ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 1:59 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 1:59 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 1:55 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உயர்ந்த பண்பு

View previous topic View next topic Go down

உயர்ந்த பண்பு

Post by சிவா on Mon Aug 10, 2009 1:02 am

அடுத்தவர்களின் பூமியைச் சேர்த்துக் கொள்ளத்தானே நாடுகள் எல்லாம் போரிட்டுக் கொள்கின்றன.

அப்படி ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயம்...

பிரெஞ்சுத் துருப்புகள் அப் போது ஜெர்மனியில் முகாமிட்டிருந்தன. அவர்களிடம் நிறையக் குதிரைகள் இருந்தன. அவைக ளுக்கெல்லாம் ஆகாரம் தேவைப்பட்டது. புது இடம் வேறு. என்ன செய்வதென்று யோசித்தார் படைத்தலைவர்.

ஒரு படைப்பிரிவின் அதிகாரியிடம் குதிரைகளுக்குத் தேவையான பு ல்லைக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். உடனே அந்த அதிகாரி தமது படைவீரர்களுடன் புல்லைத் தேடிப் புறப்பட்டார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அங்கே மரங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பகுதி ஒரு சிறிய பள்ளத்தாக்கு. சுற்றிலும் குன்றுகள். சிறிது தூரத்தில் ஒரு சிறு குடிசை தெரிந்தது.

உடனே படை வீரர்கள் எல்லோரும் அங்கே விரைந்தார்கள்.

அந்த அதிகாரி தமது படைவீரர்களுள் ஒருவரிடம் அந்தக் குடிசையின் கதவைத் தட்டச் சொன்னார். தட்டப்பட்டதும் கதவு திறந்தது.

குடிசையில் இருந்து வெள்ளைத் தாடியோடு ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

படைத்தலைவர் அவரிடம், "ஐயா, எங்கள் குதிரைகளுக்குப் புல் தேவைப்படுகிறது. இந்தப் பகுதியில் நல்ல புல் எங்கே கிடைக்கும்? நீங்கள் இடத்தைக் காட்டினால் நாங்களே அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

"சரி, என்னுடன் வாருங்கள்" என்று கூறிப் பெரியவர் புறப்பட்டார்.

காடுமேடு என்று நீண்ட தூரம் பெரியவர் போய்க் கொண்டிருந்தார். படைவீரர்களும் அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படி நடந்திருப்பார்கள்.

போகும் வழியில் ஓர் இடத்தில் புல் நிறைந்திருந்தது. படைத்தலைவர் உடனே, "இது போதுமே, இந்த இடத்திலேயே நாங்கள் புல் அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

உடனே பெரியவர், "இங்கே வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். தயவு செய்து பொறுமையு டன் வாருங்கள்" என்றார்.
மீண்டும் பெரியவர் நடக்க ஆரம்பித்தார். படைவீரர்கள் சலிப்புடன் தொடர்ந்தார்கள்.

புல் நிறைந்த பல இடங்கள் மீண்டும் வந்தன. இருந்தாலும் அந்தப் பெரியவர் "அவையெல்லாம் வேண்டாம்" என்று கூறி, கடைசியில் ஒரு புல் நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே போனதும் பெரியவர், "இந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு புல் வேண்டுமானாலும் அறுத்துக் கொள்ளலாம்" என்றார்.

உடனே வீரர்கள் புற்களை அறுத்து மூட்டை கட்டிக் கொண்டுப் புறப்பட்டார்கள். புறப்படும் சமயம் அந்தப் படைத்தலைவர் பெரியவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"பெரியவரே, ஏன் அனாவசியமாக எங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்தீர்கள்? வழியில் ஏராளமாகப் புல் நிலங்கள் இருந்தனவே. அங்கெல்லாம் நாம் அறுத்திருக்கலாமே?"

அதற்கு அந்தப் பெரியவர் அமைதியாக, "உண்மைதான் வீரர்களே. வழியில் நிறைய நிலங்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் எனக்குச் சொந்தமில்லையே. இந்த நிலம் மட்டும் தான் என்னுடையது" என்று கூறியதும் படை வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றார்கள்.


தென்கச்சி சுவாமிநாதன்

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum