புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டுத்தொகை
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தமிழ் நாகரிக வளர்ச்சியாலும், தமிழரின் பேணாப் பேதமையாலும் எண்ணற்ற தமிழ் நூல்கள் அழிந்து போயின. இந்நிலையில் சிதறிக்கிடந்த சங்கத் தமிழ் பாக்கள் எல்லாம் எட்டுத்தொகைகலாக தொகுக்கப்பட்டன.
எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
1. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு - இவை ஐந்தும் அகப்பொருள் பற்றியது.
2. புறநானூறு , பதிற்றுப்பத்து - இவ்விரண்டும் புறம் பற்றியது
3. பரிபாடல் - இதில் எட்டு பாடல்கள் அகம பற்றியது. மீதமுள்ள பாடல்கள் புறம் பற்றியது
நற்றிணை
இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும், 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
குறுந்தொகை
குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.
ஐங்குறுநூறு
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.
மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
பதிற்றுப்பத்து
இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
இந்த 80 பாடல்களும் எட்டு சேர மன்னர்களின் வரலாற்றைக் குறிக்கின்றன.
கலித்தொகை
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.
பரிபாடல்
கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும் கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் ஆகும். இதில்,
திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15)
முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21)
வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22)
புறநானூறு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட பபுறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.இதில் உள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்டது.
அகநானூறு
இது அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் நானூறு பாடல்கள் உள்ளதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. புறநானூறு போலவே அகநானூறும் பல்வேறு புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்டது.இதில் உள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
இதில் முக்கியமானவை
ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
வாழ்க்கையின் இரு வகைகள்
பண்டையத் தமிழர்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று இரு வகைகளாக பிரித்திருன்தனர்.
அகம்
உள்ளம ஒத்த தலைவனும் தலைவியும் ஊழால் ஒன்று கூடி தாம் பெற்ற இன்பம் இத்தகையது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் உள்ளத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சி 'அகம்' எனப்படும்
புறம்
'இத்தகையது' என்று பிறருக்கு உணர்த்தப்படும் உணர்ச்சிகள், ஒழுக்கங்கள் 'புறம்' எனப்படும்.
அகஒழுக்கத்தின் திணைகள்
ஒழுக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும்.
அகப்பொருள் பற்றிய ஐந்து நூல்களும் சிதைவில்லாமல் முழுமையாக கிடைத்துள்ளன.
.குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை = அன்பின் ஐந்தினைகள்
பெருந்திணை = பொருந்தா காதல்
கைக்கிளை = ஒருதலைக் காதல்
புறஒழுக்கத்தின் திணைகள்
வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி, பாடாண்
புறப்பொருள் பற்றிய நூல்களில் சில பாடல்கள் சிதைந்தும், அழிந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன .
வெட்சித்தினை
ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் அந்நாட்டின் பசுக்களைக் கவர்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் அந்நாட்டின் மேல் போர்த் தொடுக்கப் போகிறார்கள் என்று பொருள். வீரர்கள் வெட்சிப் பூமாலையை அணிந்து சென்றுப் பசுக்களைக் கவர்ந்து வருவர்.
கரந்தைத் திணை
தன் நாட்டு பசுக்களை வேற்றுநாட்டு மன்னன் கவர்ந்து விட்டால், அவர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லை. கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கச் செல்லும் நாட்டு வீரர்கள் கரந்தை பூமாலையை அணிந்து செல்வர்.
வஞ்சித் திணை
ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டி, அந்நாட்டின் மேல் போருக்குச் செல்லும் வீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர்.
காஞ்சித் திணை
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த பகைவர்களுடன் போரிடுவான். தன் நாட்டின் மீது போர்புரிவதற்காக வந்த பகைவேந்தனை எதிர்த்து நின்று போர் புரிவது காஞ்சித்திணை ஆகும். இவர்கள் காஞ்சிப் பூமாலை அணிந்து போர்புரிவர்.
நொச்சித் திணை
பகைவர்கள், மதிலை வளைத்துக் கொள்ளும் போது,மன்னன் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்த்து போரிட்டு மதிலைச் சுற்றியுள்ள வீரர்களை விரட்டி, கோட்டையைக் காப்பது நொச்சித் திணை ஆகும். மதில் காக்கும் வீரர்கள் நொச்சி மலர் மாலைச் சூடுவர்.
உழிஞைத் திணை
மதிலை முற்றிலும் வளைத்துவிட்ட அரசன், தன் படைகளுடன் மேலும் முன்னேறிச் சென்று கோட்டையைக் கைப்பற்றுவது உழிஞைத் திணை ஆகும். கோட்டையை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞை மலர் மாலை அணிந்துகொள்வர்.
தும்பைத்திணை
தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை அரசனை, போர்க்களத்தில் நேருக்கு நேராக எதிர்த்து நின்று போரிடுவது தும்பைத்திணை ஆகும். போர்க்களத்தில் எதிர்த்து நின்று போர்புரியும் வீரர்கள் தும்பை மலர் மாலையை அணிவர்.
வாகைத்திணை
போர்க்களத்தில், போரிடும் மன்னர்களில் வெற்றி பெறும் பிரிவினர் வாகைப் பூமாலையை அணிந்து மகிழ்வர். போரில் வெற்றிபெறுதல் வாகைத்திணை ஆகும்.
பாடாண்திணை
பாடப்பெருபவருடைய வீரம், கொடை, கல்வி புகழ் ஆகியவற்றை பற்றி கூறுவது பாடாண் திணை ஆகும்
எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட பின்
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய ஐந்துக்கும் அவ்வத் தொகை நூல் பாடலின் அமைப்பில் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி இணைத்தார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் கட்டும் 'எரி எள்ளு அன்ன நிறைத்தன' எனத் தொடங்கும் பாடலை , பதிற்றுப்பத்தி கடவுள் வாழ்த்துப் பாடலாகக் கொள்வர்.
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த
பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம் புறம்
என்றித்திறத்த எட்டுத்தொகை
பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம் புறம்
என்றித்திறத்த எட்டுத்தொகை
எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
1. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு - இவை ஐந்தும் அகப்பொருள் பற்றியது.
2. புறநானூறு , பதிற்றுப்பத்து - இவ்விரண்டும் புறம் பற்றியது
3. பரிபாடல் - இதில் எட்டு பாடல்கள் அகம பற்றியது. மீதமுள்ள பாடல்கள் புறம் பற்றியது
நற்றிணை
இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும், 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
குறுந்தொகை
குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.
ஐங்குறுநூறு
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.
மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
பதிற்றுப்பத்து
இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
இந்த 80 பாடல்களும் எட்டு சேர மன்னர்களின் வரலாற்றைக் குறிக்கின்றன.
கலித்தொகை
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.
பரிபாடல்
கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும் கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் ஆகும். இதில்,
திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15)
முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21)
வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22)
புறநானூறு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட பபுறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.இதில் உள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்டது.
அகநானூறு
இது அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் நானூறு பாடல்கள் உள்ளதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. புறநானூறு போலவே அகநானூறும் பல்வேறு புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்டது.இதில் உள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
இதில் முக்கியமானவை
ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
வாழ்க்கையின் இரு வகைகள்
பண்டையத் தமிழர்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று இரு வகைகளாக பிரித்திருன்தனர்.
அகம்
உள்ளம ஒத்த தலைவனும் தலைவியும் ஊழால் ஒன்று கூடி தாம் பெற்ற இன்பம் இத்தகையது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் உள்ளத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சி 'அகம்' எனப்படும்
புறம்
'இத்தகையது' என்று பிறருக்கு உணர்த்தப்படும் உணர்ச்சிகள், ஒழுக்கங்கள் 'புறம்' எனப்படும்.
அகஒழுக்கத்தின் திணைகள்
ஒழுக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும்.
அகப்பொருள் பற்றிய ஐந்து நூல்களும் சிதைவில்லாமல் முழுமையாக கிடைத்துள்ளன.
.குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை = அன்பின் ஐந்தினைகள்
பெருந்திணை = பொருந்தா காதல்
கைக்கிளை = ஒருதலைக் காதல்
புறஒழுக்கத்தின் திணைகள்
வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி, பாடாண்
புறப்பொருள் பற்றிய நூல்களில் சில பாடல்கள் சிதைந்தும், அழிந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன .
வெட்சித்தினை
ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் அந்நாட்டின் பசுக்களைக் கவர்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் அந்நாட்டின் மேல் போர்த் தொடுக்கப் போகிறார்கள் என்று பொருள். வீரர்கள் வெட்சிப் பூமாலையை அணிந்து சென்றுப் பசுக்களைக் கவர்ந்து வருவர்.
கரந்தைத் திணை
தன் நாட்டு பசுக்களை வேற்றுநாட்டு மன்னன் கவர்ந்து விட்டால், அவர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லை. கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கச் செல்லும் நாட்டு வீரர்கள் கரந்தை பூமாலையை அணிந்து செல்வர்.
வஞ்சித் திணை
ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டி, அந்நாட்டின் மேல் போருக்குச் செல்லும் வீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர்.
காஞ்சித் திணை
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த பகைவர்களுடன் போரிடுவான். தன் நாட்டின் மீது போர்புரிவதற்காக வந்த பகைவேந்தனை எதிர்த்து நின்று போர் புரிவது காஞ்சித்திணை ஆகும். இவர்கள் காஞ்சிப் பூமாலை அணிந்து போர்புரிவர்.
நொச்சித் திணை
பகைவர்கள், மதிலை வளைத்துக் கொள்ளும் போது,மன்னன் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்த்து போரிட்டு மதிலைச் சுற்றியுள்ள வீரர்களை விரட்டி, கோட்டையைக் காப்பது நொச்சித் திணை ஆகும். மதில் காக்கும் வீரர்கள் நொச்சி மலர் மாலைச் சூடுவர்.
உழிஞைத் திணை
மதிலை முற்றிலும் வளைத்துவிட்ட அரசன், தன் படைகளுடன் மேலும் முன்னேறிச் சென்று கோட்டையைக் கைப்பற்றுவது உழிஞைத் திணை ஆகும். கோட்டையை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞை மலர் மாலை அணிந்துகொள்வர்.
தும்பைத்திணை
தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை அரசனை, போர்க்களத்தில் நேருக்கு நேராக எதிர்த்து நின்று போரிடுவது தும்பைத்திணை ஆகும். போர்க்களத்தில் எதிர்த்து நின்று போர்புரியும் வீரர்கள் தும்பை மலர் மாலையை அணிவர்.
வாகைத்திணை
போர்க்களத்தில், போரிடும் மன்னர்களில் வெற்றி பெறும் பிரிவினர் வாகைப் பூமாலையை அணிந்து மகிழ்வர். போரில் வெற்றிபெறுதல் வாகைத்திணை ஆகும்.
பாடாண்திணை
பாடப்பெருபவருடைய வீரம், கொடை, கல்வி புகழ் ஆகியவற்றை பற்றி கூறுவது பாடாண் திணை ஆகும்
எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட பின்
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய ஐந்துக்கும் அவ்வத் தொகை நூல் பாடலின் அமைப்பில் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி இணைத்தார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் கட்டும் 'எரி எள்ளு அன்ன நிறைத்தன' எனத் தொடங்கும் பாடலை , பதிற்றுப்பத்தி கடவுள் வாழ்த்துப் பாடலாகக் கொள்வர்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
இலக்கியப் பதிவுகளில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி தமிழ்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
சிவா wrote:இலக்கியப் பதிவுகளில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி தமிழ்!
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழுக்கு இனை வேறில்லை
தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, வாழ்வியலை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிற, தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத்தந்த தலையாய இலக்கியமான எட்டுத்தொகை என்ற இலக்கியச் செல்வத்தை ஈகரையில் சேர்த்தமைக்கு எம் மனமார்ந்த நன்றியும் அன்பும்..... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|