ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by மகா பிரபு Today at 3:08 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

View previous topic View next topic Go down

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by செந்தில் on Sat Mar 13, 2010 4:10 pm

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி









மனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும்.

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்."கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது" என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். எனவே எந்த சாமியார்கள் மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. ஆனால், பொதுமக்களில் பலர் எத்தனை நிகழ்வுகளை கண்டாலும் இன்னும் திருந்தாமல் சாமியார்களை நம்பி மோசம் போகும் போது வேதனையாக உள்ளது. ஒழுக்கக்கேட்டின் மொத்த உருவமாக சாமியார்கள் திகழ்கின்றனர்.

தந்தை பெரியார் தனது மூச்சு உள்ளவரை, தமிழ்ச் சமுதாயத்திற்கு மானமும், அறிவும் உணர்த்த வேண்டும் என்பதற்காக உழைத்தார். எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? ஏன்று கேட்கச் சொன்னார்.

தனது வாயில் வாழைப்பழத்தை மென்று, அப்பழத்தை தனது பக்தைக்கு அவளின் வாயில் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை இன்றும் தொடர்கின்றது. கோவை குப்பனூர் தாசன் கோவிந்தசாமியின் செய்தி படித்தேன்.

நம்மில் பலர் பகுத்தறிவை பயன்படுத்துவதே கிடையாது. சாமியார்கள் இரண்டே வகை தான், பிடிபட்ட சாமியார், பிடிபடாத சாமியார். அரசு புலனாய்வுத் துறையின் மூலம் தீவிரமாக கண்காணித்தால் பிடிபட்டு விடுவார்கள். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராவிட்டாலும்,மனிதனில் எவனும் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு உடன் வாருங்கள்.

பிரபல நடிகையுடன் காமலீலை புரியும் ஒரு காமுகனை சாமியார் என்று வழிபட்டு, அவனுக்கு சிலை வைத்து, ஆசிரமம் அமைத்து,அவனை பேச அழைத்து,கௌரவித்தது சில பெண்கள் கல்லூரிகள். சுpலர் அவனை தரிசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். சிலர் சில இலட்சங்களையும் இழந்து உள்ளனர். இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அவனது படத்தை செருப்பால் அடிப்பது, அவனது சிலையை தகர்ப்பது, ஆசிரமத்திற்கு தீ வைப்பது என்று கிளம்பி விட்டனர். இப்படிப்பட்ட அயோக்கியனின் அருளுரை என்று சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்து பணம் சேர்த்தன. பிரபல நடிகை பறக்கும் முத்தம் தருகிறார், சாமியார் நடிகையின் இடுப்பை கிள்ளுகிறான். பத்திரிகைகளில் புகைப்படங்கள் சாமியாரின் முகத்திரையைக் கிழித்தன.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வை வரிகள் இச்செயலிலும் நினைவிற்கு வந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சில அடிவருடிகள் ஆரம்பித்து விடுவார்கள் பஜனையை. ஒரு சிலர் தவறு செய்ததற்காக எல்லா சாமியாரையும் குத்தம் சொல்ல முடியாது, சில நல்ல சாமியார்கள் இருக்கின்றனர் என்று. போலீஸில் மாட்டாத வரை அவர் நல்ல சாமி தான். மாட்டினால் அவரும் கெட்ட சாமி தான்.

தன்னைக் கடவுளாக கூறிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும்,அந்த போலி மனிதனை கடவுள் என்று நம்பி துதிக்கம் பிற மனிதர்களும் திருந்த வேண்டும். எந்த ஒரு மனிதனையும் கடவுளாகப் பார்க்கும் அவலத்திற்கு முடிவு கட்டுங்கள். நம் எதிர்காலம் பற்றிக் கூறி அவன் யார்? மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம் வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா? இருக்காது, தனது எதிர்காலத்தையே கணிக்க முடியாதவன், நம் எதிர்காலத்தை எப்படி கணிப்பான். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து இனியாவது திருந்துங்கள்.

தனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்பதனை தெரிந்தே சிலர் ஏமாறுவதைப் போல, சாமியார்களின் மோசடி தொடர்கதையாக தொடர்ந்தும், இன்னும் ஏமாறும் ஏமாளிகள், கோமளிகள் முட்டாள்கள்.

"ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்" என்று தொடர் எழுதிய நித்யானந்தா ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று காமகளியாட்டத்தால் நிரூபித்து உள்ளார். இவருடைய எழுத்திற்கும், செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு யோசியுங்கள்.

உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளது. அதைப்பயன்படுத்த தயக்கம் தேவை இல்லை. சாக்ரடீஸ் கூற்றுப்படி அவர் சொல்லி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள், சொல்வது யாராக இருந்தாலும், சொல்லிய சொல்லில் உண்மை உள்ளதா என்பது பற்றி உங்களது பகுத்தறிவில் ஆராயுங்கள்.

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல, சாமியார்களின் காலைக் கழுவுவது மண்டியிட்டு வணங்குவது, காணிக்கை கொட்டுவது என்று ஏமாறுவதை நிறுத்துங்கள், நித்தியானந்தா நித்தமும் ஆனந்தமாக இருந்துள்ள காமுகன், அவனைப் போய் சாமியாக வணங்கியதற்கு வெட்கப்பட வேண்டும்.

"நான் கடவுள்" என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.


செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by உதயசுதா on Sat Mar 13, 2010 4:13 pm




உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by Tamilzhan on Sat Mar 13, 2010 4:16 pm

கருமானந்தா ஆசிரமம் தொடங்களாம்னு இருந்தேன் இப்படி மாட்டிகிட்டு நமக்கு வேலை இல்லாம செய்துட்டானே படுபாவி..

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by உதயசுதா on Sat Mar 13, 2010 4:18 pm

கருமானந்தா ஆசிரமா?
உடு ஜூட்.



உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by இளமாறன் on Sat Mar 13, 2010 4:19 pm

நல்ல கட்டுரை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்




இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by செந்தில் on Sat Mar 13, 2010 4:21 pm

Tamilzhan wrote:கருமானந்தா ஆசிரமம் தொடங்களாம்னு இருந்தேன் இப்படி மாட்டிகிட்டு நமக்கு வேலை இல்லாம செய்துட்டானே படுபாவி..



அதெல்லாம் பழசு அண்ணா ...........இப்ப எல்லாம் நெட் டானந்த சுவாமி தான் பேமஸ்

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by Aathira on Sat Mar 13, 2010 4:25 pm

உதயசுதா wrote:கருமானந்தா ஆசிரமா?
உடு ஜூட்.



இருங்க சுதா நானும் வரேன்


Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9793
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by Tamilzhan on Sat Mar 13, 2010 4:26 pm

யோவ் இதுல நெட் சர்வீசும் உண்டு...!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by Tamilzhan on Sat Mar 13, 2010 4:30 pm

Aathira wrote:
உதயசுதா wrote:கருமானந்தா ஆசிரமா?
உடு ஜூட்.



இருங்க சுதா நானும் வரேன்


அட ரெண்டு பேரும் ஓடிட்டாங்க நமக்கு பெண்கள் சப்போர்ட் வீக்கா இருக்கே..!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by srinihasan on Sat Mar 13, 2010 4:38 pm

இவுங்க போனா பரவாயில்லை வேற பெண்கள் வராமையா போவங்க... மேக்கொண்டு ஆசிரமபணிகள பாருங்க... கொஞ்சம் நாள் அப்படிதான் உஷார இருக்கிற மாதிரி இருப்பாங்க.. அப்புறம் பழைய குருடி கதவ திறடி மாதிரி ஆகும்...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3801
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 44

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by அப்புகுட்டி on Sat Mar 13, 2010 4:42 pm

srinihasan wrote:இவுங்க போனா பரவாயில்லை வேற பெண்கள் வராமையா போவங்க... மேக்கொண்டு ஆசிரமபணிகள பாருங்க... கொஞ்சம் நாள் அப்படிதான் உஷார இருக்கிற மாதிரி இருப்பாங்க.. அப்புறம் பழைய குருடி கதவ திறடி மாதிரி ஆகும்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by srinihasan on Sat Mar 13, 2010 4:51 pm

Appukutty wrote:
srinihasan wrote:இவுங்க போனா பரவாயில்லை வேற பெண்கள் வராமையா போவங்க... மேக்கொண்டு ஆசிரமபணிகள பாருங்க... கொஞ்சம் நாள் அப்படிதான் உஷார இருக்கிற மாதிரி இருப்பாங்க.. அப்புறம் பழைய குருடி கதவ திறடி மாதிரி ஆகும்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3801
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 44

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by Tamilzhan on Sat Mar 13, 2010 4:56 pm

srinihasan wrote:


குட்டினு பேர் இருந்தா போதுமே முத்தம் கொடுக்க ஆரம்பிச்சுடுவீங்களே...!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by srinihasan on Sat Mar 13, 2010 5:09 pm

Tamilzhan wrote:
srinihasan wrote:


குட்டினு பேர் இருந்தா போதுமே முத்தம் கொடுக்க ஆரம்பிச்சுடுவீங்களே...!


வாங்க, நீங்க அந்த கன்னத்தில கொடுங்க... ஏன் பொறாம... ஆசிரமத்துல நடக்காததா இங்க...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3801
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 44

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum