Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» முதிர்கண்ணன் ...
by கொலவெறி Today at 1:25 am

» அன்பே சிவம்!
by சிவா Today at 1:24 am

» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by கொலவெறி Today at 1:22 am

» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am

» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am

» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am

» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am

» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am

» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am

» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am

» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am

» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am

» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am

» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am

» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am

» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm

» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm

» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm

» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm

» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm

» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm

» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm

» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm

» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm

» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm

» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm

» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm

» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm

» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm

» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm

» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm

» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm

» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm

» ரகசியம் புத்தகம் பி‌டி‌எஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm

» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm

» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm

» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm

» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm

» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:




தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by சிவா on Mon Aug 30, 2010 2:58 pm

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும்.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலக முதன் மொழி" எனக் கூறுவர். இன்னும் சிலர் ' இலத்தின்', 'கிரிக்' மொழிகளுக்கு முந்திய மொழி எனக் கூறுவர்.

முற்காலத்திய சீன யாத்திரிகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபட் கால்வெல் முதலான வேற்று நாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்படுகிறது.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கெடாவை, சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆண்ட செய்திகளும், முதலாம் குலோத்துக்க மன்னன் பர்மாவை ( மியன்மார்) ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள்-வரலாறுகள் - கல்வெட்டுகள் ஆகியவற்றின் வழி அறியப்படுகின்ற உண்மைகளாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன.

2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.

2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலான தொல்காப்பியமும் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது.

தமிழ் மக்களின் தாயகமான குமரிநாட்டில் மூன்று கடற்கோள்கள்(சுனாமி) 3000ஆம், 5000ஆம், 9000ஆம், ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் கடல்நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பையும் மக்களயும், தமிழ் செல்வங்களையும் அழித்துவிட்டன.

தமிழியல் ஆய்வுக் கழகம்!



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 726584 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77755 | புதிய உறுப்பினர்: skylark

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 55135
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2418

http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by ராஜா on Mon Aug 30, 2010 3:11 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 12568
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 548

http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by maniajith007 on Mon Aug 30, 2010 3:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8997
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 283

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by புவனா on Mon Aug 30, 2010 3:16 pm

நன்றி நன்றி நன்றி

புவனா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 30, 2010 4:43 pm

தமிழை பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி தலை நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12536
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 342

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by விஜயகுமார் on Mon Nov 21, 2011 3:39 pm

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்"

நன்றி நன்றி

விஜயகுமார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 488
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 84

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by கேசவன் on Mon Nov 21, 2011 6:30 pm

ஆனால் இவ்வளவு பெருமை மிகு தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் பேசுபவர்களை நாகரீகம் தெரியாதவர்கள் என கூறுகிறார்கள் [You must be registered and logged in to see this image.]

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2031
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 259

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Nov 21, 2011 6:47 pm

மிகவும் நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2180
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 689

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 21, 2011 7:08 pm

அருமையான தகவல்கள் அண்ணா... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2285
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 415

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by பிச்ச on Mon Nov 21, 2011 7:35 pm

தமிழே உலகின் முதல் மொழி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by விஜயகுமார் on Wed Feb 01, 2012 1:13 pm

தமிழ் - வடமொழி வேறுபாடுகள்

1. பழைமையானது - பிறவற்றிலிருந்து மூலமானது பெறப்பட்டது

2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது

3. லெமூரியாவில் தோன்றியது - இந்தியாவில் தோன்றியது.

4. அறநூல்கள் யாவர்க்குமானவை - தூய நூல்கள் என்பவை ஒரு சிலருக்கு மட்டுமே

5. உலகளாவிய பரந்த நோக்கை வலியுறுத்தல் - பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு

6. உயர்நிலைக்கு யாவர்க்கும் ஏற்பளித்தல் - பார்ப்பனருக்கு மட்டுமே உயர்நிலை எனும் நம்பிக்கை

7. உயர்கல்வி எல்லோருக்கும் பொது - உயர்கல்வி பார்ப்பனருக்கு மட்டுமே

8. பரிசில்கள் ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும் - பார்ப்பனருக்கு மட்டுமே பரிசில் அளிக்க வேண்டுமென்று புரவலர்களைக் கட்டாயப்படுத்தல்

9. உண்மையேல் பற்று - ஏமாற்றுதல், பிறர் எழுதியவற்றைத்திருடித் தமதென்றல்

10. அன்பே எல்லையற்ற மகிழ்ச்சிக்கு அடிப்படை என வலியுறுத்தல் - அறிவே பிரம்மத்தோடு இணைய அடிப்படை எனக்கூறல்



11. ஒரே கடவுளை ஏற்றுக் கொள்ளும் சைவ, வைணவச் சமயங்கள் - சிறு தெய்வங்களுக்குப் பலியிடும் சடங்குகளைக் கொண்ட சமயம்



12. இதன் இலக்கிய வர்ணனை இயல்பானது - இதன் இலக்கிய வர்ணனை கற்பனையானது

தேவ நேயப் பாவாணர்

விஜயகுமார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 488
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 84

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 01, 2012 2:42 pm

அருமை...விஜயகுமார்....விரும்பினேன்...தேவ நேயப் பாவாணரின் கருத்தைப் பதித்ததார்க்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2180
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 689

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by சதாசிவம் on Wed Feb 01, 2012 2:55 pm

நல்ல கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி.

தேவநாயப் பாவனாரின் கூற்றை ஏற்க் இயலவில்லை. இது சமஸ்கிதம் பேசுபவர் செய்யும் வேலை. சமஸ்கிரத்தின் வேலை அல்ல. இன்றைக்கு தமிழ் பேசுபவரை வைத்து தமிழை எடைபோடுவது எப்படி தவறாகுமோ, அது போல் தான் இதுவும். காளிதாசரின் கற்பனையை படித்தால் இப்படி ஒரு சொல்லாடல் வந்து இருக்காது. இறைத் தெய்வங்களின் உள்ள துதிப் பாடல்கள் பல இயல்பானவையே. கண்கள் தாமரை, கைகள் மலர்ப் போல், முகம் சந்திரன் போல். இது போன்ற உவமைகள் தமிழிலும் உள்ளது.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by விஜயகுமார் on Wed Feb 01, 2012 3:43 pm

சதாசிவம் wrote:நல்ல கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி.

தேவநாயப் பாவனாரின் கூற்றை ஏற்க் இயலவில்லை. இது சமஸ்கிதம் பேசுபவர் செய்யும் வேலை. சமஸ்கிரத்தின் வேலை அல்ல. இன்றைக்கு தமிழ் பேசுபவரை வைத்து தமிழை எடைபோடுவது எப்படி தவறாகுமோ, அது போல் தான் இதுவும். காளிதாசரின் கற்பனையை படித்தால் இப்படி ஒரு சொல்லாடல் வந்து இருக்காது. இறைத் தெய்வங்களின் உள்ள துதிப் பாடல்கள் பல இயல்பானவையே. கண்கள் தாமரை, கைகள் மலர்ப் போல், முகம் சந்திரன் போல். இது போன்ற உவமைகள் தமிழிலும் உள்ளது.


மன்னிக்கவும் புரியவில்லை சற்று விளக்கவும்.

விஜயகுமார்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 488
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 84

Back to top Go down

Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by சதாசிவம் on Wed Feb 01, 2012 4:24 pm

தமிழ் - வடமொழி வேறுபாடுகள்

1. பழைமையானது - பிறவற்றிலிருந்து மூலமானது பெறப்பட்டது

அனைத்து மொழிகளுமே பிறவற்றிலிருந்து இருந்து பெறப்படுகிறது வடமொழி தமிழ் இவை இதற்கு விதிவிலக்கல்ல . இரண்டும் பழமையானது. தமிழ் சமஸ்கிரித்தை விட பழமையானது, இதனால் சமஸ்க்ரிதம் புதிய மொழியில்லை. சிலப்பதிகாரத்தில் 11% சமஸ்க்ரித வார்த்தைகள் இருப்பதாக கூறுகின்றனர்.

2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது

இந்தியாவில் இன்னும் முழு சமஸ்திரத்தில் பேசும் கிராமம் கர்நாடகாவில் உள்ளது. எண்ணிக்கை குறைவு, ஆனால் இது இன்னும் அழிந்து விட வில்லை

3. லெமூரியாவில் தோன்றியது - இந்தியாவில் தோன்றியது.
இதில் என்ன வித்தியாசம், லெமூரியா இன்றைக்கு இல்லை, தமிழ் வாழ்ந்து கொண்டு இருப்பது இந்தியாவில் தான். சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்தது போல் அல்லாமல் லெமூரியா குறித்த தொல்பொருள் ஆய்வு உண்மைகள் வெகு குறைவு.

4. அறநூல்கள் யாவர்க்குமானவை - தூய நூல்கள் என்பவை ஒரு சிலருக்கு மட்டுமே

இப்படி இல்லை, உபநிசதங்களும், புராணங்களும் அனைவருக்கும் பொதுவானது. அரிச்சந்த்ரா புராணம், மகாபாரதம், ராமாயணம் இதற்குச் சான்று. அர்த்த சாஸ்திரம், விதுர நீதியும் இப்படித்தான்.

தமிழில் சமணர்களுக்கு என்று சில இலக்கியங்கள் இருந்தது. அது அழிக்கப்பட்டு விட்டது என்று வரலாறு கூறுகிறது. நாம் ஐம்பெரும் காப்பியம் என்று இன்று கொண்டாடுவது சமணத்தை தழுவி எழுதியவை. தமிழிலும் சிலருக்கு என்று சில நூல்கள் இருக்கிறது.

5. உலகளாவிய பரந்த நோக்கை வலியுறுத்தல் - பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு

வர்ண தர்மம் குறித்து தொல்காப்பியமும் பேசுகிறது. பாட்டுப் பாடும் பாணர் இனத்தவர் அரசை ஆண்ட வரலாறு இங்கு இல்லை. அரச பரம்பரையில் பிறந்தவர் தான் அரசை ஆண்டனர்.

6. உயர்நிலைக்கு யாவர்க்கும் ஏற்பளித்தல் - பார்ப்பனருக்கு மட்டுமே உயர்நிலை எனும் நம்பிக்கை

இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும்.

7. உயர்கல்வி எல்லோருக்கும் பொது - உயர்கல்வி பார்ப்பனருக்கு மட்டுமே

இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும். தாசியின் மகன்களும் படித்து வளர்ந்த கதை வட மொழியில் உண்டு

8. பரிசில்கள் ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும் - பார்ப்பனருக்கு மட்டுமே பரிசில் அளிக்க வேண்டுமென்று புரவலர்களைக் கட்டாயப்படுத்தல்

இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும்.

9. உண்மையேல் பற்று - ஏமாற்றுதல், பிறர் எழுதியவற்றைத்திருடித் தமதென்றல்

இதற்கு என்ன ஆதாரம், கம்பனும் வால்மீகியிடம் கடன் வாங்கி இருக்கிறான்.

10. அன்பே எல்லையற்ற மகிழ்ச்சிக்கு அடிப்படை என வலியுறுத்தல் - அறிவே பிரம்மத்தோடு இணைய அடிப்படை எனக்கூறல்

இது மதக் கருத்து, மொழியின் கருத்து இல்லை. தமிழிலும் பிற மத இலக்கியங்கள் உள்ளது. அவை அந்த மதத்தின் கருத்துகளை கூறுகிறது.


11. ஒரே கடவுளை ஏற்றுக் கொள்ளும் சைவ, வைணவச் சமயங்கள் - சிறு தெய்வங்களுக்குப் பலியிடும் சடங்குகளைக் கொண்ட சமயம்

தமிழிலும் இப்படி சிறு தெய்வங்களுக்கு பலியுடும் வழக்கம் உள்ளது. ஐந்திணை தெய்வங்கள் இதற்கு சான்று

12. இதன் இலக்கிய வர்ணனை இயல்பானது - இதன் இலக்கிய வர்ணனை கற்பனையானது

தமிழில் இல் பொருள் வைப்பு அணி, உயர்வு நவீர்ச்சி அணி உள்ளது. இவை இரண்டும் முழுக் கற்பனை.


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1000
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 546

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum