புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
45 Posts - 58%
heezulia
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
87 Posts - 60%
heezulia
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_m10தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 13, 2010 8:59 am

தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருவரும், கோவையில் ஒருவரும் உள்பட இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி நடவடிக்கை களை அரசு விரைவுபடுத்தியுள்ளது. மேலும் ஆய்வகங்களுக்கும் அது ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் வரை 7 பேர், பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்து போனார்கள். அதன்பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மோகனவேலு, பன்றிக்காய்ச்சல் நோயினால் உயிரிழந்தார்.

பின்னர், நெல்லையை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், பன்றிக்காய்ச்சல் பற்றிய பயம் மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்கூட்டியே கண்டறிந்து, ஒரே ஒரு ஊசி போட்டுக் கொண்டால் எளிதில், சரியாகிவிடக் கூடியது இது.

எனவே, இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில்,

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பன்றிக்காய்ச்சலுக்கு அரசு தரப்பில் தடுப்பூசி போடுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை திங்கட்கிழமை முதல் போடப்படும்.

இந்த தடுப்பூசியை யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருப்போர், சர்க்கரை வியாதியால் அவதிப்படுவோர் போன்ற நோய்த்தடுப்பு சக்தி குறைந்தவர்கள், போட்டுக் கொள்வது உகந்தது. சென்னைக்குப் பிறகு மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாகவே, சிறிய வயதினருக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். தனியார் மருத்துவமனை களில், அரசு அங்கீகரித்துள்ள 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் நல்ல மருத்துவ வசதிகள் இருப்பதால், வெளி மாநிலத்தில் இருந்தெல்லாம் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதனால் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 50 ஆயிரம் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுபோல், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட அந்த நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளோம். பன்றிக்காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஸ்டேன்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களையும், மற்ற மாவட்டங்களில் அரசு தலைமை மருத்துவமனைகளையும் பொதுமக்கள் அணுகினால் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தடுப்பூசிக்கு ரூ. 200:

தடுப்பூசி குறித்து கிங் நிறுவன இணை இயக்குநர் குணசேகரன் கூறுகையில்,

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு தடுப்பூசியும் (வாக்சிபுளூ-எஸ்), மற்றவர்களுக்கு மூக்குவழியாக சொட்டு மருந்தும் (நேசோவேக்) போடப்படும்.

தடுப்பூசிக்கு ரூ.200-ம், சொட்டு மருந்துக்கு ரூ.150-ம் வசூலிக்கப்படும். தடுப்பூசி போட ஏராளமானோர் வருவார்கள் என்று கருதுவதால், முன்கூட்டியே பதிவு செய்யும் இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பேசி வருகிறோம். இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.

15 ஆய்வகங்களில் சோதனை செய்ய ஏற்பாடு:

இதேபோல, தமிழ்நாட்டில் 7 அரசு ஆய்வகங்கள் உள்பட மொத்தம் 15 இடங்களில் பன்றிக்காய்ச்சல் உள்ளதா என்பது பற்றிய பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் மழை பெய்துவருகிறது. அதன்காரணமாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பன்றிக்காய்ச்சல், டெங்குகாய்ச்சல் போன்ற நோய்களும் சில இடங்களில் பரவி வருகின்றன.

காய்ச்சல், தலைவலி,தொண்டைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது பன்றிக்காய்ச்சலின் அறிகுறியாகும். எனவே அத்தகைய அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடனடியாக சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். பன்றி காய்ச்சல் உள்ளதா என்று அறிய அரசு ஆய்வகங்கள் 7 இடங்களில் உள்ளன. அதன் விவரம்:

1.கிங் ஆய்வு நிலையம், கிண்டி, சென்னை
2.வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி
3.சென்னை மருத்துவக்கல்லூரி
4.கோவை மருத்துவக்கல்லூரி
5.திருச்சி மருத்துவக்கல்லூரி
6.நெல்லை மருத்துவக்கல்லூரி
7. மதுரை மருத்துவக்கல்லூரி.

தனியார் ஆய்வு நிலையங்கள்:

1.போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி. 2.லிஸ்டர் மெட்ரோ பாலிஸ், சென்னை, 3. பாரத் ஸ்கேன்ஸ் சென்டர் சென்னை, 4.ஐடெக் டயகோனஸ்டிக் சென்டர், திருச்சி, 5.டாக்டர் ரத் லேப் திருச்சி, 6.மைக்ரோ பயாலாஜிக்கல் லேப், கோவை. 7.இம்முனோ ஆக்ஸிலரி லேப், கோவை. 8.விவேக் லேப், நாகர்கோவில்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த நோய் தாக்கம் கண்டநோயாளிகளிடம் இருந்து பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. வாக்சிபுளு மற்றும் நாசோவாக் என்ற தடுப்பு மருந்துகளும் பொது சந்தையில் விற்பனைக்காக உள்ளன.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பொதுமக்களின் நலன்கருதி கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் குறைந்தவிலையில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுத்தமான நீரால் சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தும்மும்போதும் இருமும்போதும் கை மற்றும் துணிகளை வைத்து மூடும் சுகாதார பழக்கத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Sep 13, 2010 9:29 am

மறுபடியும் எத்தனை உயிர்களை பலி கொள்ள போகின்றதோ . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 9:30 am

சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 9:48 am

பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக