புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_m10காசநோய் பற்றி முழுவிளக்கம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசநோய் பற்றி முழுவிளக்கம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:10 pm

காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்

உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.

காச நோய் என்றால் என்ன?

காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:10 pm

காச நோய் எவ்வாறு ஏற்படுகிற்து?
அநேக நோயாளிகளில் முதலில் நுரையீரலை பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோய் உடையவர்களால் இருமும் போது அல்லது தும்மும் போது காசநோய் பக்றீரியாவானது வளியினுள் விடப்படுகிறது. இவ் பக்றீரியாவானது மிகச் சிறிய நீர்த்துளிகளாக வளியிலே காவப்படுகிறது. நீங்கள் சிறிதளவு பக்றீரியாவினை உட்சுவாசிக்கும் போது அவை உங்களது நுரையீரலில் பெருக்கத்துக்கு உட்படுகின்றன. அங்கு பின்னர் மூன்று வழிகளில் நோயானது செல்லமுடியும்.
காசநோயின் போக்கு

மூன்று வழிகளில் நோயானது செல்லமுடியும்.

குணங்குறிகளற்ற இலேசான கிருமித் தொற்று – அநேகரில் ஏற்படுகிறது.
அநேக சிறந்த உடல்ஆரோக்கியத்துடன் காணப்படுபவர்களால் காசநோய் பக்றீரியாவானது உட்சுவாசிக்கப்படும் போது உயிர்ப்பான காசநோய் ஏற்படுத்தப்படுவதில்லை. உட்சுவாசிக்கப்படும் பக்றீரியாவானது நுரையீரலில் பெருக்கமடைய ஆரம்பிக்கிறது. இது நிர்ப்பீடனத் தொகுதியை செயற்படத் தூண்டுகின்றது. காசநோய் பக்ரீரியாக்கள் நிர்ப்பீடனத் தொகுதியினால் (வெண் குழியங்கள்) அழிக்கப்படுகின்றன அல்லது உயிர்ப்பற்றதாக்கப்படுகின்றன். இவர்களில் சில காலங்களுக்கு இலேசான குணங்குறிகள் காணப்படலாம் அல்லது குணங்குறிகள் ஏற்படாது நோயானது நிறுத்தப்பட்டிருக்கலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:11 pm

நீங்கள் பொதுவாக இவ்வாறான இலேசான கிருமித்தொற்று ஏற்பட்டமையை அறிந்திருக்கமாட்டீர்கள். நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனையிலே சிறிய தழும்புகள் அவதானிக்கப்படலாம். இது பக்ரீரியாவிற்கும் நிர்ப்பீடனத் தொகுதிக்குமிடையில் நடைபெற்ற தாக்கத்துகுரிய சான்றாகும்.

இவ்வாறான கிருமித் தொற்று மிகப் பொதுவானது. எனவே அனேக காசநோய் பக்றீரியாவை உட்சுவாசிப்பவர்களில் குணங்குறிகள் ஏற்படுவதில்லை மற்றும் கிருமித் தொற்றானது நிர்ப்பீடனத் தொகுதியினால் நிறுத்தப்படுகிறது.

கிருமித் தொற்றானது உயிர்ப்பான காசநோயாக மோசமடைந்து செல்லல் – சிலரில் ஏற்படுகிறது.
குணங்குறிகளுடன் கூடிய உயிர்ப்பான காசநோயானது காசநோய் பறீரியாவை உட்சுவாசிக்கும் சிலரில் ஏற்படுகிறது. இவர்களில் நிர்ப்பீடனத்தொகுதியானது பக்றீரியாவுடன் தாக்கமடைந்து வெல்ல முடியாமையினால் இதனை நிறுத்த முடிவதில்லை. காசநோய் பக்றீரியாவானது மேலும் பெருக்கமடைந்து நுரையீரலின் ஏனைய பகுதிகளுக்கும் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலடைகிறது. உயிர்ப்பான காசநோயின் குணங்குறிகள் பக்றீரியா உட்சுவாசிக்கப்பட்டு 6-8 வாரங்களின் பின்னர் தோன்றுகின்றன.

காச நோய் கிருமித்தொற்றானது உயிர்ப்பான நோயாக எவரிலும் ஏற்படலாம். ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பவர்களில் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். உ-ம் போசணைக் குறைபாடுடன் காணப்படும் சிறுவர்கள் போன்றார். புதிதாய் பிறந்த குழந்தைகளிலும் உயிர்ப்பான காச நோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:11 pm

காசநோயின் போக்கு

மீள் உயிர்ப்பாக்கப்பட்ட (இரண்டாம் நிலையான) கிருமித்தொற்றுக்கள் காரணமான உயிர்ப்பான காசநோய்.
சிலரில் இலேசான காசநோய் கிருமித்தொற்று ஏற்பட்டு நிறுத்தப்பட்டு மாதங்கள் அல்லது வருடங்களின் பின் உயிர்ப்பான காசநோய் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் நிர்ப்பீனத்தொகுதியானது பக்றீரியா பெருக்கமடைவதைத் தடுக்கின்றது. ஆயின் பக்றீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுவதில்லை. சில பக்றீரியாக்கள் இலேசான கிருமித்தொற்று ஏற்பட்ட காயங்களினுள் மறைக்கப்பட்டு காணப்படலாம். இவை பெருக்கமடைவது நிணநீர்த் தொகுதியினால் தடுக்கப்படுகிறது. இவை எப்பாதிப்பினையும் ஏற்படுத்தாது உறங்கு நிலையில் பல வருடங்கள் காணப்படக் கூடியன. உறங்கு நிலையிலுள்ள பக்றீரியாவானது உடலின் நிர்ப்பீடனத் தொகுதியானது சில காரணங்களால் பலவீனமடையும் போது பெருக்கமடைய ஆரம்பித்து உயிர்ப்பான காசநோயினை ஏற்படுத்துகிறது.
பலவீனமான நிர்ப்பீடனத்தொகுதி மற்றும் மீள் உயிர்ப்பாக்கப்பட்ட காசநோயானது பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படுவது உயர்வாகும்:
வயது முதிர்ந்த அல்லது உடற் பலவீனமானோர்
போசனைக் குறைபாடுடையோர்
நீரிழிவுநோய் உடையவர்கள்
ஸ்டீரொயிட் அல்லது நிர்ப்பீடனத்துக்கெதிரான மருந்துகளை பயன்படுத்துவோர்.
சிறுநீரக செயலிழப்புடன் காணப்படுபவர்கள்
மதுபானத்திற்கு அடிமையானோர்
எயிட்ஸ் நோய் உடையவர்கள்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:11 pm

காசநோயின் தொற்றும் தன்மை எவ்வாறானது?
நுரையீரலில் உயிர்ப்பான காசநோயுடைய ஒருவர் இருமுதல் மற்றும் தும்முதலின் போது வெளிவிடப்படும் காசநோய் பக்றீரியாவானது ஏனையவர்களை தொற்றுக்குள்ளாக்கக் கூடியது.
காச நோயினை பெற்றுக் கொள்வதற்கு பொதுவாக உயிர்ப்பான நுரையீரல் காசநோயுடைய ஒருவருடன் நெருக்கமான மற்றும் நீண்டகால தொடர்பு அவசியமாகும். எனவே ஒரே வீட்டில் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கே கிருமித் தொற்றுக்குட்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே ஒருவரில் காசநோயானது நோய் நிர்ணயம் செய்யப்படும் போது ஏனைய நெருங்கிய தொடர்புடையவர்களில் காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:11 pm

காசநோயின் பரம்பல் எத்தகையது?

காசநோயானது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பொதுவானது. ஏனைய கிருமித் தொற்றுக்களுடன் ஒப்பிடுகையில் காசநோய் காரணமாக அதிகளவு இறப்பு ஏற்படுகிறது (ஆண்டு தோறும் மூன்று மில்லியன் அளவில்). உலகளாவிய ரீதியில் காசநோய்க்குரிய பிரதான காரணியாக காணப்படுவது: போசணைக் குறைபாடு, மோசமான குடியிருப்புக்கள், பொதுவான உடலாரோக்கியம் குன்றிய தன்மை, போதுமான வைத்திய வசதியின்மை மற்றும் எயிட்ஸ் நோய் என்பன.

காசநோய் யாரில் ஏற்படுகிறது?

காச நோய் எவரிலும் ஏற்படலாம். பின்வரும் சந்தர்ப்பங்களில் காசநோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.
நுரையீரலில் உயிர்ப்பான காசநோயுடையவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருத்தல். ( ஒரே வீட்டில் வசித்தல், அல்லது அந்நபருடன் அதிகளவு நேரத்தினை செலவிடல்)
சுற்றாடல் மற்றும் ஏழ்மைநிலை. வீடற்றோர், சிறைக் கைதிகள் மற்றும் பல பிற்போக்கான பிரதேசங்களில் வாழ்வோரில் காச நோய் அதிகளவில் காணப்படுகிரது.
நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக இருத்தல் உ-ம் எச் ஐ வி கிருமித்தொற்று, நிர்ப்பீடனத்தைக் குறைக்கின்ற மருந்து வகைகள், மதுபான பாவனை, போதை மருந்துகளின் பாவனை போன்றன.
போசணைக் குறைபாடு : போசனைக் குறைபாடு மற்றும் விற்றமின் டி குறைபாடு காச நோயுடன் தொடர்புபட்டுள்ளது
: குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயது முதிர்ந்தோரில் காசநோய் ஏற்படும் ஆபத்து உயர்வாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:12 pm

உயிர்ப்பான காசநோயின் குணங்குறிகள் எவை?

மூன்று வாரங்கட்கு மேற்பட்ட இருமல் அநேகமாக ஆரம்ப அறிகுறியாகும். இது வறண்ட அரிப்பூட்டுகின்ற இருமலாக ஆரம்பிக்க முடியும். இது மாதங்கள் வரையில் நீடித்து மோசமான நிலையினை அடைகிறது. காலஞ் செல்லச் செல்ல சளியுடன் கூடிய இருமல் உருவாகின்றது. இதனால் இருமும் போது அதிகளவு சளி வெளியேற்றப்படும். அது இரதக்கசிவுடன் காணப்படலாம்.

ஏனைய பொதுவான குணங்குறிகள்
காய்ச்சல், அதிகரித்த வியர்வை, உடல் அசதி, உடல் நிறை குறைவடைதல் , நெஞ்சு வலி, மற்றும் பசியின்மை என்பன. கிருமித் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு சுவாச சிரமம் ஏற்படுகிறது. சிகிச்சை வழங்கப்படாத விடத்து பல சிக்கல்கள் உருவாகின்றன. நுரையீரலிற்கும் நெஞ்சறை சுவருக்குமிடையிலுள்ள புடை மென்சவ்வுகளுக் கிடையில் திரவம் சேகரிக்கப்படுதல். இதனால் சுவாச சிரமம் மேலும் மோசமடைகிறது. காச நோயானது நுரையீரலிலுள்ள குருதிக் கலன்களை பாதிக்கையில் இருமும்போது குருதி வெளியேற்றப்படுகிறது.

காசநோய் கிருமித்தொற்றானது சில வேளைகளில் குருதிச் சுற்றோட்டத்தொகுதி மற்றும் நிர்ப்பீடனத்தொகுதிக்குள் பரவும் போது உடலின் ஏனைய பகுதிகளிலும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. உடலின் எப்பகுதி பாதிக்கப்படுகிறது என்பதற்கிணங்க பல்வேறு குணங்குறிகள் உருவாகின்றன.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:12 pm

நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல் – உடலின் எப் பகுதியிலுமுள்ள நிணநீர்க் கணுக்கள் வீக்கமடையலாம். கழுத்து, தோள் மூட்டின் உட்பகுதி மற்றும் இடுப்பு தொடை சந்திப்புலுள்ள நிணநீர் கணுக்களை தொட்டுணர முடியும்.
உணவுக் கால்வாய் மற்றும் வயிறு – காசநோயானது வயிற்று வலி அல்லது வீக்கத்தினை ஏற்படுத்துகிறது. அல்லது போதிய சமிபாடின்றி வயிற்றொட்டம் மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்றவை ஏற்படுகிறது.
என்பு மற்றும் மூட்டுகள் - காச நோயானது என்பு அல்லது மூட்டுக்களை பாதிப்பதன் காரணமாக என்பு நோ (உ-ம் முள்ளந்தண்டு) மற்றும் மூட்டு வலி அல்லது வீக்கம் ஏற்படுகிறது.
இதயம் – காச நோய் சில வேளைகளில் இதயத்தினை சூழ அழற்சியினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக நெஞ்சு வலி அல்லது சுவாச சிரமம் என்பன ஏற்படுகின்றன.
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை - இவை கிருமித் தொற்றுக்குட்படும் போது இடுப்பின் பின் பகுதியில் இரு கரைகளிலும் வலி, சிறுநீர் கழிக்கும்போது வலி என்பன ஏற்படுகின்றன.
மூளை – காசநோய் காரணமாக மூளைய மென்சவ்வழற்சி ஏற்படலாம். இதனால் தலைவலி, அருவருப்பு, வாந்தி, வலிப்பு, நித்திரை ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் நடத்தை மாற்றங்கள் என்பன.
தோல் – காசநோய் காரணமாக தோலில் தழும்புகள் ”எரித்தீமா நோடோசம்” எனும் சிவந்த முடிச்சுப் போன்றவை கால்களில் ஏற்படும் தழும்புகளாகும். லூபஸ்வல்காரிஸ் எனும் கட்டிகள் அல்லது புண்கள்.
உடலின் ஏனைய பகுதிகளுகளுக்குப் பரவலடைதல். இது மிலியரி காச நோய் எனப்படும். இது நுரையீரல், என்புகள், ஈரல் மற்றும் கண்கள் தோல் என்பவற்றைப் பாதிக்கிறது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:12 pm

காசநோயை நோய் நிர்ணயம் செய்தல்

சில வேளைகளில் காசநோயினை நேரடியாகவே நோய் நிர்ணயம் செய்ய முடியும். ஆயின் சில சந்தர்ப்பங்களில் இது கடினமானது. பொதுவாக குணங்குறிகளை அவதானிப்பதன் மூலமும் பரிசோதனை பெறுபேறுகளுக்கிணங்கவும் நோய் நிர்ணயம் செய்யப்படும். நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்பரிசோதனை மற்றும் மான்ரொக்ஸ் எனும் பரிசோதனை, சளிப் பரிசோதனை என்பவற்றுடன் சோதனைகள் ஆரம்பிக்கப்படும்.

நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை.

எகஸ் கதிர்ப் பரிசோதனையிலே உயிர்ப்பான நுரையீரல் காசநோயினை அவதானிக்கமுடியும். இது குணமடைந்த அல்லது உயிர்ப்பற்ற காசநோயினையும் காண்பிக்கக் கூடியது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 7:13 pm

மான்டோக்ஸ் சோதனை அல்லது ரியூபகியீலின் சோதனை

இச்சோதனை காசநோய் பக்றீரியாவுடன் எப்போதாவது தொடுகைக்கு உட்பட்டமையை காட்டுகின்றது. ஆயின் இது தற்போதைய உயிர்ப்பான காசநோயினை உறுதிப்படுத்த மாட்டாது. ரியூபகியூலின் என்பது காசநோய் பக்றீரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பதார்த்தமாகும். இது தோலினுள் ஊசி மூலமாக செலுத்தப்படும். இப்பகுதி சில நாட்களின் பின் பரீட்சிக்கப்படும்.
தாக்கம் ஏற்படும்போது தோலில் செந்நிற மாற்றம் அவதானிக்கப்படும். அதாவது தற்போதைய உயிர்ப்பான காச நோய்த் தொற்றினையோ அல்லது முன்னைய கிருமித்தொற்றினையோ அல்லது பீ சீ ஜீ தடுப்பூசி வழங்கப்பட்டமையையோ குறிக்கின்றது. இத்தாக்கம் ஏற்படாதவிடத்து காசநோயினை விலக்க முடியும். ஆயின் சிலரில் தவறாக தாக்கம் ஏற்படாதிருக்கலாம். உ-ம் மிகத் தீவிரமான காசநோய் காணப்படும் போது, எயிட்ஸ் நோய் உள்ள போது, நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமானதாக காணப்படும் போது, அல்லது இளம் சிறுவர்களில் கிருமித்தொற்றின் ஆரம்ப நிலைகளில் ஆகும்.
காசநோயை நோய் நிர்ணயம்

சளிப் பரிசோதனைகள்
நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை அல்லது மாண்டோக்ஸ் சோதனை பெறுபேறுகள் காசநோய்க்குரியனவாக இருக்கும் போது நுரையீரலில் பக்றீரியாவினை அவதானிப்பதற்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சளி மாதிரியானது ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும்.
முதலில் சளிப்படலமாந்து விசேட சாயமூட்டப்பட்டு நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்கப்பட்டு காசநோய் பக்றீரியா அவதானிக்கப்படும். இதன் பெறுபேறுகள் விரைவாக சில நாட்களிலேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக