புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
1 Post - 20%
Manimegala
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
11 Posts - 4%
prajai
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
2 Posts - 1%
jairam
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_m10மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Wed Aug 05, 2009 10:53 pm

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

(முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு)


எனது தலைமையிலான மண்டைகாடு கலவரங்கள் குறித்த விசாரணை குழு மதமாற்றங்களை
தடைசெய்யும் ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது. அண்மையில்
தமிழ்நாடு அரசு பிறப்பித்து (பின்னர் அரசியல் நிர்பந்தங்களால்
நீக்கிவிட்ட) கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தினை சரியான கோணத்தில்
அறிந்துகொள்ள (அன்றைய) விசாரணைக்குழு மதமாற்றத் தடைச்சட்டத்தினை பரிந்துரை
செய்யுமாறு தூண்டிய பின்புலத்தையும் சூழலையும் அறிந்து கொள்ள வேண்டியது
அவசியமாகிறது.

ஒரு சிறுபான்மை சமுதாயம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மை ஆகும்
போது அது ஆக்கிரமிப்புத்தன்மையுடனும் வன்மைத்தன்மையுடனும் (millitant),
இறுமாப்புடனும் இயங்க ஆரம்பிக்கிறது. அது தனது ஆற்றலை மாநாடுகள் மூலமும்
பேரணிகள் மூலமும் காட்ட முனைகிறது. கிறிஸ்தவர்கள் கன்னியாகுமரி 'கன்னி
மேரி ' எனவும், நாகர்கோவில் 'நாதர் காயல் ' எனவும் பெயர் மாற்றப்பட
வேண்டுமென கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். இது பெரும்பான்மை சமுதாயத்திற்கு
வருத்தத்தையும், நம்பிக்கையின்மையையும், ஐயப்பாட்டையும் உண்டாக்கிற்று
இதன் விளைவாக வகுப்புவாத சூழல் உருவாயிற்று. இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக
உருவெடுத்தது. இவ்விசயத்தை ஒவ்வோர் பிரச்சனையாக அணுகலாம்.

அ) அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 ஆவது பிரிவு வழங்கும் ஒருவருக்கு தமது
மதத்தினை பரப்பும் உரிமை என்பது கிறிஸ்தவ மிசினரிகளால், ஹிந்து
மதத்தினையும் அதன் தேவதேவியரையும் வன்முறைத்தனமாக
சிறுமைப்படுத்துவதற்கும், ஹிந்து மதத்தினை தவறாக சித்தரிப்பதற்கும்
என்பதான மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வழக்கமாக தொடங்கப்பட்டு,
சீரழிக்கப்பட்டது (degenerated). இது அதே அளவு மோசமான எதிர்வினைகளை
-கிறிஸ்தவ மதத்தின் மீதாக படுமோசமான தாக்குதல் பிரச்சாரத்தை-
ஹிந்துக்களிடமிருந்து உருவாக்கியது. இது தொடர்ந்து ஒருவர் மற்றவரது
வழிபாட்டு தலங்களை தாக்கவும், அழிக்கவும், அவமானப்படுத்தவும் செய்வதாக
வெளியிட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து வெளிப்படையான தாக்குதல்களாகவும்
சவால்களாகவும் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உருமாறியது.
இதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தம் மதத்தினரை வன்முறை கலவரங்களுக்குத்
தூண்டும், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இரு மதத்தினரிடையேயும்
புழங்கலாயின. மிக மோசமான வார்த்தைகளால் மாற்று மதத்தினரைத் திட்டும்
சுவரொட்டிகள் கன்னியாகுமரியில் ஆரம்பித்து இரு சமுதாயத்தினராலும்
கட்டுக்கடங்காத ஆவேசத்துடன் தடுப்பாரற்று ஒட்டப்பட்டுவந்தன. இது கடந்த
இருவருடங்களாகவே நடைபெற்று வந்து இறுதியில் மிகமோசமான வகுப்புவாத கலவரமாக
பெருமளவு வன்முறையுடனும் சூறையாடலுடனும் வெடித்தது.

ஆ. அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் நடந்தது
என்பது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அறியப்படாத ஒரு நிகழ்ச்சியாகும்.
சொத்துக்கள் (வீடுகள், கடைகள், துணிக்கடைகள், தென்னந்தோப்புகள்,
வாழைத்தோட்டங்கள்) மிகக்கடுமையாக சூறையாடப்பட்டன. கல்வி நிறுவனங்கள்,
கான்வெண்ட்கள், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், ஹிந்து ஆலயங்கள் ஆகியவை
வன்முறையின் இலக்குகளாயின. கல்லறைத் தோட்டங்கள் கூட
விட்டுவைக்கப்படவில்லை. வன்முறைக்கெல்லாம் உச்சகட்டமாக மக்கள்
கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். இதெல்லாம் மதத்தின் பெயரால்
நடந்ததென்பதுதான் கொடுமையான விசயம். சில கிராமங்களில் கிணறுகள் பெட்ரோல்,
டாசல், மோசமான இரசாயனம் ஊற்றப்பட்டு அதன் நீர் பயன்படுத்தப்பட முடியாமல்
ஆனது. பல கிராமங்களில் மக்கள் வசிக்க தலையின் மீதோரு கூரையும் இல்லாத
பரிதாபநிலையில் இருந்தனர். வெட்டவெளியில் பொங்கித்தின்றவாறு இருந்த மக்களை
பார்க்கவே கொடுமையாக இருந்தது. இக்கொடுமையின் தீவிரத்தன்மையும் வீச்சும்
பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். கிறிஸ்தவர்கள் தங்கள் இழப்புகளை ஒரு
கோடி எனக் கணக்கிட்டிருந்தனர். பள்ளந்துறை கிராமத்தில் மட்டுமே
கிறிஸ்தவர்கள் ஒன்றரை - இரண்டு கோடி ரூபாய் இழப்பினை சந்தித்திருக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் எடுத்த மறுவாழ்வு சீரமைப்பு முயற்சிகளின் மொத்த செலவு
பத்து இலட்சம் ரூபாய் ஆகும். கிறிஸ்தவர்கள் தரப்பில் உயிரிழப்பு பத்து
ஆகும். ஹிந்துக்கள் தரப்பில் பதினொன்று ஆகும். இரு பக்கங்களிலும்
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் பெரியதாகும். கடத்தப்பட்டவர்களில்
பெரும்பாலானோர் ஹிந்துக்கள். அவர்கள் திரும்பவே இல்லை. இருமுறை போலிஸ்
துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும் மக்கள் உயிரிழந்தனர்.

இ. விசாரணைக் குழு 161 சாட்சியங்களையும், பல தரப்பினராலும்
முன்வைக்கப்பட்ட 323 காட்சிப்பொருட்களையும், ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய
தரப்பினரால் 16 வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட பல வாதங்களையும்
ஆராய்ந்த பின்னர் மிகத்தெளிவாக கன்னியாகுமரி மாவட்ட கலவரங்களுக்கு மூலவேர்
காரணமாக ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றியமையும் அதற்கு
பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுமே காரணம் என தெளிவாக கண்டுரைத்தது. சட்ட
ஒழுங்கினைக் கட்டிக்காப்பது மாநில அரசின் பொறுப்பாகும். அரசாங்கம் ஒரு
மானுட சோக நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாகிக்கொண்டிருக்கும்
போது கைகட்டி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாகாது. வருங்காலத்தில்
இத்தகைய விரும்பத்தகாத வன்முறைச்சம்பவங்கள் நடக்காமலிருக்க என்ன
நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்ய விசாரணைக் குழு
கேட்கப்பட்டபோது, அக்கேள்வி விசாரணைக் குழுவினால் கீழ்கண்டவாறு
பதிலளிக்கப்பட்டது:

பாகிஸ்தான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகியவை கிறிஸ்தவ மிசினரிகளின்
நடவடிக்கையை கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்றியுள்ளன. இஸ்ரேல் மதமாற்றத்தினை
தடைசெய்துள்ளது. சுவிட்சர்லாந்து ஏசுசபையினரை தடைசெய்துள்ளது.
கொலம்பியாவில் கத்தோலிக்கர்களை கத்தோலிக்கரல்லாதவர்கள் மதமாற்றம் செய்வது
தடைசெய்யப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் பெரும்பான்மையாக உள்ள இலத்தீன்
அமெரிக்க நாடுகளில் சமுதாய அமைதியையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும்
குலைப்பதாக காரணம் காட்டி மிசினரிகளின் மதமாற்ற வேலைகள்
தடைசெய்யப்பட்டுள்ளன. வெனிசூலா அரசாங்கம் மெதாடிஸ்ட் கிறிஸ்தவ சபையினை தடை
செய்து மிசினரிகளை வெளியேற்றியுள்ளது. ஸயர் (Zaire) அரசாங்கம் ஆப்பிரிக்க
தனித்தன்மையை காப்பாற்ற மிசினரி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு
விதித்துள்ளது. இந்தோனேசியாவில் மதத்தினை பரப்பும் உரிமை அளிக்கப்பட்டு
அது வகுப்பு ஒற்றுமைக்கு இடராக இருந்த காரணத்தால், இந்தோனேசிய அரசாங்கம்
மதமாற்றங்களைத் தடை செய்து மிசினரி நடவடிக்கைகளில் கடுமையான
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உலகமெங்கும் இத்தகைய போக்கு காணப்படும்
போது இந்த நாட்டில் எவாஞ்சலிக்கல் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த
முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சமாக நாம் செய்யக்கூடியது பெருத்த
மதமாற்றங்களையும் (mass conversions), மோசடி முயற்சிகள் மூலமும் சட்டவிரோத
செயல்பாடுகள் மூலமும் நடக்கும் மதமாற்றங்களை தடைசெய்யலாம்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Wed Aug 05, 2009 10:56 pm

திரு. பாலகிருஷ்ணன், ஹிந்துக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், தாம் எழுத்துருவாக சமர்ப்பித்த அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை பெருக்கம் மதமாற்றம் மூலம் நிகழ்வதாகவும் அது மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விசாரணைக் குழுவின் முன்னால் பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை கிறிஸ்தவ மிசினரிகள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகளைக் காட்டுகின்றன. 'கிறிஸ்தவ மிசினரிகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணைக் குழு அறிக்கை: மத்திய பிரதேசம் ', 'கிறிஸ்தவம்: ஒரு அரசியல் பிரச்சினை ' (மேஜர் வேதாந்தம்), விவேகானந்த கேந்திர பிரகாஷனால் வெளியிடப்பட்ட 'கிறிஸ்தவம் ஒரு விமர்சனப் பார்வை ' ஆகியவை இதனை தெளிவாக்குகின்றன. [color:3b82="Purple"]இவை எல்லாம் இந்த நாட்டிலே நடக்கும் மதமாற்றங்கள் நம்பிக்கை, உறுதிப்பாடு, மனமாற்றம், இறை அனுபவம் ஆகியவற்றாலெல்லாம் ஏற்படுகிற மாற்றங்கள் அல்ல என்பதை தெளிவாக்குகின்றன. மாறாக, ஹரிஜனங்கள் மற்றும் வனவாசிகளின் பெருமளவு மதமாற்றம் என்பது தூண்டுதல், கட்டாயப்படுத்தல், பொருளாதார ஆசைகாட்டல், வசதி வாய்ப்புகளால் ஆசைகாட்டல் ஆகியவை மூலம் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே இலஞ்சத்திற்கே நிகரானவை.

தனி நபரின் மதமாற்றம் என்பது ஒரு விதிவிலக்கே அன்றி வழக்கமல்ல. கடந்த காலங்களில் நடந்த மதமாற்றங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயக் சூழலில் மக்கள் மதமாற்றங்களைக் குறித்து விழிப்படைந்துவிட்டார்கள். ஹிந்துக்களை மற்ற மதங்களுக்கு மாற்ற முயற்சிப்பது சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் ஹிந்துக்களை கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாற்ற முயற்சிப்பது வட்டார பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும், அமைப்புகளையும் குலைக்கும். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் ஆளுமைகளை இழக்கிறார்கள். அது பாரம்பரியத்தில் பிடிப்பில்லாததோர் பிளவினை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. அது சமுதாய அமைப்பினை சிதைத்து கலாச்சார மோதல்களையும், சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளையும், நிலவிவரும் வகுப்பு சமரசத்தையும் குலைக்கிறது. மதமாற்றங்கள் விரிசல்களையும், ஆத்திரத்தையும் உருவாக்கி நியாயமாகவோ அநியாயமாகவோ வகுப்பு-விரோத உணர்ச்சிகளை வளர்க்க வழி கோலுகிறது. இத்தகைய மதமாற்றங்கள் பெருமளவில் நடக்கும் போது கிறிஸ்தவ ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என ஹிந்துக்கள் அஞ்சுகின்றனர்.

எனவேதான் [color:3b82="DarkRed"]தேசப்பிதா காந்திஜி 'மதமாற்றம் அது நடக்கும் இடங்களில் ஒரு ஆன்மிகத்தன்மையுடன் நடைபெறவில்லை. அவை வசதிகளுக்காக நடைபெறுகின்றன ' என கூறினார். ஒருமுறை அவர் கூறினார், 'எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் தடை செய்வேன். '.

[color:3b82="DarkRed"]ஹிந்து குடும்பங்களில் ஒரு மிசினரி வருவதென்பது குடும்ப வாழ்க்கையில் கலகத்தையும், ஆடைகள் நடை உடை பாவனைகள் உணவு வழக்கங்கள் ஆகிய அனைத்திலும் ஒரு குழப்பத்தையும் உருவாக்குவதாகும்.

மகாத்மாவின் மதமாற்றங்களை தடுக்கும் கனவு மத்தியபிரதேச அரசினால் நனவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரிசாவும் அதனை பின்பற்றியுள்ளது. இந்த மதமாற்றத் தடைச்சட்டங்களின் சட்டரீதியில் செல்லுமா என்பது உச்ச நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டது (புனித ஸ்டெயின்ஸ் vs மத்திய பிரசேதம் AIR 1977 Supreme Court 908 at 911) உச்ச நீதி மன்றம் மதத்தினை பரப்பும் அதிகாரமானது மதமாற்றத்திற்கான அதிகாரம் இல்லை எனக்கூறி ஒரிசா மற்றும் மத்தியபிரதேச சட்டங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகும் எனக் கூறிவிட்டது.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஹிந்துக்களின் மீள்-மதமாற்ற முயற்சிகளால் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர். பெருமளவு மதமாற்றங்களே பெருமளவு மீள்-மதமாற்றங்களுக்கு வகை செய்துள்ளன. ஹிந்துக்கள் மீண்டும் மதமாற்றம் செய்வதில் கொண்டிருந்த மனத்தடையினை நீக்கிக் கொண்டுவிட்டு அம்முயற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழலில் ஒரு மதமாற்றத்தடை சட்டத்தின் அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது மீண்டும் நடக்காது என்பதற்கு எவ்வித உறுதியும் கிடையாது. மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் சுவரில் எழுதப்பட்ட எச்சரிக்கையாக இருப்பதை அரசாங்கம் கவனிக்காமல் இருக்கலாகாது. பிரச்சனையை தடுப்பதே பிரச்சனையை தீர்ப்பதைக்காட்டிலும் புத்திசாலித்தனமாகும். அரசாங்கம் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படவில்லை எனக் கூறமுடியாது. அது அனைத்து விளைவுகளையும் எதிர்பார்த்து மதமாற்றங்களை தடைசெய்ய ஒரு சட்டத்தினை கொண்டு வந்தே தீரவேண்டும்.

(Necessity and validity of an Act banning conversion,

by (Dr) Justice P. Venugopal (Retd.)

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Aug 05, 2009 11:03 pm

ஒரு உண்மை சம்பவம்.........ஒரு ஆங்கிலோ இந்தியன் மருத்துவரிடம் ஒரு நோயாளியை அழைத்து சென்றிருந்தனர்.......அதற்க்கு முன்பு அந்த" நோயை வைத்தே" எங்கள் மதத்திற்கு மாறுங்கள் சுகம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டது ஒரு மதம்..அவர்களும் முடிவெடுத்து விட்டனர் மதம் மாற...அதை அந்த மருத்துவரிடம் தெரிவித்தனர்.அதற்கு அந்த மருத்துவர் என்ன ஆச்சர்யம் உங்கள் இந்து மதம் சுகமளிக்காத நோயா.....இல்லாத தெய்வங்களா.....கூறாத வைத்தியமா ........என்ன முடிவு இது என்றார்.............அவர் ஒரு கிருத்துவர்

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 06, 2009 12:36 am

உதாரணம் நான் சொல்ல தேவையில்லை உங்கள் பலருக்கே தெரியும் உங்கள் ஏரியாவில் சுவிசேக கூட்டங்கள் பார்த்திருப்பீர்கள் (தேவன் அழைக்கிறான் வாருங்கள் !! பில்லி,சூனியம் கட்டுக்களில் இருந்து விடுதலை ) ஜெபக்கூட்டம் பெரும்பாலும் இந்து மதத்தை தாக்குவதாக தான் இருக்கும் சில போலிச்சாமியார்கள் செயலை காரணம் காட்டி இது தான் இந்து மதம் என படிப்பறிவில்லாத மக்களிடம் நிறுவ முனைவர். பின் எல்லோருக்கும் தலையில் எண்ணெய் தடவி அதன் பின் எல்லோரையும் கூட்டாக ஜெபிக்க சொல்வார்கள் அதன்போது இதோ செல்லப்பா (ஏதாவது பெயர்) "தேவன் அழைக்கிறார் மேடைக்கு வாருங்கள் அவரும் நோன்டியாகவோ குருடாகவோ நடித்து மேடைக்கு வருவார். அவர் தலையில் கையை வைத்து பாதிரியார் ஜெபிப்பர் பின் செல்லப்பா கால் , கண் சரியாகி அவரும் கண்ணீர் மல்க நன்றி கூறுவார். பின் கூட்டத்தினரை பார்த்து பாதிரியார் "இதோ ஜேசுவின் அற்புதம் நீங்களும் ஜேசுவின் ஆசி பெற ஜேசுவை மட்டும் ஜெபி பெயர்களை பதிவு செய்யுங்க வீட்டில் வந்து எல்லோருக்கும் பைபிள் சொல்லிதாரம்" என்பார் பின் செல்லப்பாவும் பாதிரியாரும் அடுத்த ஊருக்கு கிளம்பிடுவாங்க நாடக மீள் அரங்கேற்றத்துக்கு ஒரே வாகனத்தில்

இவ்வாறு ஏமாற்று நாடகம் மூலமும் பிற மதங்களை வக்கிரமாக சித்தரித்து மாற்றுவதைத்தான் எதிர்கிறேன் . உங்கள் மத தத்துவங்களை கூறி மாத்துவதை இங்கு கூறவில்லை இது ஜேசு மீதான நம்பிக்கைகளை விமர்சிக்கவில்லை ஜேசுவின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகளைத்தான் ஏதிர்கிறோம்

ஏமாற்றாதே ஏமாறாதே........................

4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Thu Aug 06, 2009 12:48 am

நாம் என்ன பேசிக்கிட்டிருந்தாலும் நடக்கிறது செவ்வனே நடந்துகொண்டுதான் இருக்கிறது,

இன்றைக்கு கருணாநிதி திமுகாவின் சாதனா பட்டியல் வெளியிட்டிருக்கி்றார், அதில் ஒன்று "கட்டாய மதமாற்ற தடைசட்டம் இரத்து". http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4559


இந்துக்களுக்கு சூடு சொரண இருந்தா தானே, எத்தன கேவலமா திட்டினாலும் வாய இளிச்சுகிட்டே இவங்க பின்னால் தான் போவாங்க. சோகம்



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2009 12:50 am

4vinoth wrote:


இந்துக்களுக்கு சூடு சொரண இருந்தா தானே, எத்தன கேவலமா திட்டினாலும் வாய இளிச்சுகிட்டே இவங்க பின்னால் தான் போவாங்க. சோகம்

என்ன வினோத், இவ்வளவு கோபம்! என்ன செய்யிறது, ஜால்றா போட ஆள் இருந்தாதானே ஒருத்தன் தலைவனா வரமுடியுது!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 06, 2009 11:06 am

Ramya25 wrote:உதாரணம் நான் சொல்ல தேவையில்லை உங்கள் பலருக்கே தெரியும் உங்கள் ஏரியாவில் சுவிசேக கூட்டங்கள் பார்த்திருப்பீர்கள் (தேவன் அழைக்கிறான் வாருங்கள் !! பில்லி,சூனியம் கட்டுக்களில் இருந்து விடுதலை ) ஜெபக்கூட்டம் பெரும்பாலும் இந்து மதத்தை தாக்குவதாக தான் இருக்கும் சில போலிச்சாமியார்கள் செயலை காரணம் காட்டி இது தான் இந்து மதம் என படிப்பறிவில்லாத மக்களிடம் நிறுவ முனைவர். பின் எல்லோருக்கும் தலையில் எண்ணெய் தடவி அதன் பின் எல்லோரையும் கூட்டாக ஜெபிக்க சொல்வார்கள் அதன்போது இதோ செல்லப்பா (ஏதாவது பெயர்) "தேவன் அழைக்கிறார் மேடைக்கு வாருங்கள் அவரும் நோன்டியாகவோ குருடாகவோ நடித்து மேடைக்கு வருவார். அவர் தலையில் கையை வைத்து பாதிரியார் ஜெபிப்பர் பின் செல்லப்பா கால் , கண் சரியாகி அவரும் கண்ணீர் மல்க நன்றி கூறுவார். பின் கூட்டத்தினரை பார்த்து பாதிரியார் "இதோ ஜேசுவின் அற்புதம் நீங்களும் ஜேசுவின் ஆசி பெற ஜேசுவை மட்டும் ஜெபி பெயர்களை பதிவு செய்யுங்க வீட்டில் வந்து எல்லோருக்கும் பைபிள் சொல்லிதாரம்" என்பார் பின் செல்லப்பாவும் பாதிரியாரும் அடுத்த ஊருக்கு கிளம்பிடுவாங்க நாடக மீள் அரங்கேற்றத்துக்கு ஒரே வாகனத்தில்

இவ்வாறு ஏமாற்று நாடகம் மூலமும் பிற மதங்களை வக்கிரமாக சித்தரித்து மாற்றுவதைத்தான் எதிர்கிறேன் . உங்கள் மத தத்துவங்களை கூறி மாத்துவதை இங்கு கூறவில்லை இது ஜேசு மீதான நம்பிக்கைகளை விமர்சிக்கவில்லை ஜேசுவின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகளைத்தான் ஏதிர்கிறோம்

ஏமாற்றாதே ஏமாறாதே........................

இப்படியேல்லாமா நாடகமாடி மதம் மாற்றுகிறார்கள்!!
அவர்கள் இதையெல்லாம் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்காக செய்யும் வேலை
இங்கு நாம் ஒன்றை மனதிற்கொள்ள வேண்டும் அது என்னவெனில். மதம் மாறுபவர்கள்

1. ஏழைகள்
2. தாழ்ந்த சாதிகள் என சமுதாயம் முத்திரை குத்திய மக்கள்

முற்று முழுதாக நாம் மதம் மாற்றுபவர்களை குற்றம் சுமத்தமுடியாது. நமது சமுதாயம் தான் அவர்கட்கு வழி விடுகிறது

உ+ம்: A.R ரகுமான் வறுமையின் காரணமாகத்தான் மதம் மாறினார் என நான் கேள்விப்பட்டேன்.



மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Skirupairajahblackjh18
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 06, 2009 8:30 pm

இலங்கை புத்த பிக்கு ஒருவர் சொன்னார் தமிழர்கள் கேட்பது உண்ண உணவும் இருக்க இடமுமே தவிர தனினாடோ சுயாட்சியோ தீர்வோ இல்லை
சரி இந்த அகதி முகாம் ஏழ்மையை நீக்க தமிழர்கள் எல்லாம் சிங்களம் கற்று சிங்களவர்களாக வாழ சொன்னால் அல்லது அதை ஏற்பவர்களுக்கு மட்டுமே உணவு ,இருப்பிடம் என்றால் ஏற்பீர்களா?? (டக்லஸ் போல் செழிப்பாக வாழ்வீர்களா? அல்லது பிரபா போல் சாகபோவீர்களா?) ஏழ்மை நீங்க இதுவும் ஒரு வழி

தாழ்ந்த சாதிகள் என சமுதாயம் முத்திரை குத்திய மக்கள்
இவர்கள் மதம் மாறியதால் உயர்ந்து விட்டார்களா? கடவுளே எமக்கு வேணாம் என்றவர்கள் இன்று அந்ததந்த சாதிகளிலேயே தொங்கி நிற்கிறார்கள் இதை பத்திரிக்கையில் திருமண விளம்பரம்களிலேயே பார்க்கலாம் இன்ன சாதியை சேர்ந்த மணமகனுக்கு இதே சாதியை சேர்ந்த மணமகள் தேவை மதம் முக்கியமில்லை

பொருளாதாரத்தால் கல்வியால் முன்னேறிய சில சாதிகளை உயர் சாதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் (உதாரணம் நாடார் சமுகம்)
அதைவிட்டுவிட்டு சாதிவெறியை தூண்டி உயர்த்த முடியாது
இதிலும் கொடுமை இந்தியாவில் சில உயர்சாதிகள் தங்களை தாழ்ந்த சாதியாக அறிவிக்க போராட்டம்

ஈழத்தில் பிரபாகரனின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் சாதிகளை அழிக்கிறேன் என்று உயர்சாதிக்கு செய்த கொடுமைகளால் பெரும்பாலான உயர்சாதி யாழ்ப்பாண அறிவுஜீவிகள் கல்விமான்கள் விலகி நின்றார்கள் இதனால் அவர்களின் ஆதரவை,அறிவை பயன்படுத்த தவறினார் .எப்போதும் தன்னை முகஸ்துதி பண்ணுவோரையும் கீழ் சாதி என்ற ஒரே காரணத்துக்காக பலரையும் தளபதிகளாக நியமித்தார்
உயர் சாதியிலும் உள்ள பல திறமையாளர்களை பயன்படுத்த தவறினார்.(ஓட்டு போடவேண்டாம் என்று மகிந்தவை ஆட்சியில் ஏற்றினார் இதுதான் யானை தன் தலையில் தானே மண்ணை போடுதல் ஒரு சிறிய ராஜதந்திர தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்)

ரகுமான் சினிமா வாய்ப்புக்காக பேரம் பேசப்பட்டு மதம் மாற்றப்பட்டார்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Aug 06, 2009 8:46 pm

ரகுமான் சினிமா வாய்ப்புக்காக பேரம் பேசப்பட்டு மதம் மாற்றப்பட்டார்.
நிச்சயமாக இல்லை.....இதற்கு ஆதாரம் தேவை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 07, 2009 7:04 am

Ramya25 wrote:இலங்கை புத்த பிக்கு ஒருவர் சொன்னார் தமிழர்கள் கேட்பது உண்ண உணவும் இருக்க இடமுமே தவிர தனினாடோ சுயாட்சியோ தீர்வோ இல்லை
சரி இந்த அகதி முகாம் ஏழ்மையை நீக்க தமிழர்கள் எல்லாம் சிங்களம் கற்று சிங்களவர்களாக வாழ சொன்னால் அல்லது அதை ஏற்பவர்களுக்கு மட்டுமே உணவு ,இருப்பிடம் என்றால் ஏற்பீர்களா?? (டக்லஸ் போல் செழிப்பாக வாழ்வீர்களா? அல்லது பிரபா போல் சாகபோவீர்களா?) ஏழ்மை நீங்க இதுவும் ஒரு வழி

தாழ்ந்த சாதிகள் என சமுதாயம் முத்திரை குத்திய மக்கள்
இவர்கள் மதம் மாறியதால் உயர்ந்து விட்டார்களா? கடவுளே எமக்கு வேணாம் என்றவர்கள் இன்று அந்ததந்த சாதிகளிலேயே தொங்கி நிற்கிறார்கள் இதை பத்திரிக்கையில் திருமண விளம்பரம்களிலேயே பார்க்கலாம் இன்ன சாதியை சேர்ந்த மணமகனுக்கு இதே சாதியை சேர்ந்த மணமகள் தேவை மதம் முக்கியமில்லை

பொருளாதாரத்தால் கல்வியால் முன்னேறிய சில சாதிகளை உயர் சாதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் (உதாரணம் நாடார் சமுகம்)
அதைவிட்டுவிட்டு சாதிவெறியை தூண்டி உயர்த்த முடியாது
இதிலும் கொடுமை இந்தியாவில் சில உயர்சாதிகள் தங்களை தாழ்ந்த சாதியாக அறிவிக்க போராட்டம்

ஈழத்தில் பிரபாகரனின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் சாதிகளை அழிக்கிறேன் என்று உயர்சாதிக்கு செய்த கொடுமைகளால் பெரும்பாலான உயர்சாதி யாழ்ப்பாண அறிவுஜீவிகள் கல்விமான்கள் விலகி நின்றார்கள் இதனால் அவர்களின் ஆதரவை,அறிவை பயன்படுத்த தவறினார் .எப்போதும் தன்னை முகஸ்துதி பண்ணுவோரையும் கீழ் சாதி என்ற ஒரே காரணத்துக்காக பலரையும் தளபதிகளாக நியமித்தார்
உயர் சாதியிலும் உள்ள பல திறமையாளர்களை பயன்படுத்த தவறினார்.(ஓட்டு போடவேண்டாம் என்று மகிந்தவை ஆட்சியில் ஏற்றினார் இதுதான் யானை தன் தலையில் தானே மண்ணை போடுதல் ஒரு சிறிய ராஜதந்திர தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்)

ரகுமான் சினிமா வாய்ப்புக்காக பேரம் பேசப்பட்டு மதம் மாற்றப்பட்டார்.

நீங்கள் நான் சொன்னதை சரியாக விளங்கவில்லை!!!
ஏழை மக்களும், சமுதாயத்தில் தாழ்ந்த சாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட மக்களும் தான் இந்த மத மாற்றத்தால் கவரப்பட்டு செல்கிறார்கள். இதுதான் என் கருத்து. நிட்சயமாக பணவசதி படைத்தவர்கழும், சமுகத்தில் நன்கு தெரியப்பட்ட மக்களும் ஒருபோதும் மத மாற்றத்தால் கவரப்படவும் மாட்டார்கள் அவர்களின் ஆராதனைக்கூட்டங்களுக்கும் செல்லமாட்டர்கள்

புத்த பிக்கு சொன்னது தமிழர்கட்கு உண்ண உணவும் உடுக்க உடையுந்தான் தேவை அவர்கட்கு வேறு எதுவும் தேவையில்லை என்று. இது உங்களின் மதமாற்றம் என்ற கருத்திற்கு முற்றிலும் வேறுபட்ட விடயம். நீங்கள் விவாதிப்பது போல் ஓர் கருத்து முன் வைக்கப்பட்டால் நிட்சயம் குறிப்பிடத்தக்க அளவான மக்கள் ஏற்பார்கள், ஏனெனில் அம்மக்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. அம்மக்களின் நிலையில் இருப்பவர்கட்குத்தான் அதன் துயரம் தெரியும். தற்போதும் அரசாங்கம் அவர்களை என்னவெல்லாம் செய்ய சொல்கிறதோ அத்தனையும் அம்மக்கள் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள் அத்துடன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில்லவா இருக்கிறார்கள். நீங்கள் ஒரு தமிழிச்சியாக இருந்து கொண்டு அம்மக்களை தேவையற்ற ஓர் விடயத்திற்கு உதாரணம் காட்டியதை ஒருபோதும் ஏற்கவே முடியாது.

மதம் மாறியவர்கள் எல்லோரும் பணக்காரர் ஆகவும் உயர்ந்த சாதியுடையவர்களாக மாறிவிட்டார்கள் என்று நான் சொல்லவில்லையே. "இவர்கள் மதம் மாறியதால் உயர்ந்து விட்டார்களா?" எவ்வாறு உங்களால்
இவ் வினாவை தொடுக்க முடியும்?

தலைவர் நீங்கள் சொல்வது போல் உயர்ந்த சாதியினரை ஒதிக்கிதள்ளினார் என்பது எனக்கு தெரியாது அதனால் எனது கருத்தை சொல்ல முடியாது. இதுவும் உங்களின் மதமாற்றம் என்ற கருத்திற்கு முற்றிலும் வேறுபட்ட விடயம்.

றணிலுக்கு ஏன் வாக்களிக்க வேண்டாம் என்று தடுத்தார் என்பதற்கும் எனது கருத்தை சொல்லமுடியாது இதுவும் உங்களின் மதமாற்றம் என்ற கருத்திற்கு முற்றிலும் வேறுபட்ட விடயம். ஒரு சிறிய ராஜதந்திர தொலைநோக்கு பார்வை இல்லாமலா 30 வருடமாக இந்தபோராட்டத்தை வழினடத்தினார்? சில தவறுகள்
நடந்துதான் இருக்கிறது இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
உலகமே வியக்கத்தக்க ஒப்பற்ற மாவீரன் அவர். 20 நாடுகளின் துணைகொண்டுதான் போராட்டத்தை தோற்கடித்ததாக அரசே சொல்லகிறது

எதிர்த்தரப்பு வாதங்களை விழங்கிக்கொண்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.



மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக