புதிய பதிவுகள்
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.
புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!
1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.
புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
26. சோற்றில் நஞ்சு
தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே
உண்ணக் கொடுத்து விடடி! - அடி
கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால்
கொல்லாது; சோற்றில் இடடி!
தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக்
கெண்டை விழிகள் சுழலும்; - அடி
தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி
உண்டாக மண்ணில் உழலும்.
இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி
ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச்
செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து
வந்தே நுழைகுவேன் கண்ணே!'
அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத்
தந்த மயக்க மருந்தைக் - குப்பும்
அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு
வந்தாள் திரும்பி விரைந்தே.
தென்பாங்கு -- கண்ணிகள்
'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே
உண்ணக் கொடுத்து விடடி! - அடி
கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால்
கொல்லாது; சோற்றில் இடடி!
தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக்
கெண்டை விழிகள் சுழலும்; - அடி
தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி
உண்டாக மண்ணில் உழலும்.
இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி
ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச்
செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து
வந்தே நுழைகுவேன் கண்ணே!'
அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத்
தந்த மயக்க மருந்தைக் - குப்பும்
அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு
வந்தாள் திரும்பி விரைந்தே.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
27. உண்ண எழுந்தாள்
பஃறொடை வெண்பா
குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட
செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச்
சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான்.
யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால்
நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக்
கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன்
கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும்.
'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது
கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே
உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார்.
சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்!
நங்கை எழுந்தாள் நலிந்து.
பஃறொடை வெண்பா
குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட
செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச்
சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான்.
யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால்
நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக்
கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன்
கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும்.
'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது
கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே
உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார்.
சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்!
நங்கை எழுந்தாள் நலிந்து.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
28. நஞ்சுண்டு வீழ்ந்தாள்
தென்பாங்கு -- கண்ணிகள்
வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான்
வட்டித்துக் கூப்பிட்ட போது
சூழ நடந்தசுப் பம்மா - தன்
துணைவன் நினைப்போடு வந்தாள்!
ஆழும் அலைகட லுக்குள் - சூழல்
ஆயிரம் வாய்த்திடக் கூடும்;
ஏழைத் துணைவனை எண்ணி - நையும்
ஏந்திழை எப்படிக் காண்பாள்?
சோற்றினை உண்டனள் நங்கை - நீர்
தூக்கிப் பருகிய பின்னர்
காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள்
கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம்
மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி
மாறி மயங்கி விழுந்தாள்.
சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று
சொல்லி விழுந்தனள் மண்ணில்!
தன்னிலை தன்னைவிட் டோட - அதைத்
தான்தொடர்ந் தேபற்றி வந்து
மின்னல் அசைவது போலத் - தன்
மேனி தள்ளாட எழுந்தாள்.
சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று
திம்மனை எண்ணி விழுந்தாள்.
பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில்
புக்கு மறைந்திடு முன்னே
மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை
மென்கையி னால்தொட்டுப் பார்த்தாள்.
சொல்லினில் தீயைக் கலந்து - சில
சொற்களைச் சொல்லினள் மெல்ல:
'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற்
காற்றினில் நீர்வேண்டு கின்றான்.
வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன்
வாழ்வினை மீட்பவர் இல்லை!'
இவ்வுரை சொன்ன மறத்தி - மயக்
கேறினள்; மெய்ம்மறந் திட்டாள்!
செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி
தீர்ந்தன! வேர்வையின் நீரில்
அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை
ஆர்ந்தது போற்கருங் கூந்தல்
எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந்
திட்டது கட்டுக் குலைந்தே!
செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன
செய்வதென் றேஅறி யாமல்
அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின்
அக்கம்பக் கம்சொல்லப் போனான்.
சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான்
செல்'என்று கூறினன் சிங்கன்.
செங்கான் பயந்து நடந்தான் - அந்தச்
சின்னக் குடிசையின் பின்னே.
சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற
சேதிகள் யாவும் தெரிந்தான்.
அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன்
அண்டினன்! மற்றவர் இல்லை.
பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல்
பொல்லாங்கு காட்டிற்று! நல்ல
மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும்
வண்ணம் பொழிந்தது மாரி!
காட்டை முறித்திடும் காற்றும் - அவன்
கையை முறிப்பது போலே
தோட்டத்து வாசலி னோடு - சென்று
தூள்பட வைத்தது வீட்டை!
கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம்
கும்பிடத் தக்கஓர் தாயைத்
தீட்டுப் படாத நெருப்பை - விரல்
தீண்டக் கடித்திடும் பாம்பை
ஒட்டுற வில்லா வடக்கன் - உல
கொத்தது காணாத தீயன்
எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர்
'ஏஏ' எனச்சொல்லி ஏசக்
கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக்
கோதை கிடந்திட்ட போது
தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி
சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்!
பொழுது விடிந்திட வில்லை! - இன்னும்
பொற்கோழி கூவிட வில்லை!
எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர்
இருவர் இருந்திடும் வீட்டில்
நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை
நோக்கி யிருந்தஅச் செங்கான்
அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப்
பம்மாவைக் கண்டிட நின்றான்.
போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும்
பொழுதோ வெளுத்திட வில்லை.
போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல்
போயிற்று! நல்லுயிர் தானும்
போயிற்றுப் போவதன் முன்னே - சென்று
போக்கிடு வேன்அவ னாவி!
வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன்
வந்ததுண் டோ?'என்று கேட்டாள்.
'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில்
உருண்டதும் கண்டேன் துடித்தேன்.
கண்டதும் இப்பாழும் கண்தான் - இக்
கையில் வலியில்லை தாயே.
அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர்
அச்சிங்கன் உள்ளே நுழைந்தான்.
அண்டையில் நில்லாது போடா - என்ற
அவன்சொல்லை மீறா திருந்தேன்.
இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன்
இங்கிருந் தேபுறப் பட்டான்.
புரட்டனோ டேகினேன் நானும் - கால்
பொத்தென்ற சத்தமில் லாமல்!
திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு
சென்றனன் நானிங்கு வந்தேன்.
கருத்துக் கலங்கினேன் தாயே! - என்
கடமையை நான்செய்ய வில்லை.
சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர்
சீறிக் குதித்தனர் தாயே!
சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ
தீயெனச் சீறிநிற் கின்றார்.
ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி
ஒன்றுசொல் வீர்இந்த நேரம்
வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த
வடக்கரை' என்றனன் செங்கான்.
ஓடினள் சிங்கனை நோக்கி - உடன்
ஓடினர் சேரியின் மக்கள்!
ஓடினன் செங்கானும் அங்கே - உம்
உம்என்று தட்டினள் கதவை.
நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின்
நடுநின்ற அவன்மார்பு நடுவைச்
சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச்
சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்!
காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான்
கையோடி ருந்திட்ட தாலே
'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு
பழிமாத ரும்தீர்ந்து போனார்.
தேம்பாத அழுகையும், நீரின் - துளி
தெரியாத கண்களும் கொண்டாள்
வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை
விடியாத முன்னமே சேர்ந்தாள்.
கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங்
கொட்டாவி விட்டுக் கிடந்தார்.
பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப்
பாவையும் காவல் கடந்தாள்.
கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக்
கோலமல் லால்விழிப் பில்லை.
பூட்டும் படைவீடு கட்குள் - நெடும்
புன்னை மரத்திற்கு நேரில்
தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும்
சாத்திக் கிடந்ததைக் கண்டாள்.
'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை
இன்னுமோ தூக்கம்என் அத்தான்?
ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும்
உள்ளம் படைத்தனன் கேளீர்!
என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை
ஈடழித் தான்வெறும் பேடி!
செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத்
தீண்டிட்ட தீயனைக் கொன்றேன்.
அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன்
ஆவிதான் போய்ச்சேரு முன்னே!
எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை
என்னென்ன செய்தனன்? காணேன்!
அந்தோ எனக்கூவி மங்கை - அவள்
அங்குமிங் கும்பறக் கின்றாள்.
தென்பாங்கு -- கண்ணிகள்
வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான்
வட்டித்துக் கூப்பிட்ட போது
சூழ நடந்தசுப் பம்மா - தன்
துணைவன் நினைப்போடு வந்தாள்!
ஆழும் அலைகட லுக்குள் - சூழல்
ஆயிரம் வாய்த்திடக் கூடும்;
ஏழைத் துணைவனை எண்ணி - நையும்
ஏந்திழை எப்படிக் காண்பாள்?
சோற்றினை உண்டனள் நங்கை - நீர்
தூக்கிப் பருகிய பின்னர்
காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள்
கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம்
மாற்றம் அடைந்தது! கண்ணில் - ஒளி
மாறி மயங்கி விழுந்தாள்.
சோற்றில் 'மயக்க மருந்தா?' - என்று
சொல்லி விழுந்தனள் மண்ணில்!
தன்னிலை தன்னைவிட் டோட - அதைத்
தான்தொடர்ந் தேபற்றி வந்து
மின்னல் அசைவது போலத் - தன்
மேனி தள்ளாட எழுந்தாள்.
சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று
திம்மனை எண்ணி விழுந்தாள்.
பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில்
புக்கு மறைந்திடு முன்னே
மெல்லிடை யில்வைத்த கத்தி - தனை
மென்கையி னால்தொட்டுப் பார்த்தாள்.
சொல்லினில் தீயைக் கலந்து - சில
சொற்களைச் சொல்லினள் மெல்ல:
'கல்லிடை நார்உரிக் கின்றான்! - அனற்
காற்றினில் நீர்வேண்டு கின்றான்.
வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன்
வாழ்வினை மீட்பவர் இல்லை!'
இவ்வுரை சொன்ன மறத்தி - மயக்
கேறினள்; மெய்ம்மறந் திட்டாள்!
செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி
தீர்ந்தன! வேர்வையின் நீரில்
அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை
ஆர்ந்தது போற்கருங் கூந்தல்
எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந்
திட்டது கட்டுக் குலைந்தே!
செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன
செய்வதென் றேஅறி யாமல்
அங்கும்இங் கும்பறந் தோடி - வீட்டின்
அக்கம்பக் கம்சொல்லப் போனான்.
சிங்கனைக் கண்டனன்! 'ஏடா - செங்கான்
செல்'என்று கூறினன் சிங்கன்.
செங்கான் பயந்து நடந்தான் - அந்தச்
சின்னக் குடிசையின் பின்னே.
சிங்கன்அவ் வீட்டில் நுழைந்தான் - உற்ற
சேதிகள் யாவும் தெரிந்தான்.
அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன்
அண்டினன்! மற்றவர் இல்லை.
பொங்கிற்று வானில் முழக்கம்! - மின்னல்
பொல்லாங்கு காட்டிற்று! நல்ல
மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும்
வண்ணம் பொழிந்தது மாரி!
காட்டை முறித்திடும் காற்றும் - அவன்
கையை முறிப்பது போலே
தோட்டத்து வாசலி னோடு - சென்று
தூள்பட வைத்தது வீட்டை!
கூட்ட மலர்ச்சிறு கொம்பை - வையம்
கும்பிடத் தக்கஓர் தாயைத்
தீட்டுப் படாத நெருப்பை - விரல்
தீண்டக் கடித்திடும் பாம்பை
ஒட்டுற வில்லா வடக்கன் - உல
கொத்தது காணாத தீயன்
எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர்
'ஏஏ' எனச்சொல்லி ஏசக்
கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக்
கோதை கிடந்திட்ட போது
தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி
சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்!
பொழுது விடிந்திட வில்லை! - இன்னும்
பொற்கோழி கூவிட வில்லை!
எழுந்து வௌியினிற் சென்றான் - மாதர்
இருவர் இருந்திடும் வீட்டில்
நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை
நோக்கி யிருந்தஅச் செங்கான்
அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப்
பம்மாவைக் கண்டிட நின்றான்.
போயிற்று மங்கை மயக்கம்! - இன்னும்
பொழுதோ வெளுத்திட வில்லை.
போயிற்று மானம்! உணர்ந்தாள் - உடல்
போயிற்று! நல்லுயிர் தானும்
போயிற்றுப் போவதன் முன்னே - சென்று
போக்கிடு வேன்அவ னாவி!
வாயிலில் நின்ற செங்கானைச் - 'சிங்கன்
வந்ததுண் டோ?'என்று கேட்டாள்.
'உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில்
உருண்டதும் கண்டேன் துடித்தேன்.
கண்டதும் இப்பாழும் கண்தான் - இக்
கையில் வலியில்லை தாயே.
அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர்
அச்சிங்கன் உள்ளே நுழைந்தான்.
அண்டையில் நில்லாது போடா - என்ற
அவன்சொல்லை மீறா திருந்தேன்.
இருட்டோடு வௌிவந்த சிங்கன் - அவன்
இங்கிருந் தேபுறப் பட்டான்.
புரட்டனோ டேகினேன் நானும் - கால்
பொத்தென்ற சத்தமில் லாமல்!
திருட்டு நடைகொண்ட குப்பு - வீடு
சென்றனன் நானிங்கு வந்தேன்.
கருத்துக் கலங்கினேன் தாயே! - என்
கடமையை நான்செய்ய வில்லை.
சேரியெல் லாமிதைச் சொன்னேன். - அவர்
சீறிக் குதித்தனர் தாயே!
சேரியின் மக்களைப் பாரீர்! - இதோ
தீயெனச் சீறிநிற் கின்றார்.
ஊரும் கிளம்பிடும் தாயே! - மொழி
ஒன்றுசொல் வீர்இந்த நேரம்
வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த
வடக்கரை' என்றனன் செங்கான்.
ஓடினள் சிங்கனை நோக்கி - உடன்
ஓடினர் சேரியின் மக்கள்!
ஓடினன் செங்கானும் அங்கே - உம்
உம்என்று தட்டினள் கதவை.
நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின்
நடுநின்ற அவன்மார்பு நடுவைச்
சாடிப் புகுந்ததே கத்தி! - குத்திச்
சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்!
காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான்
கையோடி ருந்திட்ட தாலே
'பாம்புகாள் ஒழியுங்கள்!' என்றான் - இரு
பழிமாத ரும்தீர்ந்து போனார்.
தேம்பாத அழுகையும், நீரின் - துளி
தெரியாத கண்களும் கொண்டாள்
வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை
விடியாத முன்னமே சேர்ந்தாள்.
கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங்
கொட்டாவி விட்டுக் கிடந்தார்.
பாட்டையைப் பார்க்க்கவே யில்லை - உயிர்ப்
பாவையும் காவல் கடந்தாள்.
கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக்
கோலமல் லால்விழிப் பில்லை.
பூட்டும் படைவீடு கட்குள் - நெடும்
புன்னை மரத்திற்கு நேரில்
தன்கணவன் சேர்படை வீடும் - முற்றும்
சாத்திக் கிடந்ததைக் கண்டாள்.
'என்னுயிர்ப் பொருளே திறப்பீர்! - கதவை
இன்னுமோ தூக்கம்என் அத்தான்?
ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும்
உள்ளம் படைத்தனன் கேளீர்!
என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை
ஈடழித் தான்வெறும் பேடி!
செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத்
தீண்டிட்ட தீயனைக் கொன்றேன்.
அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன்
ஆவிதான் போய்ச்சேரு முன்னே!
எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை
என்னென்ன செய்தனன்? காணேன்!
அந்தோ எனக்கூவி மங்கை - அவள்
அங்குமிங் கும்பறக் கின்றாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
29. மன்னன் வந்தான்
எண்சீர் விருத்தம்
காட்டுதீப் போலேசு பேதார் சாவு
கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும்
கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே
குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப்
போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள்
புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான்.
கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே
கிட்டஇருந் தோரெல்லாம் 'தெரியா' தென்றார்.
'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால்
படுகொலைசெய் தோன்யாவன்?' என்று கேட்டான்
'படைவீரன் அல்லாது பிறரே என்றால்
பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக்
கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல்
காத்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்?
நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை
நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!
போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப்
புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை
மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்;
விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்;
கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால்
கேடில்லை செப்பிடுவீர் உண்மை தன்னை!
வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ!
மற்றென்ன மற்றென்ன?' எனத்து டித்தான்!
கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு
கூறத்தான் முடியுமோ? 'அந்தோ அந்தோ!
காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக்
கடல்போன்ற அன்புடையான் என்னி டத்தில்!
நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே
நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல
ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில்
உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?
மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார்
வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால்
என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?'
என்றுபல வாறெண்ணி இருக்கும் போது
'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி
வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்:
'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி
என்றனுக்கு தெரிந்தவற்றைக் கூறு கின்றேன்:
திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில்
தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்!
அம்மட்டே அவனோடு வீடு சென்றான்;
அங்கோர்நாள் விருந்துண்டான். அவன் மனைவி
செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில்
சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள்
திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத்
திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க்
திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு
செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித்
திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன
சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான்.
அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை!
அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை!
திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச்
சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!
குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன்
கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு
நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான்.
நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்!
அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான்.
'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத்
துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க்
துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே.
எண்சீர் விருத்தம்
காட்டுதீப் போலேசு பேதார் சாவு
கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும்
கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே
குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப்
போட்டிருந்த சுபேதரைச் சிப்பாய் மார்கள்
புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான்.
கேட்கலுற்றான் 'என்னஇது என்ன?' என்றே
கிட்டஇருந் தோரெல்லாம் 'தெரியா' தென்றார்.
'படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால்
படுகொலைசெய் தோன்யாவன்?' என்று கேட்டான்
'படைவீரன் அல்லாது பிறரே என்றால்
பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக்
கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல்
காத்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்?
நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை
நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!
போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப்
புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை
மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்;
விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்;
கேட்டுகொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால்
கேடில்லை செப்பிடுவீர் உண்மை தன்னை!
வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ!
மற்றென்ன மற்றென்ன?' எனத்து டித்தான்!
கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு
கூறத்தான் முடியுமோ? 'அந்தோ அந்தோ!
காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக்
கடல்போன்ற அன்புடையான் என்னி டத்தில்!
நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே
நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல
ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில்
உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?
மன்னவரோ அறிவீரோ எனகேட் கின்றார்
வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால்
என்னவரு மோஅறியேன்; வழிதான் என்ன?'
என்றுபல வாறெண்ணி இருக்கும் போது
'மன்னவரே பணிகின்றேன்' என்று கூறி
வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்:
'என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி
என்றனுக்கு தெரிந்தவற்றைக் கூறு கின்றேன்:
திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில்
தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்!
அம்மட்டே அவனோடு வீடு சென்றான்;
அங்கோர்நாள் விருந்துண்டான். அவன் மனைவி
செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில்
சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள்
திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத்
திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க்
திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு
செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித்
திம்மனுக்கு வேலைதரு வதாகச் சொன்ன
சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான்.
அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை!
அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை!
திம்மனையும், வஞ்சியையும் சுபேதார் செஞ்சிச்
சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!
குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன்
கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு
நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான்.
நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்!
அப்பரே இதுதான்நான் அறிவேன்' என்றான்.
'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத்
துப்பியது காயுமுன்னே!' என்று தேசிங்க்
துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
30. திம்மன் நான் என்றான்
எண்சீர் விருத்தம்
'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன்.
'தெரியவில்லை' என்றார்கள் சிப்பாய் மார்கள்.
'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன்.
'நான்தான்'என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன்.
'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய்' என்றான்.
திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி.
தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்.
பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப்
போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன்
மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த
மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன்?' என்றான்.
'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்;
செத்திருப்பான். நள்ளிரவில் செஞ்சி வந்தேன்
வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான்.
இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான்.
'உன்மனைவி எங்'கென்றான் தேசிங்க் மன்னன்!
'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்!
'அவளுக்கு வேறுதுணை உண்டோ?' என்றான்.
'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன்.
'பொய்ஒன்றும் கூறாதே' என்றான் மன்னன்.
பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன்.
'பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே
பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன்.
'பலஉறவோர் துணையிருப்பார்' என்றான் திம்மன்.
'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத்
தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்!
*நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர். இன்னோன்
கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
கூத்தியையும் பிடிப்பீர்'என் றுரைத்தான் மன்னன்.
*இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.
'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்!
தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம்
அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை
அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்!
தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்
நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை.
நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன்
தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக
வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத்
தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா?
சாற்றுவாய்" எனத்திம்மன் வாய்ப தைத்தான்.
அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன்
இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார்.
குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள்.
பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ்
தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்
சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார்.
எண்சீர் விருத்தம்
'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன்.
'தெரியவில்லை' என்றார்கள் சிப்பாய் மார்கள்.
'திம்மனெங்கே?' எனக்கேட்டான் பின்னும் மன்னன்.
'நான்தான்'என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன்.
'திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய்' என்றான்.
திம்மன்'இவ ரே'என்றான் பிணத்தைக் காட்டி.
தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்.
பொய்யுடையைச் சுதரிசன்சிங்க் திம்ம னுக்குப்
போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன்
மெய்பதைத்தல் இல்லாமல் 'திம்மா! இந்த
மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன்?' என்றான்.
'செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான்;
செத்திருப்பான். நள்ளிரவில் செஞ்சி வந்தேன்
வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான்.
இதுவரைக்கும் வௌிச்செல்ல வில்லை' என்றான்.
'உன்மனைவி எங்'கென்றான் தேசிங்க் மன்னன்!
'அதுஎனக்குத் தெரியாதே' என்றான் திம்மன்!
'அவளுக்கு வேறுதுணை உண்டோ?' என்றான்.
'புதியஊர், துணையில்லை' என்றான் திம்மன்.
'பொய்ஒன்றும் கூறாதே' என்றான் மன்னன்.
பதறியே 'பொய்யல்ல' என்றான் திம்மன்.
'பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே
பலதுணைவர் இருப்பாரோ?' என்றான் மன்னன்.
'பலஉறவோர் துணையிருப்பார்' என்றான் திம்மன்.
'தலையுருண்டு போகுமடா திம்மா! அந்தத்
தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்!
*நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர். இன்னோன்
கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
கூத்தியையும் பிடிப்பீர்'என் றுரைத்தான் மன்னன்.
*இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.
'அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்!
தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம்
அமைத்துவிட்டு போயினாள். அவளின் பேரை
அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்!
தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்
நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை.
நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன்
தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக
வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத்
தான்மறைந்து போனாளா? வாழ்கின் றாளா?
சாற்றுவாய்" எனத்திம்மன் வாய்ப தைத்தான்.
அருகிருந்த சிப்பாய்கள் இருவர் திம்மன்
இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார்.
குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள்.
பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ்
தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்
சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
31. அத்தான் என்றெதிர் வந்தாள்
எண்சீர் விருத்தம்
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று
தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார்
கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.
பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை
வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார்.
மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்;
தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை.
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.
முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக
முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு
முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.
செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல்
திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப்
படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர்.
வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை
தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!
தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான்.
தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை
விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத
மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.
கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள்
காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான்.
விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர்
ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை.
'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.
'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத்
தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்!
'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார்.
'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!
'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்!
மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள்.
'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'
என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்:
'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா!
நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி!
நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே!
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!
தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ
சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை.
அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்.
நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன்.
நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.
'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி
ஊராளும் அரசறிய உலகம் காண
துரையே!நீ ருங்காண அவனின் மார்பில்
சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்!
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'
என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான்.
இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள்
உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்;
'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை.
அமைவான குரலாலே கூறு கின்றாள்;
'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்.
நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால்
நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள்
நற்றமிழக் கையாலே கொன்று போட்டு
திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க!
செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப்
பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு!
பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான்.
பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.
பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை!
உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன்.
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
தனியாக உலவினான் புலியைப் போலே!
எண்சீர் விருத்தம்
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று
தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார்
கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.
பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை
வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார்.
மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்;
தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை.
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.
முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக
முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு
முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.
செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல்
திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப்
படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர்.
வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை
தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!
தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான்.
தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை
விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத
மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.
கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள்
காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான்.
விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர்
ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை.
'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.
'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத்
தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்!
'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார்.
'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!
'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்!
மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள்.
'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'
என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்:
'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா!
நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி!
நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே!
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!
தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ
சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை.
அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்.
நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன்.
நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.
'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி
ஊராளும் அரசறிய உலகம் காண
துரையே!நீ ருங்காண அவனின் மார்பில்
சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்!
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'
என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான்.
இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள்
உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்;
'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை.
அமைவான குரலாலே கூறு கின்றாள்;
'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்.
நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால்
நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள்
நற்றமிழக் கையாலே கொன்று போட்டு
திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க!
செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப்
பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு!
பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான்.
பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.
பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை!
உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன்.
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
தனியாக உலவினான் புலியைப் போலே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
32. மறவர் திறம் பாடு
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம்
கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே!
ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே
ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.
அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே
எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல்
மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை
வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ!
தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே
இன்னார் இனியார் எனயாதும் பாராமல்
பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை
மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!
நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத்
தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்:
கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை
ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!
ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி
ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர்
ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை
ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே!
ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி
பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர்
பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத்
தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே!
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம்
கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே!
ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே
ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே.
அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே
எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல்
மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை
வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ!
தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே
இன்னார் இனியார் எனயாதும் பாராமல்
பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை
மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!
நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத்
தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்:
கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை
ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே!
ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி
ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர்
ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை
ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே!
ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி
பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர்
பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத்
தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
33. குதிரைவீரர் வருகின்றார்கள்
எண்சீர் விருத்தம்
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம்
தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம்
தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும்
நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை
நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த
கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்;
குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்.
சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும்
செங்கதிரை வயற்புறத்தில் கண்டார்; பின்னர்
ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார்.
ஒருவரும்அங் கில்லையெனில் புதுமை யில்லை.
நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார்
நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில்
ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி
ஒருவனையும் நாம்பிடிக்க விலையே' என்றான்.
பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும்
பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்!
ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை
ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும்
கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில்
கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார்.
தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம்
தக்கபடி சாத்துப்படி' என்று சொன்னான்.
இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர்
இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக்
கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும்
கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல் தீதே'
என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும்
இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும்
புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்!
பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார்.
எண்சீர் விருத்தம்
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம்
தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம்
தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும்
நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை
நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த
கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்;
குலைக்கின்ற நாய்கள்போல் கூவிப் பார்த்தார்.
சேரியிலே வாழுமக்கள் கிழக்கில் தோன்றும்
செங்கதிரை வயற்புறத்தில் கண்டார்; பின்னர்
ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார்.
ஒருவரும்அங் கில்லையெனில் புதுமை யில்லை.
நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார்
நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில்
ஓரிளையான் மற்றவர்பால் 'குற்ற வாளி
ஒருவனையும் நாம்பிடிக்க விலையே' என்றான்.
பெரியசிப்பாய் கூறிடுவான்: 'நாமெல் லாரும்
பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்!
ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை
ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும்
கருத்தாளர் எனநம்பிச் சேரி தன்னில்
கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார்.
தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம்
தக்கபடி சாத்துப்படி' என்று சொன்னான்.
இன்னொருவன் கூறுகிறான்: 'அந்த மன்னர்
இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக்
கன்னக்கோல் காரார்போல் வரவும் கூடும்
கால்சோர்ந்து நாம்உட்கார்ந் திருத்தல் தீதே'
என்றுரைத்தான். இதைகேட்ட திம்ம னுக்கும்
இளங்கிளியாள் சுப்பம்மா வுக்குந் தோன்றும்
புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும்!
பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
34. மேற்பார்வையாளன்
தென்பாங்கு -- கண்ணிகள்
ஏறித் - தலைக்
கட்டோடு வந்தனன் சீறி!
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை
ஏங்கிட வைப்பவன் போலே - இமை
கொட்டாமல் பார்த்தனன் மேலே!
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர்
துள்ளிஎ ழுந்தங்குத் தாவிச் - சிரித்
திட்டனர் அன்னோனை மேவி!
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன் என்றே - திம்மன்
பட்டாவை ஏந்தினன் நன்றே!
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென
உற்றுவி ழித்தசுப் பம்மா - அங்குச்
சற்றும்இ ருப்பாளோ சும்மா?
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட
மேற்கிளை விட்டுக் குதித்தாள் - பகை
அற்றிட நெஞ்சம் கொதித்தாள்.
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன மெய்கள் - அங்கே
அற்று விழுந்தன கைகள்
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி காரி - கண்டு
தெற்றென வீழ்ந்தனன் பாரில்
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில்
ஒழிந்தது வேஅவன் ஆவி - கண்ட
ரற்றினர் சிப்பாய்கள் மேவி.
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில் விழுந்து - கண்
ணுற்றனள் இன்பக் கொழுந்து.
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்
தோகை பதைத்ததும் கண்டார் - கைப்
பற்றிட எண்ணமே கொண்டார்.
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள் மேலே - மிகச்
சிற்றின நாய்களைப் போலே!
தென்பாங்கு -- கண்ணிகள்
ஏறித் - தலைக்
கட்டோடு வந்தனன் சீறி!
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை
ஏங்கிட வைப்பவன் போலே - இமை
கொட்டாமல் பார்த்தனன் மேலே!
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர்
துள்ளிஎ ழுந்தங்குத் தாவிச் - சிரித்
திட்டனர் அன்னோனை மேவி!
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது
தேசிங்கு வந்தனன் என்றே - திம்மன்
பட்டாவை ஏந்தினன் நன்றே!
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென
உற்றுவி ழித்தசுப் பம்மா - அங்குச்
சற்றும்இ ருப்பாளோ சும்மா?
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட
மேற்கிளை விட்டுக் குதித்தாள் - பகை
அற்றிட நெஞ்சம் கொதித்தாள்.
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை
துள்ளி யெழுந்தன மெய்கள் - அங்கே
அற்று விழுந்தன கைகள்
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும்
கண்டனன் அவ்வதி காரி - கண்டு
தெற்றென வீழ்ந்தனன் பாரில்
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில்
ஒழிந்தது வேஅவன் ஆவி - கண்ட
ரற்றினர் சிப்பாய்கள் மேவி.
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும்
மாய்ந்தனன் மண்ணில் விழுந்து - கண்
ணுற்றனள் இன்பக் கொழுந்து.
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும்
தோகை பதைத்ததும் கண்டார் - கைப்
பற்றிட எண்ணமே கொண்டார்.
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர்
பாய்ந்தனர் அன்னவள் மேலே - மிகச்
சிற்றின நாய்களைப் போலே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
35. அவள் பிடிப்பட்டாள்
எண்சீர் விருத்தம்
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள்
சேயிழையாள் பிடிப்பட்டாள் பகைவ ராலே!
அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே
அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்!
'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும்
வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ?' என்றாள்.
மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்;
முடிவடைந்த தென்பணியும்' என்று சொன்னாள்.
எண்சீர் விருத்தம்
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள்
சேயிழையாள் பிடிப்பட்டாள் பகைவ ராலே!
அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே
அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்!
'மெய்ம்மைநெறி எய்தினீர். தேசிங் கென்னும்
வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ?' என்றாள்.
மும்முறையும் பார்த்திட்டாள் 'அத்தான் வந்தேன்;
முடிவடைந்த தென்பணியும்' என்று சொன்னாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|