புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
31 Posts - 51%
heezulia
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
73 Posts - 57%
heezulia
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_m10செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 21, 2010 4:05 pm

பொதுவாக ஒருவன் உண்ணும் உணவே அவனை வளர்க்கும் ..நல்ல ஆஹாரமே சப்த தாதுக்களின் ஆதாரம் ..கடைசி தாது விந்துவின் பலம் ஆகராரத்தை நம்பியே உள்ளது ..ஆயுர்வேதம் சொல்கிறது ..இன்று சாப்பிட்ட ஆகாரம் விந்துவாக மாற முப்பது நாட்கள் ஆகிறது ..எனவே சரி விகித உணவே தாதுக்களின் பலம் ..
கீழே உள்ள உணவுகள் -சைவ உணவுகள் -இந்த சைவ உணவுகளில் ஆண்மை பெருகும்,செக்ஸ் உணர்வு பெருகும் .. ..எளிதாக வீட்டிலேயே செய்து விட முடியும் ...கீழே உள்ள உணவுகளை செய்து பாருங்கள் ..பலன் பெறுங்கள் ..


ஆண்மை அளிக்கும் நெய்
செய்முறை -
1. ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,கீரைபாலை ,ஓரிலை ,மூவிலை ,பேரீச்சை ,அதிமதுரம் ,திராஷை ,அரிசி திப்பிலி ,சுக்கு ,ஸ்ருங்காடகம் ,பால் முதுக்கன் கிழங்கு -இவற்றில் ஒவ்வொன்றிலும் சம அளவு ஒரு பலம் (நாற்பத்தி எட்டு கிராம் ) எடுத்துகொள்ள வேண்டும்
2. அதிலே -பதினாறு பலம் பால் ,அறுபத்தினாலு பலம் தண்ணீர் ,அறுபத்தினாலு பலம் பால் அனைத்தையும் எடுத்து காய்ச்சி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும்
3. அதில் நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும்
உபயோகிக்கும் முறை
* உணவு செரிக்கும் திறன் தெரிந்து அருபதான்குருவை சோற்றோடு பயன்படுத்த வேண்டும்
பயன்
* ஆண்மை வளர்க்கும்
* வலிமை ,நிறம் -இவற்றை கொடுக்கும்
* நல்ல குரலை தோற்றுவிக்கும்
* உடலை கொழுக்க வைக்கும்
ஆதாரம்
* சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -21-23
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பானகம்
செய்முறை -
1. அதிக புளிப்பில்லாத ,குறை இல்லாத ,ஆடையோடு கூடிய தயிரை எடுத்துகொள்ளவேண்டும்
2. அதில் சர்க்கரை ,தேன் ,சிறிதளவு மிளகு ,மூங்கிலுப்பு ,சிற்றேல அரிசி -போன்றவற்றை போதிய அளவு சேர்க்க வேண்டும்
3. இவற்றை மென்மையான ஆடையில் வடிகட்டி புதிய மண் பாண்டத்தில் சேர்த்து வைக்க வேண்டும் .
பயன்படுத்தும் முறை
* நெய்யோடு சேர்ந்த அறுபதாங் குறுவை அரிசி சோற்றை பயன்படுட்ட வேண்டும் -பின் இந்த பானகத்தை தக்க அளவு குடிக்க வேண்டும்
பயன்
* நிறம்,குரல் ,வலிமை ,விந்து-வளர்ச்சி பெரும்
ஆதாரம்
* சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பால் சோறு
* பால் சர்க்கரை தேன் இவற்றோடு கூடிய அறுபதாங் குறுவை அரிசி சோற்றை உண்பவன் -காளையை போன்ற ஆண்மை உடையவன் ஆகிறான்
ஆதாரம்
* சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் ஐவகை பால்
1. ஜீவநீய கன கூட்டுப்பொருள் (ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,மகா மேதா ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து ,கீரைபாலை ,அதிமதுரம் )
2. விந்துவை வளர்க்கும் கூட்டு பொருள் ,(ஜீவகம் ,ரிஷபகம் ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து,மேதா,தண்ணீர்விட்டான் கிழங்கு ,சடாமஞ்சில் ,கர்கடஸ்ருங்கி )
3. வலிமை அளிக்கும் கூட்டு பொருள் (காட்டு வெள்ளரி ,பூனைகாலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,காட்டு உளுந்து ,பால் முதுக்கன் கிழங்கு ,அமுக்கிரான் கிழங்கு ,ஓரிலை ,கடுகு ரோகினி ,சிற்றாமுட்டி ,பேராமுட்டி )
4. பால் வளர்க்கும் கூட்டு பொருள் ,(விலாமிச்சை வேர்,சம்பா தானியம் ,அறுபதாம் குறுவை ,நீண்ட கனுவுள்ள கரும்பு ,தர்ப்பை,நாணல் ,குருவி கரும்பு வேர் ,கரும்புல்,செங்கரும்பு ,காவட்டம்புல் )
5. உடலை வளர்க்கும் கூட்டு பொருள் (பால் முதுக்கன் கிழங்கு ,கண்டங்கத்தரி ,அமுக்கிராக் கிழங்கு ,காகோலி ,க்ஷீர காகோலி ,வெண் சிற்றாமுட்டி ,மஞ்சள் சிற்றாமுட்டி ,காட்டுபருத்தி ,முடுக்கன் கிழங்கு )
மேலே கூறிய ஐவகை கூட்டுபொருளில்-தயார் செய்யப்பட்ட பாலில்,நெய்யில் வறுக்கப்பட்ட கோதுமை மாவை கலந்து அதில் சர்க்கரை ,நெய் ,தேன் ,இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் ..இதனால் குறைவில்லாத விந்து வளர்ச்சியை ஒருவன் பெற முடியும்
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கட்பேறு அளிக்கும் பால்
செய்முறை -
* மேதா ,க்ஷீர காகோலி ,கீரை பாலை ,பால்முதுக்கன் கிழங்கு ,கண்டங்ககத்தரி ,நெருஞ்சில் ,மூங்கிலுப்பு ,உளுந்து ,கோதுமை ,சம்பா அரிசி ,அருபாதாங் குறுவை அரிசி-இவற்றில் ஒவ்வோன்றிலும் ஒரு தோலா எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
* இதனில் முப்பத்தி இரண்டு பலம் பசுவின் பாலும் ,முப்பத்தி இரண்டு பலம் நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்
* பால் மட்டும் எஞ்சிய போது வடிகட்டி தேன் ,நெய் ,சர்க்கரை -இவற்றோடு சேர்த்து பருக வேண்டும்
பயன் -
* எழுபது வயது முதியரும் பல மக்களை தோற்றுவிக்கக்கூடிய ஆற்றலை அளிக்கும்
* முதியவரும் வாலிபனை போன்று மகிழ்ச்சி அடைவர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அரிசி திப்பிலி பால்
* முப்பது அரிசி திப்பிலி துண்டுகளை மைய்ய பொடி செய்து நான்கு தோலா நெய்யும் ,நன்கு தோலா எண்ணையும் சேர்த்து வறுத்த தூளில் தேன் சர்க்கரை இவற்றை கலக்க வேண்டும் ..இதை பால் கறக்கும் பாத்திரத்தில் வைத்து கறந்து(பால் கறக்கும் பசுவுக்கு -காட்டு உளுந்து இலை,கரும்பு ,மருத இலை இவற்றை உணவாக கொடுக்க வேண்டும் -பசு பருத்த காம்பும் ,தாய்பசுவின் நிறம் உடையதும் ,சிவப்பு அல்லது கருப்பு கன்றை முதலாக ஈன்றதும் -சாதுவானதும் )..இப்பாலை -தரை மேல் வைக்காமல் வலுவிற்கு ஏற்றவாறு பருக வேண்டும் ,பசி எடுத்த பின் அற்பதாங் குறுவை சோற்றை பால் நெய்ய்டுடன் பருக வேண்டும்
பயன்
* இவ்வாறு பருகுவதால் ஒரு இரவு முழுவதும் பெண்ணுடன் செய்தாலும் -ஆணுக்கு தளர்ச்சி (ஆண் குறி தளர்ச்சி அடையாது )அடையாது ..விரைவில் வெளிவராது ..
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பாயாசம் ..
செய்முறை
* நெருஞ்சில் ,பால் முதுக்கன் கிழங்கு இவற்றின் சாறில் நான்கு மடங்கு முன்பு கூறிய பசுவின் பாலை சேர்த்து அதில் உளுந்து அறுபதாங் குறுவை அரிசி இவற்றை போட்டு வேக வைத்து பாயசாமக்கி கொள்ளவேண்டும்
பயன்
* இதனில் மிகுதியான நெய் சேர்த்து பருகினால் -விந்து அதிகமாக வளர்ச்சி பெரும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அடைகள்..
செய்முறை
* ஜீவனிய கனத்தை சேர்ந்த உயிரூட்ட கூடிய மனதிற்கு பிடித்தமான சுவையை உண்டு பண்ணக்கூடிய பழங்களில் நான்கு பலமும் ,பூனை காலி விதையில் நான்கு பலமும் ,எள்ளுபொடியில் எட்டு பலமும் ,பயற்றின் மாவு எட்டு பலமும் ,கோதுமை ,சம்பா அரிசி இவற்றின் மாவுகள் நான்கு பலமும் சேர்த்து நான்கு பலம் நெய் ஊற்றி பிசைந்து பாலையும் சேர்த்து கலந்து அடை தட்ட வேண்டும்
பயன் -
* தட்டிய அடைகளை நெய்யில் வறுத்து உண்டால் -ஆண்மை பெருகும் ..பல மனைவியரை கொண்டவரும் சந்தோஷம் அடைவான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை வளர்க்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் நெய்
* பதினாறு பலம் நெய் தண்ணீர் விட்டான் கிழங்கு நான்கு பலம் ,நூற்றைம்பது பலம் பாலில் கலந்து காய்ச்சி முறை படி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும் ..
* இந்த நெய்யில் சர்க்கரை ,அரிசி திப்பிலி பொடி தேன் இவற்றை சேர்த்து பருக விந்து வளர்ச்சி பெரும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை தரும் அதிமதுர மருந்து
* ஒரு தோலா அதிமதுர சூர்ணதைச் சம அளவு நெய் தேன் இவற்றோடு சேர்த்து பருக வேண்டும் ..அதன் பிறகு பால் பருக வேண்டும் ..இதனால் சிற்றின்ப வேட்கை குறையாமல் இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பால் நெய் பயன்படுத்துவதன் பயன் ..
* நாள் தோறும் நெய்யும் பாலும் பருகுபவன் பயமற்று நோயற்று இளமையோடு நாள் தோறும் புணரலாம்
* காளை போன்று பெண்களை புணரும் ஆற்றலை பெறலாம் ..

மேலே கூறிய அனைத்திற்கும் ஆதாரம் ..
* சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் ,அத்தியாயம் இரண்டு ,பாதம் மூன்று ,பாடல் -3-20
குறிப்பு -ஒரு பலம் =நாற்பத்தி எட்டு கிராம் ,
ஒரு தோலா =பன்னிரண்டு கிராம் ---ஆயுர்வேத முறைப்படி




தமிழ் நியுஸ் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 5:52 pm

இதுல் குறிப்பிட்ட எந்த மூலிகையாவது அரிசி பருப்பு வேர் கிழங்கு ப்ழங்கள் வகையாவது எங்கயும் கிடைக்குமான்னு தெரியலையே..

இதை எல்லாம் சேர்த்து மருந்தாக செய்து மருத்துவர்கள் வழங்கலாமே..!

நமக்கு பயனில்லை என்றாலும் பகிர்வுக்கு நன்றி தாமு..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 5:54 pm

கலை wrote:இதுல் குறிப்பிட்ட எந்த மூலிகையாவது அரிசி பருப்பு வேர் கிழங்கு ப்ழங்கள் வகையாவது எங்கயும் கிடைக்குமான்னு தெரியலையே..

இதை எல்லாம் சேர்த்து மருந்தாக செய்து மருத்துவர்கள் வழங்கலாமே..!

நமக்கு பயனில்லை என்றாலும் பகிர்வுக்கு நன்றி தாமு..

ஏன் இப்படி? ஒன்னும் புரியல



செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 5:58 pm

சிவா wrote:
கலை wrote:இதுல் குறிப்பிட்ட எந்த மூலிகையாவது அரிசி பருப்பு வேர் கிழங்கு ப்ழங்கள் வகையாவது எங்கயும் கிடைக்குமான்னு தெரியலையே..

இதை எல்லாம் சேர்த்து மருந்தாக செய்து மருத்துவர்கள் வழங்கலாமே..!

நமக்கு பயனில்லை என்றாலும் பகிர்வுக்கு நன்றி தாமு..

ஏன் இப்படி? ஒன்னும் புரியல

வயாகராக்கள் தேவைப்படாத நயாகராக்கள் நாம்...! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 6:01 pm

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:இதுல் குறிப்பிட்ட எந்த மூலிகையாவது அரிசி பருப்பு வேர் கிழங்கு ப்ழங்கள் வகையாவது எங்கயும் கிடைக்குமான்னு தெரியலையே..

இதை எல்லாம் சேர்த்து மருந்தாக செய்து மருத்துவர்கள் வழங்கலாமே..!

நமக்கு பயனில்லை என்றாலும் பகிர்வுக்கு நன்றி தாமு..

ஏன் இப்படி? ஒன்னும் புரியல

வயாகராக்கள் தேவைப்படாத நயாகராக்கள் நாம்...! ஜாலி

இயற்கை நாயகனுக்கு வாழ்த்துக்கள். சியர்ஸ்



செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக