புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_m10என்றும் இளமைக்கு இனிமையான வழிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இளமைக்கு இனிமையான வழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 12:43 am

"நாற்பது வயதில் நாய்க்குணம்" என்று பாட்டிகள் ஆரூடம் சொன்னது உண்மைதான் போல. இளமைக்கு டாட்டா சொல்லும் தருணம் அது! இளமையை வழியனுப்பி வைப்பதென்றால் வலிக்கும்தான். படித்து, வேலை தேடி, நல்ல சம்பளம் வரட்டும் என்று காத்திருந்து 30க்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் அப்போதுதான் இரண்டாம் வகுப்பைத் தாண்டியிருக்கும். "இன்னும் வாழவே ஆரம்பிக்கலையோ" என்கிற பயம் கவ்வும்.

போதாக்குறைக்கு, சம்பளம் உயரல, சொந்த வீடு கட்டல என அடுக்கடுக்கான கவலைகள் சிலந்தி வலை மாதிரி மூளையை தூங்கவிடாமல் இம்சிக்கும். அதுவரை நோயைப் பார்த்து, எதிர்த்து நின்ற உடம்பு அதன்பிறகு சொன்ன பேச்சைக் கேட்காது. சர்க்கரை நோய், இதயக்கோளாறு, ரத்தக் கொதிப்பு, நரம்புத்தளர்ச்சி என ஏதாவது வந்து தொற்றிக்கொள்ளுமோ என்ற கவலை இன்னொரு பக்கம். 40 வயதைத் தொட்டவர்களிடம் கொஞ்ச நேரம் காது கொடுத்துப் பாருங்கள்... மனசுக்குள் அடைந்து கிடக்கிற எல்லாவற்றையும் கொட்டிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.

"சில விஷயங்கள் நடந்தே தீரும். எவ்வளவு யோசித்தாலும் அதை நம்மால் மாற்ற முடியாது" என்பதால், கவலைப்படுவதை முதலில் நிறுத்துங்கள். உங்களை குழப்பிக் கொண்டிருக்கும் கவலைகளை பட்டியலிடுங்கள். தேவையில்லாததை கழித்துக் கட்டுங்கள். 80 சதவிகிதம் கவலைகள் காலியாகியிருக்கும். இப்போது மிச்சம் இருக்கிற 20 சதவிகிதம் பிரச்னைகளை எப்படி சமாளிக்கலாம் என யோசியுங்கள். இப்படித்தான் வாழ்க்கையை சுலபமாக்க வேண்டும். கண்ணாடி உங்கள் தோற்றத்தில் வயதைக் காட்டலாம். கவலைகளை ஓரங்கட்டினால் மனம் குழந்தையாக மாறிவிடும்.

அப்படி என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? முகத்தில் வயதின் முதிர்ச்சி, "இனிமேல் நான் சுருங்கிவிடுவேன்" என்று எச்சரிக்கை கொடுக்கிற தோல், தலைமுடியில் சில வெள்ளிக் கம்பிகள், வயிற்றை விட்டு எட்டிப் பார்க்கும் தொப்பை, உறவில் ஆர்வம் குறைதல், சில சுகவீனங்கள்... அட, இவ்ளோதானே!

80 வயதிலும் கிண்டலும் கேலியுமாக வலம் வரும் பெரிசுகளை நீங்கள் பார்க்கலாம். எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் அந்த இளமை வாய்க்கும். உடம்பை நோய் தாக்க வரும்போது, மன வலிமை எதிர்த்து நின்று ஜெயிக்கும்.



நாற்பது வயதைத் தாண்டிய பிறகும் இளமையோடு வாழ வழிகள் சொல்கிறார் சேலம் எஸ்.கே.எஸ் மருத்துவமனை குடும்ப நல மருத்துவர் ப்ரியா விஜய்.

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் 40 வயது ஒரு வேகத்தடை. கடந்த நாட்களை திரும்பிப் பார்க்கவும், நம்மை பற்றி சிந்திக்கவும் ஏற்ற தருணம் இது. மனம், உடல் ரெண்டும் மாறிப் போயிருக்கும். தொப்பை வெளியில் தள்ளி, இடுப்பு பெருத்துவிடும். கண்ணுக்குக் கீழே சதை விழும். கன்னம் லூசாகி, முடி நரைக்க ஆரம்பித்திருக்கும். இளமை அதற்குள் போய்விட்டதே என்று கவலை வரும். இந்த மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் மன அழுத்தம்.

நாற்பது வயதைத் தொடுவதற்கு முன்பே வாழ்க்கையை முறைப்படுத்தி, சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்ற பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டால் 50 வயதில் கூட சுறுசுறுப்பாக இயங்கலாம். இதெல்லாம் சொல்வதற்கு சுலபம். மணிக்கணக்கில் உட்கார்ந்த இடத்தில் வேலை. வாரத்தில் நான்கு நாட்கள் கடையில் சாப்பாடு, மனம் விட்டுப் பேச யாரும் இல்லை, வீட்டுக்குள் வந்தால் "அது இல்லை, இது இல்லை" என்று நச்சரிப்புகள், இதை மறக்க சிகரெட், வாரத்துக்கு ஒரு தடவையாவது நண்பர்களுடன் ட்ரிங்ஸ்... பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது. இது சரியில்லை என்று தெரிந்தாலும், "சவுகரியமாக இருக்கிறது" என்கின்றனர்.

வாழ்க்கையே இவர்களுக்கு டென்ஷன் மயம். இந்த மன அழுத்தம் உடலை பாதிக்கிறது. இப்போது இளம் வயதிலேயே பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம். இதனால் எந்த வேலையையும் திருப்தியாக முடிக்க முடிவதில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் சுமுகமான உறவு இருக்காது. பகிர்ந்து கொள்ளாத பிரச்சினைகள் மனதை அழுத்தும். மன அழுத்தம் பல நோய்களுக்கு கதவைத் திறந்து விடுவதால், முதலில் அதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் இதமான பயிற்சிகள் அவசியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 12:43 am

டென்ஷனில் இருந்து விடுபட, செய்ய வேண்டியது மூச்சுப்பயிற்சி. நன்றாக மூச்சை இழுத்து விட்டால் நரம்பு, தசை, மூளை ஆகியவற்றில் ரத்த ஓட்டம் சீராகும். உடல் திசுக்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். சோர்வாக இருக்கும்போது, நன்றாக மூச்சை இழுத்து விட்டு ஆழமாக சுவாசித்தால் மாற்றத்தை உணரலாம். யோகா, தியானம், மென்மையான இசையை ரசிப்பது... என முறையாக செய்து வந்தால் உடல் உற்சாகமாக இருப்பதற்குத் தேவையான உந்துசக்தி கிடைக்கும்.

காலையில் எழுந்த உடன் நடைப்பயிற்சி செய்யலாம். பிரச்னைகளை நம்பகமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்க, உணவிலும் கவனம் தேவை. கொழுப்பைத் தவிர்த்து விட்டு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள காய்கறி, கீரை, பழங்களை கட்டாயம் உணவில் சேர்க்கவும். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட, தவறான உணவுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தால், அவர்கள் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படலாம்.

இந்த வயதில் அசைவ உணவை நிறுத்துவது நலம் தரும். புகை, மதுவுக்கு குட்பை சொல்லவும். வயது ஆக ஆக, நினைவாற்றலும் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், இயல்பாக ஏற்படும் இப்படிப்பட்ட குறைகளை நம்மால் தள்ளிப்போட முடியும். ஞாபக மறதியை 70 வயது வரை கூட தள்ளிப்போட முடியும். இதற்கும் முதல் எதிரி மன அழுத்தம் தான்.

நம் உடம்பில் மூளைதான் இயக்குனர். மற்ற பாகங்களை விட மூளை செயல்பாட்டுக்கு 30 சதவிகிதம் அதிக ரத்தம் தேவை. இதில் ரத்தநாளங்கள் அதிகளவில் இருப்பதால், சிறிய அழுத்தம் கூட மூளையை பாதிக்கும். ரத்த அழுத்தம் மூளையை பாதிப்பதால் பக்கவாதம் வருகிறது. மூளைக்கு ஆக்சிஜன் போதுமான அளவிற்கு கிடைத்தால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு 40 வயதுக்கு மேல் குறைய ஆரம்பிக்கும். இதை சரிக்கட்ட பதற்றம், படபடப்பு, மனஅழுத்தம் ஆகியவை தாக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் பி சத்து, மூளை செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும்.

பொதுவாக இந்த வயதில் ஆண்களுக்கு உடலுறவில் விருப்பம் குறையலாம். சர்க்கரை, இதயக் கோளாறு, அதிக எடை போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, மன அழுத்தமும் சேர்ந்து கொண்டு இதில் பிரச்னை பண்ணும். மேலும், ஏற்கனவே இருக்கும் உடல் தொந்தரவுகளுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும் விருப்பத்தைக் குறைக்கலாம். வீட்டில் மனம் விட்டுப் பேசி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தூக்கமின்மை, அதிகமாக மது அருந்துவது ஆகியவற்றாலும் உறவில் ஆர்வம் குறையலாம். ஆனால், இதன் விளைவாக உடலுறவில் திருப்தி ஏற்படாமல் பயம் அல்லது குற்ற உணர்வு ஏற்படும். இதுவே தவறான தொடர்புகள் ஏற்படவும் காரணம். மனதை ஆரோக்யமாக வைத்துக் கொண்டால் சிறிய பிரச்னைகளை ஊதித் தள்ளலாம்.

சரி... இவையெல்லாம் 40 வயதுக்கு மேல் வராமல் தடுக்க வேண்டும் என்றால், 30 வயதிலிருந்தே உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். வேலைக்கு தகுந்த மாதிரி உடலுக்கு ஓய்வும் தேவை. உயரத்துக்கு தகுந்த வெயிட் போதும். ஏற்கனவே இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கவும், எடையைக் குறைக்கவும், பித்தப்பை பிரச்னையை தவிர்க்கவும் முறையான உடற்பயிற்சி அவசியம். இதுவே தசை மற்றும் திசுக்களை வலுப்படுத்தும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் டாக்டர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும். பொதுவாக, வாக்கிங் மற்றும் சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் எல்லோருக்கும் ஏற்றது.

உணவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்ப்பதை குறைக்கவும். பச்சைக் காய்கறிகள், கீரை தினசரி உணவில் அவசியம் இடம்பெற வேண்டும். அதே போல் புரதச் சத்துள்ள உணவுகளாக பார்த்துப் பார்த்து சாப்பிடவும். வாயைக் கட்டினால் வெயிட்டை குறைப்பது சுலபம். பொதுவாக இந்த வயதில் பெண்களைப் போல ஆண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதே போல் விஷயங்களை எதார்த்தமாக அணுகுவதும் ஆண்களின் பலம். தோல் சுருக்கம் விழுவதிலிருந்து தப்பிக்க உணவு, பயிற்சி, மனதுடன் சிறப்பு கவனமும் கை கொடுக்கும். வாசனைத் திரவியங்கள் மற்றும் அதிக வாசனை உள்ள சோப்புகளில் இருக்கும் கெமிக்கல்கள் உங்கள் தோலுக்கு எதிரி. தோலின் தன்மைக்கு தகுந்த அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது முக்கியம்.

இன்றிலிருந்து ஒவ்வொரு நாளையும், அன்று பிறந்த குழந்தை போல அணுகுங்கள். தனக்கு வாய்த்திருப்பதை ஏற்றுக் கொண்டு வாழப் பழகுங்கள். எல்லாவற்றையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள். கவலையா? அப்படின்னா? என்று உற்சாகத்துடன் கிளம்புங்கள். நம்மால் வெல்ல முடியாதது எதுவும் இல்லை. வயோதிகம் வாயடைத்து நிற்கும்"" என்கிறார் ப்ரியா விஜய்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக