புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
68 Posts - 45%
heezulia
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
5 Posts - 3%
prajai
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
4 Posts - 3%
Jenila
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
2 Posts - 1%
jairam
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
2 Posts - 1%
kargan86
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
9 Posts - 4%
prajai
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
6 Posts - 3%
Jenila
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
4 Posts - 2%
Rutu
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
3 Posts - 1%
jairam
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_m10சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...?


   
   

தற்போதய நவீன அறிவியல் மனித நேயமுள்ளதா? [3Vote ]

  • ஆமாம்

    00%
  • இல்லை

    267%
  • ஏதோ கொஞ்சம் உள்ளது

    133%
  • எதிரானது

    00%

You are not connected. Please login or register

THAMIZHAVEL
THAMIZHAVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 31/10/2010
http://SIDDHAHEALER.BLOGSPOT.COM

PostTHAMIZHAVEL Sun Oct 31, 2010 9:18 pm

சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...?

தம் உடலை அழியாது காக்கவும், வாழ்நாட்களை நீட்டிக்கவும், மரணமில்லாத வாழ்வுக்கும் வழிகண்டவர்கள் நம் முன்னோர்களாகிய சித்தர்கள்.
மனிதர்களுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களையும் கண்டறிந்து அவற்றை குணப்படுத்தக் கூடிய வழி வகைகளையும் கண்டறிந்தவர்கள் நமது முன்னோர்களாகிய சித்தர்கள். தாம் கண்டுணர்ந்த நோயற்ற வாழ்வுக்கான வழிகளை எளிய வாழ்க்கை முறைகளாக (உணவு, சிந்தனை, வாழ்க்கை முறைகள் என) வகுத்து மக்களை இயற்கையோடு இயைந்து வாழப் பழக்கியுள்ளார்கள்.
அவர்கள் ஆக்கித்தந்த வாழ்வியல் முறைகள், எல்லாக் காலங்களுக்கும் ஏற்புடையது. நமது மண்ணில் நமது முன்னோர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட அறிவியல், மனித நேயத்தையும், சுற்றுச்சூழலின் நலத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
சிறு உதாரணம்.
நமது அறிவியல் அடிப்படையில் கரிகால் சோழன் காலத்தில கட்டப்பட்ட கல்லனை காலத்தால் அழியாத சாட்சி.
தாம் பிறந்த இடத்திலிருந்து, வழியெல்லாம் காடுகளை விரித்துக்கொண்டு, தமிழகத்தை வளப் படுத்த வந்த காவிரித் தாயை, மெல்ல நிறுத்தி தன் நாட்டை வளப்படுத்தினர் நம் முன்னோர்கள் , நாடு செழித்தது. சோழ நாடு சோறுடைத்தது என பெயர் பெற்றது.
தற்போது நவீன அழிவியல் அறிவு, ஆறுகள் உற்பத்தியாகும் இடங்களில் அணைகள் கட்டி நாட்டை வறட்சியாக்குகிறார்கள். வந்தால் வெள்ளம் இல்லையேல் வறட்சி என்பதே தற்கால நிலை.
பெரும் அணைகளை விடுத்து சிறு தடுப்பணைகளைக் கட்டினால் நாட்டில் தண்ணீர் பஞ்சமும், வெள்ள அபாயமும், மணற்கொள்ளையும் காணாது போகும். வறட்சி என்பது இல்லாது ஒழியும்.
நம் முன்னோர்கள் தந்த அமைதியான நலவாழ்வைக் கடந்த சில பத்தாண்டுகளில் தொலைத்து விட்டோம். மேலை வணிகர்களின் பேரழிவு ஆயுதமான நவீன உயர் தொழில் நுட்ப அறிவியலை, விழிப்புணர்வு இல்லாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றியதால், இன்று நம் நாடே, உலகமே அழிவின் விளிம்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

நிலம், நீர். நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் 5 மூலகங்களையும் இந்த நவீன உயர் தொழில் நுட்ப அழிவு அறிவியல் நாசப்படுத்திவருகிறது.
உதாரணம்
நம் நாட்டில பசுமைப்புரட்சி, வென்மைப்புரட்சி, நீலப்புரட்சி என வந்த எல்லாப் புரட்சிகளும் நம் மக்களின் உடல், மன நலத்தையும், வாழும் சூழலையும் அழித்து நச்சுச் சூழலை உருவாக்கி விட்டன. மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டன.
இந்த புரட்சிகள் வந்த சில ஆண்டுகளிலேயே நிலமும், நீரும் நஞ்சாக்கப் பட்டுவிட்டன. 1960 களிலேயே விவசாய – உற்பத்தி இடங்களிலிருந்து விலகி வாழும் தாய்மார்களின் தாய்ப் பாலில் கூட , விவசாயத்தில் – உணவு உற்பத்தியில் பயன்படுத்தும் இரசாயன நஞ்சுகள் கலந்திருப்பதைக் கண்டுவிட்டார்கள். மக்களுக்கு உண்மை தெரியாமல் மறைத்தும் விட்டார்கள்.
மனித நேயமுள்ள, விழிப்புணர்வுள்ள அறிவியல் அறிஞர்களின், சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் மீறி தரகு அரசியல் வாதிகளாலும், மனித்தன்மையற்ற அழிவியல் அறிஞர்களாலும், பொறுப்பற்ற அதிகாரிகளாலும் தொடர்ந்து இன்று வரை சூழல அழிப்பும், விச விரிவாக்கமும் தொடர்கிறது.

1980 களில் வேகமாகத் தொன்றி வளர்ந்த சூழல் விடுதலைக்கான இயக்கங்கள் மக்களிடம் சிறிது பார்வைத் தெளிவை ஏற்ப்படுத்தினாலும், விரைவில் அரசாலும், அரசால் தூண்டிவிடப்பட்ட அரசியல் கட்சிகளாலும், நடத்தப்பட்ட வன்முறைகளாலும், மிகப் பெரிய விளம்பரங்களாலும், அறிவியல் மூடநம்பிக்கை திணிப்புப் பேரணிகளாலும், விழிப்புணர்வு இயக்கங்களின் தவறான போராட்ட முறைகளாலும், மக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை.

அதே நேரம் மக்களோடு இருந்து, மக்களிடம் கற்றுக் கொண்ட சூழலியல் அறிஞர்கள் மண்ணுக்கான வேளாண்மை முறைகளை மிகச் சிறப்பாக வளர்த்துள்ளார்கள். பல்லுயிர் பெருக்கத்தை அடிப்படையாய கொண்ட தாளாண்மை - வேளாண்மை இன்று விழிப்புணர்வுடன் சிந்திக்க கூடிய சக்தி படைத்த விவசாயிகளுடையதாகி அவர்களை வாழ வைத்துள்ளது. நிற்க,

முன்பு சித்த மருத்துவமானது,

1. மக்கள் வாழ்க்கையின் ஆணிவேராக இருந்த்து.

2. வீடுகளில் பெரியோர், குறிப்பாக பெண்கள் தங்கள் மருத்துவ அறிவைப் பாதுகாத்து தொடர்ந்து புதுப்பித்து வந்தனர்.

3. சமையல் எனபது உணவே மருந்து மருந்தே உணவு என்றாக இருந்த்து. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், பால், இறைச்சி, முட்டை, எண்ணெய் போன்றவை நஞ்சற்ற சூழலில் மக்களுக்குக் கிடைத்த்து.

4. சூரணங்கள், பற்ப, செந்தூரங்கள, மெழுகுகள், லேகியங்கள், நெய் போன்றவை சிறிய அளவில், மருத்துவம் கற்ற – கற்க முனைபவர்களின் நீண்ட காலக் கடும் உழைப்பால் தயாரிக்கப்பட்டன.

5. நோய் அறியும் நுட்பங்களை வழி வழியாக அணுபவத்தில் கற்றுத் தேர்ந்த மருத்துவர்கள் தங்கள் மருத்துவ முறையில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டார்கள்.

6. வீடுகளில் பெரியவர்கள்-பெண்கள் தம் குடும்பத்தினருக்கு வரக்கூடிய நோய்களுக்கான மருந்துகளைத் தாமே செய்து கொள்ளும் ஆற்றல்-அறிவு உடையவராக இருந்தனர். தம்மால் முடியாத சூழலில்த் தான் ஊர் மருத்துவர் உதவியை நாடுவர். மருத்துவர் தரக்கூடிய சிறப்பு மருந்துகளைப் பயன் படுத்தத் தேவையான அறிவும் மக்களிடம் இருந்த்து.

7. மருந்துகள் உடலியற்கைக்குப் பொருந்தும் வகையில், நன்கு சுத்தி செய்து மருத்துவர்கள் தாம் சாப்பிட்டுச் சோதித்த பின்னரே மருந்து தருவர். சித்த மருத்துவர்கள் தாம் தம் கைப்படத் தயாரித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவர். மருத்துவரும்-பிணியாளரும் மருந்துகளை இறையச்சத்தோடு கையாண்டனர்.

8. மக்களுக்கும் – மருத்துவர்க்கும் இடையில் குடும்பரீதியான நட்பும், அன்பும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

9. மருந்துகளுக்கான பத்தியம், மருந்துண்ணும் அளவு, காலம், சூழல், மனநிலை பற்றிய அறிவு குடும்பத்தினருக்கு இருந்ததால் நோயுற்றவர்க்கு நல்ல ஒத்துழைப்பு இருந்த்து.

10. மக்கள் ஏரி, குளம், கன்மாய், கடல், காடு, மலைகளைத் தடையின்றிப் பயன்படுத்தியதால் அவர்களின் உணவு, மூலிகைகள் மற்றும் மருத்துவத்துக்குத் தேவையான சரக்குகளை எளிதாகப் பெற முடிந்த்து. பதிலுக்கு, அவர்கள் இயற்கைச் சூழலை அழியவிடாது காத்துவந்தனர்.

தற்போதய நிலை.

1. மக்களின் வாழ்வாதாரங்கள் அரசுடமையாக்கப்பட்டதால் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களாகிய ஏரி, குளம், கன்மாய் மற்றும் கடல், மலை, காடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அன்னியமாக்கப் பட்டுள்ளனர். இதனால் மக்கள் பொறுப்பற்றுப் போயினர். இதனால் கேட்பாரின்றி அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு மனித நேயமற்ற பெரும் பணக்காரர்களின் வேட்டைக் காடாகி மனிதவாழ்வாதாரங்கள் அழிந்து கொண்டிருக்கிறது.

2. மருந்து உண்பதற்கான சூழல், மனநிலை, அறிவு முதலியன இல்லை. அவசரமும், அறியாமையும், குழப்பமும், தவறான பழக்க வழக்கங்களும், (இரவுத் தூக்கம், பசிக்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர், தலைக்குக் குளியல், உடலியற்கைக்குப் பொருந்திய நல்லுணவு, கழிவுகளை வெளியேற்றுதல் இவையாவும் இன்றி, - எல்லாம் நேரம் கிடைத்தாலத்தான்-கடமைக்காக, எதுவானாலும் சரி என்றாகிப் போய்விட்டது.)

3. பல இலட்சங்கள் செலவு செய்து பணம் பன்ன வந்த மருத்துவர்கள், பணத்துக்காக எதையும் செய்யும் மருத்துவர்கள். இவர்களைப் பாதுகாக்கப் பலமான அமைப்புகள். இவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் எந்த ஒரு ஒட்டோ, உறவோ, அன்போ இல்லை, இதனால், பயமோ, பொறுப்போ இல்லை.

4. தற்போது சித்த மருந்துகள் மிகப் பெரும் அளவில், வணிக நோக்கில் செய்யப் படுகின்றன. அதனால் சரியான படிச் சுத்தி செய்ய இயலாது. மருந்துகளின் தரத்தையும், குணத்தையும், அளவையும் முடிவு செய்யும் காரணி வணிகர்களே. வியாபாரத்துக்காக நீண்ட நாள் பாதுகாக்கவும், எளிய நடைமுறைகளுக்காகவும், பெருமளவில் உயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை உடலுக்கு மிகப் பெரிய கேடு.

தற்போது எளிமை கருதி குப்பிகளில அடைத்து விற்கிறார்கள். இதனால உமிழ் நீராகிய அமுதம் கலவாது வயிற்றுள் செல்லும் மருந்துகளும் விசமாகிறது.

சிறிய அளவில் மூலிகைச் சாறுகள் பெருமளவில் விட்டு, கைகளால் இறையச்சத்துடன் அரைத்துச் செய்யப்படும் மருந்துகள் அரைக்கும் மருத்துவரின் நல்ல எண்ணங்களால் நல் மருத்துவ குணத்தைப் பெறும். இது பெருமளவில வணிக நோக்கில் செய்யும் போது சாத்தியமில்லை.

5. மருந்துகளுக்கு அனுபானமாக (கொண்டு செலுத்தியாக) உள்ள மூலிகைகைக் கசாயங்கள், சாறுகள், சூரணங்கள் பற்றிய அறிவு நொயுற்றவர் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு இல்லாத்தால், தகுந்த அனுபானமின்றி நன்கு முடித்த மருந்துகள் கூட போதுமான பலனைத் தருவதில்லை.

மருந்துகள் காரனமாக, உடலின் சக்தி பெருகும் போது, உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிய அறிவின்மையால், தேவையற்ற பயமும் குழப்பமும் ஏற்பட்டு (எதிர்முறைய (அலோபதி) மருத்துவத்தின் தவறான கருத்துகளின் ஆளுமையால்)மருந்துண்போர் தமது ஆற்றலைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள்.

6. தற்போதய சித்தமருத்துவர்கள் (படிப்பறிவு) பெயரில் மட்டுமே சித்த மருத்துவர்களாக இருக்கின்றார்கள். தமது மருத்துவ முறை மீது நம்பிக்கை இல்லாதவர்களாக அவர்களது படிப்பு முறை அவர்களை உருவாக்கி உள்ளது. நாடி பார்த்தல், மூலிகை பற்றிய அறிவு, மருந்து செய்முறைகள், மரபுவழி வாழ்க்கை நுட்பங்களை அறியாதவர்களாயும், அறிந்தவர்களின் பெருமையை உணராதவர்களாயும் தான் இருக்கிறார்கள்.

பெரும் வணிக நிறுவனங்களை மருந்துத் தேவைக்கும் நோயறிதலுக்கும் நம்பி, சித்தர்களின் பெயரைக் கெடுக்கிறார்கள்.
தம் இயலாமையாலும், பேராசையாலும், பிழைப்புக்காகவும் தன் முறைகளுக்கு நேர் எதிரான அலோபதி மருந்துகளைப் பயன்படுத்தி போலி மருத்துவர்களாகிக் கீழ்மைப்படுகிறார்கள்.

அழிந்துவரும் அலோபதி முறை தம்மைக் காத்துக் கொள்ள கடைசி முயற்சியாக, தாம் தம் கைப் பிள்ளைகளாக வளர்த்து வந்த சித்த (அலோசித்தா) மருத்துவர்களும் ஆங்கில மருந்துகளைப் பயன் படுத்த அழைப்பு விடுத்துள்ளது. எப்படியோ தங்கள் பை நிறைந்தால்ப் போதும் என நிணைக்கும் ஆட்சியாளர்கள். இவர்கள் கருணையால் நமது செலவில் நாளும் உடல் உறுப்புகளை இழந்துவரும் அறிவற்ற மக்கள் கூட்டம். இலவசம் என்றால் உடல் உறுப்புகளை இழப்பதற்கும் போட்டி தான் இந்த விழிப்புணர்வற்ற நாட்டில்.

உதாரணம்.
28,29,30-6-2008 ல் திருநெல்வேலியில் ஆசான்.திரு.ந.சண்முகம் அவர்களால் நடத்தப்பட்ட வர்மக்கலைப் பயிற்சிக்காகப் போயிருந்தேன் அந்தப் பயிற்சியில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 30 மாணவிகள் 2 மாணவர்கள் கலந்திருக்கலாம். 3 நாள் நிகழ்சியில், மாணவர்களிடம் ஏற்பட்ட நட்பால் பயிறசி முடிந்த நாள் இரவு மாணவர் விடுதிக்கு அழைப்பின் பேரில் சென்றேன். என்னுடைய புதிய நண்பர்களில் ஒருவர் M.D இரண்டாமாண்டு மாணவர், மற்றவர் B.S.M.S இறுதியாண்டு மாணவர்.
விடுதி அறையில், இவர்களது சக மாணவர் ஒருவர் மிக்க் கடுமையான உடல் வலி, மற்றும் சுரத்தினால் அவதிப்பட்டவாறு படுத்திருந்தார். என்ன இந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள் ஏதேனும் மருந்து கொடுத்தீர்களா? என்று கேட்டவாறு அறையை நோட்டமிட்டேன். புத்தக மேசையில் புத்தகங்களோடு அலோபதி மருந்துகள், மாத்திரைகளைப்(சுரநீக்கி, வலிநீக்கி) பார்த்தேன்.
உங்கள் இடத்தில் ஏன் இந்த விசங்கள், இவையெல்லாம் உடலுக்குக் கேடு என்பதை நீங்கள் அறியவில்லையா? எனக் கேட்டேன். நாங்கள் சண்டமாருதம்(கடையில் வாங்கியது) மற்றும் சில மருந்துகளைப் பயன்படுத்திப் பார்த்தோம். கேட்கவில்லை அதனால் தான ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தினோம் என்றனர்.
இதை சரிசெய்வது பெரிதில்லை, நான் முயற்சி செய்யலாமா? எனக் கேட்டேன். அனுமதித்தனர்.
இறைவழி மருத்துவத்தில் விணாடிக்குள் சுரம் மிகவும் குறைந்துவிட்டது, உடல் வலியும் முற்றாக நீங்கி புத்துணர்வடைந்தார் துன்பத்திலிருந்தவர். எழுந்தவுடன் பக்கத்து அறைகளுக்குச் சென்றவர் வயிற்றுவலி. தலைவலி, உடல்வலி மற்றும் மூட்டுவலிகளால் துன்பமடைந்து இருந்த சில மாணவர்களையும் உடன் அழைத்து வந்தார். அவர்களும் விணாடிகளில் சுகம் பெற்றார்கள்.
வியப்பும், மகிழ்வும் அடைந்த நண்பர்கள் கூறினர். கடந்த 3 நாட்களாக மிக அற்புதமான வர்மக் கலை நுட்பங்களைப் பார்த்து வியந்து போயிருந்தோம், தற்போது நீங்கள் நோயுற்றவரைத் தொடாமலே, விணாடிக்குள் சுகப்படுத்திக்காட்டிய இறைவழி மருத்துவம் எங்களை வியப்பின் உச்சத்துக்கே கொண்டுபோய்விட்டது என்றனர். மேலும், நீங்கள் சுகப் படுத்தியதை விட உங்கள் மருத்துவமுறை மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், தைரியமான அணுகுமுறையும் எங்களைக் கவர்ந்துவிட்டது என்றனர்.

மேலும், மனம்விட்டுப் பேசினர், நாங்கள் எல்லாவித வசதிகளுடனும் படிக்கிறோம் நீங்களோ தன்முயற்சியைக் கொண்டு பல இடங்களில் தேடி மருத்துவம் கற்றுள்ளீர்கள். நாங்கள் இந்தக் கல்லூரியில் சேரும் போது, நாம் மிகச் சிறந்த மருத்துவர்களாக வேண்டும் எனும் நினைவோடு உத்வேகத்த்தோடு சேர்ந்தோம் ஆனால் இந்த 7 ஆண்டுகாலப் படிப்பு எங்களை நடப்பதற்குக்கூட ஊன்றுகோல் தேடும் அளவுக்குத் தன்னம்பிக்கை அற்றவர்களாக ஆக்கிவிட்டது.

இங்கு எங்களுக்கு உள்ள பாடத்திட்டமும், அதை நடத்தும் விதமும் எங்களை பயன் இல்லாதவர்களாக நாங்களே கருதும் படி ஆக்கிவிட்டது என்றனர். கடந்த 3 நாள் பயிற்சியில் ஆசான் ந. சண்முகத்திடம் கற்றுக் கொண்ட வர்மக்கலை நுட்பத்தில நூற்றில் ஒரு பங்கு கூட இத்தனை ஆண்டுகளில் எங்கள் பேராசிரியர்களிடம் கிடைத்த்தில்லை. இவ்வளவுக்கும் அவர் வர்மக்கலை வல்லுனர் தான். நாங்களாக முயன்று பிற ஆசான்களிடம் கற்பதற்கும் தடையாகவே இருக்கிறார்கள் என்றார்.

இப்படி இருக்கையில் ஏன் மரபுவழி மருத்துவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகிறீர்கள் என்றேன். நாங்கள் மாணவர்கள பலவாறாகப் பிரிந்து கிடக்கிறோம் கட்சிகள், சாதிகள், மதங்கள், ஏழை பணக்காரன் என்ற வேற்றுமைகள் எங்களைப் பிரிக்கின்றன. மேலும், இந்த அடிமைக்கல்வி எங்களைத் தற்சார்பற்றவர்களாய் அடித்துள்ளது. படிப்பு முடிந்த்தும் பிழைப்புக்காக மருந்து எழுதிக் கொடுத்தால் போதும் என்ற நிலை. மக்களின் கேள்விகளிலிருந்து தப்பிக்கவும், வருமானத்துக்காகவும் அலோபதியினர் போல நடிக்க்க கற்றுக் கொள்ளவேண்டும். இந்த நிலையில் நாங்கள் இருப்பதினால் எங்களைப் பிற சக்திகள் எளிதாகப் பயன்படுத்திக கொள்கின்றன என்றார்.

7. தற்போது கடையில் விற்கும் சித்த மருந்துகளை சிறிய அள்வில் நிறைய மூலிகைச் சாறுகளை விட்டுத் தேவையான நேரம் வரை அரைத்தோ, இடித்தோ செய்வதில்லை. தற்போது மிகப் பெரிய அளவில் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி விற்பனை நோக்கில் செய்வதால் தரமாக மருந்துகள் முடிக்கப்படுவதில்லை.

இங்கே ஞாபகம் வைக்க வேண்டியது, எந்த மருந்து நிறுவனமும் நோய் தீர்க்கும் நோக்கில் மருந்து செய்வதில்லை. பெரும் பணம் பன்னும் நோக்கில் தான் வணிகர்கள் இருப்பர். இதற்கு சித்த மருந்து நிறுவனங்கள் விதிவிலக்கல்ல. நோயாளி படுக்கையில் இருந்து எழுந்தால் தன் வியாபாரம் படுத்துவிடும் என்பது வணிகர்களுக்குத் தெரியாதா?

மருந்து வணிகர்களுக்கு நோயுண்டாக்கும் காரணிகள் தான் நண்பர்கள். நோய் தீர வழிகாட்டுபவர்களும், நோய் தீர்க்கும் வாழ்க்கை முறைகளும் தான் முதல் எதிரிகள். முடிந்தால் KEVIN TRUDEAU எழுதிய NATURAL CURES எனும் புத்தகத்தை வாங்கி-வலையிறக்கிப் படியுங்கள்.

முன்பு கற்றுக்கொள்ள விரும்பி வரும் சீடர்களை வைத்து மருந்துகளை முடிப்பார்கள் சித்தர்கள். சீடர்களின் உடலையும், மனதையும் வலுவாக்க வேண்டிய பொறுப்பு குருவுடையதே எனவே, மனதை இருத்தி மருந்துகளை பல சாமங்கள் இடிப்பதற்கும், அரைப்பதற்கும் பயிற்றுவிப்பார்கள் இதை ஒரு யோகமாக நினைத்து குருபக்தியுடனும், இறையச்சத்துடனும் செய்யும் மாணவர்களுக்கு நினைத்த்தை முடிக்கும் ஆற்றலைப் படைப்பாற்றல் வழங்கும்.

8. சித்த மருந்துகள் செய்யப் பயன்படுத்தும் மூலிகைகளும், தானியங்களும், இளநீர், பால், பழம், முட்டை, இறைச்சி முதல் தாய்ப்பால் வரை எல்லாம் நவீன அறிவியலால் நஞ்சேறிப் போயுள்ளது. உப்பைக்கூட நஞ்சாக்கி விட்டனர்.

உதாரணம். பசுவின் பால் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்துவது, மருந்துகள் செய்வதற்கும், அனுபானத்துக்கும், மருந்துகளை சுத்தியாக்கவும் பால் பயன்பட்டது.

பால் கறந்து ஒரு சாமத்துக்குள் சாப்பிட்டால் அமுது என்கிறது பதார்த்த குண சிந்தாமணி. நமக்கு கிடைக்கும் பால் கறந்து பல நாள் கழித்து, அதிலிருந்து சத்துக்கள் நீக்கி, நஞ்சுகள் கலந்து கிடைக்கிறது. முன்னோர்கள் பயன்படுத்திய பாலுக்கும் இதற்கும் வெள்ளை நிறம் மட்டுமே ஒற்றுமை, மற்றபடி இது என்ன?

தேடிப்பிடித்து பாலைக் கறந்து வாங்கினாலும் பசு சாப்பிட்ட தீவனமும், பசுவின் இரத்த்த்தை பாலாக்கித்தரும் இரசாயன ஊக்கிகளும் பாலைப் பாழாக்கித் தான் தருகின்றன.

பாலே இப்படியென்றால் அதிலிருந்து பெறும் நெய்-வெண்ணையும் கலப்படம் தான்.

எண்ணெய் எல்லாம் நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் கலந்து தரும் ஏதோ ஒன்றாகத்தான் கிடைக்கிறது.

உதாரணம். 10 ஆண்டுகளுக்கு முன் மதுரையில், எண்ணெய் மொத்த வணிகரிடம் கேட்டேன்.

நான் புதிதாக கடை ஆரம்பித்துள்ளேன். பக்கத்துக் கடைகளில் எல்லாம் ஏற்றதாழ்வான விலைகளில் எண்ணெய் விற்கிறார்கள். பக்கத்தில் உள்ள எண்ணெய் ஆட்டுமிடங்களில் வாங்கினால் கூட விலை ஒத்துவரவில்லை எப்படி? என்றேன்.

இதோ பாருங்கள் இந்த நல்லெண்ணெய் டின் 1380 ரூபாய், இன்னொன்றைக்காட்டி இது 300 ரூபாய் இரண்டையும் வாங்கிப் போங்கள் உங்கள் விலைக்குத் தக்கபடி கலந்து கொள்ளுங்கள் என்றார். இரண்டின் மணமும், நிறமும் ஒத்திருந்தது.

சும்மா பன்னுங்க தம்பி, பெரிய நிறுவனம் தயாரிக்கும் எண்ணெய் இதைவிட மோசம் தான் என்றார்.

நேற்று வைத்தியத்துக்கு வந்த மளிகைக் கடை நண்பர் கூறுகிறார் நாங்கள் விற்கும் பொருளில் 100க்கு 10 கூட தரமானதில்லை (not original) என்கிறார். உண்மையான, நஞ்சில்லாத, தரமான பொருள்களை எவ்வளவு பணம் செலவு செய்தும், தேடிப்பெறவும் முடியவில்லை.
மனம் ஒத்துக்கொள்ளாவிடிலும் பிழைக்க வேண்டியுள்ளது. மக்களுக்கும் நலவாழ்வின் தேவை புரியவில்லை என்றார்.

இளநீரும் பறித்த இடத்திலிருந்து நம்மை அடைவதற்குள் தன் தன்மையை இழந்துவிடுகிறது.(பறித்த 5 மணி நேரத்துக்குள் குடித்தலே சிறப்பு) மேலும் தென்னைக்கு வைக்கும் விசம், குடிப்பவர்க்கும் கொடூரமான பாதிப்பைத்தான் தருகிறது.

9. செலவுக்கும், அலைச்சலுக்கும் அஞ்சாத வைத்தியர் கூட மொத்தத்தில் திருப்தி இல்லாத நிலையில் தான் மருந்துகளை முடிக்க முடிகிறது.

10. ஒருவாறு மருந்துகள் முடிந்தாலும், அதைச் சாப்பிடத் தகுதியான நோய் தீர்வோர் இல்லை. உடலியற்கை பற்றிய அறிவு நம் மக்களிடம் இல்லை. மேலை அறிவியலால் நம் அறிவு சீர்குலைக்கப்பட்டுள்ளது. முறையாக வைத்தியர்கள் சொன்னபடி, நேரத்துக்கு, தக்க அனுபானங்களில், தக்க ஓய்வெடுத்து நலம் பெற வேண்டும் என காத்திருப்போர் இல்லை. வீட்டில பொறுமையாய் ஒத்துழைப்பவர்களும், விழிப்புணர்வுடன் உதவிசெய்வோரும் இல்லை.

உற்றவன் தீர்ப்பான மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பாலநாற் கூற்றே மருந்து.

11. முன்பு சமூகம் கூட்டுக் குடும்பங்களாக இருந்த்து. வீட்டில பெண்களிடம் உணவு தயாரித்தல், உடல்நலம் காத்தல், விதைகளைப் பக்குவப்படுத்திப் பாதுகாத்தல், குழந்தைகளை வளர்த்தல், முதியோர் நலம் காத்தல், சுற்றுச்சூழலைக் காத்தல் போன்ற தலையாய பொறுப்புகள் இருந்தன. இவற்றை முழுக் குடும்பம் மற்றும் சமூக ஒத்துழைப்புடன் அழகாகச் செய்து வந்தனர்.

தற்போதய வணிக அறிவியல் சூழலால் கூட்டு வாழ்க்கைச் சூழல் சிதைந்து, தனிச்சிறு குடும்பங்களாகிப் போயின.

பெண்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக மிகச் சீராக வளர்க்கப்பட்டு வந்த வாழும் கலை அறிவியல் அவர்களிடமிருந்து பலவந்தமாக, மறைமுகமாக, மிகவிரைவாகப் பறித்துச் சீரழிக்கப் பட்டுவிட்டது.

தற்போதய குடும்பத் தலைவிகளுக்கு தமது பழைய கடமைகளோடு, பல புதுச் சுமைகளும் சேர்ந்துவிட்டன. தனது குடும்பம் மற்றும் சமூகத்து உதவியும், அறிவும் இன்றி தானே தனக்குச் சுமையாகிப் போய்விட்டனர் பெண்கள்.
பெண்கள் தன் தனித் தன்மையையும், சிறப்பையும் இழந்து, தன் துணையோடு போட்டிபோட்டு, வெறுக்கும் அவல நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

தங்களின் தனிச்சிறப்பான தன்மையின் பயன்களை- அறிவை இழந்ததால், ஆண்களைப் போல் நடிப்பதும், நடப்பதும், தம் உடல் இயற்கைக்கும், மன இயற்கைக்கும் பொருந்தாத, பிழைப்பு வழிகளைத் தேட மறைமுகமாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் தன் நலமான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள்.

விளைவு, ஆண் பெண்ணிடம் காதல் வாழ்க்கை என்பதே காணாமல் போய்விட்டது. இருவருக்கும் இடையில் பாலுணர்வுத்தேவை தவிர வேறொன்றும் இல்லை எனும் நிலை வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கும் போக்கு அதிகமாகி விட்டது.

பெண்கள் தங்கள் குடும்ப-சமூகத் தலைமைப் பொறுப்பை மனித நேயமற்ற வணிகர்களிடமும், அறிவியலாளர்களிடமும் இழந்து விட்டார்கள். பெண்கள் மற்றும் ஆண்களின் அடிமை நிலைக்குக் காரணம் தற்போதய நவீன உயர் அறிவியல் தொழில் நுட்பமே.

சிந்திக்க மறந்து போன, விரும்பாத, அடிமைத் தன்மையில் ஊறிப் போன மாக்களுக்கு சித்தமருத்துவம் மட்டுமல்ல வேறு எந்த மருத்துவமும் - எந்த நோயையும் தீர்க்க முடியாது.
தான் ஒரு அடிமை என்பதை உணராதவர்க்கும், தனது அடிமை வாழ்விலே இன்பம் காண்பவர்க்கும் விடுதலையே இல்லை.
-இது சான்றோர் வாக்கு.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 9:21 pm

அறிவார்ந்த கட்டுரையைச் சமர்ப்பித்ததற்கு நன்றி திரு தமிழவேள்!

///தற்போது சித்த மருந்துகள் மிகப் பெரும் அளவில், வணிக நோக்கில் செய்யப் படுகின்றன. அதனால் சரியான படிச் சுத்தி செய்ய இயலாது. மருந்துகளின் தரத்தையும், குணத்தையும், அளவையும் முடிவு செய்யும் காரணி வணிகர்களே. வியாபாரத்துக்காக நீண்ட நாள் பாதுகாக்கவும், எளிய நடைமுறைகளுக்காகவும், பெருமளவில் உயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை உடலுக்கு மிகப் பெரிய கேடு.///


மாபெரும் உண்மையை எளிதாகக் கூறிவிட்டீர்கள்!

சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? 677196



சித்த மருத்துவத்தால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது!!!...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 9:29 pm

கடுமையான உண்மைகளைக் கூறியுள்ளீர்கள்.. ஆயினும் இன்னும் சித்த மருத்துவத்தில் கொண்ட நம்பிக்கை அற்றுவிடவில்லை என்பதும் உண்மை. அழகான கட்டுரைக்கு நன்றி தமிழவேள்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக