புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
5 Posts - 1%
prajai
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அழிந்துவரும் புலிகள் Poll_c10அழிந்துவரும் புலிகள் Poll_m10அழிந்துவரும் புலிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிந்துவரும் புலிகள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 4:03 pm

அடர்பழுப்பு நிறப் புலியை, சித்திரத்தில் பார்த்தாலே நமக்குச் சற்று பயமாகத்தான் இருக்கும் அல்லவா! இந்தப் பயம் உள்ளதால்தான் சிலர் கோடுகள் உள்ள பூனைகளைக்கூட புலிகள் என்று எண்ணி விடுகிறார்கள். பரவாயில்லை. பூனையும் புலி இனத்தைச் சேர்ந்ததுதானே.

÷புலி நமது தேசிய விலங்கு எனும் பெருமையுடையது. ஆயினும், புலிகளின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாக நம்முன் உள்ளது. இந்தியாவில் புலிகள் விரைவாக அழிந்துகொண்டிருக்கின்றன.

÷புலியும், பூனையும் உட்பட்ட குடும்பத்திற்கு "பெலிடெ' (FE​L​I​D​AE)​ என்று பெயர். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய மிருகம்தான் புலி. இதன் அறிவியல் பெயர் "பாந்தெரா(லியோ)டைக்ரிஸ்' ​(PA​N​T​H​E​RA​(LEO)​TI​GR​IS) என்பதாகும். உடல் அழகில் முதலிடம் வகிப்பதும் புலிதான். முதிர்ந்த ஒரு புலியின் நீளம்,சராசரியாக, வால் உட்பட மூன்று மீட்டர் நீளம் இருக்கும். எடை 160 கிலோ முதல் 230 கிலோ வரை இருக்கும்.

÷புலியின் உடலில் ஏன் கோடுகள் இருக்கின்றன என்று தெரியுமா? இரையின் பார்வையில் படாமல் பதுங்கியிருப்பதற்கான தந்திரம்தான் இது. சிறுத்தைப் புலியின் உடலில் புள்ளிகள் இருப்பதும் இதே காரணத்திற்காகத்தான். இரையாகும் பிராணிகள், தங்களைத் தாக்கும் விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பல தந்திரங்களையும் கையாள்வதுபோல, வேட்டையாடும் விலங்குகளும் பல உபாயங்களைக் கொண்டிருக்கின்றன. அதிலொன்றுதான் "கேமபிளாஜ்' (CA​M​O​U​F​L​A​GE) என்பது. இந்த வார்த்தைக்கு, எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னை மறைத்துக் கொண்டும் தற்காப்பு ஏற்பாடு என்று பொருள். சிறுத்தைகளின் உடலில் உள்ள புள்ளிகளும், புலிகளின் உடலில் உள்ள கோடுகளும், அவற்றின் உடல் வடிவத்தை மறைப்பதற்கு உதவுகின்றன.

÷காட்டு மரங்களின் உச்சியிலிருந்து ஊடுருவி வருகிற வெளிச்சத்திலோ, காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்ற புற்களுக்கிடையிலோ இருக்கும் புலியையோ, சிறுத்தையையோ பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அவ்வளவு இயற்கையாக அவை சுற்றுச் சூழலுடன் கலந்திருக்கும். அவற்றின் இருப்பிடங்களில் வைத்து புலியையோ, சிறுத்தையையோ பார்க்க முயற்சிப்பவர்களுக்குத்தான், அவற்றை இனம் காண்பதில் உள்ள சிரமம் தெரியும்.

÷ஒரு புலியின் சராசரி வாழ்நாள் 11 வருடம். பெண் புலியின் பேறுகாலம் 105 முதல் 113 நாட்கள் வரையாகும். ஒரு பிரசவத்தில் மூன்று நான்கு குட்டிகள் பிறக்கும்.

÷புலி தோன்றிய இடம் சைபீரியா என்று கருதப்படுகிறது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சூரியா,கொரியா, சீனா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, ஜாவா, சுமத்ரா, பாலித்தீவு ஆகிய இடங்களில் பரவியது. ஆனால் இலங்கையை அடையவில்லை.

÷புலி, இந்தியாவை அடைந்த பிறகு மெதுமெதுவாக அசாம், வங்காளம், இமயத்தின் கீழ்ப்பகுதி மலைகள், மத்திய இந்தியா, தென்னிந்தியா ஆகிய இடங்களுக்குப் பரவியது. இந்தியாவிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த வெள்ளைக்கார வேட்டைக்காரர்கள், முதன்முதலாகப் புலியுடன் மோதியது வங்காளத்தில்தான். அதனால்தான், ஆங்கிலேயர்கள் இந்தியப் புலிகளுக்கு "பெங்கால் புலி' (ஆஉசஎஅக பஐஎஉத) என்று பெயர் சூட்டினார்கள். இன்றைய நிலையில், கிழக்கு ஆசியாவில் மட்டும்தான் புலிகள் அதிகமாக இருக்கின்றன.

÷மினுமினுப்பான உடல், உறுதியான மெத்தைபோன்ற பாதம், நீண்ட வெண்ணிற மீசை, சொரசொரப்பான நாக்கு இவையெல்லாம் புலிக்கும், பூனைக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும், பார்வைத் திறனும், கேட்கும் திறனும் இரண்டுக்கும் ஒன்றுதான். இரண்டுமே மிகத் திறமையாக பதுங்கி நடக்கும் பழக்கமுள்ளவை. பூனையைப் போலவே புலியும் தனிமையை விரும்பும்.

÷மரம் ஏறுவது பூனைக்குப் பிடிக்கும். தேவை ஏற்பட்டால் புலியும் மரம் ஏறும். தேவையில்லாமல் மனிதர்களையோ, மிருகங்களையோ தாக்கும் இயல்பு புலிக்குக் கிடையாது. புலி, சத்தத்தையும், அதிக வெளிச்சத்தையும் விரும்புவதில்லை. இதனால்தான், சில வேட்டைக்காரர்கள் புலியை, நரியைவிடப் பயந்த மிருகம் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.

÷சிறுவர்கள்கூட கூட்டமாகக் கூச்சலிட்டு புலியை அச்சுறுத்தி விரட்டிவிடலாம். மற்ற மிருகங்களும் இதைத்தான் செய்கின்றன. புலியைக் கண்டால் இவை தொடர்ந்து அலறும். அதைக் கேட்டு புலி ஓடிச் செல்கிறது. பெரும்பாலும், புலி பயந்த குரங்குகளின் சப்தத்திற்கும், புள்ளிமான்களின் நீண்ட அலறலுக்கும், காட்டு நாய்களின் குரைப்பொலிக்கும், காட்டுக்கோழி மற்றும் மயிலின் கூவலுக்கும் அஞ்சுகிறது. நெருப்பைக் கண்டும் புலி பயப்படும். மற்ற விலங்குகள் மனிதனைக் கண்டு பயப்படுவதுபோலவே, புலியும் மனிதனுக்குப் பயப்படும். காரிலோ, யானை மீதோ, ஒட்டகத்தின் மீதோ பயணிக்கிற மனிதனைக் கண்டால் புலி அஞ்சி ஓடும்.

÷புலி வெள்ளக் காலத்தில் உணவு கிடைக்காத போது தவளை, மீன் ஆகியவற்றைத் தின்னும். பசியெடுத்த புலிக்கு, காட்டில் கிடைக்கிற எந்த மிருகமும் உணவுதான். ஒரு புலி மிகக் கடுமையான பசியின்போது, மற்றொரு புலியைத் தின்னவும் முற்படும். தன் குட்டிகளைத் தின்கிற பழக்கம் உள்ளதால், ஆண் புலியின் அருகிலிருந்து குட்டிகளை, பெண் புலி அப்புறப்படுத்துவதுண்டு.

÷சமய சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் மற்ற மிருகங்கள் புலியின் உணவைத் தட்டிப் பறிப்பதுண்டு. புலியின் இரையை மற்ற மிருகங்கள் தொடாது என்ற கருத்து தவறு. தான் கொன்ற இரையை மட்டுமே புலி தின்னும் என்ற கருத்தும் தவறானதுதான். எந்த மாமிசமும், சில சமயம் அழுகிய மாமிசம்கூட புலிக்கு விருப்பமான உணவுதான்.

÷புலி, மிக மெதுவாக, கவனமாக, ரகசியமாக நடக்கும். கால் விரல்களைத் தரையில் ஊன்றி ஒரு மீட்டர் அகலத்தில் அடி வைக்கிறது. பிறகு, பதுங்கி இரையின் மேல் தாவி விழுவதுதான் வழக்கம். மானையோ மற்ற பிராணிகளையோ அதிக தூரம் துரத்திச் செல்வதற்கான சக்தி புலிக்கு இல்லை. புலியும், சிறுத்தையும் பெரும்பாலும் மறைந்திருந்துதான் தாக்கும். எனவே, இரை பக்கத்தில் வரும்வரை அதன் கண்ணில் படாமல் மறைந்திருக்க வேண்டிய அவசியம் புலிக்கு இருக்கிறது. இந்த அவசியத்திற்காகத்தான் புலியின் உடலில் கோடுகள் இருக்கின்றன. இரையாகிற பிராணிகள் மிகப் பக்கத்தில் வரும்போது மட்டுமே புலி பாய்ந்து பிடிக்கிறது. பிறகு, சிக்கிக்கொண்ட பிராணியை கழுத்திலோ, முதுகிலோ அடித்துக் கொல்கிறது.

÷ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் புலி, தான் உணவு உண்ணும் இடத்தை மாற்றிக்கொள்ளும். இரையின் தொடைப் பகுதியில் தொடங்கி, ரோமத்தையும், தோலையும், மாமிசத்தையும், எலும்புகளையுமெல்லாம் புலி ஒன்றுவிடாமல் தின்றுவிடும். இதுபோன்று உணவு உண்ணும் பழக்கம் உள்ள மிருகங்கள் மிகவும் குறைவுதான். குடல் பகுதி புலிக்குப் பிடிக்காது. எனவே, அதை மட்டும் விலக்கிவிடும். ஒரே மூச்சில், 25-லிருந்து 30 கிலோ மாமிசம் வரை அது தின்றுவிடும். தின்றதுபோக மிச்சமிருந்தால் அதை பத்திரமாக ஒரு இடத்தில் ஒளித்துவைக்கும்.

÷புலி இனம் எப்படி அழிந்து வருகிறது? காடுகளை அழிப்பதுதான் முதல் காரணம். பரந்த அளவில் புலிகளை வேட்டையாடுவதும் மற்றொரு முக்கியமான காரணம். புலியைக் கொன்ற ஒருவன், சமூகத்தில் பெரிய வீரனாக மதிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இதற்காக வேட்டைக்காரர்கள் கடுமையாக முயற்சி செய்தார்கள். தொற்று நோய்களும், புலிகள் அழிவதற்கு முக்கியக் காரணமாக இருந்தன.

÷இந்தியாவிற்கு வெளியே ஜாவா, சுமத்ரா, சைபீரியா ஆகிய இடங்களில் உள்ள புலிகளும், பிற புலி இனங்களும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே புலிகள் இருக்கின்றன.

÷புலிகள் பற்றி பல மூடநம்பிக்கைகள் இருந்தன. புலியின் தோலும், மீசையும், பல்லும், நகமும், மாமிசமும், கொழுப்பும் மனிதனுக்குப் பயன்படும் என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். புலியின் மாமிசத்தைத் தின்றால், புலியைப்போல பலமும், தைரியமும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது.

÷புலியின் உடலிலிருந்து எடுக்கிற கொழுப்பு, வாதத்திற்கு நல்ல மருந்து என்று மக்கள் நம்பினார்கள். அதனால் பலர், சுலபமாகக் கிடைக்காத இந்த மருந்தை மிக அதிகமான விலைக்கு விற்று செல்வந்தர்களானார்கள். புலி நகத்தை அணிந்துகொள்ளும் மூட நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகிறது. இதுமட்டுமல்ல, புலியின் தோள் பகுதி எலும்பு அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.

÷எவ்வளவு நாள்பட்ட கண் நோயாக இருந்தாலும், ஒரு துளி புலிப் பாலை கண்ணில் விட்டால் சரியாகிவிடும் என்றும் மக்களிடையே தவறான நம்பிக்கை இருந்தது. புலித்தோலை விரிப்பாகப் பயன்படுத்துவது என்பது செல்வச் சிறப்பைக் குறிப்பதாகவும், வெற்றியைக் குறிப்பதாகவும் இருந்தது.

÷இப்படியெல்லாம் மூட நம்பிக்கைகள் இருந்தபோதும், புலிகள் முற்றிலும் அழியாமல் தப்பித்தது அதிசயம்தான்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 4:10 pm

யாருப்பா புலிகளை தொந்தரவு பண்றது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 4:10 pm

அழிந்துவரும் புலிகள் 250px-Panthera_tigris_tigris
வங்கப்புலி!

புலிகளைப் பற்றிய தகவல் அருமை!



அழிந்துவரும் புலிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 4:11 pm

jeylakesengg wrote:யாருப்பா புலிகளை தொந்தரவு பண்றது



பக்கிரியும் , மீனாஉம் ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 4:28 pm

karthikharis wrote:
jeylakesengg wrote:யாருப்பா புலிகளை தொந்தரவு பண்றது



பக்கிரியும் , மீனாஉம் ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




அழிந்துவரும் புலிகள் Power-Star-Srinivasan
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 4:35 pm

karthikharis wrote:
jeylakesengg wrote:யாருப்பா புலிகளை தொந்தரவு பண்றது



பக்கிரியும் , மீனாஉம் ஜாலி ஜாலி ஜாலி

இது விடாது கருப்பு போல இல்ல இருக்குது அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக