|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by யினியவன் Today at 1:55 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 1:50 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ஜாஹீதாபானு Today at 1:48 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”
Page 1 of 1 • Share •
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”

இறைமறை இறங்கிய அருள்மிகு மாதம் இனிதே நிறைவடைந்து விட்டது. புனித ‘லைலத்துல் கத்ர்” இரவை தன்னுள் மறைத்து வைத்திருந்த மாதம் மறைந்து விட்டது. சைத்தான்கள் விலங்கிடப்பட்ட மாதம் அகன்றுவிட்டது. துஆக்கள் அங்கீகரிக்கப்பட்ட மாதம் கடந்து விட்டது. ஆம் புண்ணியம் பொழிந்த புனித மாதம் எம்மை விட்டு சென்று விட்டது. ஏக இறைவனின் அருளும், கருணையும் அதிகமதிகமாக சொரியும் அருள்மிகு மாதம் எமக்கு பல படிப்பினைகளையும் பயிற்சிகளையும் தந்து சென்றுள்ளது. இறையச்சத்தை ஏற்படுத்தவும் இறை திருப்தியை பெற்றுத் தரவும் ரமழான் எமக்கு வாய்ப்பளித்தது. அந்த அருள்மிகு ரமழான் எம்மை விட்டு பிரிந்துள்ளது. ஆம் ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ~வ்வால் மதியின் வளர் பிறையை வானமதில் கண்டு முஸ்லிம்கள் ‘ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் இனிதே கொண்டாடுகின்றனர்.
உலக முஸ்லிம்கள் உவந்து கொண்டாடும் உயர் நாட்களில் சிறப்பாகக் கொண்டாடும் பெருநாள் ஈகைத் திருநாளாகும். முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெருநாளும் ஆகிய ‘ஈதுல் பித்ர்” பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.
இறை மறை கூறியபடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் நோன்பு நோற்று அதன்படி ஒழுகியவர்களுக்கு இது அர்த்தள்ள பெருநாள் என்பதில் ஐயமில்லை. இந்த பெருநாள் தினத்தில் மகிழ்வுடன் இருக்கும் தினத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எமக்குள் உள்வாங்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒழுக வேண்டிய அம்சங்கள் பல உள்ளன.
ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். ஒரு மனிதன் இறை விருப்பத்தையும், இறைவனது நெருக்கத்தையும் அடையக் கிடைத்தால் அதுவே அவன் அடைந்த மிகப் பெய வெற்றியாக இருக்கும். அதுவே பெரிய பெருநாளாகும்.
இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதற்காகும். அதற்காக வேண்டி அவன் தனது பணம், பொருள், குடும்பம் மற்றும் உலக விடயங்களை தியாகம் செய்வதன் மூலம் அவனால் உண்மையான பெருநாளை கண்டு கொள்ள முடியும். இதுவே நிரந்தரப் பெருநாளாகும்.
நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ்வேளை, நாம் ரமழான் தந்த போதனைகளை மறந்து விடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு அந்த வாழ்க்கை முறைக்கான முக்கிய சில பயிற்சிகளை எமக்கு அளிக்கிறது.
நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல், இனிவரும் நாட்களிலும் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.இதன் மூலம் பூரண ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.
தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை கவ்விக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்புப் காலங்களில் ஐவேளை தொழுகையோடு சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வர வேண்டும். ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வர வேண்டும்.
ஸகாத், சதக்கா, ஸக்காத்துல் பித்ரா போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸக்காத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் கொடுக்க வேண்டும். பெருநாள் தினத்தில் புத்தாடைகள் அணிவது போல், ‘தக்வா” என்ற இறையச்சம் எனும் ஆடையை தொடர்ந்து அணிந்திருப்பவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
பள்ளிவாசல்களிலேயே தோளோடு தோள் முட்ட வாஞ்சையோடு எப்படி தொழுதோமோ, அதேபோல் பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, எல்லோரையும் நமது சகோதரர்களாக கருதவேண்டும். போட்டி, பொறாமை, கோபதாபங்களை விட்டொழித்து ஒருவருக்கொருவர் ‘ஸலாம் கூறி பழையனவற்றை மறந்து விட வேண்டும். இவ்விடயத்தை பெருநாள் தினத்தில் அதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் சாந்தியையும், சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
இன்று எம்மத்தியிலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம்களிடையே பல்வேறு பிரிவுகளும், பிரிவினைகளும் உள்ளன. அதன் காரணமாக முஸ்லிம்களிடையே சாந்தியும் சமாதானம் ஒற்றுமையும் இல்லாமற் போயுள்ளது. இவ் விடயம் தொடர்பில் நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிம் அல்குர்ஆன் கூறுகின்ற வழியிலும், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் வாழ்ந்தால் முஸ்லிம்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியே கிடைக்கும். இந்த பெருநாளை அடைவதற்காக கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். அதுவரையில் நாம் ஓயக்கூடாது.
தக்பீர் ஓசை இறைபள்ளிவாசலில் முழங்க, புத்தாடை அணிந்து, நறுமணம் பூசி, அறுசுவை உணவு சமைத்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பெருநாள் வாழ்த்துக் கூறி பெருங்களிப்புடன் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நோன்பு கற்றுத் தந்த படிப்பினையை மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக…. ஈத் முபாறக்..
நன்றி சுகைப்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”
karthikharis wrote:![]()
நன்றி படித்து பதில் இட்டமைக்கு

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”
உமா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி உமா

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”
Hasan1 wrote:மிக மிக அருமையான பதிவு![]()
![]()
![]()
நன்றி ஜீ நீங்களும் தாருங்கள் நண்மைகளைச் சேருங்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









