புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 1:31 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
50 Posts - 42%
prajai
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%
kargan86
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%
jairam
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
50 Posts - 28%
mohamed nizamudeen
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
8 Posts - 5%
prajai
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
7 Posts - 4%
Jenila
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
4 Posts - 2%
Baarushree
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
3 Posts - 2%
Rutu
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%
kargan86
மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_m10மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 10:33 am

கடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு. “அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா? அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல்.

என்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….?

அட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா?…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று…….

அந்த முனையில் இருந்து நண்பர் பேசப்பேச என் நினைவுகள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்ட்து. ஈழ விடுதலைக்காகப் போராட களத்தில் குதித்த இயக்கங்களில் ஒன்றுதான் ஈரோஸ். அதனைத் தமிழில் ஈழப் புரட்சிகர அமைப்பு என அழைப்பார்கள்.

சமூகத்தைப் பற்றிய சீரிய புரிந்துணர்வும்…. உலக நாடுகளது உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் அதனது படிப்பினைகளைப் பற்றிய துல்லிய பார்வையும் கொண்ட அமைப்புதான் அந்த ஈரோஸ். தனியான தலைவர் என்று எவருமில்லை அந்த இயக்கத்திற்கு. கூட்டுத் தலைமைதான். அப்படி அதில் ஒரு பொறுப்பாளராகத்தான் தோழர் பாலகுமாரன் அறிமுகம் எனக்கு.

எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் க.வே.பாலகுமார்.

ஆர்ப்பரிக்காத அரசியல்…..

எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….

இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும் மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில் கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..

இதுதான் தோழர் பாலா.

ஒருமுறை பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்காக பாலாவைச் சந்தித்து முடித்த பின்னர் மிகுந்த தயக்கத்தோடு அவருடைய புகைப்படம் ஒன்றினைக் கேட்கிறேன். “நம்ம சனங்களுக்கு எங்கட கருத்துக்கள்தான் முக்கியமே தவிர படங்களல்ல…..” என மிக மென்மையாக மறுக்கிறார் பாலா. அதன்பிறகு சுந்தர், பார்த்திபன் என யாரைக்கேட்டாலும் அது கிடைக்காது என எனக்குத் தெரியும். வேறு வழியின்றி நடையைக் கட்டுகிறேன்.

அதன்பிறகு அந்தத் தோழனுடன் எழுத்தாளன் என்ற வகையில் எண்ணற்ற சந்திப்புகள்…..

ஈழத்தில் இருந்து வந்திருக்கும் ஏதிலிகளால்(அகதிகள்) ஏற்பட இருக்கும் கலாச்சார மாற்றங்கள்…..

பொறுப்பற்ற சில குழுக்களால் ஏற்பட இருக்கும் சில சட்ட ஒழுங்கு சிக்கல்கள்….

நாளை மலரப்போகும் ஈழம் எதிர் கொள்ள வேண்டிய பொருளாதார சவால்கள்….. என அனைத்தையும் முன்கூட்டியே தெளிந்த பார்வைகளோடு விளக்கிச் சொல்வார் க.வே.பாலகுமாரன்.

அமைச்சரைச் சந்தித்தாலும் சரி…… கோடம்பாக்கம் பெஸ்ட் ஆஸ்பத்திரி அருகிலுள்ள ஒரு டீக்கடைக்காரரைச் சந்தித்தாலும் அதே கனிவு…. அதே அன்பு….. அதே நிதானம்… அதுதான் பாலா.

1990க்குப் பிற்பாடு அந்த ஈரோஸ் இயக்கம் கலைக்கப் பட்டதும்….. அதில் கொஞ்சம் பேர் புலிகளுக்குப் போனதும்…. இன்னும் கொஞ்சம் பேர் தனித்து இயங்கியதும்…… இந்த இரண்டிலும் ஒப்புதலில்லாத கொஞ்சம் பேர் புலம்பெயர்ந்து போனதும் பின்னர் நடந்த நிகழ்வுகள். அதில் புலிகளோடு போன பிரிவில் இருந்தார் பாலா.

ஈரோஸில் பங்கெடுத்தாலும் சரி….. புலிகளோடு அரசியல் பணிகளைப் பகிர்ந்து கொண்டாலும் சரி….. எங்கிருந்தாலும் அதனைச் செழுமைப்படுத்தும் விதத்தில் பயனுள்ளதாகத்தான் பாலா இருப்பார் என்பதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டோம் நாங்கள். அதன் பிற்பாடு அவரைச் சந்திக்க விடாது காலம் தனது கனத்த திரையைப் போட்டு மூடி விட்டது.

கடந்த ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழப்படுகொலைகளில் கொத்துக் கொத்தாய் குண்டுவீசிக் கொல்லப்பட்ட மக்கள் எத்தனை ஆயிரம் பேர்……?

கணவனைப் பறிகொடுத்து பரிதவிப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்….?

பெற்றோரைப் போருக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு பரிதவிக்கும் மழலைகள் எத்தனை ஆயிரம் பேர்….?

இந்தப் பேரவலத்தில் எங்கே போய் எம் பாலாவைத் தேட? அதை அவரும் விரும்பமாட்டாரே…..

ஆனாலும் அவ்வப்போது சேதிகள் வந்து கொண்டுதான் இருந்தது.

”டிசம்பரிலேயே குண்டு தாக்குதலுக்கு ஆளான அவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்த நிலையில் மே 17 ஆம் தேதியன்று முன்னணிப் போராளிகள் சிலரை அழைத்துக் கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்துவிட்டார்….. ”

”கொழும்புக்கு கொண்டு சென்று விட்டார்கள்…… ”

”சிறுகச் சிறுக சித்ரவதை செய்து கொல்லும் “நாலாவது மாடி”க்கு கூட்டிப்போய் விட்டார்கள்…… ” என எதுவும் உறுதிபடுத்தப்படாத எண்ணற்ற சேதிகள்…… நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்காகவே உழைத்த அந்த நல்ல மானுடனையும் மறக்கத் தொடங்கினோம்.

முள்ளிவாய்க்காலில் தப்பி……. முள்வேலி முகாம்களில் சிக்கியவர்களைப் பற்றி மட்டுமே எங்களைப் போன்றவர்கள் பேசத் தொடங்கினோம்…..

அப்படியாயின் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்தப் பனிரெண்டாயிரம் போராளிகள்?

தன் வீடு….

தன் குடும்பம்….

தனது கல்வி…..

தனது காதல்… என சகலத்தையும் துறந்து இந்த மக்களின் விடிவுக்காகவும் இந்த மண்ணின் விடுதலைக்காகவும் ஆயுதம் தரித்தார்களே…..

அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?

மக்களையே சிங்கள அரசு சின்னா பின்னப்படுத்தும்போது அந்தப் போராளிகளை எந்தெந்தவகைகளில் எல்லாம் சித்ரவதை செய்வார்கள்?

”நரகம்” என்றால் என்னவென்பதற்கான அர்த்தத்தினை இக்கட்டுரை எழுதும் நொடி தொடங்கி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரைக்கும் சந்தித்துக் கொண்டிருக்குமே அந்த ஜீவன்கள்……

சுயநலமற்ற அந்த ஜீவன்களின் விடுதலைக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?

போரில் சரண் அடைந்த எந்தப் போராளியாக இருந்தாலும் அவர்கள் கண்ணியத்துடனும், மனித மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்கிற ஐ.நா.வின் அடிப்படை விதிகள் ஆகட்டும்…… ஜெனிவா உடன்படிக்கைகள் ஆகட்டும்…… போரியல் நியதிப்படி சிங்கள அரசு கடை பிடிக்கிறதா இல்லையா என்பதை யார் கண்காணிக்கிறார்கள்?

மக்கள் இருந்த முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு “பாலும் தேனும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடுகிறது” எனச் சொல்கிற மனித உரிமைப் புடுங்கிகள் எவராவது சரணடைந்த போராளிகள் இருக்கும் முகாம் பக்கமாவது எட்டிப் பார்த்தார்களா?

ரத்தமும் சிறுநீரும் மலமும் ஒரு சேர ஓடும்…… ஓலங்கள் ஓயாத அந்த சித்ரவதைக் கூடங்கள் குறித்து சிந்தித்தாவது பார்த்தார்களா?

அவர்கள் கிடக்கட்டும் நாமாவது சிந்தித்தோமா?

முதல் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் சரண் அடைந்த போர் வீரர்கள் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் எவ்வாரெல்லாம் நடத்தப்பட்டார்கள்…… சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டார்கள் என்கிற வரலாற்றையெல்லாம் நாவல்களாகவும்….. திரைப்படங்களாகவும் இன்றைய வரை பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேர் சரண் அடைந்த அந்தப் 12000 பேருக்காகக் குரல் கொடுத்திருக்கிறோம்?

அவர்கள் யாருக்காக போராளிகள் ஆனார்கள்?

நாம் பாதுகாப்பாக பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பதுங்கு குழிகளுக்குள் நின்று பாதுகாத்தவர்களல்லவா அந்தப் பிள்ளைகள்?

போரியல் நியாயங்களின்படி எத்தனை பேர் சரண் அடைந்தார்கள்?

தெரியாது……

எத்தனை பேர் மிஞ்சியிருக்கிறார்கள்?

தெரியாது……..

எதற்காவது பட்டியல் இருக்கிறதா?

கிடையாது.

இன்று பாலகுமாரைப் பற்றிப் பேசுவோம்….

நாளை யோகியைப் பற்றிப் பேசுவோம்…..

நாளை மறுநாள் புதுவை இரத்தினதுரையைப் பற்றிப் பேசுவோம்…..

அப்புறம்?

இதோ ராணுவ பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தோழர் பாலா தனது மகனுடன் இருக்கும் காட்சி. இதனை லங்கா கார்டியன் பத்திரிகை வெளியிட்டு….

சரண் அடைந்த பின்னர் எடுக்கப்பட்ட இப்படத்திற்குப் பிறகு என்னவானார் பாலா?

அவருடன் சரண் அடைந்தவர்கள் கதி என்ன?

உயிருடன் இருந்தால் இப்போது அவர்கள் எங்கே?

அப்படி உயிரோடு இல்லாவிடில் சரண் அடைந்த போர்க் கைதிகளைக் கொல்வது போர்க்குற்றம் ஆகாதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

பாலா சரண் அடைந்த பிறகு நடந்த இலங்கையின் அதிபர் தேர்தலின் போது பச்சைத் துரோகி கருணாவும், படுபாதகன் பசிலும் இவரை அணுகி மிச்சமுள்ள மக்களுக்கும் குழிவெட்டக் கூப்பிட்டிருக்கிறார்கள். ”இதற்கு மறுத்தால் என்னை என்ன செய்ய முடியும்! எனது உயிரைப் பறிக்க முடியும். அவ்வளவுதானே?” என்று சுயமரியாதை மிக்க மனிதனாக நின்று முழங்கினாராம் பாலா.

இப்படி கேட்பாரற்ற அனாதைகளாய்ப் போன அவர்களில் இருந்து ஒவ்வொரு ஜீவனாய் இழந்து கொண்டே இருக்கப் போகிறோமா நாம்?

அல்லது சரணடைந்த ஜீவன்களுக்கான நேர்மையான விசாரணையை…….

சித்ரவதைகளற்ற கண்ணியமான பாதுகாப்பினை……

தொலைத்தவர்கள் போக இருப்பவர்கள் பட்டியலினை…….. வலியுறுத்தி வீதியில் இறங்கப் போகிறோமா?

இதுதான் களத்திலும்….. புலத்திலும்…. இருக்கும் நம் போன்றோர் முன்னிருக்கும் பிரதான கேள்வி.

நாளை நமது முழக்கம் :

ஒன்று விசாரணை செய்.

அல்லது விடுதலை செய் என்பதாக இருப்பது மிக நல்லது.

அதுதான் எஞ்சியிருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற நம் முன்னே உள்ள ஒரே வழி.

எனக்குத் தெரிந்து அவர்கள் செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்:

அது : தன்னைத் தொலைத்து இந்த மண்ணை மீட்க நினைத்ததுதான்.





பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 11:22 am

தமிழர்கள் நாமே நம் சகோதரர்களின் உயிர்காக்க தவறிவிட்டோம், இதில் மனித உரிமை அமைப்பைக் குறைகூறி என்ன உள்ளது! இலங்கையில் தமிழர்கள் மடியும்பொழுது தமிழகம் கொதித்தெழுந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது! இவர்களுக்குத்தான் சீரியல் பார்க்கவே நேரம் சரியாக உள்ளதே?



மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும் - பாமரன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 11:26 am

சிவா wrote:தமிழர்கள் நாமே நம் சகோதரர்களின் உயிர்காக்க தவறிவிட்டோம், இதில் மனித உரிமை அமைப்பைக் குறைகூறி என்ன உள்ளது! இலங்கையில் தமிழர்கள் மடியும்பொழுது தமிழகம் கொதித்தெழுந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது! இவர்களுக்குத்தான் சீரியல் பார்க்கவே நேரம் சரியாக உள்ளதே?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக