..
வெங்கடராமன் என்னும் கப்பல் அருணாசலேச்வரர் என்னும் துறைமுகத்தை பத்திரமாக அடைந்தது.
மாம்பலப்பட்டு ரயில் நிலையத்தில் இற்ங்கினார். . அங்கிருந்து கால் நடையாகவே திருவண்ணாமலை செல்லும் வழியில் நடந்தார். ப்த்து மைல்கள் நடந்தபின் அரையாணி நல்லூர் கிராமத்திற்கு வந்தார். அங்கே சிறிய குன்றின் மீது ஒரு கோயில் தென்பட்டது. அந்தக் கோயிலை நோக்கி நடந்து நுழைவாயில் கதவுகள் திறப்பதற்காகக் காத்திருந்தார். நடை திறந்தபின்னர்.
கோயிலின் பிரகாரத்தில் ஒரு தனியிடத்தில் அமர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அற்புதமான சுகானுபவம் ஏற்பட்டது. கோயில் முழுதும் எல்லா இடத்திலும் கண் கூசும் பிரகாசமான ஒளிவெள்ளம் தென்பட்டது. அந்த வெண்மை ஒளி வந்ததைப் போன்றே சிறிது நேரத்தில் மறைந்தது. வெங்கடராமன் ஆழ்ந்த தியான நிலையில் மூழ்கியிருந்தார். நேரம் போனதே தெரியாமல் அவர் மோன நிலையில் இருந்தார். நடை சாத்தும் நேரம் வந்ததும் வெங்கடராமனை எழுப்பினார்.கோயில் அர்ச்சகர் மூன்றுகல் தொலைவில் உள்ள கிலூர் (திருக்கோவலூர் வீரட்டம்) பூஜைக்கு அவர் செல்ல வேண்டியிருந்ததால் பணியாளர்கள் புறப்பட முற்பட்டனர். வெங்கடராமனும் அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கும் அவர் சகஜ சமாதி நிலை அடைந்தார். பூஜை முடிந்தபின்னர் அவர்கள் மீளவும் அவரை உணர்வு நிலைக்கு எழுப்பினர்.
ஆனால் அவருக்கு எவரும் உணவு அளிக்க முன்வரவில்லை. அர்ச்சகர்களின் போக்கைக் கண்டித்து மேளகாரர் தன் பங்கு உண்டைக்கட்டியினை ( பச்சையரிசிச் சாதம் உருண்டை அச்சில்) கொடுத்தார். தாகவிடாய் ஏற்பட்டபோது சற்று தூரத்தே உள்ள ஒரு சாஸ்த்ரி வீட்டிற்கு சென்று நீர் பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
அந்த சாஸ்த்ரிகள் வீட்டினை நெருங்கும் போது வெங்கடராமன் மயக்கமுற்று வீழ்ந்தார். அக்கம் பக்கத்தினர் நீர் தெளித்து அவரை ஆசுவாசப் படுத்தினர். அந்தகூட்டத்தைப் பார்த்துவிட்டு அவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.
மறுநாள் காலயில் அவர் எழுந்தார். அன்று கோகுலாஷ்டமி தினம். ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி,1896. அருணாசலத்தை நோக்கி மீண்டும் நடைபயில ஆரம்பித்தார். அசதியும் பசிப்பிணியும் வாட்டியது. அங்கிருந்த ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீடு முத்துகிருஷ்ண பாகவதர் என்பவருடைய வீடு. வெளியிலிருந்தே பசிக்கின்றது என்று கேட்டார். பாகவதர் அவரை உள்ளே அழைத்தார். அந்த இல்லத்து மாதரசி அவருக்கு உணவு கொடுத்து கண்ணனே அன்று அவர்கள் வீட்டிற்கு வந்து உண்டதாக நினைத்து இளைய சாதுவை ஆராதித்தார்.
தன் இரு கடுக்கன்களையும் (காதணி) அடகாக பெறுக்கொண்டு தன் யாத்திரைக்கென ரூபாய் நான்கு தரும்படி கேட்டார். சோதித்துப் பார்த்தார் பாகவதர் இருபது ரூபாய் பெறுனமானமுள்ள காதணிகளுக்கு கேட்டபடி ரூபாய் நான்கு கொடுத்தார். ஒரு கடுதாசியில் முகவரி எழுதிக்கொடுத்து எப்போது விரும்பினாலும் வந்து கடுக்கன்களை மீட்டிச் செல்லலாம் என்று கூறினார்.
வெங்கடராமன் மதியச் சாப்பாட்டினை அவர்கள் வீட்டடிலேயே முடித்துவிட்டுப் புறப்பட்டார். அவருடைய மனைவியார் கோகுலாஷ்டமி இனிப்புத் தின்பண்டங்கள் கட்டிக் கொடுத்தார்.ரயில் நிலையம் சென்று இரவு வண்டியில்லாததால் நிலையத்திலேயே கழித்தார்.
1896 செப்டெம்பர் மாதம் முதல் தேதி திருவண்ணாமலை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தார். பயணம் சிறியதே. சற்று நேரத்தில் திருவண்ணாமல் நிலையம் வந்தது. ரயிலை விட்டுஇறங்கியவுடன் அருணாச்லேச்வரர் கோயிலை நோக்கி விரைந்தார். கோயில் அவருடைய வருகைக்கென காத்துத் திறந்தே இருந்தது போலும். எவருமே அர்ச்சகர்கள் உட்பட் மக்கள் நடமாட்டமே இல்லை. வெங்கடராமன் வாயிலில் நுழைந்து தந்தை அருணாசலேச்வரர் முன் நின்றார். சொல்லொணா பேரின்ப உணர்ச்சி பெற்றார். காவியப் பயணம் நிறைவுற்றது..
வெங்கடராமன் என்னும் கப்பல் அருணாசலேச்வரர் என்னும் துறைமுகத்தை பத்திரமாக அடைந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பால யோகி - பாகம் 4
வெளியே வந்ததும், ஊரின் கீழ்க்கோடியிலுள்ள ஐயன் குளத்தருகே சென்று கீமூரில் கிடைத்த ப?ணங்கள் பொட்டலதை எடுத்து."இந்தக் கட்டைக்குத் தின்பண்டங்கள் எதற்கு?" என்று கூறிக்கொண்டே எறிந்து விட்டு நடந்தார். "முடி எடுக்கவேண்டுமா?" என்று வழியில் யாரோ ஒருவர் கேட்கவே, இதுவும் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.
அழகிய குடுமி அன்றோடு ஒழிந்தது. அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து ஒரு பீனத்திற்கான துண்டைமட்டும் கிழித்துக் கொண்டு, மற்றதையெல்லாம் சுருட்டி, பூணூலையும் மிச்சமிருந்த ரூபாயையும் சேர்த்துத் தூர எறிந்தார். Sநானம் செய்வது கூட அவசியம் என்று தோன்றவில்லை. நேரே கோவிலுக்குள் திரும்பிப் போகும் முன்னமேயே, திடிரென்று கனத்த மழை பெய்வித்து, அருணாசலேஸ்வரர் அவரை ஸ்நானம் செய்வித்தார். நேரே ஆயிரக்கால் மண்டபத்திற்குள் சென்று அவர் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால் வெகு நாள்வரை அங்கிருக்கமுடியவில்லை. பால சந்நியாசியின் இளமையும் மௌன விரதமும் பலருக்கும் ஆச்சர்யத்தை விளைவித்தன. அவர் யார், எந்த ஊர், ஏன் இக்கோலம் முதலிய விவரங்களை அறிய ஆவல் கொண்டனர். இது தவிர, வி"மக்கார சிறுவர்களின் தொந்தரவும் அதிகமாயிற்று. ஆகவே, அவர் தனிமையான ஓர் இடத்தை நாடினார். கோவிலிலே பாதாளலிங்கம் என்ற ஓர் இருட்டுக் குகையைக் கண்டார்.
பட்டப் பகலில் கூட அதற்குள் செல்ல எல்லோருக்கும் பயம். ஆனால் பால சந்நியாசி பாதாள லிங்கத்தையே தெரிந்தெடுத்துத் தனிமையான தவயோகத்தில் ஆழ்ந்தார். அங்கே எத்தனை தினங்கள் தவங்கிடந்தனரோ ஒருவருக்கும் தெரியாது. பிறகு ஒரு நாள் பால சந்நியாசி அங்கிருப்பது எப்படியோ வெளியாயிற்று. அந்த யோக நிலைக்காட்சி கண்டோரை வியக்கச் செய்தது. பூர்வம், வான்மீக முனிவர் தம்மைச் சுற்றிலும் கரையான் புற்றுக்கள் மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காகத் தவம் செய்ததாகக் கூறுவர். பால யோகியின் தவ நிலையும் அதை ஒத்திருந்தது. பாதாள லிங்கத்தின் இருட்டிலேயே குடியிருந்த ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு யோக நிலையில் இருந்தவர் உடம்பு சரியான இரையாகக் கிடைத்தது.
உடம்பின் கீழ்ப் பாகம் பூச்சி அரித்து, ரத்தமும் சீழும் சேர்ந்து உறைந்து கட்டிக் கிடந்தது. ஆனால் அந்த பால சந்நியாசிக்கு இதனால் எவ்விதத் துன்பமும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனந்த நி?டையில் அசையாது வீற்றிருந்தார். இந்தக் கா?¢யைக் கண்டோர் அனைவரும் பிரமித்துப் போயினர். பால சந்நியாசியின் தவ வலிமையை நிதரிசனமாக உணர்ந்த சாதுக்கள் அதுமுதல் அவரை மிகவும் மரியாதையாகக் கவனித்து வருவாராயினர். ஆயினும் பால யோகி அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்தார். , சுப்பிரமணியர் கோவிலருகே சில காலம் இருந்தார். அதன் பக்கத்திலிருந்த பூந்தோட்டத்தில் சில நாட்கள்; இதன் பின் வாகன மண்டபத்தில் சில நாட்கள்; கடைசியாக மங்கை பிள்ளயார் கோவிலை அடைந்தார். பால சந்நியாசியின் மகிமையை உணர்ந்த உத்தண்டி நயினார் என்னும் சாது, இச்சமயத்தில் சுவாமிகளையடுத்து உபதேசம் பெறவேண்டி அவருக்குத் தொண்டுசெய்யத் தொடங்கினார். அப்போதும் கூட வி"மிகளின் தொந்தரவு நீங்கவில்லை. நயினார் இல்லாத சமய்ங்களில் துஷ்டப் பிள்ளைகள் பல இடையூறுகள் செய்வதுண்டு. இதைக் கூட அவர் பொருடள்படுத்துவதில்லை.
சுவாமிகளின் பெருமை நாளுக்கு நாள் எங்கும் பரவவே, பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து போவாராயினர். இதனால் துஷ்டர்களின் கொடுமைகள் நின்றன. பக்தர்கள் கூட்டம் பெருகியதால் தியானத்துக்கு இடைஞ்சல் ஏற்படவே சுவாமிகள் அதைவிட்டுப் புறப்பட்டுத் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்தார். அங்கே ஒன்றரை ஆண்டு காலம் சமாதி நிஷ்டையில் இருந்தார். இங்கே தான் முதன் முதலாக சுவாமிகளின் பூர்வோத்தரம் வெளியாயிற்று. கூட இருந்த பக்தர் ஒருவர் ஒரு நாள் சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். ஆனால், ஆராதனைக்குச் சற்று முன், கரியால் எழுதப் பட்டிருந்த சில வார்தைகள் சுவற்றில் காணப்பட்டன. "இதற்குத் தொண்டு இதுவே" என்பது அவ்வாக்கியம். "இது" என்பது பக்தர்கள் கொண்டுவரும் உணவைக் குறிப்பதாகும். இதைக் கண்டபின் ஆராதனை நின்றுவிட்டது என்று சொல்லத் தேவையில்லை. சுவாமிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் மூலம் தான் வெளியாயிற்று. இதன் பின்னர் அவ்வூர் தாலுக்கா அலுவலக சிரஸ்தாராக இருந்த ஒரு பக்தர் விடாப் பிடியாக சுவாமிகளின் பூர்வோத்தரத்தை அறிய முயன்றார். அதைத் தெரிவித்தால் ஒழிய, தாம் அவ்விடதைவிட்டு நகருவதில்லையென்று சங்கல்பம் செய்துகொண்டார்.
முடிவில் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு எழுதிக் காட்டினார். "வேங்கடராமன்,திருச்சுழி" பக்தருக்கு இவ்வூர்ப் பெயர் புரியவில்லை. உடனே உவாமி பக்கத்திலிருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்றதிருச்சுழி என்னும் திவ்ய தலத்தின் பெயரைச்சுட்டிக் காட்டினார்.
வெளியே வந்ததும், ஊரின் கீழ்க்கோடியிலுள்ள ஐயன் குளத்தருகே சென்று கீமூரில் கிடைத்த ப?ணங்கள் பொட்டலதை எடுத்து."இந்தக் கட்டைக்குத் தின்பண்டங்கள் எதற்கு?" என்று கூறிக்கொண்டே எறிந்து விட்டு நடந்தார். "முடி எடுக்கவேண்டுமா?" என்று வழியில் யாரோ ஒருவர் கேட்கவே, இதுவும் செய்ய வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.
அழகிய குடுமி அன்றோடு ஒழிந்தது. அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து ஒரு பீனத்திற்கான துண்டைமட்டும் கிழித்துக் கொண்டு, மற்றதையெல்லாம் சுருட்டி, பூணூலையும் மிச்சமிருந்த ரூபாயையும் சேர்த்துத் தூர எறிந்தார். Sநானம் செய்வது கூட அவசியம் என்று தோன்றவில்லை. நேரே கோவிலுக்குள் திரும்பிப் போகும் முன்னமேயே, திடிரென்று கனத்த மழை பெய்வித்து, அருணாசலேஸ்வரர் அவரை ஸ்நானம் செய்வித்தார். நேரே ஆயிரக்கால் மண்டபத்திற்குள் சென்று அவர் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால் வெகு நாள்வரை அங்கிருக்கமுடியவில்லை. பால சந்நியாசியின் இளமையும் மௌன விரதமும் பலருக்கும் ஆச்சர்யத்தை விளைவித்தன. அவர் யார், எந்த ஊர், ஏன் இக்கோலம் முதலிய விவரங்களை அறிய ஆவல் கொண்டனர். இது தவிர, வி"மக்கார சிறுவர்களின் தொந்தரவும் அதிகமாயிற்று. ஆகவே, அவர் தனிமையான ஓர் இடத்தை நாடினார். கோவிலிலே பாதாளலிங்கம் என்ற ஓர் இருட்டுக் குகையைக் கண்டார்.
பட்டப் பகலில் கூட அதற்குள் செல்ல எல்லோருக்கும் பயம். ஆனால் பால சந்நியாசி பாதாள லிங்கத்தையே தெரிந்தெடுத்துத் தனிமையான தவயோகத்தில் ஆழ்ந்தார். அங்கே எத்தனை தினங்கள் தவங்கிடந்தனரோ ஒருவருக்கும் தெரியாது. பிறகு ஒரு நாள் பால சந்நியாசி அங்கிருப்பது எப்படியோ வெளியாயிற்று. அந்த யோக நிலைக்காட்சி கண்டோரை வியக்கச் செய்தது. பூர்வம், வான்மீக முனிவர் தம்மைச் சுற்றிலும் கரையான் புற்றுக்கள் மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காகத் தவம் செய்ததாகக் கூறுவர். பால யோகியின் தவ நிலையும் அதை ஒத்திருந்தது. பாதாள லிங்கத்தின் இருட்டிலேயே குடியிருந்த ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு யோக நிலையில் இருந்தவர் உடம்பு சரியான இரையாகக் கிடைத்தது.
உடம்பின் கீழ்ப் பாகம் பூச்சி அரித்து, ரத்தமும் சீழும் சேர்ந்து உறைந்து கட்டிக் கிடந்தது. ஆனால் அந்த பால சந்நியாசிக்கு இதனால் எவ்விதத் துன்பமும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனந்த நி?டையில் அசையாது வீற்றிருந்தார். இந்தக் கா?¢யைக் கண்டோர் அனைவரும் பிரமித்துப் போயினர். பால சந்நியாசியின் தவ வலிமையை நிதரிசனமாக உணர்ந்த சாதுக்கள் அதுமுதல் அவரை மிகவும் மரியாதையாகக் கவனித்து வருவாராயினர். ஆயினும் பால யோகி அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்தார். , சுப்பிரமணியர் கோவிலருகே சில காலம் இருந்தார். அதன் பக்கத்திலிருந்த பூந்தோட்டத்தில் சில நாட்கள்; இதன் பின் வாகன மண்டபத்தில் சில நாட்கள்; கடைசியாக மங்கை பிள்ளயார் கோவிலை அடைந்தார். பால சந்நியாசியின் மகிமையை உணர்ந்த உத்தண்டி நயினார் என்னும் சாது, இச்சமயத்தில் சுவாமிகளையடுத்து உபதேசம் பெறவேண்டி அவருக்குத் தொண்டுசெய்யத் தொடங்கினார். அப்போதும் கூட வி"மிகளின் தொந்தரவு நீங்கவில்லை. நயினார் இல்லாத சமய்ங்களில் துஷ்டப் பிள்ளைகள் பல இடையூறுகள் செய்வதுண்டு. இதைக் கூட அவர் பொருடள்படுத்துவதில்லை.
சுவாமிகளின் பெருமை நாளுக்கு நாள் எங்கும் பரவவே, பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து போவாராயினர். இதனால் துஷ்டர்களின் கொடுமைகள் நின்றன. பக்தர்கள் கூட்டம் பெருகியதால் தியானத்துக்கு இடைஞ்சல் ஏற்படவே சுவாமிகள் அதைவிட்டுப் புறப்பட்டுத் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்தார். அங்கே ஒன்றரை ஆண்டு காலம் சமாதி நிஷ்டையில் இருந்தார். இங்கே தான் முதன் முதலாக சுவாமிகளின் பூர்வோத்தரம் வெளியாயிற்று. கூட இருந்த பக்தர் ஒருவர் ஒரு நாள் சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். ஆனால், ஆராதனைக்குச் சற்று முன், கரியால் எழுதப் பட்டிருந்த சில வார்தைகள் சுவற்றில் காணப்பட்டன. "இதற்குத் தொண்டு இதுவே" என்பது அவ்வாக்கியம். "இது" என்பது பக்தர்கள் கொண்டுவரும் உணவைக் குறிப்பதாகும். இதைக் கண்டபின் ஆராதனை நின்றுவிட்டது என்று சொல்லத் தேவையில்லை. சுவாமிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் மூலம் தான் வெளியாயிற்று. இதன் பின்னர் அவ்வூர் தாலுக்கா அலுவலக சிரஸ்தாராக இருந்த ஒரு பக்தர் விடாப் பிடியாக சுவாமிகளின் பூர்வோத்தரத்தை அறிய முயன்றார். அதைத் தெரிவித்தால் ஒழிய, தாம் அவ்விடதைவிட்டு நகருவதில்லையென்று சங்கல்பம் செய்துகொண்டார்.
முடிவில் சுவாமிகள் கீழ்க்கண்டவாறு எழுதிக் காட்டினார். "வேங்கடராமன்,திருச்சுழி" பக்தருக்கு இவ்வூர்ப் பெயர் புரியவில்லை. உடனே உவாமி பக்கத்திலிருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்றதிருச்சுழி என்னும் திவ்ய தலத்தின் பெயரைச்சுட்டிக் காட்டினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீரமண மகரிஷி--5
தநயன் நிலையை தாய் அறிவதுசுவாமிகள் திருவண்ணாமலையில் இருப்பது விரைவில் நாடெங்கிலும் பரவி மதுரைக்கும் எட்டிவிட்டது.ஆராதனை செய்ய முற்பட்ட பக்தரான திருவண்ணாமலைத் தம்பிரான் மதுரையிலுள்ள ஒரு மடத்தில் சுவாமிகளின் மகிமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்.இதைக்கேட்ட பையன் ஒருவன் உறவினர்களிடம் ஓடிப் போய்," நமது வேங்கடராமன், திருவண்ணாமலையில், ஒரு சாமியாராய் இருக்கிறானாம்" என்று கூறினான். சுவாமிகளின் சிறிய தந்தையான நெல்லையப்பையர் உடன் திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அப்போது ஒரு மாந்தோப்பில் சுவாமிகளின் வாசம்.
அந்நியர்களை அதிகமாக அங்கே அனுமதிப்பதில்லை. நெல்லையப்பரும் ஒரு சீட்டைக் கொடுத்தனுப்பினார். உள்ளே சென்றதும் அவர் கண்ட காட்சி அவர் மனத்தை உருக்கியது. பாலிய மைந்தனது மேனி அழுக்கடைந்து கிடந்தது. தலையிலே புதர் போல் மயிர்; கையில் வளர்ந்த நகங்கள். ஆனாலும் நெல்லையப்பர் மனத்தைத் தேற்றிகொண்டார். தங்கள் குடும்பத்தான் ஒருவன் இவ்வளவு உயர்ந்த ஞான நிலையை அடைந்ததைப் பற்றி அவருக்குத் திருப்திதான். ஆனாலும் ஊருக்குத் திரும்பி வந்து தங்கள் பக்கத்தில் இருக்குமாறு அவர் சுவாமிகளை வேண்டிக்கொண்டார்; சுவாமிகளுடைய சௌகரியங்களைக் குறைவில்லாது கவனிக்க அது ஏதுவாகும் என்றும் கூறினார்.
ஆனால் சுவாமிகளிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவரது அருட் பார்வையில் கூட எவ்வித மாறுதலும் தோன்றவில்லை. ஆளையாவது நேரில் பார்த்தோமே என்ற திருப்தி அவருக்கு. பையன் இனிமேல் ஊருக்குத் திரும்புவது கஷ்டம் என்று சுவாமியின் தாயாரான அழகம்மையிடம் அறிவித்தார்.
பெற்ற தாயின் மனம் அவ்வளவு எளிதில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுமா? தாயின் வருகை மூத்த பிள்ளை நாகசாமிக்கு லீவு கிடைத்தவுடன் தாயும் அண்ணனும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே பவழக் குன்றில் உள்ள ஒரு பாறையின் மீது சுவாமி படுத்திருந்தார். பார்வைக்கு எவ்வளவோ மாறுதல் அடைந்திருந்த போதிலும் தன் அருமைக் குழந்தையென்பது அன்னைக்கு உடனே தெரிந்துவிட்டது. நெல்லையப்பருக்குக் கிடைத்த பதில் தான் அன்னைஅழகம்மைக்கும் கிடைத்தது. நாள் தவறாமல் அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப் பிடியாக வேண்டினர்.
அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது.: அழுதார்;அரற்றினார்;வேண்டினார்; இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் நிச்சலமான ஒரு மௌனம்!
பக்கத்திலுள்ளவர்களுக்கு இது மிகவும் பரிதாபக் காட்சியாக இருந்தது. அன்னையின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது.பெறெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு கடிதத்தில் பின்வறுமாறு எழுதிக் கொடுத்தார்: "அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று." இதற்கு மேல் தாய் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. நாகசாமியின் லீவு முடிந்ததும் இருவரும் மனவருத்தத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினர். இதன்பின் சுவாமிகள் மலைமேல் பலகுகைகளில் மாறி மாறித் தங்கிவந்தார். விருபாக்ஷிக் குகையிலிருந்தபோது அந்த மடத்துத் தலைவர் சுவாமியைப் பார்க்க வருபவர்களுக்கு டிக்கட் வைத்துப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவே அதையும் விட்டுக் கிளம்பிப் பக்கதிலிருந்த ஒருவெளியிடத்தில் தங்கினார். அப்போதும் டிக்கட் நின்றபாடில்லை.
கடைசியில் அந்தப் பிரதேசத்தையே நீத்து தொலைவில் உள்ள மற்றோர் குகையை நாடிச் சென்றார். இதற்குள் டிக்கட்டு வைத்த பக்தர் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்கும்படி மன்றாடவே சுவாமியும் கருணை கூர்ந்து திரும்பினார். ஆனால் கோடை காலத்தில் விருபா?க்ஷிகுகையில் வெயிலின் கொடுமை வெகு உக்கிரமாகத் தாக்கிற்று. ஆள் இருக்க முடியாதாபடி உருக்கிற்று. ஆகவே அதைவிட்டு நீங்கி முலைப் பால் திர்த்தத்திற்கு அருகேயுள்ள மாமரக்குகைக்கு மாறவேண்டியதாயிற்று. விருபாக்ஷி குகையிலிருந்த போது உள்ளம் மலர்ந்துதெய்வீக பக்தி ததும்பும்' அருணசல அக்ஷரமாலை' என்னும் திவ்விய பாடலை அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிக்ஷைக்காக ஊர்க்குள் செல்லும் போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வருவாராயினர்.
தநயன் நிலையை தாய் அறிவதுசுவாமிகள் திருவண்ணாமலையில் இருப்பது விரைவில் நாடெங்கிலும் பரவி மதுரைக்கும் எட்டிவிட்டது.ஆராதனை செய்ய முற்பட்ட பக்தரான திருவண்ணாமலைத் தம்பிரான் மதுரையிலுள்ள ஒரு மடத்தில் சுவாமிகளின் மகிமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்.இதைக்கேட்ட பையன் ஒருவன் உறவினர்களிடம் ஓடிப் போய்," நமது வேங்கடராமன், திருவண்ணாமலையில், ஒரு சாமியாராய் இருக்கிறானாம்" என்று கூறினான். சுவாமிகளின் சிறிய தந்தையான நெல்லையப்பையர் உடன் திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அப்போது ஒரு மாந்தோப்பில் சுவாமிகளின் வாசம்.
அந்நியர்களை அதிகமாக அங்கே அனுமதிப்பதில்லை. நெல்லையப்பரும் ஒரு சீட்டைக் கொடுத்தனுப்பினார். உள்ளே சென்றதும் அவர் கண்ட காட்சி அவர் மனத்தை உருக்கியது. பாலிய மைந்தனது மேனி அழுக்கடைந்து கிடந்தது. தலையிலே புதர் போல் மயிர்; கையில் வளர்ந்த நகங்கள். ஆனாலும் நெல்லையப்பர் மனத்தைத் தேற்றிகொண்டார். தங்கள் குடும்பத்தான் ஒருவன் இவ்வளவு உயர்ந்த ஞான நிலையை அடைந்ததைப் பற்றி அவருக்குத் திருப்திதான். ஆனாலும் ஊருக்குத் திரும்பி வந்து தங்கள் பக்கத்தில் இருக்குமாறு அவர் சுவாமிகளை வேண்டிக்கொண்டார்; சுவாமிகளுடைய சௌகரியங்களைக் குறைவில்லாது கவனிக்க அது ஏதுவாகும் என்றும் கூறினார்.
ஆனால் சுவாமிகளிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவரது அருட் பார்வையில் கூட எவ்வித மாறுதலும் தோன்றவில்லை. ஆளையாவது நேரில் பார்த்தோமே என்ற திருப்தி அவருக்கு. பையன் இனிமேல் ஊருக்குத் திரும்புவது கஷ்டம் என்று சுவாமியின் தாயாரான அழகம்மையிடம் அறிவித்தார்.
பெற்ற தாயின் மனம் அவ்வளவு எளிதில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளுமா? தாயின் வருகை மூத்த பிள்ளை நாகசாமிக்கு லீவு கிடைத்தவுடன் தாயும் அண்ணனும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே பவழக் குன்றில் உள்ள ஒரு பாறையின் மீது சுவாமி படுத்திருந்தார். பார்வைக்கு எவ்வளவோ மாறுதல் அடைந்திருந்த போதிலும் தன் அருமைக் குழந்தையென்பது அன்னைக்கு உடனே தெரிந்துவிட்டது. நெல்லையப்பருக்குக் கிடைத்த பதில் தான் அன்னைஅழகம்மைக்கும் கிடைத்தது. நாள் தவறாமல் அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப் பிடியாக வேண்டினர்.
அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது.: அழுதார்;அரற்றினார்;வேண்டினார்; இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் நிச்சலமான ஒரு மௌனம்!
பக்கத்திலுள்ளவர்களுக்கு இது மிகவும் பரிதாபக் காட்சியாக இருந்தது. அன்னையின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது.பெறெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு கடிதத்தில் பின்வறுமாறு எழுதிக் கொடுத்தார்: "அவரவர் பிரரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று." இதற்கு மேல் தாய் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. நாகசாமியின் லீவு முடிந்ததும் இருவரும் மனவருத்தத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினர். இதன்பின் சுவாமிகள் மலைமேல் பலகுகைகளில் மாறி மாறித் தங்கிவந்தார். விருபாக்ஷிக் குகையிலிருந்தபோது அந்த மடத்துத் தலைவர் சுவாமியைப் பார்க்க வருபவர்களுக்கு டிக்கட் வைத்துப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவே அதையும் விட்டுக் கிளம்பிப் பக்கதிலிருந்த ஒருவெளியிடத்தில் தங்கினார். அப்போதும் டிக்கட் நின்றபாடில்லை.
கடைசியில் அந்தப் பிரதேசத்தையே நீத்து தொலைவில் உள்ள மற்றோர் குகையை நாடிச் சென்றார். இதற்குள் டிக்கட்டு வைத்த பக்தர் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்கும்படி மன்றாடவே சுவாமியும் கருணை கூர்ந்து திரும்பினார். ஆனால் கோடை காலத்தில் விருபா?க்ஷிகுகையில் வெயிலின் கொடுமை வெகு உக்கிரமாகத் தாக்கிற்று. ஆள் இருக்க முடியாதாபடி உருக்கிற்று. ஆகவே அதைவிட்டு நீங்கி முலைப் பால் திர்த்தத்திற்கு அருகேயுள்ள மாமரக்குகைக்கு மாறவேண்டியதாயிற்று. விருபாக்ஷி குகையிலிருந்த போது உள்ளம் மலர்ந்துதெய்வீக பக்தி ததும்பும்' அருணசல அக்ஷரமாலை' என்னும் திவ்விய பாடலை அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிக்ஷைக்காக ஊர்க்குள் செல்லும் போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வருவாராயினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீரமண மகரிஷி 6
இக்காலத்தில்தான் ஆங்கிலம் படித்த சிலரும் சுவாமிகளின் மகிமை தெரிந்து அடிக்கடி தரிசனத்துக்கு வருவாராயினர். இவர்களுள் சிலர் சுவாமிகளைப் பற்றியும் அவரது உபதேசங்களைப் பற்றியும் எழுதிக் குறித்து வைத்திருக்கின்றனர்.
சேயர் என்னும் பக்தரின் சந்தேகங்களுக்குச் சுவாமிகள் சிறு சீட்டுகளில் பதில் எழுதிக் கொடுப்பது வழக்கம். "விசார சங்கிரகம்" என்னும் நூல் இந்தக் குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். , சிவப் பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் சுவாமிகளின் உபதேசத்தைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அந்தக் காலத்திலேயே ஆத்ம ஞானோபதேசம் சிறந்து விளங்கியதென்பதை அதில் உள்ள கீழ்கண்ட பாகங்கள் நிதரிசனமாகக் காட்டுகின்றன:
"மனமற்ற நித்திரையில் தினம் அநுபவிக்கும் தன் சுபாவமான அந்தச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு, 'நான் யார்' என்னும் விசாரமே முக்கிய சாதனம்." "நான் யார் ? சப்த தாதுக்களாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ர., கந்தம் என்னும் பஞ்ச வி"யங்களையும் தனித்தனியே அறிகின்ற ஞானேந்திரியங்களும் நானன்று. வசனம், கமனம், தானம், மலவிசர்னம், ஆனந்தித்தல் என்னும் ஐந்தொழில்களையும் செய்கின்ற கன்மேந்திரியங்களும் நானன்று. சுவாசாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. சர்வ வி"யங்களும் சர்வ தொழில்களும் அற்று, வி"ய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி யிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லிய யாவும் நானல்ல, நானல்ல வென்று நேதி செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.
அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்." "நானார் என்னும் விசாரணையிலேயே மனம் அடங்கும்; நானார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். (அப்போது) ஆத்ம ஞானமே திகழும்." இதன் பின் மகரிஷிகளின் அருளுக்குப் பாத்திர மானவர்களுள் முக்கியமானவர் , காவ்யகண்ட கணபதி சாஸ்த்ரிகள் ஆவர். இவரது வரவு பல விதங்களில் விசேடம் வாய்ந்தது. கணபதி முனிவர் மகா பண்டிதர் என்று பெயர் படைத்தவர்; பெரிய கவி; வேதாந்தி. இவர் பன்னீரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றியும் கருதிய பலன் ஒன்றும் கிட்டாமல் மனம் வருந்தி நின்றார். 1907-ஆம் ஆண்டு ஒருநாள் திருவண்ணாமலைச் சுற்று வழியில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் இருந்தார். திடீரென்று, " பகவான் அழைக்கிறார்" என்று அசரீரி ஒன்று அழைப்பது போல் தோன்றியது.
இக்காலத்தில்தான் ஆங்கிலம் படித்த சிலரும் சுவாமிகளின் மகிமை தெரிந்து அடிக்கடி தரிசனத்துக்கு வருவாராயினர். இவர்களுள் சிலர் சுவாமிகளைப் பற்றியும் அவரது உபதேசங்களைப் பற்றியும் எழுதிக் குறித்து வைத்திருக்கின்றனர்.
சேயர் என்னும் பக்தரின் சந்தேகங்களுக்குச் சுவாமிகள் சிறு சீட்டுகளில் பதில் எழுதிக் கொடுப்பது வழக்கம். "விசார சங்கிரகம்" என்னும் நூல் இந்தக் குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். , சிவப் பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் சுவாமிகளின் உபதேசத்தைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அந்தக் காலத்திலேயே ஆத்ம ஞானோபதேசம் சிறந்து விளங்கியதென்பதை அதில் உள்ள கீழ்கண்ட பாகங்கள் நிதரிசனமாகக் காட்டுகின்றன:
"மனமற்ற நித்திரையில் தினம் அநுபவிக்கும் தன் சுபாவமான அந்தச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு, 'நான் யார்' என்னும் விசாரமே முக்கிய சாதனம்." "நான் யார் ? சப்த தாதுக்களாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ர., கந்தம் என்னும் பஞ்ச வி"யங்களையும் தனித்தனியே அறிகின்ற ஞானேந்திரியங்களும் நானன்று. வசனம், கமனம், தானம், மலவிசர்னம், ஆனந்தித்தல் என்னும் ஐந்தொழில்களையும் செய்கின்ற கன்மேந்திரியங்களும் நானன்று. சுவாசாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. சர்வ வி"யங்களும் சர்வ தொழில்களும் அற்று, வி"ய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி யிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லிய யாவும் நானல்ல, நானல்ல வென்று நேதி செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.
அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்." "நானார் என்னும் விசாரணையிலேயே மனம் அடங்கும்; நானார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். (அப்போது) ஆத்ம ஞானமே திகழும்." இதன் பின் மகரிஷிகளின் அருளுக்குப் பாத்திர மானவர்களுள் முக்கியமானவர் , காவ்யகண்ட கணபதி சாஸ்த்ரிகள் ஆவர். இவரது வரவு பல விதங்களில் விசேடம் வாய்ந்தது. கணபதி முனிவர் மகா பண்டிதர் என்று பெயர் படைத்தவர்; பெரிய கவி; வேதாந்தி. இவர் பன்னீரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றியும் கருதிய பலன் ஒன்றும் கிட்டாமல் மனம் வருந்தி நின்றார். 1907-ஆம் ஆண்டு ஒருநாள் திருவண்ணாமலைச் சுற்று வழியில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் இருந்தார். திடீரென்று, " பகவான் அழைக்கிறார்" என்று அசரீரி ஒன்று அழைப்பது போல் தோன்றியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|