|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே! by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:26 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:22 pm
» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:15 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் கதைகளுக்கு எப்போதுமே "அறம்" சார்ந்த நோக்கமுண்டு. கேட்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அறத்தோடும் புத்திக் கூர்மையோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவைகளுக்குண்டு. தங்களது புத்தி சாதுர்யம், திறமை உள்ளிட்ட அணைத்தையும் "அறம்" தழைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற உயரிய பக்குவத்தை குழந்தைகளுள் விதைத்தலே அவைகளின் நோக்கம்.
இது எல்லா மண்ணிற்கும், எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். நம்பிக்கை, புத்திக்கூர்மை, தைரியம், தாய்மண் மீது தாய்மொழி மீது பற்று, சமூக அக்கறை, எல்லாம் கடந்து அறம் சார்ந்த ஒழுக்கம் என்பவையே குழந்தை இலக்கியத்தின் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகளின் இலக்கு.
நம் மண்ணில் அறத்தின் மீது தரப்படும் அழுத்தம் ரொம்பவும் அதிகம். "அறம் செய விரும்பு" என்று அடித்துச் சொல்லித் தரும் சமூகம் தமிழ்ச் சமூகம்.
என்றால், தொன்ம, பழமிலக்கியங்களை மறு கட்டமைப்பது தேவையா? பலன் தருமா?
பார்த்துதான் விடுவோமே.
ஒரு பாட்டி கதை.
பாப்பாக்களுக்கும் தம்பிகளுக்கும் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவது. குழந்தைகளாய் இருந்த போது நமக்கும் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட சொல்லித் தரப்பட்டதுதான்.
நல்ல வெயில். பறந்து கொண்டிருந்த காகத்திற்கு தகிக்கிறது. பறந்து கொண்டே கீழே எங்கும் தண்னீர் கிடைக்குமா என்று தேடுகிறது. ஒரு ஜாடி அதன் கண்களில் படவே அது கீழே இறங்குகிறது. தனது கூரிய அலகினை ஜாடிக்குள் நுழைத்து நீர் அருந்த முயற்சி செய்கிறது. அதன் அலகிற்கு நீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசித்த காகம் அருகே கிடந்த சிறு சிறு கற்களை எடுத்து ஜாடியில் போடுகிறது. நீர் கொஞ்சம் உயர்ந்து வரவே காகம் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு பறந்து போனது.
காகத்தின் புத்தி சாதுர்யத்தை வியக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் நோக்கம் வாழ்க்கையில் அது மாதிரியான சூழலை சந்திக்கும்போது அந்தக் காகத்தைப் போல புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையை குழந்தைகளிடம் விதைப்பதுதான் இந்தக் கதையின் நோக்கம்.
எதிர் பார்க்கப்பட்ட பலனை இது தந்ததா?
அதையும்தான் பார்த்துவிடலாமே.
கொண்டபுரம் ராஜவிஜயன் மார்ச் 2010 "இது பெரிய எழுத்து" வில் சமீபத்தில் தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சியை விவரித்திருந்தார். அதை நானும்கூடப் பார்தேன் , நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.
வறட்சி வாட்டும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர்த்தொட்டிகளைக் கட்டியிருக்கிறது அரசு. அதில் ஒரு தொட்டியில் சில வாரங்களே வயதுடைய இரண்டு யானைக் குட்டிகள் விழுந்து விட்டன. குட்டிகள் மூழ்கிவிடுமளவிற்கு தொட்டியில் தண்ணீர் இல்லை. என்னென்னவோ செய்தும் குட்டிகளால் மேலேற முடியவில்லை. என்ன செய்தும் தாய் யானையாலும் குட்டிகளை மேலே இழுத்து விட முடியவில்லை. ஆற்றாமையில் அது பிளிறிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்தது.
யானையின் ஆக்ரோஷமான பிளிரல் பக்கத்து கிராம மக்கள் சிலரை அங்கே இழுத்து வந்தது. தனது குட்டிகளை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தாய் யானை அவர்களை தொட்டியின் அருகே வரவிடாமல் விரட்டி அடித்தது.
யோசித்த மக்கள் கற்களை வீசி தொட்டியின் ஒரு பக்க ஆழத்தைக் குறைக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் தனது குட்டிகளைத் தாக்கத்தான் கற்களை வீசுகிறார்கள் என்று எண்ணி அழிச்சாட்டியம் செய்த தாய் யானைக்கு உண்மை புரிய வெகு நேரமாகவில்லை. உடனே குட்டிகளின் மீது கற்கள் பட்டுவிடாமல் ஒரு மூலையில் அவைகளைத் தள்ளி ஒத்துழைத்தது.
ஒரு வழியாய் குட்டிகள் மேலேறியவுடன் தாயும் பிள்ளைகளும் சந்தோஷமாய் வனத்திற்குள் நுழைந்தன.
தங்களது குழந்தைப் பிராயத்தில் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைக்கப் பெற்ற "காகம்" கதையின் அநிச்ச விளைவாகக்கூட இது இருக்கலாம். கற்களை தொட்டிக்குள் வீசித் தொட்டியின் ஆழத்தைக் குறைப்பதன் மூலம் குட்டி யானைகளைக் காப்பாற்றி விடலாம் என்கிற புத்தி சாதுர்யம் அந்தக் கதையின் விளைவாகவும் வெற்றியாகவும் கூட இருக்கலாம். தாய் யானையின் எதிர்ப்பையும் மீறி அதிலிருந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டு குட்டிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை ஏற்றதற்கு இந்தக் கதையிடமிருந்து பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களாகவும் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லித் தருவதன் நோக்கமிதுதான் என்ற வகையில் இந்தக் கதையின் நோக்கம் நம் கண் முன்னே நிறைவேறி இருப்பதாகக் கொள்ளலாம்.
இது மாதிரி குழந்தைக் கதைகள் நமது அறிவு சார், அறம் சார் பொக்கிஷங்கள். தலைமுறை தலைமுறையாய் மாற்றி மாற்றி கையளிக்கப் பட்டு இன்று நம் கைகளுக்கு வந்துள்ள இந்தப் பாரம்பரிய பொக்கிஷங்களை நாம் மெருகு படுத்தி அடுத்த தலைமுறையின் கைகளில் கைமாற்றித் தரவேண்டிய பொறுப்பினை நாம் சரியாக செய்கிறோமா?
யுகம் யுகமாய் வாய் வழியாய் வளர்க்கப்பட்ட இந்தக் கதைகள் பிறகு ஓலையில் பிறகு தாளில் அச்சில் என்று வளர்ந்து வந்துள்ளன. இன்னும் தாண்டி ஒலித் தகடுகள், ஒலி-ஒளித் தகடுகள் என்று வளர்ந்து விரிந்த நிலைகளில் அவற்றின் பதிவுகள் நம்மை மகிழச் செய்கின்றன.
தாராள மயத்தின் கோர வளர்ச்சியில் விளம்பரத் துறையும் தனது வணிக பயன்பாட்டிற்காக குழந்தைகளின் இலக்கியத்தை இப்போது கையிலெடுத்துள்ளன. அப்படி இவர்களின் கைகளில் சிக்கி சின்னா பின்னப் படுத்தப்பட்டு சிதைந்து சீரழிந்து நிற்கும் குழந்தைகளுக்கான ஒரு கதைப் பாடலை பார்க்கலாம்.
"pied piper" என்ற ஆங்கில கதைப் பாடல். கதையின் வழியாக ஆழமான ஒரு அறத்தினை குழந்தைகளின் அடி மனசில் பதியச் செய்யும் பாடல்.
அந்த ஊர் எலிகளால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் எலிகள். ஊர் மக்கள் கந்துக் காரனை விடவும் இந்த எலிகளைக் கண்டுதான் அதிகம் பயந்தனர். அவ்வளவு தொல்லை எலிகளல் அவர்களுக்கு. " நூறு புலிகளை ஜமாளிச்சுடலாம், ஆனா ஒரு எலிச் சனியனை ஜமாலிக்கிறதுக்குள்ள உசிறு போய் உசிறு வருது" என்று பேசிக் கொள்ளுமளவிற்கு அவர்கள் எலிகளால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். நிலை குலைந்த அவர்கள் ஊர்த் தலைவரிடம் ஒன்று திரண்டு சென்று இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் வேண்டினர். அவர் வீட்டிலும் சற்றேரக் குறைய அறுபத்தி இரண்டு எலிகள் என்கிற வகையில் இதுபற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லைதான்.
ஒவ்வொரு நாளும் அவரது அலுவலகம் ஊர் மக்களால் முற்றுகையிடப் பட்டது. மக்களுக்கு எலிகள் மட்டுமே பிரச்சினை ஊர்த் தலைவருக்கோ வீட்டிலே எலிகளாலும் அலுவலகத்தில் பொது மக்களாலும் பிரச்சினை.
அழிபட மறுத்து நாளும் நாளும் செழித்து வளரும் இந்திய ஜாதிகளைப் போல என்ன செய்தும் நாளும் வளர்ந்து வந்த எலிகளை ஒழிப்பதற்கு ஒரு இளைஞன் முன் வந்தான். அதற்கு ஊதியமாக ஒரு பெருந்தொகையினை கேட்டான். தங்கள் ஊர் எலிகளை ஒழிப்பதற்கு காலமும் உழைப்பும் அதிகம் தேவைப் படும் என்று கருதிய ஊர்த் தலைவர் அந்த இளைஞன் கேட்ட பெருந்தொகைக்கு சம்மதித்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞன் இசைக் குழலினை இசைத்தவாறு நடக்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில், பிறந்து இரண்டு நொடிகள் மட்டுமே ஆன எலிக்குட்டிகள் உட்பட அனைத்து எலிகளும் அவன் பின்னால் அவன் இசைக்கு கட்டுப் பட்டு நடந்தன. இசைத்துக் கொண்டே அவன் ஒரு நீர் நிலைக்குள் அவன் இறங்க எலிகளும் நீர் நிலைக்குள் இறங்கி அழிந்து போயின.
ஒரு முக்கால் மணி நேரத்திற்குள் எலிகளே இல்லாத ஊராய் மாறிப் போனது அந்த ஊர்.
ஊதியம் பெருவதற்காக ஊர்த் தலைவரிடம் வந்தான்.
முக்கால் மணியில் முடிந்து போன ஒரு சொற்ப வேலையாகவே அது ஊர்த் தலைவருக்குப் பட்டது. பேசிய தொகையில் பெரும் பகுதியை குறைத்து ஒரு சன்னமான தொகையினை அவனிடம் நீட்டினார்.
காரணம் கேட்டது அவனது பார்வை.
"இதுவே அதிகம்" அவரது பெருந்தன்மையை எடுத்து வைத்தது அவரது பார்வை.
"பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" புன்னகை கசிய இளைஞன் வெளியேறினான்.
இசைத்தபடியே மீண்டும் நடந்தான். இந்த முறை நடை பழகும் குழந்தைகளும் அவன் பின்னே நடை வண்டிகளோடு கிளம்பின.
விபரீதம் உணர்ந்த ஊர்த் தலைவர் பேசிய தொகையை பணிந்து கொடுத்து ஊர்க் குழந்தைகளை மீட்டார்.
இந்த கதையை எதனோடெல்லாம் பொறுத்தி புதிதாய் அறம் சொல்லலாம்.
சூதாய் உழைப்பை சுரண்டி ஏமாற்றினால் இது போல கேடு விளையலாம் என்று சொல்லித் தரலாம். அல்லது ஒரு கலைஞனின் மேன்மையை விளக்க இந்தக் கதையை சொல்லலாம்.
ஆனால் தற்போது ஊடகங்களில் இந்தக் கதையை ஒவ்வொரு நாளும் பல தடவை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
இதிலும் எலிகள் அழிக்கப் படுகின்றன. பேசிய ஊதியம் வழங்கப் படாததால் புன்னகையோடு இளைஞன் வெளியே வருகிறான். இது வரை மாற்றமில்லை. இப்போது இசைக் கருவி அல்ல அவனது ஆயுதம். ஒரு வாசனை திரவத்தை (spray) தன் மேலே இட்டுக் கொள்கிறான். வீதியில் நடக்கிறான். அந்த வாசனை திரவத்தின் வாசனையில் கட்டுண்டு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் அவன் பின்னே போகிறார்கள்.
நமது கேள்வி இதுதான்.
ஏதோ ஒரு மனிதனிடம் இருக்கும் மேன்மையால் , திறமையால், புகழால், அல்லது அழகால் ஒருவரோ அல்லது சிலரோ ஈர்க்கப் படுவதும் அதில் சிலர் எல்லை தாண்டுவதும் இயல்புதான். இதே காரணங்களுக்காக ஒரு பெண்ணிடம் சில ஆண்கள் ஈர்க்கப் படுவதும் அதில் பலர் எல்லை தாண்டுவதும் வாடிக்கைதான்.
யுவராஜ் , திரிஷா போன்றவர்கள் மொய்க்கப் படுவது இந்த வகையில்தான்
என்ன சொல்கிறது இந்த விளம்பரம்?
அக்குளில் அடிக்கப் பட்ட திரவத்தின் வாசனையே போதும் பெண்களை சோரப் படுத்த என்பதுதானே?
இது சரிதானா?
குஷ்பு மற்றும் ஜெயராம் கருத்துக்கள் பெண்களை இழிவு செய்ததாய் கொதித்துக் குமுறிய நண்பர்களுக்கு இந்த விளம்பரத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.
வேறென்ன செய்ய?
நன்றி: "யுகமாயினி" "கீற்று"
குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் கதைகளுக்கு எப்போதுமே "அறம்" சார்ந்த நோக்கமுண்டு. கேட்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அறத்தோடும் புத்திக் கூர்மையோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவைகளுக்குண்டு. தங்களது புத்தி சாதுர்யம், திறமை உள்ளிட்ட அணைத்தையும் "அறம்" தழைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற உயரிய பக்குவத்தை குழந்தைகளுள் விதைத்தலே அவைகளின் நோக்கம்.
இது எல்லா மண்ணிற்கும், எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். நம்பிக்கை, புத்திக்கூர்மை, தைரியம், தாய்மண் மீது தாய்மொழி மீது பற்று, சமூக அக்கறை, எல்லாம் கடந்து அறம் சார்ந்த ஒழுக்கம் என்பவையே குழந்தை இலக்கியத்தின் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகளின் இலக்கு.
நம் மண்ணில் அறத்தின் மீது தரப்படும் அழுத்தம் ரொம்பவும் அதிகம். "அறம் செய விரும்பு" என்று அடித்துச் சொல்லித் தரும் சமூகம் தமிழ்ச் சமூகம்.
என்றால், தொன்ம, பழமிலக்கியங்களை மறு கட்டமைப்பது தேவையா? பலன் தருமா?
பார்த்துதான் விடுவோமே.
ஒரு பாட்டி கதை.
பாப்பாக்களுக்கும் தம்பிகளுக்கும் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவது. குழந்தைகளாய் இருந்த போது நமக்கும் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட சொல்லித் தரப்பட்டதுதான்.
நல்ல வெயில். பறந்து கொண்டிருந்த காகத்திற்கு தகிக்கிறது. பறந்து கொண்டே கீழே எங்கும் தண்னீர் கிடைக்குமா என்று தேடுகிறது. ஒரு ஜாடி அதன் கண்களில் படவே அது கீழே இறங்குகிறது. தனது கூரிய அலகினை ஜாடிக்குள் நுழைத்து நீர் அருந்த முயற்சி செய்கிறது. அதன் அலகிற்கு நீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசித்த காகம் அருகே கிடந்த சிறு சிறு கற்களை எடுத்து ஜாடியில் போடுகிறது. நீர் கொஞ்சம் உயர்ந்து வரவே காகம் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு பறந்து போனது.
காகத்தின் புத்தி சாதுர்யத்தை வியக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் நோக்கம் வாழ்க்கையில் அது மாதிரியான சூழலை சந்திக்கும்போது அந்தக் காகத்தைப் போல புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையை குழந்தைகளிடம் விதைப்பதுதான் இந்தக் கதையின் நோக்கம்.
எதிர் பார்க்கப்பட்ட பலனை இது தந்ததா?
அதையும்தான் பார்த்துவிடலாமே.
கொண்டபுரம் ராஜவிஜயன் மார்ச் 2010 "இது பெரிய எழுத்து" வில் சமீபத்தில் தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சியை விவரித்திருந்தார். அதை நானும்கூடப் பார்தேன் , நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.
வறட்சி வாட்டும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர்த்தொட்டிகளைக் கட்டியிருக்கிறது அரசு. அதில் ஒரு தொட்டியில் சில வாரங்களே வயதுடைய இரண்டு யானைக் குட்டிகள் விழுந்து விட்டன. குட்டிகள் மூழ்கிவிடுமளவிற்கு தொட்டியில் தண்ணீர் இல்லை. என்னென்னவோ செய்தும் குட்டிகளால் மேலேற முடியவில்லை. என்ன செய்தும் தாய் யானையாலும் குட்டிகளை மேலே இழுத்து விட முடியவில்லை. ஆற்றாமையில் அது பிளிறிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்தது.
யானையின் ஆக்ரோஷமான பிளிரல் பக்கத்து கிராம மக்கள் சிலரை அங்கே இழுத்து வந்தது. தனது குட்டிகளை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தாய் யானை அவர்களை தொட்டியின் அருகே வரவிடாமல் விரட்டி அடித்தது.
யோசித்த மக்கள் கற்களை வீசி தொட்டியின் ஒரு பக்க ஆழத்தைக் குறைக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் தனது குட்டிகளைத் தாக்கத்தான் கற்களை வீசுகிறார்கள் என்று எண்ணி அழிச்சாட்டியம் செய்த தாய் யானைக்கு உண்மை புரிய வெகு நேரமாகவில்லை. உடனே குட்டிகளின் மீது கற்கள் பட்டுவிடாமல் ஒரு மூலையில் அவைகளைத் தள்ளி ஒத்துழைத்தது.
ஒரு வழியாய் குட்டிகள் மேலேறியவுடன் தாயும் பிள்ளைகளும் சந்தோஷமாய் வனத்திற்குள் நுழைந்தன.
தங்களது குழந்தைப் பிராயத்தில் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைக்கப் பெற்ற "காகம்" கதையின் அநிச்ச விளைவாகக்கூட இது இருக்கலாம். கற்களை தொட்டிக்குள் வீசித் தொட்டியின் ஆழத்தைக் குறைப்பதன் மூலம் குட்டி யானைகளைக் காப்பாற்றி விடலாம் என்கிற புத்தி சாதுர்யம் அந்தக் கதையின் விளைவாகவும் வெற்றியாகவும் கூட இருக்கலாம். தாய் யானையின் எதிர்ப்பையும் மீறி அதிலிருந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டு குட்டிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை ஏற்றதற்கு இந்தக் கதையிடமிருந்து பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களாகவும் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லித் தருவதன் நோக்கமிதுதான் என்ற வகையில் இந்தக் கதையின் நோக்கம் நம் கண் முன்னே நிறைவேறி இருப்பதாகக் கொள்ளலாம்.
இது மாதிரி குழந்தைக் கதைகள் நமது அறிவு சார், அறம் சார் பொக்கிஷங்கள். தலைமுறை தலைமுறையாய் மாற்றி மாற்றி கையளிக்கப் பட்டு இன்று நம் கைகளுக்கு வந்துள்ள இந்தப் பாரம்பரிய பொக்கிஷங்களை நாம் மெருகு படுத்தி அடுத்த தலைமுறையின் கைகளில் கைமாற்றித் தரவேண்டிய பொறுப்பினை நாம் சரியாக செய்கிறோமா?
யுகம் யுகமாய் வாய் வழியாய் வளர்க்கப்பட்ட இந்தக் கதைகள் பிறகு ஓலையில் பிறகு தாளில் அச்சில் என்று வளர்ந்து வந்துள்ளன. இன்னும் தாண்டி ஒலித் தகடுகள், ஒலி-ஒளித் தகடுகள் என்று வளர்ந்து விரிந்த நிலைகளில் அவற்றின் பதிவுகள் நம்மை மகிழச் செய்கின்றன.
தாராள மயத்தின் கோர வளர்ச்சியில் விளம்பரத் துறையும் தனது வணிக பயன்பாட்டிற்காக குழந்தைகளின் இலக்கியத்தை இப்போது கையிலெடுத்துள்ளன. அப்படி இவர்களின் கைகளில் சிக்கி சின்னா பின்னப் படுத்தப்பட்டு சிதைந்து சீரழிந்து நிற்கும் குழந்தைகளுக்கான ஒரு கதைப் பாடலை பார்க்கலாம்.
"pied piper" என்ற ஆங்கில கதைப் பாடல். கதையின் வழியாக ஆழமான ஒரு அறத்தினை குழந்தைகளின் அடி மனசில் பதியச் செய்யும் பாடல்.
அந்த ஊர் எலிகளால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் எலிகள். ஊர் மக்கள் கந்துக் காரனை விடவும் இந்த எலிகளைக் கண்டுதான் அதிகம் பயந்தனர். அவ்வளவு தொல்லை எலிகளல் அவர்களுக்கு. " நூறு புலிகளை ஜமாளிச்சுடலாம், ஆனா ஒரு எலிச் சனியனை ஜமாலிக்கிறதுக்குள்ள உசிறு போய் உசிறு வருது" என்று பேசிக் கொள்ளுமளவிற்கு அவர்கள் எலிகளால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். நிலை குலைந்த அவர்கள் ஊர்த் தலைவரிடம் ஒன்று திரண்டு சென்று இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் வேண்டினர். அவர் வீட்டிலும் சற்றேரக் குறைய அறுபத்தி இரண்டு எலிகள் என்கிற வகையில் இதுபற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லைதான்.
ஒவ்வொரு நாளும் அவரது அலுவலகம் ஊர் மக்களால் முற்றுகையிடப் பட்டது. மக்களுக்கு எலிகள் மட்டுமே பிரச்சினை ஊர்த் தலைவருக்கோ வீட்டிலே எலிகளாலும் அலுவலகத்தில் பொது மக்களாலும் பிரச்சினை.
அழிபட மறுத்து நாளும் நாளும் செழித்து வளரும் இந்திய ஜாதிகளைப் போல என்ன செய்தும் நாளும் வளர்ந்து வந்த எலிகளை ஒழிப்பதற்கு ஒரு இளைஞன் முன் வந்தான். அதற்கு ஊதியமாக ஒரு பெருந்தொகையினை கேட்டான். தங்கள் ஊர் எலிகளை ஒழிப்பதற்கு காலமும் உழைப்பும் அதிகம் தேவைப் படும் என்று கருதிய ஊர்த் தலைவர் அந்த இளைஞன் கேட்ட பெருந்தொகைக்கு சம்மதித்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞன் இசைக் குழலினை இசைத்தவாறு நடக்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில், பிறந்து இரண்டு நொடிகள் மட்டுமே ஆன எலிக்குட்டிகள் உட்பட அனைத்து எலிகளும் அவன் பின்னால் அவன் இசைக்கு கட்டுப் பட்டு நடந்தன. இசைத்துக் கொண்டே அவன் ஒரு நீர் நிலைக்குள் அவன் இறங்க எலிகளும் நீர் நிலைக்குள் இறங்கி அழிந்து போயின.
ஒரு முக்கால் மணி நேரத்திற்குள் எலிகளே இல்லாத ஊராய் மாறிப் போனது அந்த ஊர்.
ஊதியம் பெருவதற்காக ஊர்த் தலைவரிடம் வந்தான்.
முக்கால் மணியில் முடிந்து போன ஒரு சொற்ப வேலையாகவே அது ஊர்த் தலைவருக்குப் பட்டது. பேசிய தொகையில் பெரும் பகுதியை குறைத்து ஒரு சன்னமான தொகையினை அவனிடம் நீட்டினார்.
காரணம் கேட்டது அவனது பார்வை.
"இதுவே அதிகம்" அவரது பெருந்தன்மையை எடுத்து வைத்தது அவரது பார்வை.
"பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" புன்னகை கசிய இளைஞன் வெளியேறினான்.
இசைத்தபடியே மீண்டும் நடந்தான். இந்த முறை நடை பழகும் குழந்தைகளும் அவன் பின்னே நடை வண்டிகளோடு கிளம்பின.
விபரீதம் உணர்ந்த ஊர்த் தலைவர் பேசிய தொகையை பணிந்து கொடுத்து ஊர்க் குழந்தைகளை மீட்டார்.
இந்த கதையை எதனோடெல்லாம் பொறுத்தி புதிதாய் அறம் சொல்லலாம்.
சூதாய் உழைப்பை சுரண்டி ஏமாற்றினால் இது போல கேடு விளையலாம் என்று சொல்லித் தரலாம். அல்லது ஒரு கலைஞனின் மேன்மையை விளக்க இந்தக் கதையை சொல்லலாம்.
ஆனால் தற்போது ஊடகங்களில் இந்தக் கதையை ஒவ்வொரு நாளும் பல தடவை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
இதிலும் எலிகள் அழிக்கப் படுகின்றன. பேசிய ஊதியம் வழங்கப் படாததால் புன்னகையோடு இளைஞன் வெளியே வருகிறான். இது வரை மாற்றமில்லை. இப்போது இசைக் கருவி அல்ல அவனது ஆயுதம். ஒரு வாசனை திரவத்தை (spray) தன் மேலே இட்டுக் கொள்கிறான். வீதியில் நடக்கிறான். அந்த வாசனை திரவத்தின் வாசனையில் கட்டுண்டு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் அவன் பின்னே போகிறார்கள்.
நமது கேள்வி இதுதான்.
ஏதோ ஒரு மனிதனிடம் இருக்கும் மேன்மையால் , திறமையால், புகழால், அல்லது அழகால் ஒருவரோ அல்லது சிலரோ ஈர்க்கப் படுவதும் அதில் சிலர் எல்லை தாண்டுவதும் இயல்புதான். இதே காரணங்களுக்காக ஒரு பெண்ணிடம் சில ஆண்கள் ஈர்க்கப் படுவதும் அதில் பலர் எல்லை தாண்டுவதும் வாடிக்கைதான்.
யுவராஜ் , திரிஷா போன்றவர்கள் மொய்க்கப் படுவது இந்த வகையில்தான்
என்ன சொல்கிறது இந்த விளம்பரம்?
அக்குளில் அடிக்கப் பட்ட திரவத்தின் வாசனையே போதும் பெண்களை சோரப் படுத்த என்பதுதானே?
இது சரிதானா?
குஷ்பு மற்றும் ஜெயராம் கருத்துக்கள் பெண்களை இழிவு செய்ததாய் கொதித்துக் குமுறிய நண்பர்களுக்கு இந்த விளம்பரத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.
வேறென்ன செய்ய?
நன்றி: "யுகமாயினி" "கீற்று"

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
Re: எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
அருமை கட்டுரை......
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே .........
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே .........



பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
பிளேடு பக்கிரி wrote:அருமை கட்டுரை......
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே .........
வணக்கம் தோழர்
எப்படி இருக்கு?

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
Re: எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
இரா.எட்வின் wrote:பிளேடு பக்கிரி wrote:அருமை கட்டுரை......
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே .........
வணக்கம் தோழர்
எப்படி இருக்கு?
அருமை நண்பா....
நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு இந்த கதைகளை சொல்லி கொடுக்குரீர்களா...?


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
பிளேடு பக்கிரி wrote:இரா.எட்வின் wrote:பிளேடு பக்கிரி wrote:அருமை கட்டுரை......
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே .........
வணக்கம் தோழர்
எப்படி இருக்கு?
அருமை நண்பா....
நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு இந்த கதைகளை சொல்லி கொடுக்குரீர்களா...?
அப்பறம்? நிச்சயமா

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
ஹாசிம் wrote:அருமையான பகிர்வு
நன்றி ஹாசிம்

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
Re: எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
அருமையான கட்டுரை நன்றி"யுகமாயினி" மற்றும் "எட்வின்".

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
இரா.எட்வின் wrote:பிளேடு பக்கிரி wrote:இரா.எட்வின் wrote:பிளேடு பக்கிரி wrote:அருமை கட்டுரை......
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே .........
வணக்கம் தோழர்
எப்படி இருக்கு?
அருமை நண்பா....
நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு இந்த கதைகளை சொல்லி கொடுக்குரீர்களா...?
அப்பறம்? நிச்சயமா
நல்லது ... இப்பொழுது உள்ள வகுப்புகளில் இதை பார்க்கவே முடிவதில்லை...
அதனால் தான் கேட்டேன் ....


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"யுகமாயினி" மற்றும் "எட்வின்"
நன்றி தோழருக்குத்தான்

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
Re: எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
உங்களைமாதிரி ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை.தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றென்றும்.இரா.எட்வின் wrote:பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"யுகமாயினி" மற்றும் "எட்வின்"
நன்றி தோழருக்குத்தான்


பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
பிச்ச wrote:உங்களைமாதிரி ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை.தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றென்றும்.இரா.எட்வின் wrote:பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"யுகமாயினி" மற்றும் "எட்வின்"
நன்றி தோழருக்குத்தான்
மனசுக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி தோழர்

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
பிச்ச wrote:உங்களைமாதிரி ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை.தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றென்றும்.இரா.எட்வின் wrote:பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"யுகமாயினி" மற்றும் "எட்வின்"
நன்றி தோழருக்குத்தான்
வணக்கம் தோழர்
கீழே கவிதையை ஓடச் செய்திரிக்கிறீர்களே எப்படி?

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
Re: எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
நல்ல பதிவு 


நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4529
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து
நவீன் wrote:நல்ல பதிவு
ஆமாம் நவீன் சார்,
நான் உங்களை வழி மொழிகிறேன்
இவனிடம் நிறைய உண்டு
ஆனா சோம்பேரி
Last edited by அமுதா on Mon Jul 12, 2010 11:33 pm; edited 1 time in total

அமுதா- புதியவர்

- பதிவுகள்: 16
வசிப்பிடம்: trichy
சேர்ந்தது: 12/07/2010
மதிப்பீடு: 0
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









