புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
1 Post - 1%
bala_t
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
1 Post - 1%
prajai
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
280 Posts - 42%
heezulia
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
6 Posts - 1%
prajai
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_m10சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 10:56 pm

தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா?


சொல்லறிவு என்னும் திறப்பு


பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள்.

மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும்.


எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு.

சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை.

அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது.

நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது?





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 10:58 pm

தமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா?


நம் எல்லார் வீட்டிலும் பெரும்பாலும் மொழி அகராதிகளை வைத்திருப்போம். தமிழ் அகராதி இருக்கிறதோ இல்லையோ ஆங்கில மொழியகராதி கட்டாயம் இருக்கும். தமிழர் வீடுகளில் தமிழ் அகராதியே இராது. ஏனென்றால் தமிழ்ச்சொற்களுக்கு நன்றாகவே பொருள் தெரியும் என்ற நினைப்பு. முதல் வேலையாக ஒரு தமிழகராதி நூலை வாங்கி வைத்துக்கொள்க.

உண்மையில் ஆங்கிலத்தில் நாம் தெரிந்து வைத்துள்ள அளவுக்குக்கூட தமிழ்ச்சொற்களை அறிந்திருக்கவில்லை. நம் பேச்சுக்குப் பயன்படுகின்ற சில நூறு சொற்களுக்கு அப்பாலுள்ள தமிழ்ச் சொற்கள் அறியப்படாமல் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றை அறிவதும் இயன்ற இடங்களில் பயன்படுத்துவதுமே நம்மால் இயல்கின்ற மொழி வளர்ப்பு ஆகும். மொழியைக் காப்பாற்றுவது என்பது அதன் ஒவ்வொரு சொல்லையும் காப்பாற்றுவதுதான்.

என்னிடம் கட்டடப் பணிக்கு வருகின்ற தலைக்கொத்தனார் (மேஸ்திரி) “சப்போஸ்” (Suppose) என்ற ஆங்கிலச் சொல்லைத் தம் பேச்சில் பயன்படுத்துகிறார். அவரோ தொடக்கக்கல்வியளவே படித்தவர். “சப்போஸ் நாளைக்கே செங்கல் விலை ஏறிப்போச்சுன்னா… சப்போஸ் இந்த இடத்துல இன்னொரு ரூம் போட்டா…” என்கிறார். “ஒருவேளை” என்கின்ற சொல் தெரியாமலில்லை. நான் அவ்விடத்தில் “ஒருவேளை அப்படியாச்சுன்னா பார்த்துக்கலாம்…” என்று பயன்படுத்திப் பேசினால் அவர் விளங்கிக்கொள்கிறார். ஆனால், அவருடைய பழக்கத்தில் எங்கோ ஓரிடத்தில் ‘சப்போஸ்’ என்ற சொல்லைக் கற்றுக்கொண்டார். அதைத் தம் பேச்சுமொழியில் ஆள்கிறார்.

சப்போஸ் என்று பயன்படுத்தத் தெரிந்தவர்க்கு ஒருவேளை, ஒருக்கால் என்று வாய்வரவில்லை. இப்படித்தான் சிறிது சிறிதாக தாய்மொழியின் இடத்தை வேற்று மொழி கைப்பற்றிக்கொள்கிறது. தமிழ்ச்சொற்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஓர் எளிய சொல்தான், யாரும் பயன்படுத்தக்கூடியவாறுள்ள பேச்சுத் தமிழ்ச்சொல்தான், அதற்கே இந்நிலை என்றால் தமிழின் அருஞ்சொற்கள் எப்படியெல்லாம் துருவேறிக்கிடக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

எடுத்துக் கூறிய இந்நிகழ்வானது பேச்சுத்தமிழ் மட்டத்தில் கைவிடப்பட்டு வரும் தமிழ்ச்சொற்களைப் பற்றியது. எழுத்துத்தமிழ் என்று இன்னொரு பெரும்பரப்பு இருக்கிறது. அங்கேயாவது தமிழ்மொழி தழைத்தோங்கி நிற்கிறதா? தேடியெடுத்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துகிறார்களா? அரிதினும் அரிதாக ஒரு சொல்லையேனும் புதிதாகக் கற்றுப் பயன்படுத்துவோம் என்று யாரேனும் முயல்கிறார்களா? இந்தப் பொருளில் புதிதாக ஒரு சொல் இருக்க வேண்டுமே, அதைத் தேடியெடுத்து ஆள்வோம் என்ற முனைப்பு யார்க்கேனும் இருக்கிறதா? இதற்குத் தமிழ்ச்சொல் என்ன, அன்றேல் நான் ஆக்குவேன் என்ற ஆக்கச் சிந்தனை உண்டா? இல்லை இல்லை.

எழுத்துத் தமிழின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது. தலைக்கொத்தன் பெரிதாய்ப் படித்தறியாதவன். தன் பேச்சு வழியாய் அறிந்த ஓரிரு சொற்களோடு நிற்கின்றவன். ஆனால், எழுத்தில் ஈடுபடுபவர்கள் யார்? தம் வாழ்வின் பெரும்பகுதியை மொழியோடும் மொழிச்சொற்களோடும் கழிப்பவர்கள். அவர்கள் ஊட்டும் சொல்லும் கருத்தும் தூண்டும் எண்ணமும் வேட்கையுமே குமுகாயத்தை ஆள்கின்றன. அவர்களேனும் புதுப்புதுச் சொற்களை நாடிச் சொல்ல வேண்டாவா ?

புதிய சொற்களை நாடாவிட்டாலும் பழுதில்லை, முடிந்தவரை ஆங்கிலச்சொல் கலவாமல் எழுத வேண்டும்தானே ? அதைக்கூட அவர்கள் செய்வதில்லை. ஓர் ஆங்கிலச் சொல்லைக் கலந்து எழுதுவதில் வணிகக்கதை எழுத்தாளர் முதற்றே புத்திலக்கியம் படைப்பவர்வரை ஒருவரும் கூச்சப்படுவதில்லை. ஆங்கிலம் போன்றே வடமொழி, உருது முதலிய பிறமொழிச்சொற்களும் கலந்திருக்கின்றன.

ஆங்கிலக் கலப்பைக்கூட எளிதில் அறிந்துவிடலாம். வடசொற்கலப்பினை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஐக்கியம், முக்கியம், சகோதரி, நீதி ஆகியன வடசொற்கள் என்றால் பலர்க்கும் அதிர்ச்சியாக இருக்கும். அவை சொற்கட்டுமானத்திலும் ஒலிப்பிலும் தமிழ்போலவே விளங்குவதால் இத்தகைய குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஆக, இவை அனைத்திற்கும் ஒரேயொரு தீர்வுதான். நம் தமிழ்ச்சொல்லறிவைப் பெருக்கிக்கொள்வது. பேச்சிலும் எழுத்திலும் தமிழ்ச்சொல்லாட்சியை மேம்படுத்துவது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 10:59 pm

'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்?


புதிய சொற்களை அறிவது என்னும் நம் பயணத்தில் நாம் முதன்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. தமிழ் மொழியின் தனித்தன்மைகளில் தலையாயது என்று அதன் சொற்பொருள் தன்மையைக் கூறலாம்.

சொல் என்றால் அது பொருளைத் தருவது. அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கும். பொருள் தராதது சொல்லாகாது. அம்மா என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் இருக்கிறது. பெற்றெடுத்த தாயைக் குறிக்கிறது. பொருள் தராதவை வெற்றொலிக் குறிப்புகளாக நின்றுவிடும்.

சொல் எனப்படுவது ஏதேனும் ஒரு பொருளைக் கட்டாயம் குறிக்க வேண்டும். பொருள் தராதவற்றை நாம் சொல்லென்று கருதத் தேவையில்லை.

தமிழ் மொழியின் இந்தத் தன்மையை நம்மளவில் பொருத்திப் பார்ப்போம். சொற்களுக்குப் பொருள்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்தப் பொருள் நாமறிந்த ஒன்றாக இருக்கையில்தான் ஒரு சொல் நமக்குச் சொல்லாகிறது.

அம்மா என்பது நமக்குத் தெரிந்த பொருளையுடைய சொல். அதனால் அது நம் அறிவுப் பரப்பில் ஒரு சொல்லாகத் தெரிகிறது. சொல்லின் பொருள் தெரிந்ததால் அச்சொல்லை நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.

“அம்மம்” என்றும் ஒரு சொல் இருக்கிறது. அம்மம் என்ற சொல்லின் பொருள் நமக்குத் தெரிகிறதா? தெரியவில்லை. ஒரு சொல்லின் பொருள் நமக்குத் தெரியவில்லை என்றால் என்னாகும் ? அம்மா என்ற சொல் நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டிலும் இடம் பெற்றதைப்போல் அம்மம் என்ற சொல் இடம்பெறப் போவதில்லை. நாம் அறியாதிருந்ததனால் அம்மம் என்ற சொல்லுக்கு நம் வாழ்க்கையில் இடமில்லை.

நம்மை அடையாத சொல் நம்மை விட்டுப் போய்விடுகிறது. நமக்கு உடைமையான ஒன்று நம்மால் கைவிடப்படுகிறது. காலப்போக்கில் அதன் பயன்பாடு அருகிப்போய்க் கேட்பாரற்றுக் கிடக்கும். பார்க்காத பயிரெல்லாம் பாழ் என்று சொல்வார்கள். ஒரு சொல் பாழடைவதும் இப்படித்தான்.

அம்மம் என்ற சொல்லுக்கு ‘முலை’ என்று பொருள். ஒரு பொருளிலிருந்து தோன்றும் விளைபொருளுக்கும் அப்பொருளே பெயராகும். குழல் இனிது, யாழ் இனிது என்பது குழல், யாழ் ஆகிய பொருள்களிலிருந்து தோன்றும் இசையைக் குறிப்பது. அவ்வாறே குழந்தைக்கு ஊட்டப்படும் தாயின் முலைப்பாலும் அம்மம் எனப்படும்.

இப்போது எண்ணிப் பாருங்கள், அம்மம் என்ற சொல்லுக்கும் அம்மா என்ற சொல்லுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெற்றென விளங்கும். அம்மம் என்ற சொல் அம்மாவோடு தொடர்புடைய பொருளைத்தர வல்லது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் சொற்பொருள் அறிவதற்கான அடிப்படை.

ஒரு சொல்லின் ஏதேனும் ஒரு முன்னசையோ பின்னசையோ பகுதியோ விகுதியோ அந்தச் சொல்லுக்குரிய பொருளைப் பற்றிய குறிப்பைத் தரும். அதன்வழியே சென்று அப்பொருளை அடையலாம். ஞாலத்தின் எல்லா மொழிகளிலுமே சொற்களின் கட்டுமானங்கள் பெரும்பாலும் இவ்வகையில்தான் இருக்கும்.


அம்மான் என்பது தாயுடன் பிறந்தவர்களைக் குறிக்கும் ஆண்பால் சொல். தாய்மாமனைக் குறிப்பது. அம்மன் என்பது தாய் நிலையில் நின்று ஊர்காக்கும் பெண்கடவுளைக் குறிப்பது. அம்மணி என்பது தாய்க்குலத்திற்கான உயர்வுச் சிறப்பினை நல்கும் சொல். மேடம் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அம்மணி என்ற சொல்லைப் பரிந்துரைப்பேன். அம்மையார் என்பது மூத்த பெண்களைக் குறிக்கும் மரியாதையான சொல்தான். அம்மையப்பன் என்றால் தாயும் தந்தையும் சேர்ந்த வடிவத்தினன்.

ஒரேயொரு சொல் நமக்குத் தெரிந்ததாக இருந்தால் அது தொடர்புடைய பத்து இருபது சொற்களுக்கும் நமக்குப் பொருள் கிடைத்துவிடுகிறது. வேர்த்தன்மையுடைய ஒரு சொல்லை அறிந்திருந்தால் போதும். அதன் வழியொற்றித் தோன்றும் பற்பல சொற்களுக்குப் பொருள் கண்டுவிடலாம். அத்தகைய சொற்களை அறிந்துவிடலாம். அவற்றில் பெரும்பான்மையான சொற்கள் நமக்குத் தெரிந்தவையாகவே இருக்கும். சொல்லறிவைப் பெறுவதில் எவ்வகையான இடர்ப்பாடும் இராது. இதுதான் எளிய வழி.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:00 pm

ஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா?


பொருள் தரத்தக்க ஒரு சொல், வேர்த்தன்மையும் பொருளும் நிறைந்த ஒரு சொற்பகுதி... முன்பின்னாக ஒட்டிக்கொண்டு பத்திருபது சொற்களைத் தோற்றுவித்துவிடும். பெரும்பாலான மொழிகளின் சொல் தோற்றுவாய் முறைமை அவ்வகையிலேயே அமைந்திருக்கிறது. தமிழுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆங்கிலத்திலேயே ஒரு நல்லெடுத்துக்காட்டின்வழி இத்தன்மையை விளக்குவது இன்னும் எளிமையாக இருக்கும். ஆங்கிலச் சொற்களின் தோற்றத்திற்கு அவற்றின் முன்னும் பின்னுமாக ஒட்டும் ஒரேயொரு சொல்லுருபு எப்படிப் பொருள் தருகிறது என்பதைப் பார்க்கலாம். ஆங்கிலத்தின் வழியாக வந்தால்தான் இன்றைய தலைமுறையினர்க்கு எதுவும் எளிதில் விளங்குகிறதாயிற்றே...!

Cent என்னும் இலத்தீனத்து மொழிச்சொல் ஒன்று இருக்கிறது. அச்சொல் ஆங்கிலத்துக்கு ஏற்றுமதியாகிறது. Cent என்றால் “நூறு” என்னும் எண்ணிக்கைப் பொருள். Centi என்றால் “நூற்றின் ஒரு பகுதியான” என்று பொருள். இந்த Cent என்னும் இலத்தீனச் சொல்லுருபை வேராக வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் கைக்கொள்ள முடியாத அளவுக்குச் சொற்களை உருவாக்குகிறார்கள். ஒரேயொரு சொல்லுருபு பத்து, இருபது, முப்பது என்று சொற்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

Cent என்று முன்னும் பின்னுமாக ஒட்டித் தோன்றும் ஆங்கிலச் சொற்களை நினைவுபடுத்திப் பாருங்கள். Percent என்றால் ‘நூற்றுக்கு இவ்வளவு” என்பது பொருள். அதைத்தான் நாம் ‘விழுக்காடு’ என்கிறோம். Century என்ற சொல் “ஆண்டுகளின் நூற்றுத் தொகுதி”யைக் குறிக்கிறது. நூற்றாண்டு. மட்டைப்பந்தாட்டத்தில் எடுக்கப்பட்ட நூறு ஓட்டங்களுக்கும் அதுவே பெயர். Centurian என்றால் நூற்றினை அடைந்தவர். நூறாம் அகவை வரை வாழ்ந்தவர் என்றாலும், நூறு ஓட்டங்களை அடைந்தவர் என்றாலும் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். நூற்றுக்கால் பூச்சியினங்களை “Centipede” என்று அழைக்கிறார்கள். அமெரிக்க நாணயம் டாலர். ஒரு டாலரின் நூற்றில் ஒரு பங்கு “Cent” என்றே அழைக்கப்படுகிறது. தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவனை “Centum எடுத்திருக்கான்…” என்று பாராட்டுகிறோம். ஒரு மீட்டர் நீளத்தை நூறு பங்காகப் பிரித்தால் ஒவ்வொரு பங்கும் Centimetre. ஒரு இலிட்டரில் நூற்றில் ஒரு பங்கு Centilitre. ஒரு கிராம் நிறுத்தல் அளவையில் நூற்றில் ஒரு பங்கு Centigram.

ஒரேயொரு வேரிலிருந்து எப்படியெல்லாம் பற்பல கிளைச்சொற்கள் தோன்றுகின்றன என்பது இப்போது விளங்குகிறதா ? Centi என்பதற்கு நூற்றில் ஒரு பங்கு என்னும் பொருள் விளக்கம் தெரிந்திருந்தால் ஒரு மீட்டர்க்கு நூறு சென்டிமீட்டரா, ஆயிரம் சென்டிமீட்டரா என்னும் குழப்பமே வராதில்லையா ? ஆங்கிலத்தைக் கற்பிக்கின்ற மேலை நாட்டுப் புலவர் பெருமக்கள் அம்மொழியின் சொல்வேர்த்தன்மையைக் கற்பித்துத்தான் மொழிப்புலமையை ஊட்டுகிறார்கள்.

ஆங்கிலத்திலேயே இத்தன்மை இருக்கையில் அம்மொழியைவிடவும் தொன்மையான தமிழில் வேர்ச்சொற்களுக்கும் சொல்லுருபுகளுக்கும் பஞ்சமா என்ன? நம் மொழியிலும் கணக்கிலடங்காத வேர்ச்சொற்கள் இருக்கின்றன. ஒரு சொல் எவ்வாறெல்லாம் தோற்றுவிக்கப்படலாம் என்பதற்கும் வரையறுப்புகள் இருக்கின்றன. அவற்றை முறையாக அறிந்துகொண்டால் நம் நினைவெங்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் மணிமணியாக நிரம்பிவிடும். பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல் தட்டுப்பாடே தோன்றாது. ஒன்றைக் கூற விரும்பினால் பொருத்தப்பான்மை மிக்க நற்சொற்களைப் பயன்படுத்திக் கூறும் ஆற்றல் கைவந்துவிடும். நமக்குத் தெரியாத அருஞ்சொற்களின் எண்ணிக்கை மடமடவெனச் சரியும். நாமே புதிதாய் ஒரு சொல்லை உருவாக்கிக் காட்டலாம். அவ்வாறு நாம் உருவாக்கும் சொற்கள் மொழியை வளப்படுத்தும். நாம் சொற்களை உருவாக்குகிறோமோ இல்லையோ, மொழிப்புலத்தில் இருண்மையாகவே இருக்கின்ற இந்தத் தன்மைகள் நமக்குப் பிடிபட்டுவிடும்.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:02 pm

கலவி தெரியும்... கண்கலவி தெரியுமா?


ஆங்கிலத்தில் ஒரு சொல்லுருபை முன்பின்னாக ஒட்டி எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாவதைப் பார்த்தோம். தமிழில் அப்படி முன்பின்னாக ஒட்டி எப்படிச் சொற்களை உருவாக்குகிறோம்? அத்தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள எடுத்துக்காட்டுகளின் வழியே தமிழ்ச்சொற்களை அறிய வேண்டும். பிற மொழிகளில் பத்துச் சொற்கள் உருவாகின்ற இடத்தில் தமிழில் நூறு சொற்கள் உருவாகும். அந்நூறும் முடிவான கணக்கில்லை. மேலும் சொற்களை உருவாக்கிச் செல்லலாம். சொற்களைத் தோற்றுவிக்கும் மொழி வாய்பாடுகளை அறிந்திருந்தால் புதுச்சொற்களை யாரும் ஆக்கலாம்.

தமிழில் ஒரு சொல்லொற்று எப்படியெல்லாம் புதுச்சொற்களை உருவாக்கிச் செல்கிறது என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டுக்குக் “கண்” என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கண் என்னும் அச்சொல்லின் எளிய பொருள் என்ன? பார்ப்பதற்குப் பயன்படும் உடற்பகுதி. கண்ணால் பார்க்கிறோம். கண் என்பதற்கு அஃதொன்றே பொருளில்லை. மேலும் பல பொருள்கள் இருக்கின்றன. மரக்கணுக்களும் கண் என்றே கூறப்படும். மூங்கில், முரசடிக்கும் இடம், மூட்டுவாய், பெருமை, இடம், அறிவு, பற்றுக்கோடு, உடம்பு, அசை, உடலூக்கம் ஆகிய வேறு பல பொருள்களும் இருக்கின்றன.

“தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள், ஒரு பொருளுக்குப் பல சொற்கள்” என்னும் தலையாய தன்மையை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். அப்படிக்கொண்டால்தான் ஒரு சொல்லின் வெவ்வேறு பொருள் வாய்ப்புகளை நோக்கி நம் எண்ணம் நகர்ந்தபடியே இருக்கும். ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற வெவ்வேறு சொற்களுக்கான தேட்டமும் வரும்.

இவ்விடத்தில் நாம் “கண்” என்பதற்கு வழங்கப்படுகின்ற “பார்க்கும் உடலுறுப்பு” என்னும் பொருளை எடுத்துக்கொள்கிறோம். அப்பொருள் வழியே நாம் ஆக்கிக்கொண்ட வெவ்வேறு சொற்கள் என்னென்ன ?

கண்ணில் ஒரு கட்டி வந்தால் அது “கண்கட்டி”.

கண்ணைப் பொத்தினால் அது “கண்கட்டு”.

நம் கண்ணை மறைக்குமாறு ஒரு வித்தையைச் செய்து ஏமாற்றி வியக்க வைத்தால் அது “கண்கட்டு வித்தை”. கண்ணைக் கட்டியதுபோல் ஏதோ செய்துவிட்டான்.

தேங்காய்க்குக் கண்கள் இருப்பதை அறிவோம். தேங்காயின் குடுமிப் பகுதியில் மூன்று துளைகள் இருப்பதைக் கண் என்றே வழங்குவர். கண்ணுள்ள அந்த மேல்மூடியைக் “கண்கயில்” என்பார்கள். கயில் என்றால் பற்றித் தூக்கும் பிடரிப் பகுதி. தேங்காயின் மேற்பகுதியில்தான் அதன் கண்பகுதி இருக்கும். அதனால் அதனைக் கண்கயில் என்றார்கள்.

கண்ணெதிரே கடவுளைப்போல் ஒருவர் தோன்றி நலம் செய்தால் அவரைக் “கண்கண்ட தெய்வம்” என்போம். தெய்வம் கண்ணுக்குத் தெரியாதது. அவரோ கண்ணால் காணும்படி எதிரே நிற்கின்ற தெய்வம்.

காதற்குறிப்போடு தலைவனும் தலைவியும் பார்த்துகொள்கின்ற பார்வைக்குக் “கண்கலவி” என்றே பெயர். “சைட் அடிக்கிறது” என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்கள். பார்த்து மகிழ்தல். கண்கலவி என்பது அதற்கு ஓரளவு பொருந்துகிறது. கண்கலவியில் இருதரப்பும் பங்கெடுக்கிறது. “சைட் அடிப்பது” ஒருதலையாக இருக்கலாம்.

காணத் திகட்டாத பார்வையின்பத்திற்குரியதைக் “கண்காட்சி” என்கிறோம். அந்தக் காட்சியானது பெரிதினும் பெரிதாக இருப்பின் அதைக் “கண்கொள்ளாக் காட்சி” என்கிறார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கு ஏவுபவன் “கண்காட்டி”. நடந்துகொண்டிருக்கும் ஒரு செயலை மேற்பார்வையிடுபவன் “கண்காணி”. கண்ணால் காண்பதன் வழியே மேற்பார்வையிடுபவன். அந்தச் செயல் “கண்காணிப்பு”. கண்காணிப்புக்குத் தரும் கூலி “கண்கூலி”.

நேரடியாகப் பார்த்ததைக் “கண்கூடாகக் கண்டேன்” என்று சொல்வார்கள். கண்கள் அந்தக் காட்சியில் கூடின என்பது பொருள். சினந்தால் அது “கண்சிவப்பு”. கண்சிவந்தால் மண்சிவக்கும். தூக்கத்திற்கு முன்னான நிலை “கண்சுழல்தல் அல்லது கண்சொக்குதல்”. கண்ணால் தெரிவிக்கும் குறிப்பு “கண்சாடை”. உறங்குவதும்கூட “கண்ணுறக்கம்.”

இச்சொற்களையும் சொற்றொடர்களையும் இயல்பாகப் பயன்படுத்திக்கொண்டிருந்த நமக்கு இப்போது அதன் தோற்றுவாய்த் தன்மையை உணர்ந்தவுடன் சற்றே வியப்பேற்படுகிறது. ஆம், ஒரேயொரு சொல்வேரைப் பயன்படுத்தி நாமும் பற்பல சொற்களை உருவாக்குகிறோம். நான் மேலே சொன்னவை கொஞ்சம்தான். இன்னும் பல சொற்கள் இருக்கின்றன. அப்படி உருவாக்கித்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நாம் எடுத்துக்கொண்ட சொல்வேர் கண் என்பதால் அவையெல்லாம் நல்ல பயன்பாட்டில் உள்ளன. ஓரளவு அறிந்த சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் இருக்கின்றன. கண்கலவி, கண்கயில் போன்ற அருஞ்சொற்களும் கிடைத்தன. நாம் நன்கறியாத சொல்வேர்களும் பற்பல சொற்களை உருவாக்குகின்றன. அறியாத சொல்வேரை அறிந்தால் அங்கேயும் கொத்து கொத்தாக புதுச்சொற்களை அறிந்துகொள்ளலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:05 pm

திருக்குறளில் உள்ள இந்த சொல், தமிழ்ச் சொல்லா?


சொற்களை அறிவதற்கு அகரமுதலிகளைப் புரட்டுவதுதான் தலைசிறந்த ஒரே வழி. அகரமுதலி என்றால் அகராதிதானே என்று கேட்பீர்கள். ஆம். அகராதி என்றாலும் அகரமுதலி என்றாலும் ஒன்றே. “அகர முதல எழுத்து” என்பது ஐயன் வள்ளுவனின் தொடக்கம். அகரத்தைத் தொடக்கமாகக் கொண்ட, அகர வரிசைப்படி அமைக்கப்பட்ட சொற்பொருள் களஞ்சியம்தான் அகராதி. அகரத்தை ஆதியாக – தொடக்கமாகக் கொண்ட நூல் என்பதே அகர ஆதி – அகராதி என்ற சொல்லின் தோற்றுவாய்.

இடைக்காலத்தில் ஆதி என்பது வடசொல் என்று சிலர் கூற முனைந்தனர். செந்தமிழ்ச் சொற்கள் தொகுக்கப்படும் பெருநூலின் தலைப்பிலேயே வடசொல் இருப்பது தகாது என்று கருதிய தனித்தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆதி என்பதற்கு முதல் என்ற தமிழ்ச்சொல்லை நேராகக் கொண்டனர். அகரத்தை முதலாகக்கொண்ட நூல் என்னும் பொருளில் அகரமுதலி என்று கூறத்தொடங்கினர். இதுதான் அகராதி அகரமுதலி ஆன வரலாறு. என்னுடைய அறியாச் சிறுவத்தில் நான் அகராதிக்கும் அகரமுதலிக்கும் வேறுபாடு தெரியாமல் விழித்திருக்கிறேன். இன்றும் இவ்விரண்டையும் கேட்பவர்கள் அகராதி, அகரமுதலி ஆகிய சொற்களால் தடுமாறி நிற்பதுண்டு. பிற்பாடு தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியாக “ஆதி” என்பதற்கும் தமிழ்வேர்த்தன்மை உண்டு என்று நிறுவினர். திருக்குறளில் இடம்பெற்றுள்ள எச்சொல்லும் பிறமொழிச் சொல் இல்லை, அவை அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களே என்று நிறுவுகின்ற ஆய்வு முடிவுகளும் இருக்கின்றன.


அகராதி எனப்படுகின்ற அகரமுதலியை நாடுவதுதான் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ள நல்ல வழி. ஓர் அகராதியை எப்படி அணுகுவது என்று நான் சொல்வதற்கு முன்னால் தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையைச் செலுத்திவிடுவோம். என்னிடம் எல்லாரும் தவறாமல் கேட்கின்ற வினாக்களில் ஒன்று “ஐயா… நல்ல தமிழ் அகராதியைப் பரிந்துரைக்க முடியுமா…?” என்பதே. ஒரு மொழியில் எழுதப்பட்ட நூல்களில் - இலக்கியமானாலும் சரி, இலக்கணமானாலும் சரி, சொற்பொருள் தொகுப்பானாலும் சரி… காலத்தால் பழையவையே சிறப்பானவை என்பதை முதற்கண் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மொழிப்பிரிவு நூல்களில் காலத்தால் முந்தியவற்றின் தகைமை குறித்து நாம் புதிதாக எதையும் கூற வேண்டியதில்லை.

அகராதியைப் பொறுத்தவரையில் வீரமாமுனிவர் தொகுத்த “சதுரகராதி” என்னும் நூல்தான் காலத்தால் பழையது. அந்நூல் கிபி. 1732இல் வெளியாயிற்று. அதற்கும் முன்பாக எட்டாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிகண்டுகள் எனப்படுகின்ற நூல்கள் தமிழில் தோன்றி வழங்கின. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவை முறையே எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. நிகண்டுகள் எனப்படுபவை ஒரு சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல பொருள்களையும் ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற பல சொற்களையும் தொகுத்துக் கூறுபவை. அகராதி என்னும் நூலில் செய்யப்படும் செயலும் அதுதான். அதனால் நிகண்டுகள் என்றதும் அஞ்சி ஒதுங்க வேண்டா.

சதுரகராதி முதற்று அண்மைக்காலத்தில் வெளியாகியுள்ள கிரியா தற்காலத் தமிழ் அகராதி வரைக்கும் ஏறத்தாழ ஐம்பது அகராதி நூல்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. அந்நூல்கள் வெளியான காலம், பொருட்படுத்தத் தக்க வெளியீட்டாளர், தொகுப்பாசிரியர் ஆகியவற்றின் வழியே இவ்வெண்ணிக்கை கொள்ளப்படுகிறது. அண்மைக் காலத்தில் அகராதி தொகுக்கும் முயற்சியில் தனிப்பட்ட ஆர்வலர்கள்தாம் ஈடுபட்டார்களேயன்றிப் பல்கலைக்கழகங்களோ தமிழ் அமைப்புகளோ அரசோ ஈடுபடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இவற்றிடையே நமக்கு வேண்டிய அகராதி நூல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் ?





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:06 pm

தண்டனை வழங்குவதற்கு நிகரான தமிழ்ச்சொல் தெரியுமா?


ஐம்பதுக்கும் மேற்பட்ட அகராதிகள் வெளியாகியிருப்பினும் நமக்கேற்ற அகராதிகளைத் தேடித் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான அகராதிகள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் அவ்வளவுக்கு வெளியாகவில்லை. ஓர் அகராதியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சில அளவுகோல்கள் இருக்கின்றன. முதலில் அதைத் தொகுத்த பெருமானின் தகுதிநிலையைப் பார்க்க வேண்டும். மொழிப்புலமையில் ஆழங்கால்பட்டவராக அவர் இருத்தல் வேண்டும். தமிழுக்கென்றே தம் வாழ்க்கையை ஈந்தவராக இருத்தல் நன்று. அவ்வகையில் தமிழில் வெளியான தலைசிறந்த அகராதிகள் யாவும் தகுதி வாய்ந்த தமிழறிஞர் பெருமக்களால்தாம் தொகுக்கப்பட்டிருக்கின்றன.


அடுத்ததாக, ஓர் அகராதியை வெளியிட்டவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு அரசுக்குத் தம் ஆட்சிப் பரப்பின் மொழியைப் பேணிப் புரக்கும் பெரும்பொறுப்பு உண்டு. அதனால் தமிழ்நாட்டு அரசு வெளியிட்ட அகராதிகள் எனில் சிறப்பு. பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களின் மொழித்துறைகளும் மொழியாய்வு அமைப்புகளும் அகராதிகளை வெளியிடும் பொறுப்பை வகிக்கின்றன. அவ்வகையில் வெளியிடப்பட்ட அகராதிகள் எவையென்றும் பார்க்க வேண்டும்.


இவ்விரண்டும் இல்லாமல் தனிப்பட்ட புத்தக வெளியீட்டாளர்களும் அகராதிகளை வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட எழுத்தாளர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முனைப்பும் உழைப்பும் எத்தகையது என்பதைக் கணித்தும் வாங்கலாம். ஒரு பதிப்பகம் என்றால் அங்கே கட்டாயம் திருக்குறள் உரைநூலும் தமிழகராதியும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்பது முற்காலத்தில் எழுதாத விதியாக இருந்தது. இன்றைக்கும்கூட எவ்வொரு பதிப்பாளும் இவ்விரண்டு நூல்களையும் வெளியிடுவதில் ஆர்வமுடையவராகவே இருக்கின்றார். திருக்குறள் உரைநூலும் தமிழ்மொழி அகராதியும் என்றைக்கும் விற்றுக்கொண்டே இருக்கும் நூல்கள் என்பது அவர்களுடைய வணிகக் கணக்கு.


அகராதி நூல்களைப் பொறுத்தவரையில் காலத்தால் பழைமையானதை வாங்குவது சிறப்பு. அதற்காக, வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியைத்தான் வாங்க வேண்டும் என்றில்லை. ஐம்பதாண்டுகள் பழைமையானதை வாங்கலாம். தற்காலத் தமிழகராதிகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் இலக்கியத்தில் ஆளப்படும் சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்று சொல்வதில்லை. ஏனென்றால் தற்காலத் தமிழகராதிகள் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொற்களைத்தாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, தற்காலத் தமிழகராதி ஒன்றில் “ஒறுத்தல்” என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. தண்டனை வழங்குதல் என்பதற்கு நிகரான நற்றமிழ்ச்சொல் ஒறுத்தல் என்பது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.


பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அகராதிகளை முதற்கண் வாங்கலாம். சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவை வெளியிட்ட அகராதிகள் அச்சில் இருப்பின் பாய்ந்து வாங்கிவிட வேண்டும். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட “தமிழ் தமிழ் அகர முதலி” என்ற அகராதி சிறப்பாக இருக்கிறது. கு. சண்முகம் பிள்ளை தொகுத்தளித்த அவ்வகராதி எனக்கு மிகவும் பயன்படுகிறது. அந்நூலைத் தற்போது “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” வெளியிட்டிருக்கிறது. அதைத் தேடி வாங்குங்கள். அதன் விலை ஆயிரம் உரூபாய் என்று பார்த்ததாக நினைவு. தேவநேயப் பாவாணரும் அவர்வழியொற்றியவர்களும் தொகுத்த “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” என்பதுதான் தமிழ் அகராதிகளில் தலையாயது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்பாகங்களால் ஆகிய அந்நூற்றொகுதியைப் பயன்படுத்துவதற்கு எடைத்தூக்கலில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். “சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி” கிடைத்தால் எதை விற்றேனும் அதைப் பெறுக.


அபிதான சிந்தாமணி என்றொரு நூலும் இருக்கிறது. அது பெயர்ச்சொல்லகராதி எனப்படும். ஆ.சிங்காரவேலு முதலியாய் தொகுத்த அந்நூலில் பெயர்ச்சொல் விளக்கங்கள் இருக்கும். மொழியகராதியில் ‘கபிலர்’ என்ற சொல்லுக்கு விளக்கம் இராது. அபிதான சிந்தாமணியைப் போன்ற பெயர்ச்சொல்லகராதியில் விளக்கம் இருக்கும். ஆனால், பெயர்ச்சொல் அல்லாத பிற சொற்களுக்கு அபிதான சிந்தாமணியை நாடக்கூடாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:07 pm

நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோல்


மொழியைப் பயில்வது என்பது தொடர்வினை. அது ஒருநாள் இருநாள்களில் அடைந்துவிடக்கூடியதன்று. இடையறாது செய்யப்படவேண்டிய முயற்சி. மொழியைத் தன்வயப்படுத்திக்கொள்வதைப் போன்ற அருஞ்செயல் வேறொன்றில்லை. நன்கு பேசவும் நன்கு எழுதவும் கற்றுக்கொண்டுவிட்டால் போதும், அதன் பின்னர் நாமடையும் பேறுகள் ஆயிரம்.

பேச்சுத்திறன் என்பது சொற்களை ஆளும் திறன். எழுத்துத்திறமை என்பது வாக்கியங்களை நடனக்காரனின் உடல் மடிப்புகளைப்போல் துடிக்க விடும் திறமை. அன்றாட வாழ்க்கைக்கும் பேச்சாற்றலே துணைக்கருவி. நூறு, நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோலின் பெயர் பேச்சாற்றல். பேச்சும் எழுத்தும் வாய்க்கப்பெற்றவன் அடையும் முன்னேற்றங்களுக்கு எல்லையே இல்லை. அதை உணராதவர்கள் மொழியைக் கற்பதில் தேங்கி நின்றுவிடுகின்றனர். சொல்லாற்றலைப் பெருக்கிக்கொள்ளாமல் தடுமாறுகின்றனர்.

சொல்லாற்றலைப்பெருக்கிக்கொள்வதற்கு சொற்களோடு விழுந்து புரள வேண்டும். நல்முத்தைத் தேடி நீர்மூழ்குவோனைப்போல் நாள்தோறும் பத்திருபது சொற்களைத் தேடிப் பயின்று நினைவில் இருத்த வேண்டும். படைப்பாளர்களாக விளங்குபவர்கள் புதுச்சொற்களையும் புதுத்தொடர்களையும் தொடர்ந்து ஆக்கி அளிக்க வேண்டும். மொழி மக்களாக வாழ்பவர்கள் தம் மொழியின் புத்துயிர்ப்பை உணர்த்தும் சில பக்கங்களையேனும் படிக்க வேண்டும். நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரோ கவிஞரோ இம்முனைப்பு உடையவரா என்று தேர்தல் வேண்டும். இப்படிப் பற்பல வினைத்தொடர்களின் வழியாகச் செய்யும் கூட்டுழைப்பே மொழியைச் செம்மாந்து வாழச் செய்யும்.

சொற்களைப் பயில்வது என்னும் முனைப்பின் முதல் எட்டுவைப்பாக அகராதி ஒன்றை வாங்கிவிட்டோம். அகராதியை முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் கண்ணெடுக்காமல் படித்துவிடுவது என்று தொடக்கூடாது. அகராதி என்பது படித்து முடித்துவிட்டு ஓரங்கட்ட வேண்டிய நூலன்று.

அகராதியை எடுத்து வைத்து வரிவரியாகப் படித்து முடித்தால் எல்லாச் சொற்களையும் அறிந்ததாக ஆகுமே என்றும் எண்ணாதீர்கள். என் இளமையில் நான் அப்படிப் படிக்க முயன்றிருக்கிறேன். அப்போதைக்கு எல்லாச் சொற்களையும் அறிந்த உணர்வு தோன்றுமேயன்றி, நாளடைவில் நாமறிந்த சொற்கள் பலவும் மறதிக்குள் புதைந்துபோய்விடுகின்றன. அகராதிகளை நமக்கு வேண்டிய எந்தப் பக்கத்திலிருந்தும் தொடங்கலாம். பக்கங்களின் ஏறு வரிசைப்படியும் செல்லலாம், இறங்கு வரிசைப்படியும் செல்லலாம்.

ஓர் அகராதியை எடுத்து வைத்து எப்போது படித்து முடிப்பது, எப்போது எந்தச் சொல்லுக்குப் பொருள் வேண்டுமோ அப்போது அதை மட்டுமே பார்த்துவிட்டு நகர்வதை விடுத்து எதற்கிந்தத் தேவையற்ற வேலை என்று கேட்பீர்கள். நானும் அப்படித்தான் அகராதியை அணுக வேண்டும் என்று சொல்கிறேன். ஆனால், உங்களுக்கு வேண்டிய ஒரு சொல்லின் பொருளைக் கண்டதும் அகராதியை மூடி வைத்துவிடுவீர்கள். நான் அச்சொல்லோடு தொடர்புடைய பத்திருபது சொற்களுக்கான பொருள்களையும் பார்த்துவிட்டு அகராதியை மூடிவிடுங்கள் என்று சொல்கிறேன். அவ்வாறு பார்ப்பதனால் நீங்கள் அறிய விரும்பிய சொல்லின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிந்துபோகும். மேலும் அறிந்த பல சொற்களின் பொருள்களையும் மறக்க மாட்டோம்.

திருமணத்திற்குச் செல்கிறீர்கள் என்று கொள்வோம். ஓர் உறவினரை அறிமுகப்படுத்தினால் எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? “இவர் என்னோட தம்பி. ஈரோட்டுல மண்டி வெச்சிருக்காரே அந்தப் பெரியப்பாவோட கடைசிப் பையன். உங்க தங்கச்சியும் இவரும் ஒரே இடத்திலதான் வேலை செய்யறாங்க. அம்மா சொல்லியிருப்பாங்களே…” என்று சொல்வோம். ஓர் உறவை அதனோடு தொடர்புடைய பற்பல உறவுகளோடும் சேர்த்து அறிவித்தல்தான் முறையான அறிமுகம். அவ்வாறு அறிமுகப்படுத்துவதுதான் நினைவில் ஊன்றி நிறுத்தும் வழி.

சொற்களையும் அம்முறைப்படியே பொருளறிய வேண்டும். ஒன்றோடொன்று தொடர்புடைய அனைத்தையும் சேர்த்து அறிய வேண்டும்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:08 pm

"நத்திப் பிழைக்கிறான்" என்பதன் அர்த்தம் தெரியுமா?


ஒரு சொல்லின் ஏதேனும் ஓர் அசை அதனோடு தொடர்புடைய பொருளைத்தான் தரும் என்பது சொற்பொருளாய்வின் அடிப்படை. அத்தகைய அடிப்படையான சொல்லுருபைக் கொண்டே அடுத்தடுத்த சொற்களை ஆக்கிக்கொண்டே சென்றோம். இப்படியெல்லாம் சொற்கள் தோன்றலாம் என்ற மனப்பதிவு நம்முடைய மொழிமனத்திற்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும். மொழி மனம் என்பது உயிர்க்குள் இலக்கும் நினைவாற்றலோடும் தனக்குள்ளாக எண்ணும் தன்மையோடும் தொடர்புடையது.

நாம் பேசாதிருக்கும்போது உள்ளுக்குள் புரளும் எண்ணங்கள் சொற்களைக்கொண்டே உருவாவதை நாம் ஏற்றாக வேண்டும். அதனால்தான் நாம் எண்ணுவது நேரடியாக நம் மொழி நினைவைக் கட்டமைக்கிறது. எண்ணங்களைப் போலவே சொற்கள் தோன்றுகின்றன. நாம் சினத்தோடு இருக்கையில் கடுமையான சொற்களும், இயல்பாக இருக்கையில் தண்மையான சொற்களும் வெளிப்படுகின்றன.

சொல்லின் ஓர் அசை ஓரிடத்தில் ஒரு பொருளைத் தந்தால் அது பயன்படுத்தப்படும் பல இடங்களிலும் அதே பொருளிலோ அதற்கு நெருக்கமான பொருளிலோதான் வழங்கப்படும். இங்கே அசை என்று நான் குறிப்பிடுவது சொல்லின் பொருளாக அமையும் ஒரு பகுதியைத்தான். ஓர் அசைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் வழங்கப்படுகையில்தான் அது வழங்கும் பொருளிலிருந்து மாறுபடும். ஓர் எடுத்துக்காட்டின் வழியாக இதை விளங்கிக்கொள்ள முயல்வோம்.

“நத்திப் பிழைக்கிறான்” என்று நாம் சொல்வதுண்டு. யாரை அப்படிச் சொல்வோம்? யாரையேனும் அண்டியிருந்து, அவர் சொல்கின்றவற்றுக்கெல்லாம் இணங்கிப்போய், அவருடைய மனத்தைக் குளிர்வித்து, கைகால்களை அமுக்கிவிட்டுப் பிழைப்பதைத்தான் அவ்வாறு சொல்கிறோம். ஒருவரைக் குளிர்வித்துப் பிழைத்தல் என்பது அதன் தெளிவான பொருள். ஆனால், நத்துதல் என்பதற்கு விரும்புதல் என்ற பொருளையும் அகராதி சுட்டுகிறது. அகராதி தொகுத்தவர்கள் நத்துதல் என்பதற்குக் “மனம் மகிழுமாறு ஒருவரைக் குளிர்வித்தல்” என்ற பொருளை அடையமுடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றலும் ஒரு வரம்புக்குட்பட்டதே. இவ்வாறு ஒரு வினைச்சொல்லுக்குள் மறைந்துள்ள பற்பல பொருள்களையும் அகராதி தொகுத்தவர்களால் அணுகவே முடியவில்லை என்பதற்கு இஃது ஒரு சான்று.

நத்துதல் என்பது குளிர்வித்தல், ஈரத்தன்மை, நீர்ப்பொருள் ஆகியவற்றைக் குறிப்பிடும் பல இடங்களில் சொல்லுருபாகிப் பயில்வதைக் காணலாம். நத்தம் புறம்போக்கு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓர் ஊரின் ஒதுக்குப்புறமான நிலப்பகுதி. பெரும்பாலும் அது பயனற்றுக் கிடக்கும். நத்தம் என்பது என்ன? கோடையில் காய்ந்து கிடக்கும் பயன்பாடற்ற நிலப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நல்ல நிலமாக இருக்கிறதே என்று இறங்கிப் பயன்படுத்திவிட முடியாது. அதை அவ்விடத்தின் சுற்றுப்பகுதிகளோடு ஒப்பிட்டால் தாழ்வான பகுதியாக இருக்கும். மழைபெய்தால் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகிவிடும். அதனால்தான் நத்தம் புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். ஈரம், மழை, வெள்ளம் ஆகியவற்றோடு தொடர்புடைய சொல்தான் நத்தம் என்பது. அகராதியில் நத்தம் என்பதற்கு இத்தகைய பொருளைக் காண முடியவில்லை.

மதுரையில் பழங்காநத்தம் இருக்கிறது. நான் முகநூலில் நத்தம் என்பதற்கான அவ்விளக்கத்தைச் சொன்னதும் மதுரை நண்பர் ஒருவர் “ஆம் அண்ணா… மதுரையில் மழை பெய்தால் முதலில் வெள்ளக்காடாகும் பகுதி பழங்காநத்தம்தான்” என்றார். திருச்செங்கோட்டுக்கு அருகில் கூத்தாநத்தம், பிள்ளாநத்தம், கோழிக்கால்நத்தம் ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் வெள்ளக் காலங்களில் கரைபுரண்டு ஓடும் பேரோடைகளும் நீர்தேங்கும்படி பல குட்டைகளும் இருக்கின்றன.

நத்தை என்ற உயிரியை அறிவோம். அது நீர்வளமுள்ள நிலத்தில்தான் ஊர்ந்து திரியும். நத்தையை நசுக்கினால் தண்ணீர்தான் மிஞ்சும். தன் உடலே தண்ணீராகக் கொண்ட உயிரினம் அது. அதனால்தான் அதற்கு நத்தை என்ற பெயர் வந்தது. தண்ணீரில் வாழும் சங்குவகை உயிர்களும் நத்தைகளே.

நத்துதல், நத்தி என்பனவற்றிலிருந்துதான் நதி என்ற சொல்லும் பிறந்திருக்க வேண்டும். நீர் புரண்டு நகரும் இயற்கைப் பேருருவம்தான் நதி. நத்து, நத்தம், நத்தை போன்ற தமிழ்ச்சொற்கள் நீர்தொடர்பான பொருள்வழியில் இருக்கையில் நதி என்பது தமிழ்த்தோற்றுவாய் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அச்சொல் தமிழில் தோன்றி வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 11:09 pm

உழவாரம், சலவாரம் என்றால் என்ன தெரியுமா?


சொற்களைப் பற்றிய உணர்ச்சி ஏற்பட்டவுடன் அங்கிங்கெனதாபடி எங்கும் சொற்களாகவே நம் கண்களுக்குத் தெரியும். ஒரு சொல் நம்மை எப்படியெல்லாம் வந்தடைகிறது என்பதை நினைக்கையில் புதுவகையான பேருணர்ச்சி ஏற்படும். ஓர் அரிசி மணி நம் உணவுத்தட்டில் சோற்றுப் பருக்கையாக வந்து விழுவதைப்போன்ற பரவயப்படுத்தும் நிகழ்வு. சொல்லுணர்ச்சி ஏற்பட்டவுடன் காணுமிடமெங்கும் சொற்களாகவே தோன்றும். அடிக்கடி தென்படும் சொற்களுக்கும் அரிதாகத் தென்படும் சொற்களுக்குமிடையேயான வேறுபாட்டினை உணர முடியும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த சொல் எது? உங்களையே வினவிக்கொள்ளுங்கள். சில சொற்கள் நம்மனத்தின் திறவாத் தாழ்களை நீக்கும் தன்மையுடையவை. சில சொற்கள் நம் ஆழ்மனநினைவுகளைத் தொட்டு எழுப்பவல்லவை. சில சொற்கள் கண்ணீரைப் பெருக்கும். சிலவற்றுக்கு ஆறுதல்படுத்தி அணைக்கும் ஆற்றலுண்டு. இந்தப் பக்கத்தின் வழியே நான் உங்கள் மனத்தை அடைவதற்குக் கருவியாகின்றவையும் சொற்களே.

ஆறாம் வகுப்புப் படிக்கையில் எங்கள் பள்ளியில் ஓர் ஆசிரியர் இருந்தார். எங்கள் வகுப்பாசிரியர் வராதபோது அவர் இரண்டு வகுப்புகளைச் சேர்த்து அமர்த்திக்கொள்வார். பாடம் நடத்துகையில் ஒவ்வொரு சொற்றொடரைக் கூறியதும் “விளங்குதா?’ என்றே முடிப்பார். பிற ஆசிரியர்கள் “புரிந்ததா?” என்று கேட்கையில் அவர் “விளங்குதா” என்று கேட்டது புதிதாக இருந்தது. விளங்கியதா, விளக்கம் பெற்றாயா என்கிறார் அவர். என்னே அருமையான சொல். அது முதற்கொண்டு விளங்குகிறது, விளங்கும், விளங்கவில்லை, விளங்கிக்கொண்டான் ஆகிய சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கினேன். புரிந்தது என்ற சொல்லை என் எழுத்தில் அரிதாகத்தான் காண முடியும். புரிந்தது என்பதைக்காட்டிலும் விளங்கியது என்னும் சொல் தேர்ச்சியான பொருள் காட்டுவதாகும். விளங்கு, விளக்கு என்னும் இரண்டு வினைவேர்களும் வியக்கத்தக்க பொருளாட்சி உடையவை.

என் நண்பரின் தாயார் பழுத்து முதிர்ந்தவர். கொங்குத் தமிழின் இலக்கணம் என்று கொள்ளத்தக்கவர். அவர் வீட்டுக்கு நான் எப்போது சென்றாலும் “சோறுண்கிறயா?” என்றுதான் கேட்பார். “வாரபோதே உண்டுட்டுத்தான் வந்தனுங்கொ…” என்று விடை கூறுவேன். உண்டுவிட்டு வந்துவிட்டேன் என்பதற்காக விட்டுவிட மாட்டார். “உண்டுட்டு வாரயா ? எப்ப உண்டே ?” என்று கேட்பார். “காலையில உண்டன்ங்கொ…” என்று கூறினால் “கார்த்தால உண்டது என்னத்துக்காகறது… இப்ப உண்கலாம் வா…” என்று சோறிடுவார். சாப்பிடுவது, தின்பது என்பதற்கு மாற்றான கூர்மையான பொருளுடைய சொல்தான் உண்ணல். உண் என்ற வினைவேரிலிருந்துதான் உணவு, ஊண் ஆகிய சொற்களே பிறக்கின்றன. பொருளழகும் உயிரன்பும் சேர்ந்து பெருகி “உண்கிறயா ?” என்று அவர் வாய்வழியே கொங்கின் இசையோடு வெளிப்படும்போது நான் பெறுகின்ற குளிர்ச்சியை எடுத்தியம்பவே இயலாது. அது முதற்கொண்டு உண்கிறாய், உண்டான், உண்பது போன்ற சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். சாப்பிட்டான் என்று அரிதாகத்தான் எழுதுவேன்.

சொற்களை நகமும் தசையும், உயிரும் உணர்வுமாய் அறிந்துணர்வதற்கு அவற்றை ஆளும் மக்களின் வாய்ச்சொற்களை உற்று நோக்க வேண்டும். என்னைச் சுற்றியுள்ள மக்களே என் சொல்லாய்வுக்கும் அறிதலுக்கும் வலிமையான சான்றாகிறார்கள். அவர்களுடைய வாய்மொழியில் எழுதித் தீராத புதுச்சொற்கள் கிடைக்கின்றன. இலக்கணத்தை அணுகுவதற்குரிய திறப்புகளையும் அவர்களிடமிருந்தே பெறுகிறேன். என்னுடைய தாத்தா மலங்கழிக்கச் செல்வதைச் “சலவாரைக்குப் போறது” என்பார். சலவாரம், சலவாரை போன்ற சொற்களை அகராதிகளில் காண முடியவில்லை. உழவாரம் என்ற சொல் அகராதியில் இருக்கிறது. உழவுத் தொழிலில் “புல் பூண்டு முதலான பயனற்ற களைகளைக் களைதலே” உழவாரப்பணி. சலவாரம்/சலவாரை என்றால் உடலிலிருந்து நீர்முதலான கழிவுகளை நீக்குவது என்ற பொருளில் விளங்கிக்கொள்கிறேன். மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. மக்களின் வாய்ச்சொற்களை உற்று நோக்காவிடில் அச்சொற்கள் அச்சுமேடை ஏறாமல் காற்றோடு கலந்துவிடுவதற்குரிய வாய்ப்புகளே மிகுந்திருக்கின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக