புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
68 Posts - 45%
heezulia
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
5 Posts - 3%
prajai
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
2 Posts - 1%
M. Priya
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
1 Post - 1%
kargan86
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
9 Posts - 4%
prajai
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_m10மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 30, 2010 1:59 am

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப் பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற இனப் படுகொலை சம்பவங்களுக்கு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்தி இப்பரப்புரைப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திருமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மற்றும் புனித சூசையப்பர் கல்லூரியைச் சேர்ந்த மனோகரன் இரஜிகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகான், தங்கத்துரை சிவானந்தா, சண்கராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சில் கொல்லப்பட்டனரென்று கூறப்பட்டது.
பின்னர் மூவரின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை வெளிப்படுத்தியது.

ஆகவே உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைக் குழுக்கள், சரியான தீர்வினை வழங்குவதில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்தச் சர்வதேச மன்னிப்புச் சபையின் புதுவிதமான போராட்டம் உணர்த்துவதைப் புரிந்து கொள்ளலாம்.
மாயமான் வேட்டையில் இறங்கியுள்ள அரசின் கற்றறியும் ஆணைக்குழு, ஒடுக்கு முறைக்குள்ளான தமிழ்த் தேசிய இனத்திற்கு நீதியைப் பெற்றுத் தரப் போவதில்லை.

சர்வதேச அளவில் உற்று நோக்கப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழுவினரோ (International Crisis Group) சர்வதேச மன்னிப்புச் சபையோ அல்லது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகமோ அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பத்தன்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.
இந்தியா சீனாவின் உதவியின்றிப் போரை வென்றெடுக்க முடியாதென்று பகிரங்கமாக அறிவிக்கும் இலங்கை அரசு, அவர்களைத் தம்வசம் ஈர்த்தது போன்று இந்த மனித உரிமைச் சபைகளை வளைத்துப் போட முடியாமல் தடுமாறுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இவை தவிர, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியளவில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக் கெதிரான அமைப்பின் (Action Contre La Faim) 17 தொண்டர்கள் குறித்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பதனையும் இந்த அனைத்துலக அமைப்புக்கள் கேட்க வேண்டும்.
மேல் விசாரணை என்கிற போர்வையில், படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டர்களின் சடலங்கள், பல தடவைகள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரின் நெஞ்சங்களில் ஆறாத ரணங்களை உருவாக்கியிருந்தன.
எத்தனை தடவைகள் தோண்டியும், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு இன்னம் நீதி கிடைக்கவில்லை.

சுவீடனைச் சார்ந்த உல்வ் ஹென்றிக்சனை (ULF Nenricssion) தலைவராகக் கொண்டு செயற்பட்ட ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழு (SLMM) பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 உள்ளூர் தொண்டர்களின் படுகொலைக்கு, பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டுமென அன்று அறிவித்திருந்தது.
அதேவேளை இன்று, அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடும் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள மங்கள சமரவீர, அன்றைய அரசின் வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தவர்.
கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சனின் கூற்று, பொறுப்பற்ற வகையில் அமைந்திருப்பதாக பி. பி. ஸி. செய்திச் சேவைக்கு மங்கள சமரவீர அளித்த காட்டமான பதிலை இன்று நினைவு கூர வேண்டும்.
பதவியில் இருக்கும் போது செய்த நியாயப்படுத்தல்கள், தற்போது அவர்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் சுற்றி வருவதை காலம் கடந்தாவது புரிந்து கொள்வார்கள் என நம்பலாம்.

இவ் வினப்படுகொலை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்திய பட்டினிக்கெதிரான அமைப்பின் தலைவர் டெனிஸ் மெட்ஸ்ஜர் (Dennis Metzger) தமது அமைப்பின் 27 வருட காலப் பணியில் இத்தகைய தொண்டர் மீதான படுகொலை, இதுவே முதன் முறையாக நிகழ்த்தப்பட்டதெனக் கூறியிருந்தார். இதுபோன்ற எத்தனையோ கூட்டு இனப் படுகொலைகள், தமிழர் தாயகமெங்கும் கடந்த 60 வருட காலமாக நடைபெற்று வருவதனை மனிதாபிமானம் பேசும் உலகம் உணர்ந்து கொள்ளவில்லை.
ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை உடைந்து போகக் கூடாதென்பதற்காக இக்கோரச் சம்பவங்களை, இவர்கள் மௌனமாக விழுங்கிக் கொண்டார்களோவென்று எண்ணத் தோன்றுகின்றது.
இருப்பினும் டப்ளினில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (PPT), இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதையிட்டு சற்று ஆறுதலடையலாம்.
ஆனாலும் பூனைக்கு மணி கட்டி நீதியை நிலைநாட்டுவது யார் என்பதில் தான் சிக்கல்.

ஏட்டுச் சுரக்காய் போலாகும் சர்வதேசச் சட்ட நியமங்கள், டாபூரில் இனப்படுகொலை புந்த சூடான் அதிபர் பசீரை இனப் படுகொலையாளன் என்று விளிப்பதற்கு பின்னடித்தது, போர்க் குற்றவாளி என்று சமாளிக்க முற்படுகின்றது.
தாயகக் கோட்பாட்டை முன் வைக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் திட்டமிட்ட, அரச சார்பு பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றும் முன்னெடுப்புக்களை இறைமை கொண்ட அரசின் உரிமையாகவும் கொள்ளும் சர்வதேச ஜனநாயகவாதிகள், தமது பிராந்திய நலன் என்பதற்கு அப்பால் எதனையும் பார்ப்பதில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.
அரச அதிகாரக் கட்டமைப்பில், 18 ஆவது திருத்தச் சட்டம் போன்று ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வந்தால் இந்த ஜனநாயக ஏற்றுமதியாளர்கள் துள்ளிக் குதிக்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்கும், பொருத்தமான பொங்கு சனிக் காலமிதுவென அறிவுரைப் பின்னிணைப்பொன்றையும் சேர்த்து விடுவார்கள்.
இவை தவிர சர்வ அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு, மக்களின் தினசரி வாழ்வோடு நேரடியான இணைப்பைக் கொண்ட, உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் விதிமுறைகளில் மாற்றமேற்படுத்த புதிய சட்ட மூலமொன்று வரப் போகின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் சிபாரிசின் அடிப்படையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்ட மூலமொன்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க, அரசு முற்படுகிறது.
ஜேர்மன் நாட்டில் அமுலிலுள்ள ஒரு கலப்பு முறைமையை இச்சட்டத் திருத்தம் கொண்டிருக்கும்.

மின்சாரத்திலும், பெற்றோலிலும் இயங்கும் ஹைபிட் (Hybrid) வாகனங்கள் போன்று, விருப்புத் தேர்வும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் இப்புதிய சட்டத்தில் கலந்திருக்கும்.
வரவு செலவுத் திட்ட சமர்ப்பணத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படவுள்ள இச்சட்டத் திருத்தம், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் பெரும் மாறுதல்களை கொண்டு வருமென எதிர்பார்க்கலாம்.
இதில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையூடாக, எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை விருப்புத் தெரிவு ஊடாக வரும் உறுப்பினர்களில் 30 சதவீதமானோர், விகிதார பிரதிநிதித்துவ பட்டியலில் இணைத்து நியமிக்கப்படுவார்களென்று கூறப்படுகின்றது.
இதில் மக்கள் ஜனநாயகத்தை மறுதலிக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சபையில் உறுப்பினர் ஒருவருக்கு வெற்றிடம் ஏற்படும் போது அந்த நாற்காலியில் எவரை அமர்த்துவது என்கிற அதிகாரத்தை அவர் சார்ந்த அரசியல் கட்சியின் செயலாளர் நாயகமோ அல்லது சுயேச்சைக் குழுவாயின் அதன் தலைவரோ கொண்டிருப்பார்கள்.
அங்கு தமது வட்டாரத்திற்கு பொருத்தமானவரைத் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை இழக்கும் நிலை அம்மக்களுக்கு ஏற்படும். மறுதேர்தல் என்கிற பேச்சிற்கும் இடமிருக்காது.
இவற்றிற்கு அப்பால் உள்ளூராட்சி சபைகளில் இரு கட்சி ஆட்சிமுறை வலுவாகும் சாத்தியப்பாடுகள் அதிகமிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
ஆனாலும் இத்திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்த தரவுகளோடு விரிவாக உரையாடலாம்.

தற்போது இயங்கும் சபைகள், மக்களின் அங்கீகாரம் இல்லாமல், எவ்வாறு திருத்தச் சட்ட மூலத்திற்கு தமது ஆதரவினையோ அல்லது எதிர்ப்பையோ முன்வைக்க முடியுமென்கிற அடிப்படைக் கேள்வி எழுவது நியாயமே. மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றில் இருப்பதால் எத்தகைய சட்ட மூலங்களையும் நிறைவேற்றக் கூடிய வல்லமை அரசிற்கு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.
முன்பு பரவலாக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மறுபடியும் மத்திய ஆட்சி மையத்தை நோக்கி திருப்புவது தான் இந்த திருத்தச் சட்ட மூலத்தின் சூத்திரம் போல் தெரிகிறது.

வெளிப்படையில் பல கட்சிகள் சுயாதீனமாக இயங்கும் ஜனநாயக இலங்கை போல் இந்நாடு காட்சியளித்தாலும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கியே சகல சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்படுகின்றன என்ற பேருண்மையை உலகம் எப்போது புரிந்து கொள்ளும்.
"நிதியால் வசமாகா நாடு எது'' என்று பாடியவாறு அடுத்த மாதம் வருகை தரும் இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஷ்ணாவிற்கு 18, 13 என்பதெல்லாம் சிறிய கோடுகளே


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக