புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
21 Posts - 64%
heezulia
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
148 Posts - 55%
heezulia
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
9 Posts - 3%
prajai
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_m10ராம பக்தராகிறார் கலைஞர்...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராம பக்தராகிறார் கலைஞர்...!


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Sep 28, 2010 11:45 am

ராம பக்தராகிறார் கலைஞர்...! Cart4
மிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களை பற்றி குறை சொல்வோர் எப்போதுமே உண்டு, அவர் நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றமென்று ஏராளமான குற்றசாட்டுகளை சுமத்துவது சிலருக்கு வாடிக்கை பலருக்கு ஒருவித சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரும், அவரை சார்ந்தவர்களும் எதாவது குற்றங்களை செய்து கொண்டே இருப்பதை பெரிய மக்கள் தொண்டாக கருதியும் வருகிறார்கள்.


திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி அவர்கள் (தி.மு.க என்பதன் நிஜ விவாக்கம் இதுதான். பலர் தவறுதலாக வேறு எதைஎதையோ சொல்லி வருவதற்கு கலைஞர் பொறுப்பல்ல) கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நாத்திகர், இந்து மதத்திற்கு விரோதமானவர் என்றெல்லாம் பொய் குற்றசாட்டுகள் அவர் மீது வெகு காலமாக சுமத்தப்பட்டு வருகிறது கலைஞர் அவர்களை முழுமையாக அறிந்தவர்கள் இந்த குற்றாசாட்டுகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறார்கள். அவர் இந்துக்களை திருடர்கள் என்று சொன்னார் என்று பலர் கொதித்து போயிருக்கிறார்கள். அவர் இப்படி சொன்னதை பற்றி யாரும் கோபப்பட வேண்டிய அவசியமே கிடையாது. கருணாநிதி அவர்கள் எதை பேசினாலும் யோசித்து தான் பேசுவார். உண்மையைத் தான் பேசுவார். எந்த காலகட்டத்திலும் அவர் பொய் சொன்னதாக சரித்திரமே இல்லை.

நமது பாசமிகு முதல்வர் திருக்குவளையிலிருந்து தர்மமிகு சென்னைக்கு வந்தபோது எப்படி வந்தார். கையில் ஒரு தகரப் பெட்டியும் அதில் ஒன்று இரண்டு வேட்டி சட்டைகளும் தான். அவரின் அப்போதைய ஆஸ்தி இன்று அவரின் குடும்பத்தின் பொருளாதார நிலையென்ன? கோடிஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்து தமிழகத்தின் பெருமையை பார் போற்ற செய்ய வைக்க முடியவில்லையே ? என்ற ஒரே ஒரு கவலைதான் அவரை தூக்கம் இல்லாமல் தீண்டாட செய்கிறது இந்த அளவிற்கு அவர் செல்வ வளத்தை உயர்த்தியது எது? தோட்டம் போட்டரா? இரவுபகல் பாராமல் பயிருக்கு தண்ணீர் விட்டாரா? அல்லது அவர் எழுதிய சினிமா வசனங்களுக்குத் தான் இவ்வளவு பொருள் வந்து குவிந்ததா? நிச்சயமாக இல்லை. அரசாங்க கஜானாவில் மக்களின் பணம் கேட்ப்பார் அற்று சிலந்தி வலப்பின்ன குவிந்து கிடக்கிறது. அதை அப்படியே விட்டு வைத்தால் விட்டில் பூச்சிகள் எல்லாம் பணத்தை நாசம் செய்து விடாதா? மக்கள் பணம் வீணாக போவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பவனா மக்கள் தலைவன்?




ராம பக்தராகிறார் கலைஞர்...! Kalanger

அதனால் கஜானா பணத்தை எடுத்தார். தனது தொழில் துறையை விரிவாக்கினார். தனது சொந்த பந்தங்களை கொலுவேற்றி பார்த்து ரசிக்கிறார். மக்கள் பணத்தை எடுப்பவனுக்கு சட்டமும் தர்மமும் திருடன் என்ற பட்டத்தை தருவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் திருடுகின்றவனை விட ஒருவனை திருட தூண்டுபவன் தான் பெரிய திருடன். கலைஞர் அவர்களை மக்கள் பணத்தில் கை வைக்கும்அளவிற்கு தூண்டி விட்டது யார்? தமிழக மக்கள் தானே, நமது மக்கள் தொகையில் பெரும் பங்கு இந்துக்கள் தானே இருக்கிறார்கள். திருட தூண்டியவன் தான் திருடன் என்றால் அவர் அப்படி செய்ய காரணமான இந்துக்களை திருடர்கள் என்பது எந்த வகையில் தவறாகும். உண்மைக்கு புறம்பானது அவர் வார்த்தை என்று எப்படி சொல்ல முடியும்?

அடுத்ததாக அவர் ஸ்ரீ ராமனை குடிகாரன் என்று சொன்னதற்கு எல்லோரும் வருத்தப்பட்டார்கள். ஜெயலலிதாவும் ராமகோபாலனும் காரசாரமான கண்டன அறிக்கைகளை விட்டு கலைஞரின் பொன்னான மனதை புண்படுத்தினார்கள். கலைஞர் அவர்கள் ராமனை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவா அப்படி சொன்னார். இல்லவே இல்லை. ஆகாதவன் மனைவி கைப்பட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்று பேசுவதுதானே. சாதாரண மனிதனின் சகஜமான நிலை.


கலைஞர் அவர்கள் சதா சர்வகாலமும் தமிழக மக்கள் நலமுடன் இருக்க வேண்டும். வளமோடு வாழவேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு மணி நேரத்தையும் கடத்துபவர். தமிழகம் எங்கும் குத்துவெட்டு, ஆள்கடத்தலும் கந்து வட்டியும், கட்டபஞ்சாயத்தும் போட்டி போட்டு கொண்டு வளர்வதை பார்த்து நெஞ்சம் வெதும்பி போய் இவர்கள் செய்கின்ற பாவம் எல்லாம் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் பெயரை உரக்க வாய்விட்டு சொன்னால் தான் தீரும் என்ற முழு நம்பிக்கையில் பக்தி சிரத்தையில் எப்படியாவது ராமன் பெயரை விவாதம் செய்வதற்காவது பட்டி தொட்டி எங்குமுள்ள மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று ஆசையில் தான் அத்தகைய சர்ச்சையை கிளப்பிவிட்டார்.




ராம பக்தராகிறார் கலைஞர்...! Karunanidhi_satya_sai_baba_20070205

கலைஞர் ராமனை குடிகாரன் என்று கூறியதற்கு வேறொரு காரணமும் உண்டு, அரசகுமரானாக பிறந்தாலும், ஆண்டியாக காட்டுக்கு போ என்றவுடன் போய் விட்டானே அந்த ராமன், சுயபுத்தியிருக்கும் எந்த அரசியல்வாதியாவது பதவி வேண்டாம் என்ற பாதக செயலை மனம் துணிந்து செய்வனா? ஒரே நொடியில் செய்து விட்டான் அய்யா ராமன் சராசரி மனிதனாக இருந்தால் அப்படி செய்யமாட்டான். அதனால் சந்தேகமே இல்லாமல் ராமன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும். இது மட்டுமல்ல அவன் சுயபுத்தியில்லாத குடிகாரன் என்பதை வேறு சில சான்றுகளும் இருக்கிறது.

கட்டிய மனைவியை யாரோ தூக்கி போய்விட்டான் என்பதற்க அழுகிறான், ஆத்திரப்படுகிறான், படைகளை வேறு திரட்டி எதிரியின் மீது போர் பிரகடனம் வேறு செய்கிறான். ஒரு தன்மானமுள்ள அரசியல்வாதி செய்யும் செயலா இது? கட்டிய மனைவி வீட்டில் இல்லை என்றாலே வேறொருத்தியை கூட்டி வந்து குடும்பம் நடத்துவதல்லவா? ஒரு நல்ல தலைவனின் அழகு கடத்தப்பட்டவள் வந்து சேர்ந்தால் சேர்கிறாள் இல்லையென்றால் துணைவி, இணைவி என்று வாழ்க்கை நடத்துவதை விட்டுவிட்டு சண்டையாம், சமர்க்களமாம், சுத்த அயோக்கியன் இந்த ராமன், ஒருத்தயோடு மட்டும் தான் குடித்தனம் நடத்த வேண்டுமென்று குடிகாரனை தவிர எவன் நினைப்பான்? இப்படியெல்லாம் ஆழ்ந்து அகன்று ஆய்வு செய்துதான் ராமன் குடிகாரன் என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்தார்.

வைஷ்ணவர்களை மட்டும்தான் தானைத்தலைர் நேசிக்கிறார் தமிழர்களின் ஆதிமதமான சைவ சமயத்தை அவர் கண்டு கொள்ள வில்லையோ என்று யாரும் மாற்க்கருத்தை கொள்ள வேண்டாம் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட எம்பெருமானை கங்கைசூடிய இறையவரை புறக்கணித்து விடுவாரா? புறநானுற்று புரட்சித்தமிழர்! ஜோதிட நிபுணர்களும் வாஸ்த்துக்கலையின் வல்லுனர்களும் பரிகாரச் செம்மல்களும் இன்னும் பலகாலம் பதவியில் இருந்து இலங்கைத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக வாழவைத்தது போல உலகத் தமிழர்களையும் வாழவைக்க வேண்டுமானால் சிவாலயம் எழுப்பி அதில் உங்களின் திவ்விய நாமத்தை பதித்து விடுங்கள் என்று சொன்னதினால் பகுத்தறிவு பேசும் பகைக்கூட்டம் தனது தியாக உணர்வை நிந்திக்குமே என மனம் மருகி உருகி புதியச் சட்ட சபையை ஆகாயத்திலிருந்து தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும் சிவலிங்கமாக தெரியட்டுமே அதைபார்பவர்கள் பாவம் தொலையட்டுமே என்று சட்டசபையையே சிவாலயமாக ஆக்கிய சிவனடியார் நம் கலைஞர்!






ராம பக்தராகிறார் கலைஞர்...! Large_29641 இத்தகைய உண்மைகளை அறிந்து கொள்ள சக்தியற்ற அப்பாவி மனிதர்கள் கலைஞர் என்ற மாமேருவை பார்த்து இந்துக்களின் விரோதி என்று கூறுவது எப்படி பொருந்தும்? அவர் ராமன் மீது மட்டுமல்ல கிருஷ்ணனின் மீதும் தீவிர பக்தி கொண்டவர் தினசரி காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும்போது வீட்டு முனையிலிருக்கும் கிருஷ்ணன் கோவிலில் பகவான் கண்ணனை வழிபடாமல் ஒரு நாளாவது சென்றதுண்டா? மேடையில் வேண்டுமென்றால் கிருஷ்ணனையும் ராமனையும் கண்ட கண்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வாரே தவிர வீட்டிற்கு வந்து தான் இப்படி பேசிவிட்டோமே என்று அவர் விம்மி விம்மி அழுவதை அர்ப்ப மானிடபிறவிகள் எப்படி அறிவார்கள். அவர் போற்றுவது போல் கிருஷ்ணனை வணங்குவதில்லை. நூற்றுவது போல் தான் வணங்குகிறார் என்ற பக்தியோகத்தின் புதிய இலக்கணத்தை அறிந்து கொள்ளும் தகுதி யாருக்கு இருக்கிறது. கண்ணன் ஒருவனே கருணாநிதி பக்தியின் உண்மை அறிவான்.

இன்னும் சிலர் சொல்லுகிறார்கள் இந்துக்களின் மத நம்பிக்கையை அவர் கேவலப்படத்துகிறார் என்று. தமது கட்சிகாரர் ஒருவர் பொட்டு வைத்ததை கிண்டல் செய்தார் என்று யார் யாரோ அவரை திட்டுகிறார்கள். உண்மையில் அவர் தரமற்ற குங்குமத்தை நெற்றியில் வைத்தால் ஒவ்வாமை ஏற்பட்டு புண்ணாகி விடுமே என்று தான்அளவிடமுடியாத பாச வெளிபாட்டில் தொண்டருக்கு அறிவுரை வழங்கினாரே தவிர உள் ஒன்று வைத்து புறமொன்றாக அவர் பேசவேயில்லை.





ராம பக்தராகிறார் கலைஞர்...! Er_20100824_2038135045




மேலும் அவரை போல இந்துமத நம்பிக்கைகளை போற்றி பாதுகாக்க இன்று யாருமே இல்லை எனலாம். சாது தரிசனம் பாவ விமோசனம் என்று நமக்கு தெரியும். உலக பற்றுக்களில் கிடந்து உழலும் நாம் பற்றுகளை அறுத்துவிட்டு கடவுகளுக்குள் வாழுகின்ற துறவியர்களை தரிசனம் செய்தால் குழம்பிய நமது மனம் தெளிவடையும் என்பது இதன்பொருள் இதை தானும் கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க வைப்பதற்காகவே சத்ய சாய் பாபா அவர்களை தனது வீட்டுக்கே வரவழைத்து தள்ளாத வயதில் தான் போக முடியாது என்று மனைவியை மட்டும் அனுப்பி பாத பூஜை செய்த பரம பக்தர் அவர். நமக்கு கடவுளை பிடிக்கிறாதா இல்லையா? என்பது முக்கியமல்ல. கடவுளுக்கு நம்மை பிடிக்கிறதா? இல்லையா? என்பது தான் முக்கியம். என்ற தத்துவ ஞான முத்தை பட்டினத்தார். தாயுமானவர் போன்ற ஞானிகளை போல் பேசிய உத்தமர் அல்லவா? கலைஞர் பெருமகனார்.

தமிழகத்து ஜோதிடர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் மஞ்சள் துண்டு அணிந்திருக்கிறாரே தவிர பாழாய்போன எதிர்கட்சி காரர்கள் சொல்வது போல் பதவியை காப்பாற்றுவதற்காக அல்ல. ஜோதிடப்படி மஞ்சள் நிறம் குரு கிரகத்தின் அருளை தரும் என்ற சித்தாந்தத்தை கலைஞர் அவர்கள் மதிப்புயிலிருந்தே இந்துமத மரபுகளை அவர் மதிக்கிறார் என்பது புரியவில்லையா?

அதே போலத்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலின் தலைவாசல் வழியாக போனால் தலைவர்களின் உயிர் போய்விடும் என்று மக்கள் நம்புவதை தான் புறக்கணித்து இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்திவிட்டதாக யாரும் நினைத்துவிட கூடாதே என்பதற்காக தான் மாற்று வழியில் இப்போது கோயிலுக்கு போனாரே தவிர உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாற்று வழியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை, ஒடும் ரயிலை இடமறித்து அதன் பாதையில் தலைவைத்த மாபெரும் வீரம் அவருக்குள் இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பதவியின் மீதுள்ள பற்று பிள்ளைகளின் மீதுள்ள பற்று, பணத்தின் மீதுள்ள பற்றுதான் உயிரின் மீது பற்றாக வெளிபடும் கலைஞர் அவர்கள் எந்த பற்றுதலுக்கும் ஆட்படாதவர் என்று உலகத்தில் அனைவருக்குமே தெரியும். எனவே அவரை இந்துக்களின் விரோதி என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள். கலைஞர் சிறந்த பக்திமான். இது அவரின் சொந்த அண்ணாவுக்கும் தெரியும், அவர் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு பெரியாருக்கும் தெரியும்.


source http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_27.html








ராம பக்தராகிறார் கலைஞர்...! Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 28, 2010 11:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :
தன்னையும் தன குடும்பத்தையும் காப்பாற்றும் ஒருவர்தான்
நல்ல குடும்ப தலைவர் அப்படின்னு அவர் தெரிஞ்சு வச்சிருக்கார்.ஆனா நம்ம மட தொண்டனுகளுக்கு விளங்கலியே







ராம பக்தராகிறார் கலைஞர்...! Uராம பக்தராகிறார் கலைஞர்...! Dராம பக்தராகிறார் கலைஞர்...! Aராம பக்தராகிறார் கலைஞர்...! Yராம பக்தராகிறார் கலைஞர்...! Aராம பக்தராகிறார் கலைஞர்...! Sராம பக்தராகிறார் கலைஞர்...! Uராம பக்தராகிறார் கலைஞர்...! Dராம பக்தராகிறார் கலைஞர்...! Hராம பக்தராகிறார் கலைஞர்...! A
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Sep 28, 2010 1:13 pm

உதயசுதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :
தன்னையும் தன குடும்பத்தையும் காப்பாற்றும் ஒருவர்தான்
நல்ல குடும்ப தலைவர் அப்படின்னு அவர் தெரிஞ்சு வச்சிருக்கார்.ஆனா நம்ம மட தொண்டனுகளுக்கு விளங்கலியே





நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக